articles

img

நவகேரளமே எதிர்கால இந்தியாவின் மாடல் - கே.பாலபாரதி

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டை உலக நாடுகளே வியந்து பார்க்கிற அளவிற்கு மிக பிரமாண்ட மாக நடத்திக்காட்டியிருக்கிறார்கள் கேரளத் தோழர்கள். எங்கே திரும்பினாலும் செம்பதாகைகள் ... தம் சிறகுகளை விரித்து  பறக்கத் துடிக்கும் செம்பறவைகள் போல் காட்சி யளித்த செங்கொடிகள்... வரலாற்றுக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் அவரவர் தாய்மொழியில் ஆவே சத்தோடு வெளிப்படுத்திய முழக்கங்கள்; செம்படை வீரர்களின் நேர்த்திமிக்க அணிவகுப்புகள்....

தியாகத்தால் சிவந்திருந்த கண்ணூர் கலையோடும் எழிலோடும் மேலும் சிவந்து நின்றது என்றால் மிகையாகாது.  கேரள மாநிலக்குழு மற்றும் கண்ணூர் மாவட்டக் குழுவிற்கு புரட்சி வாழ்த்துகளைத் தெரி விப்போம்.! அகில இந்திய மாநாடு மட்டுமல்ல, அம்மாநிலத்தையும் மிகச்சிறப்பாக வழி  நடத்துகிறது பினராயி விஜயன் தலைமை யிலான இடதுஜனநாயக முன்னணி அரசு. சர்வதேச அளவில் கேரளாவின் பல வளர்ச்சிப்பூர்வமானத் திட்டங்கள் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு அவர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன. 2019 ஆண்டு வெளியான ஒன்றிய அரசின் “நிதி ஆயோக்”அறிக்கை பல்வேறு ஆய்வு களை மேற்கொண்ட பிறகே கேரளாவின் கல்வி வளர்ச்சியைப் பாராட்டியிருக்கிறது.

20 பெரிய மாநிலங்களில் 82.2 சதம் கல்வி  வளர்ச்சி பெற்ற முதன் மாநிலமாக  கேரளா வை அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லா மல் 2020ஆம் ஆண்டு நிதி ஆயோக் நடத்திய வறுமை ஒழிப்புத் நடவடிக்கையில் கேரளாவே முதல் இடத்தைப் பெற்றி ருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. முதியவர்களைப் பாதுகாக்கும் சமூக நலத் திட்டங்களிலும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டு வளர்ச்சியிலும் இந்தியா விலேயே கேரளா முதல் இடம்வகிப்பதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கல்வியில் சாதனை

1995களில் கேரளாவின் அரசுப் பள்ளி களில் 4000 ஆசிரியர்கள் பணியிழந்தார்கள். காரணம், எந்த கட்டமைப்பு வசதிகளும் இல்லாத அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முன்வரவில்லை. வருடம் தோறும் குறைந்து  கொண்டே வந்த மாணவர்களின் எண்ணிக்கை பல பள்ளிகளை இழுத்து மூடச் செய்தது. இதனால் ஆசிரியர்கள் 4000 பேர் வேலையிழக்கவும் நேரிட்டது. இப்போதோ நிலைமை தலைகீழாக மாறி நிற்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் கல்வித் த்துறை அமைச்சர் பேராசிரியர் இரவீந்தி ரன் தலைமையில் பொதுக்கல்விக்கு புத்து ணர்ச்சியூட்டும் திட்டத்தை தொடங்கினார்கள். இரண்டு மாற்றங்களை முன்வைத்தா ர்கள். கல்வித்தரத்தை மாற்றி அமைப்பது கல்வி நிலையங்களின் உள்கட்டமைப்பை தரமாக்குவது! இவ்விரண்டு இலட்சியங் களையும் வென்றெடுக்க மக்களிடத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். நிதி  திரட்டலுக்கும் திட்டமிட்டார்கள். பல்வேறு விசேட முயற்சிகளையும் முன்னெடுத் தார்கள்.

