மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8 அன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை, மாநிலத்தின் புதிய தேர்தல் ஆணையராக பொறுப் பேற்றுள்ள ராஜீவ் சின்ஹா கடந்த ஜூன் 8 அன்று வெளியிட்டார். ஜூன் 9 காலை 10 மணிக்கு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியான நிலையில், அன்றைய தினமே (ஜூன் 9) காலை 11 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கலை சமர்ப் பிக்க கடைசி நாளாக ஜூன் 15 ஆம் தேதியை நிர்ண யித்து, வெறும் 6 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக் கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள 73,887 இடங்களுக்கு தினமும் மனுத்தாக்கல் நடந்தது. 63,229 கிராம பஞ்சாயத்து, 9730 பஞ்சாயத்து சமிதி இடங்களுக்கு 341 வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களிலும் 928 ஜில்லா பரிஷத் இடங்களுக்கு 62 கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
ராஜீவ் சின்ஹா கடந்த ஜூன் 7 அன்றுதான் மேற்கு வங்கத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட ஒரே நாளில் யாரும் எதிர்பாராத வகை யில் மூன்றடுக்கு பஞ்சாயத்துத் தேர்தலை அறி வித்தார். பஞ்சாயத்து தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு ஏன் இவ்வளவு அவசரம் என கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக, தேர்தல் ஆணை யம் தேர்தல் தேதி அறிவித்த பிறகு, அதற்கான தயாரிப்பு மற்றும் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்ள 4 முதல் 5 நாட்கள் அவகாசம் வழங்கும். தேர்தல் குறித்து அறிவிப்பதற்கு முன்பு, அங்கீகரிக்கப்பட்ட அனை த்துக் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். ஆனால், இந்தத் தேர்த லில் இத்தகைய ஆலோசனைகள் எதுவும் நடத்தப் படவில்லை.
ஒரு மனுத்தாக்கலுக்கு வெறும் 6.7 நிமிடம்!
மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த அவசர கதியான நடவடிக்கையால், 402 மையங்களில் தினமும் 4 மணி நேரம் வேட்பு மனுத்தாக்கல் பெறுவதன் மூலம், 24 மணி நேரத்தில் 73,887 பதவிகளுக்கான வேட்பு மனுக் களைப் பெற்று முடிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு தொகுதிக்கு 10 வேட்பாளர் என வைத்துக் கொண்டால், 24 மணி நேரத்தில் (1440 நிமிடங் கள்) 7,38,870 வேட்பு மனுக்களை பெறுவது சாத்தியமா காது. ஜில்லா பரிஷத் இடங்களை தவிர்த்தாலும், 341 அலுவலகங்கள் மீதமுள்ள 72,959 இடங்களுக்கான 7,29,590 வேட்பு மனுக்களை பெற வேண்டும். அதாவது, ஒரு வேட்புமனுவிற்கு 0.67 நிமிடம் அல்லது 40.2 விநாடிகள் மட்டுமே ஒதுக்க முடியும். ஒரே நேரத்தில் 10 அலுவலர்களிடம் வேட்புமனு சமர்ப்பிக் கப்படுகிறது என்றாலும்கூட, ஒரு வேட்புமனுவிற்கு 6.7 நிமிடம் மட்டுமே வழங்க முடியும். வேட்பு மனு மூன்று பக்கங்களை உள்ளடக்கி யது. இதன் இணையாக மூன்று பக்கம் கொண்ட உறுதிமொழிப் படிவமும் உள்ளது. வேட்புமனுவில் 41 இடங்களையும், உறுதிமொழிப் படிவத்தில் 62 இடங் களையும் நிரப்ப வேண்டும். இவை தேர்தல் அதிகாரி அல்லது அவரது உதவியாளரின் சரிபார்ப்புக்கு உட் பட்டது. அதிகாரிகளால் சரிபார்க்கப்படும் வாக்கா ளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் பட்டியல், இனச்சான்றிதழ் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் வேட்பாளர்கள் சமர்ப் பிக்க வேண்டும். மேலும், வேட்பாளர் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், அதற்கு தனியாக இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதுவும் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். இவ்வளவு விரிவான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிற சூழலில், வெறும் 6.7 நிமிடத்தில் இப்பணிகளை நிறைவேற்றுவது மனிதனால் சாத்தி யப்படுமா என தேர்தல் ஆணையர் ராஜீவ் சின்ஹா விடம் அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
8 மணிநேரத்தில் திரிணாமுல் 64,559 வேட்பு மனுத்தாக்கல்!
போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால், கடந்த ஜூன் 9 அன்று, 341 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் 62 கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க முடியவில்லை. ஜூன் 10 அன்றுகூட, தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வராததால், பல்வேறு தொகுதி அலுவலகங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் வழங்கிய தரவுகளின்படி, ஜூன் 9, 10, 12 ஆகிய முதல் 3 நாட்களில், 44 ஆயிரம் வேட்பு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுத்தாக்கலின் எண்ணிக்கை ஜூன் 13 அன்று 94 ஆயிரத்தை எட்டியது. ஜூன் 14 இல் 1,62,655-ஐ கடந்தது. மீதமுள்ள நான்கு மணிநேரத் தில் இன்னும் 5,50,000 வேட்பு மனுக்கள் சமர்ப் பிக்கப்பட வேண்டியிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 14-15 தேதிகளில் பல்வேறு மண்டல அலுவலகங்களில், ஆளும் திரிணா முல் காங்கிரஸ் கட்சியினர் துப்பாக்கி மற்றும் குண்டுக ளுடன் அத்துமீறி நுழைந்தனர். ஜூன் 13 ஆம் தேதி வரை, திரிணாமுல் கட்சியினர் 9,328 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், ஜூன் 15 அன்று மனுக்களின் எண்ணிக்கை திடீரென 73,887 ஆக அதிகரித்தது. முதல் 12 மணி நேரத்தில் வெறும் 9328 மனுக்களையும், அதைத் தொடர்ந்த 8 மணி நேரத்தில் வியக்க வைக்கும் வகையில் 64559 மனுக்க ளையும் கண்டது நம்பமுடியாததாக, ஒரு மாயா ஜாலமாக உள்ளது. எதிர்க்கட்சியினரை வேட்பு மனுத்தாக்கல் செய்ய விடாமல் ஆளும் திரிணாமுல் கட்சியினர் தடுக்கின்ற னர். திரிணாமுல் கட்சியினர், தனது செல்வாக்கில் உள்ள சமூக விரோத அமைப்புகளை ஒன்றுதிரட்டி, அரிவாள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தொகுதி, கோட்ட அலு வலகங்களுக்குள் நுழைந்தனர். திரிணாமுல் கட்சி எதிரிகளை ஒடுக்குவதற்காக பொதுமக்களை கொலை செய்யவும் தயங்காது. அக்குண்டர்களுக்கு எதிராக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் சில பகுதிகளில், எதிர்க்கட்சியினர் வேட்பு மனுத்தாக்கல் செய்வதை தடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அச்சுறுத்தினர். இதையும் மீறி தாக்கல் செய்யச் சென்றவர்கள் மீது பொய் வழக்குகளை புனைத்து, கைது செய்யும் நடவடிக்கை யில் ஈடுபட்டனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி யின் தீராத அதிகாரத் தாகத்தாலும், மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற அவரது அச்ச உணர்வாலும், அம்மாநிலம் ரத்தக் கறைகளுடன் காட்சியளிக்கிறது.
மம்தா பானர்ஜியின் அச்சம்தான் என்ன?
மக்கள் எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்து விட்டால், நிச்சயம் தனது கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்ற உண்மையை மம்தா பானர்ஜி நன்கு அறிவார். இந்த விசயத்தில், மோடி-அமித்ஷா தலை மையிலான பாஜக அரசுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் ரகசிய புரிதல் உள்ளது. திரிணாமுல் கட்சித் தலைவர்களின் ஊழலுக்கு பாஜக பாதுகாப்பு கேடயமாக இருக்கும் உண்மை, தற்போது பொது வெளியில் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நாரதா ஊழல் முறைகேடு, சாரதா ஊழல் மற்றும் பிற நிதி நிறு வனங்களின் வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. சட்ட விரோத தங்க கடத்தலில் ஈடுபட்ட முதல்வரின் ஒன்று விட்ட மருமகனது மனைவியை, ஒன்றிய அரசு அதிகாரி கள், சுங்கத்துறையினர், சிஐஎஸ்எப் வீரர்கள் மற்றும் விமான அதிகாரிகள் ஏன் விடுவித்தனர் என்பதை பாஜக-திரிணாமுல் இடையிலான ரகசிய புரிதல் விவரிக்கிறது. முதல்வரின் மருமகன் நிலக்கரி, மண், தங்கம் மற்றும் பசு கடத்தலில் ஈடுபட்டவராக இருந்தாலும், இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை எந்தவித முனைப்பும் காட்ட வில்லை. அவ்வப்போது சம்மன் மட்டும் அனுப்பி யுள்ளனர் என்பவை நினைவு கூரத்தக்கவை.
