தமிழ்நாடு முதலமைச்சர், மார்ச் 19ஆம் தேதி ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் நாட்டில் வசிக்கும் நரிக்குறவர், குருவிக்காரன் ஆகிய பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்சனை நீண்ட பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியினரால் கிடப்பிலே போடப்பட்டிருக்கும் ஒரு பிரச்சனை. எனவே, ஒன்றிய அரசுக்கு நினை வூட்டும் விதமான முதலமைச்சரின் இந்த நடவடிக்கை வர வேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் நீலகிரி தவிர மற்ற அனைத்து மாவட் டங்களிலும் இவ்வின மக்கள் வசிக்கிறார்கள். 60 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை மக்கள் தொகை இருக்கும். இவ்வினத்தைச் சார்ந்தவர்களில் ஒரு மருத்துவர், ஏழு பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர். பலநூறு ஆண்டுகளாக நாடோடிச் சமூகமாக வாழ்ந்து வருவதால் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது. அது மட்டு மல்லாமல், மற்ற சமூக மாணவர்கள் இவர்களை ஒதுக்கு வது, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் காரணமாக வும் பள்ளியில் சேர்க்காமல் இருந்தனர். கடந்த பத்திருபது ஆண்டுகளாகத்தான் தங்கி வாழும் நிலையை அம்மக்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் சுமார் 15000 குழந்தைகள் மேல்நிலை வகுப்பு வரை தற்போது படித்துக் கொண்டுள்ளனர்.
இவ்வின மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சில மாவட்டங்களில் குருவிக்காரர்கள் என்றும் வேறு சில மாவட் டங்களில் நரிக்குறவர்கள் என்றும் அழைக்கின்றனர். நரிக்குறவர்கள் என்றழைக்கப்படும் குருவிக்காரர்கள் வடஇந்தியாவில் ஆரவல்லி மலைத்தொடர், மேவார், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலிருந்து தமிழ கத்தில் குடியேறியவர்கள். மராட்டிய வீரன் சிவாஜி தோற்ற போது, முகம்மதியர்கள் ஆட்சியின் கீழ் வாழ விரும்பா மல் வெளியேறியவர்கள். சிவாஜியின் படையில் வீரர்க ளாக பணிபுரிந்தவர்கள். இவர்கள் “வாக்ரி” என்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் மற்றவர் களோடு பேசும் போது தமிழிலேயே உரையாடுகின்றனர். பறவைகள் பிடிப்பதை தொழிலாக கொண்டி ருந்ததால் குருவிக்காரர்கள் என்றும், நரியினை வேட்டையாடி அதன் இறைச்சியினை உண்டதாலும், நரித்தோல், நரிப்பல், நரிக்கொம்பு, நரிவால் ஆகிய வற்றை விற்றதாலும் நரிக்குறவர் என்று தொழில் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படு கின்றனர். எனவே, இந்தப் பெயர்கள் அவர்களாக சூட்டிக் கொண்டதில்லை கடும் வறுமையில் வாழ்ந்தாலும், சுய தொழில், சுயசம்பாத்தியம் என்று வாழ்பவர்கள் இவ்வின மக்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தற்போது ஊசி, பாசி, மூலிகை மருந்து மற்றும் பலவகையான பொ ருட்களை வியாபாரம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வியலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று 1980ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதினார். அதற்குப் பிறகு வந்த அனைத்து முதலமைச்சர்களும் இதை வலி யுறுத்தி ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி யுள்ளனர். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி தோழர்.பிருந்தாகாரத் தலைமையில் நானும், திரு வண்ணாமலை மாவட்ட நரிக்குறவர் சமூக தலைவர் கடாரம் சிங்கும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்து நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தினோம்.
அன்றைய பிரதமருடன் சந்திப்பு
அப்போது பிரதமர் தெரிவித்தது ‘ஒரு இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல படிக்கட்டுக்களை தாண்ட வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை முதலில் இந்திய பதிவாளர்துறை ஏற்க வேண்டும். பிறகு, பழங்குடியினர் நல அமைச்சகம் ஒப்புதல் தர வேண்டும். அதற்குப் பிறகு தான் அமைச்சரவைக்கு அதை கொண்டு வர முடியும். பிறகு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும். நேரடியாக என்னிடம் கொடுப்பதால் ஒன்றும் நடக்காது’ என்று வெளிப்படையாகப் பேசினார். பிறகு நான், ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகாலமாக, பதிவாளர் துறை பல்வேறு விபரங்களை மீண்டும் மீண்டும் கேட்டு காலதாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. பதிவா ளர் துறைக்கு பிரதமர் இது குறித்து அழுத்தம் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். மேற்கண்ட எல்லா படிக்கட்டுக்களையும் தாண்டி 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய தயாராக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து குறு மன், நரிக்குறவர், குருவிக்காரன் ஆகிய இனம் அந்த மசோதாவில் இடம் பெற்றிருந்தது. இந்த மசோதாவின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர். ஜிதேந்திர சௌத்ரி எம்.