அதன் விளைவாக கட்டட வசதிகள், 8ஆம் வகுப்பு முதல் 12வகுப்பு வரை தரமான  உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மடிக்கணினிகள், மல்டி ப்ரொஜெக்டர் திரைகள், எல்இடி தொலைக்காட்சிகள், ஒலி பெருக்கிகள், அச்சுப்பொறிகள், தரைவழி போன் வசதிகள், தொடு திரை பலகைகள், வைபை (wifi) வசதிகள், நவீன கேமராக்கள், இணைய கேமராக்கள், மல்டி பிரிண்ட்டர்கள், அதிவேகம் கொண்ட இணையதள வசதி கள் ஆகியவற்றை 42000 வகுப்பறைகளில் ஏற் படுத்தியுள்ளார்கள். 1000 பள்ளிகளை சர்வ தேசத் தரத்திற்கு உயர்த்தியுள்ளார்கள். நவீனமான தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் பாடத்திட்டம், கம்ப்யூட்டர் பயிற்சி,  பள்ளிகளில் ஆட்டிசம் பூங்கா, நவீனப்படுத்தப் பட்ட கழிவறைகள், பாதுகாப்புடன் கூடிய சுற்றுச்சூழல், தொழில்நுட்பத்துடன் கூடிய மேற்கண்ட உபகரணங்கள் இவையாவும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசால் சாத்தியமாகியுள்ளது. இது சர்வதேசத் தரத்திற்கு இணையானதாகும்.

மேலும் மதிய உணவு மட்டுமன்றி மாண வர்களுக்கு பால், முட்டை, கைத்தறி சீருடை களும்; ஒரு வகுப்பை முடிக்கும் தருவா யிலேயே அடுத்த வகுப்பிற்கான புத்தகங்களை விடுமுறை காலத்திலேயே வழங்குகிறார்கள். இதன் விளைவாக, தனியார் பள்ளி நோக்கிச் சென்ற குழந்தைகளும் பெற்றோர் களும், அரசுப் பள்ளி நோக்கிவரத் துவங்கி னார்கள். இது ஒரு பெரிய மாற்றமாகும். 2019-20 கல்வியாண்டில் 1.63 இலட்சம் மாண வர்களின் சேர்க்கையிலிருந்து தற்போது 6.8 இலட்சம் மாணவர்களாக அதன் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.  வேலையிழந்த 4000 பேரும் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக் கிறார்கள். மேலும் 1506 புதிய ஆசிரியர்கள் நியமனமும் நடைபெற்றிருக்கிறது. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர், ஆசிரி யர் அமைப்புகள், முன்னாள் மாணவர்கள், அவர்களது உறவினர்கள், வெளிநாட்டில் வாழும் கேரள மக்கள் என பரந்து விரிந்த  ஒற்றுமையை கட்டியெழுப்பி பொதுப்பள்ளி களின் தரத்தை உயர்த்துவதில் மகத்தான சாதனை புரிந்திருக்கிறார்கள்.

வறுமை குறைப்பு

2021 நவம்பரில் இந்தியாவின் வறுமை  குறித்து தயாரிக்கப்பட்டுள்ள “பன்முக வறு மை குறியீடு” அறிக்கையை நிதி ஆயோக் குழுவின் துணைத் தலைவர் இராஜீவ்குமார் வெளியிட்டார்.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் முறை யைப் பயன்படுத்தி மக்களின் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட 12 அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வறிக்கைத் தயாரிக்கப் பட்டுள்ளது. பீகாரில் 51.9 சதம், ஜார்கண்ட்டில் 42 சதம்  உ.பி.,யில் 37.19 சதம், ம.பி.,யில் 36.65 சதம்,  அசாமில் 32.19 சதம், கேரளாவில் 0.71சதம்  என வறுமை விகிதம் பற்றி குறிப்பிட்டுள் ளது. கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றை வறுமை குறைந்த மாநிலங்களாக அவ்வறிக்கையில் தெரிவிக்கிறது. சமூகநலத் குறியீடுகளில் கேரளா இந்தி யாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. சுகாதாரக் குறியீட்டிலும் அடிப்படைக் கல்வி யறிவிலும் கேரளா முதல் இடத்தை வகிக் கிறது. கோவிட் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான மளிகைப் பொருள்களோடு 2 ஆண்டு களாக மாதம் தோறும் வழங்கியுள்ளது. கோவிட் தாக்கத்தால் இறந்த குடும்பத்தி னருக்கு மாதம் தோறும் 5000 ரூபாய் வழங்கியுள்ளது. மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நடமாடும் ரேஷன் முறை மூலம் இல்லம் தேடி உணவுப் பொருள்களை வழங்கி வருகிறது. 60 வயது கடந்த முதியவர்களுக்கு கண வன்-மனைவி இருவருக்கும் தலா ரூ.1600 கூட்டுறவு அமைப்பினர் மூலம் இல்லம் சென்று வழங்கி வருகிறது. வீடே இல்லாத ஏழைகளுக்கு 4 செண்ட் நிலம் விலைக்கு வாங்க ரூ.3,60,000 வழங்குகிறது. வீட்டை கட்டி முடிப்பதற்குமான தனி நிதியோடு சேர்த்து ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10,00,000 நிதியாக ஒதுக்கீடு செய்து 5 இலட்சம் வீடுகளில் குடி அமர்த்தி உள்ளது.