பாஜக வேட்பாளர்களுக்கு தடை இல்லை
தற்போதும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது, அவர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்ட னர். ஆனால், பாஜக வேட்பாளர்கள் எந்தவித தடைக ளையும் சந்திக்காமல் மனுத்தாக்கல் செய்துள்ள னர். தனியார்மய ஆதரவு ஊடகங்கள், பாஜக மற்றும் திரிணாமுல் இடையே ஏற்பட்ட ஒரு சில மோதல் களை மட்டும் தேர்வு செய்து வீடியோ எடுத்து ஒளி பரப்பி, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் உள்ளதாக காட்ட முயற்சித்துள்ளன. ஆனாலும் பாஜக-திரிணாமுலின் ரகசிய புரிதல் மெல்ல மெல்ல வெளிவரத் துவங்கியிருக்கிறது. திரிணாமுல் கட்சியின் உண்மையான பாதுகாவலர் பாரதிய ஜனதா கட்சிதான் என்பதை மேற்குவங்க மக்கள் தற்போது புரிந்து கொண்டனர். இந்த இரு கட்சிகளும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது மட்டுமல்ல;
தற்போது இவை (திரிணாமுல்-பாஜக) பரஸ்பரம் உதவி செய்து கோவா, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளன. நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இடது முன்னணியின் 34 ஆண்டு கால ஆட்சியில், மாநிலத்தில் ஒரு வகுப்புவாத வன்முறைகூட நிகழ வில்லை. ஆனால், கடந்த 12 ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் கிளை கள் மற்றும் அதன் பள்ளிகள் அசுர வளர்ச்சி பெற திரிணாமுல் அரசு சலுகை வழங்கியுள்ளது. பாஜக வுக்கு திரிணாமுல் ஆதரவு அளித்ததன் விளைவாக, நாடாளுமன்றத்தில் 19 உறுப்பினர்களையும், மாநில சட்டமன்றத்தில் 77 உறுப்பினர்களையும் வென்றுள்ளது. மம்தா பானர்ஜியின் மாபெரும் குற்றங்கள், பாஜக- ஆர்எஸ்எஸ் மாநிலத்திற்குள் இடம் பிடிப்பதற்கு வழிவகுக்கிறது என்று மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு அன்றைக்கே உறுதியாகக் கூறினார். கடந்த 12 ஆண்டுகளாக திரிணாமுல் கட்சி பல்வேறு குற்றங்களை அரங்கேற்றி இருக்கிற நிலையில், தற்போது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது; எதிர்க்கட்சியினருக்கு எதிராக தாக்கு தல் நடத்துகிறது; பஞ்சாயத்து, நகராட்சிகள் உள்ளிட்ட வற்றை ஒழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இடது முன்னணி அரசும், கிராமப்புற வங்கமும்
கிராமப்புற சமூகங்களின் பங்களிப்புடன், பஞ்சா யத்து அமைப்புகளை மேம்படுத்துவதற்கு இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1978 ஆம் ஆண்டு இடது முன்னணி அரசால் செயல்படுத்தப்பட்ட பஞ்சா யத்துச் சட்டம் நாட்டிற்கே உதாரணமாக திகழ்ந்தது. இடது முன்னணி அரசின் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றது மட்டுமின்றி, 1980-களில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, இம்முறையை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதுவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74 ஆவது சட்டத்திருத்தத்திற்கு வழிவகுத்தது. இதன் மூலம், நாடு முழுவதும் புதிய பஞ்சாயத்து சட்டம் அமல்படுத்தப்பட்டது. இடது முன்னணி அரசின் புதிய பஞ்சாயத்து மற்றும் நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் பலனாக, உழைக்கும் ஏழை மக்களின் நிலை உயர்ந்தது. நிலமற்ற மக்க ளுக்கு நிலம் கிடைத்தது; 11 லட்சம் ஏக்கர் நிலம், நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகள், மேற்குவங்க கிராமப் புறங்களின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தின.