கூலி உயர்வு

தனியார் நிறுவனங்களில் பணியாற்று வோருக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.17,000 என சட்டம் நிறைவேற்றியுள்ளது. எனினும் சில இடங்களில் மட்டுமே அது அம லாகிறது. ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தினக்கூலி ஒன்றிய அரசு ரூ.252 என தீர்மானித்திருந்தாலும் கேரள அரசு ரூ.300 வழங்குகிறது. கட்டுமானத் துறையில் தினக்கூலியாக 1500 ரூபாய் என்பது இந்தியா விலேயே கேரளாவில் தான் கிடைத்து வருகிறது. பாலின சமத்துவப் பூங்கா மூலம் தொழில்முனையும் பெண்களுக்கு ஆக்கப் பூர்வமான பொருளாதார தொழில்திட்டங் களை ஊக்குவிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டமைப்பை ரூ300 கோடியில் ஏற்படுத்தியுள்ளார்கள்.

அதி நவீன மாநாட்டு மையம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய பசுமையான பின்னணியில் கட்டிமுடிக்கப்பட்ட ஆம்பி தியேட்டர், நூலகம், பாலின அருங்காட்சி யகம் என தெற்காசியாவில் பாலின சமத்து வத்திற்காக செயல்படும் ஒரே பூங்கா இது தான் என பல நாளேடுகள் பாராட்டியுள் ளன.  உலக அளவில் உற்று நோக்கிய திட்ட மும் கூட இதுதான். கேரளாவில் 11 சதமான பெண்கள் தொழில்முனைவோர்களாக உள்ளனர். சுய உதவிக்குழு பெண்கள் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 20 ரூபாயில் தரமான உணவு வழங்கும் உணவகங்களை நடத்தி வருகிறார்கள். 520 கிமீ நீர்வழிப்பாதை, திருச்சூரி லிருந்து கொல்லம், கொட்டாபுரம் வழியாக  வெளிநகரம் வரை சூரிய சக்தி மூலம் இயங்கும் படகுப் போக்குவரத்தை அறி முகப்படுத்தியுள்ளது. இடது ஜனநாயக முன்னணி அரசு. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை குன்றுகள், மலைகளின் வழியாக விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சமூக நலனில்... 

திருநங்கையர்களுக்கு வேலைவாய்ப் போடு ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டுள் ளன. பணிமுடிந்து திரும்பும் பெண்களுக்கு பெண் காவலர்கள் மூலம் ‘பிங்க்பேட்ரல்’ பாதுகாப்பு, பெண்கள் இரவு நேரத்தில் தங்க  வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள்  தங்கிச் செல்வதற்கான  அரசு விடுதிகள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக் கின்றன. சமூகநீதியை நிலைநாட்டும் பல்வேறு நடவடிக்கைளில் ஒன்றான பழங்குடியினர், பட்டியலினத்தவர், இதர பிற்பட்ட சாதியினர் அர்ச்சகராவதற்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை பிறப்பித்தது.

வரதட்சணை வாங்கியதற்கான சாட்சி யங்கள் நிரூபிக்கப்பட்டால் அரசுப் பணியை  ரத்து செய்யும் நடவடிக்கை, அரசு மருத்து வர்கள் தனியாக கிளினிக் நடத்த தடையா ணை, அதே சமயத்தில் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்க்க அனுமதி, இதுபோன்ற பல திட்டங்கள் புது மையானதாகவும் மக்களுக்கு பயனுள்ள தாகவும் விளங்குகிறது. சுற்றுச்சூழல், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் மிகக் கறாராக கண்காணிக்கின்றன. குறிப்பாக மரங்கள், மணல் வளம் பாது காக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலையம் எர்ணாகுளம் இந்துஸ்தான் பேப்பர் ஆலை  போன்ற நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது அதை எதிர்த்துப் போராடி அந்நிறு வனங்களை பாதுகாத்தது. மாநில அரசே விலைகொடுத்து வாங்கி  தொழிலாளர்களின் வேலை இழப்பைத் தடுத்துள்ளது. 

எப்படி நிதி திரட்டியது?

கோவிட் கால பொருளாதார தொழில் நெருக்கடியில் இந்தியா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகள் திக்குமுக்காடி தெருவில் நிற்கும் சூழலில், ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டிய நியாயமான நிதிகளைக் கூட மாநிலங்களுக்கு வழங்க முன்வராத சூழலில், கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு எப்படி உலக நாடுகளின் கவனத்தை தமது புதிய பொருளாதார மற்றும் தொழில்கள் கட்டமைப்புகள் மூலம் ஈர்க்க முடிந்தது? இதற்கான பதில் மிக முக்கியமானது.  இடது ஜனநாயக முன்னணி அரசு மக்கள் நலனில் எப்படியெல்லாம் முன்முயற்சியில் ஈடுபடும் என்பதற்கு “கேரளவங்கி”முன்னுதாரணமாகும். மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணை த்து கேரள வங்கியாக மாற்றியமைத்த பின்  மிகப்பெரும் முன்னேற்றத்தை கண்டிருக் கிறது.

இந்திய மதிப்பீட்டில் ரூ20,000 கோடி வரை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டி ருப்பது வியப்புக்குரியது மட்டுமல்ல. இது ஒரு மாநில அரசின் கிராம வங்கி நிகழ்த்திவரும் மகத்தான சாதனையாகும். இந்தியாவில் செயல்படும் கிராம வங்கிகளில் கேரள வங்கியே பெரிய வங்கி என்ற பெருமை யையும் பெற்றுள்ளது. கடன் வைப்பு விகிதம் 100 விழுக்காட்டை அடைந்துள்ளது. இந்த விகிதமானது கேரளா வில் செயல்பட்டுவரும் அனைத்து வங்கிகளைவிட அதிகமாகும். மாணவர்கள், தொழில் முனை வோருக்கான கடன்களை வழங்குவதோடு வைப்பு நிதியாளர்களுக்கு கூடுதல் வட்டியும் வழங்குகிறது. இதே காலத்தில் உரு வாக்கப்பட்ட கேரளா வானொலி புதிய முத லீடுகளை - வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களை ஈர்ப்பதற்கு பெரிதும் துணை புரிந்துள்ளது. நிதிக்கான பாதுகாப்பை நடுத்தர மக்களுக்கும் கல்வி, சிறு-குறு தொழில்களுக்கான கடன்கள் உள்ளிட்ட வங்கி சேவைகளை ஏழை, நடுத்தர மக்க ளுக்கும் வழங்கி வருகிறது. இதுகுறித்து கீற்று இணையதளம் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“பல புதிய தொழில் மற்றும் வணிக  கட்ட மைப்புகளை உருவாக்கி மேற்கொண்டு வந்த பல பொருளாதார முயற்சிகள் காரண மாக மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு தேவைப்படும் நிதிகள், புதிய தொழில் முயற்சிகளுக்குத் தேவையான முதலீடுகளை கேரளா திரட்டி வருகிறது. இங்கு செயல்படுத்தப்படும் பல நலத் திட்டங்கள் மக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் செயல் படுத்தப்பட்டு அனைத்து மக்களிடமும் வளங் களை சென்று சேர்க்கிறது. இதனால்  தான் கேரள மாநிலம் பிற மாநிலங்களை விட சமூகத்துறையில் வளர்ந்து காணப் படுகிறது. “இதே கருத்தை தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக்குழு நிபுணர் ஜான் ட்ரீஸ் அவர்களும் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். பெரும் மழை, வெள்ளம் சூழ்ந்த போதும், ஒக்கி புயல் தாக்கிய போதும் பெருந்தொற்று முற்றுகையிட்ட போதும் ஒன்றிய அரசு விரோதப் போக்கைத் தொடர்ந்த போதும் மக்களைக் காப்பாற்ற அரும்பணிகளில் ஈடுபட்டு வரும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசே எதிர்கால இந்தியாவின்  மாடல் என்பது ஒளிவுமறைவற்ற உண்மை யாகும்!