இந்த வெற்றிகரமான நடவடிக்கை, கிராமப்புற நுகர்வோர் சந்தையில் மட்டும் ரூ.22 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்ட வழிவகுத்தது. மாநிலத்தில் 1980-களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட தொழில்மய மாக்கல் முயற்சிகள், 2010 ஆம் ஆண்டு தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு உந்துதலாக இருந்தது. கிராமப்புறங்கள் பொருளாதாரத்தில் செழிப்படைந்தது மட்டுமின்றி, இந்த நடவடிக்கை நகர்ப்புற இளைஞர்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் பல புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், எஸ்டேட்டுகள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் உரு வாகத் தொடங்கின. 1977 இல் வறுமைக் கோட்டுக்கு கீழ் 66 சதவீத மக்கள் வாழ்ந்த நிலையில், 2000 ஆம்ஆண்டு இது 21 சதவீதமாக குறைந்தது. இடது முன்னணி அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு, மாநிலத்தில் கல்வியறிவு பெறாதவர்களின் விகிதம் 60 சதவீதமாக இருந்த நிலை யில், 2000 ஆம் ஆண்டுஅது 23 சதவீதமாக சரிந்தது. 1977-க்கு முந்தைய காலங்களில், மேற்கு வங்கம் உணவு விநியோகத்திற்கு பிற மாநிலங்களை நாட வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இடது முன்ன ணியின் ஆட்சியில், மாநிலத்தின் உணவு உற்பத்தியை பூர்த்தி செய்ததுடன், உபரியாக இருந்த அரிசி மற்றும் காய்கறிகளை பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்தது. நிலச் சீர்திருத்தங்கள் மூலம், நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வருவாய் ஏற்படுத்திக் கொடுத் தது, பஞ்சாயத்துகள் மூலம் உழைக்கும் ஏழை மக்க ளுக்கு அதிகாரம் வழங்கியது. மேலும், அனைவரும் கல்வி கற்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளை கட்டிக் கொடுத்தது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முயற்சி களை இடது முன்னணி அரசு மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டது. மக்களுக்கு அதிகாரமளித்தது, வருவாய் நிலையை உயர்த்தியது, கல்வி கற்பதற்கான வாய்ப்பு களை விரிவுபடுத்தியது உள்ளிட்டவற்றின் வாயிலாக கிராமப்புற ஏழைகளின் உண்மையான வளர்ச்சி இலக்கை எட்டியது. இடது முன்னணி அரசின் இத்த கைய விரிவான நடவடிக்கைகளால், கிராமப் புறங்களில் சிறப்பான மாற்றம் ஏற்பட்டது.
மேற்குவங்கத்தின் கிராமப்புறமும் திரிணாமுல் ஆட்சியும்
ஆனால் கடந்த 12 ஆண்டு கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில், மாநிலத்தின் கிராமப்புற பொரு ளாதாரம் இடைத்தரகர்களால் சூறையாடப்பட்டு விட்டது. தற்போது விவசாயிகள் தாங்கள் விளை வித்த பயிர்களை இடைத்தரகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகளின் பயிர் இழப்பீடு தொகை பறிக்கப்படுகிறது; விவசாயிகள் விளைவித்த அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை இடைத்தரகர்கள் திரிணாமுல் கட்சி யின் ஆதரவுடன் சந்தைகளில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இடது முன்னணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வேளாண், மீன்வளம், கூட்டுறவு பாதுகாப்பு முறை உள்ளிட்டவற்றையும் திரிணாமுல் அரசு முற்றி லும் அழித்துக் கொண்டிருக்கிறது. கிராமப்புற வங்கத் தின் பொருளாதாரம் தற்போது இடைத்தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த பயங்கரமான சூழலுடன் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்; விண்ணை முட்டும் விலை உயர்வு நுகர்வோர் தலை யில் சுமையை ஏற்றியுள்ளது. இந்த இரட்டைத் தாக்கு தல், வேளாண்மைத் துறையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோரிடையே கடுமையான தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல; ஆசிரியர்கள் பற்றாக்குறையால், இடது முன்னணி ஆட்சியில் அமைக்கப்பட்ட தொடக்க, உயர்தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கள் தற்போது கடும் இன்னலை சந்தித்துக் கொண்டி ருக்கின்றன. அரசின் கல்வி முறையை முற்றிலு மாக ஒழித்துவிட்டு, கல்வித்துறை மூலம் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் வழியை ஏற்படுத் திக் கொடுப்பதே திரிணாமுல் கட்சியின் முதன்மையான நோக்கமாக உள்ளது. இதன் விளைவாக, மழலைப் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை தனியார்மயம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. மேற்குவங்க பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை முறைகேடு, பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச ஆட்சியில் நடந்த வியாபம் ஊழ லையே மிஞ்சியிருக்கிறது. கல்வித்துறை அமைச்சர் உட்பட, கல்வித்துறையில் உயர்மதிப்பு பெற்ற பல அதி காரிகள் இந்த நாசகர வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை
கடந்த 12 ஆண்டுகளாக திரிணாமுல் ஆட்சியாளர் கள் கடைப்பிடிக்கும் அடக்குமுறை தந்திரங்கள் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் அராஜகத்தால், இடது முன்னணி அரசால் கொண்டு வரப்பட்ட தொழில் நிறுவனங்கள் அதிருப்தியடைந்து, மாநிலத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, திரிணாமுல் ஆட்சிக் காலத்தில் புதிதாக எந்தவொரு தொழிற்சாலையும் அமைக்கப்படவில்லை. நூறுநாள் வேலை அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் இடதுசாரிக ளின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றது. இத்திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, திரிணாமுல் ஆதரவாளர்கள் நிதியை அபகரித்து இருப்பதால், கடந்த 2 ஆண்டுகளாக மாநிலத்தில் தனி நபர் ஒருவரால்கூட இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பை பெற முடியவில்லை. இதன் விளைவாக, கிராமப்புற வங்கத்தில் உள்ள இளைஞர்கள், பெண்கள் என ஒரு கோடி பேர், வேலைத் தேடி பிற மாநிலங்களுக் குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கோர மண்டல் ரயில் விபத்து நிகழ்ந்தது. இந்த ரயிலில் பய ணித்த பெரும்பாலானோர், மேற்கு வங்கத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலைத் தேடி சென்றவர்கள்தான்.
இடது முன்னணி ஆட்சியில், கிராம சபைகள் மூலம் மக்கள் பங்களிப்புடன் நிர்வகிக்கப்பட்டிருந்த பஞ்சாயத்துகள், தற்போது சந்தர்ப்பவாதிகள், பேரா சைக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் ஆதிக்கத் தில் சிக்கிக் கிடக்கின்றன. நூறுநாள் வேலைத் திட்டம், ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் மற்றும் சாலைகள், கால்வாய்கள், குளங்களை புதுப் பித்தல் ஆகிய திட்டங்களுக்கான நிதியை திரிணாமுல் கட்சியினர் சூறையாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட நிதியுதவியிலும் கை வைத்துள்ளனர். ஏழை விவசாயிகளுக்கு இடது முன்னணி அரசு நில உரிமை வழங்கியது. இதன் மூலம் நில உரிமை பெற்ற விவசாயிகளின் நிலங்களை, தற்போது திரிணா முல் ஆதரவுடன் செயல்படும் நில மாஃபியாக்கள் சட்ட விரோதமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்ற னர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலை வர்கள் அரசு நிலங்கள், கால்வாய்கள் மற்றும் குளங்களை சட்டவிரோதமாக விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடது முன்னணி ஆட்சிக் காலத்தில், மேற்கு வங்க கிராமப் புறங்களில் இந்து, முஸ்லீம், கிறிஸ்த வம், புத்தம், ஜெயின், சீக்கிய சமூகத்தினர் மற்றும் நாத்திகர்கள் மதநல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த 12 ஆண்டுகால திரிணாமுல் ஆட்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்பு வாத கலவரங்கள் நடந்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆர்எஸ்எஸ்-பாஜகவின் செயல்பாடு களை எதிர்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி னாலும், சாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வெறுப்பை விதைத்து, மக்களிடையே பிரிவை ஏற்படுத்துவது என்ற இந்துத்துவாவின் தந்திரங்க ளையே பின்பற்றி வருகிறது. இதனால்தான் மேற்குவங்க மக்கள் ஒன்றி ணைந்து, பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஒருபுறம், மக்கள் உணர்வுகள் மீது தாக்குதல் நடத்தி, பஞ்சா யத்து தேர்தலை தடை செய்ய பாஜக அரசு முயல் கிறது; மறுபுறம், எதிர்க்கட்சிகளை வேட்பு மனுத் தாக்கல் செய்ய விடாமல் தடுத்து, பஞ்சாயத்து தேர்த லில் போட்டியின்றி வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்ற திரிணாமுல் கட்சி முயன்று கொண்டி ருக்கிறது. இத்தகைய கலவரக்காரர்கள் மற்றும் கொள்ளை யர்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கு ஒரே வழி, மக்கள் ஒன்றிணைந்து போராடுவதுதான். அந்தப் போராட்டத்தை இடது முன்னணி மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்கிறது.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூன் 19)
தமிழில் : ஆர்.நித்யா