பி, பேசுவதாக இருந்தது. நாடாளு மன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் இம்மசோதாவை தாக்கல் செய்ய இருந்தனர். ஆனால் கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாக முடிக்கப்பட்டதால் மசோதா சட்டமாகா மல் கிடப்பலே போடப்பட்டுவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக கடந்த மூன்றாண்டு காலமாக இது குறித்து கவலையேபடவில்லை. இந்த நிலையில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைத்த கதையாக, ‘நரிக்குறவர்’ என்ற பெயரை பயன்படுத்தி பழங்குடி பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று குறவர் சமூ கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி செயல்படும் சில அமைப்புகளும், சில நண்பர்களும் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர். அரசுக்கு மனுக்களையும் அனுப்பி யுள்ளனர். அதற்குக் காரணம், ஆதிப்பழங்குடியின ராகவும், தமிழ் திணைக்குடிகளாகவும் விளங்கும் “குறவர்” என்ற இனத்தின் பெயரை வடக்கிலிருந்து வந்தேறிக ளான நரிக்குறவர் என்று அழைப்பதும், அதே பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதும் தங்கள் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பது அவர்களது வாதம். தமிழ்நாட்டில், ஒரு சாதியின் பெயரை பலர் பயன் படுத்துவது வழக்கமான ஒன்றாகத்தான் இருந்து வரு கிறது. நாயுடு சாதியை நாயக்கர் என்றும், வன்னியர்க ளை வன்னியர் கவுண்டர் என்றும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுத்தி அழைத்தும் வருகின்றனர். நாயக்கர் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என்று நாயுடுகளோடு யாரும் தகராறு செய்யவில்லை. கவுண்டர் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம் என்று வன்னியர்களோடு யாரும் மல்லுக்கட்டவில்லை. மற்றொன்று, அச்சமூக மக்கள் தங்களை நரிக்குறவர் என்று அழைத்துக் கொள்வதில்லை. மற்றவர்கள் அழைப்பதற்கு மிகச் சிறுபான்மை சமூகமாக எண் ணிக்கையில் மிக மிக குறைவாக இருக்கிற மக்கள் என்ன செய்ய இயலும்?
எதிர்ப்பது அநீதி
பலநூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கிற ஒரு சாதிப்பெயரை பயன்படுத்தக்கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும், குறவர் சமூகப் பிரதிநிதிகள் சொல்வது போல் நரிக்குறவர் என்பதை விட்டுவிட்டால் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தாலும் வருவாய்த் துறையினரிடமிருந்து பழங்குடி சான்றிதழ் பெறுவது இயலாத காரியமாகிவிடும். ஏனென்றால், நீங்கள் நரிக்குற வர்கள், குருவிக்காரர்கள் அல்ல என்று கூறி அலைக் கழிக்கப்படவும், தட்டிக்கழிக்கவுமே அது உதவும். ஏனென் றால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வின மக்களை ‘நரிக்குறவர்’ என்றே மற்றவர்கள் அழைக்கின்றனர். ‘ன்’, ‘ர்’, ஸ், கு, கொ போன்ற எழுத்துக்க ளை வைத்துக் கொண்டே எப்படியெல்லாம் சான்றிதழ் தர மறுக்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள் என்பதை அறிவோம். குறவர்களைப் போலவே நாடோடிச் சமூகமாக “வாக்ரி” மொழி பேசும் இம்மக்கள் இருந்ததால் தொழில் மற்றும் காரணப் பெயர் சேர்த்து ‘நரிக்குறவர்’ என்று தமிழ்நாட்டு மக்கள் அழைத்து வருகின்றனர். தமிழ்க்குறவர் வேறு, வட இந்தியாவிலிருந்து வந்தேறிய நரிக்குறவர் என்ப வர்கள் வேறு என்பதை தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து தான் வைத்துள்ளனர். எனவே, இதனால் குறவர் இனம் அழிந்து விடும் என்பதெல்லாம் கற்பனையானது. பல்வேறு மானுடவியல் அறிஞர்கள் அனைவரும் நரிக்குறவர், குருவிக்காரன் இரு பிரிவினரும் பழங்குடியினர்தான் என்று அறிக்கை கொடுத்து அதை தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொண்டு, ஒன்றிய அரசின் எல்லாப்படிக்கட்டுக்களையும் தாண்டி மசோதா தாக்கல் செய்ய உள்ள நிலையில் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பது அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
குறவர்கள் செய்யும் தொழில், வாழுமிடத்தை பொருத்தும் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மிகத் தீவிர மான கண்காணிப்புக்கும், காவல்துறையினரின் கொடூர மான ஒடுக்குமுறைக்கும் உள்ளான இம்மக்களை பல்வேறு பிரிவினராக அரசே பரிந்துரைத்துள்ளது. இப்போ தைய நிலையில் குறவர்கள் ஒரே சமூகமல்ல! 31 பிரிவு குறவர்கள் தமிழகத்தில் வாழ்வதாக மனிக்கோ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். மானிடவியல் ஆய்வாளர் பத்மபாரதி 70 பிரிவு குறவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள் ளார். இவர்களில் மலைக்குறவன் (பழங்குடியினர்) குறவன், சிந்தனார் (பட்டியல் சாதியினர்) கொறவன் (பிற்படுத்தப்பட்டவர்) மற்ற பிரிவினர் மிகவும் பிற்படுத்தப் பட்டவர் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பிரித்து வைத்துள்ளனர். இதனால் இச்சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம், ஏராளம்.
மலைவாழ் மக்கள் சங்கமும் கலைஞரின் புதிய பரிந்துரையும்
குறவர் இனத்தின் அனைத்து உட்பிரிவினரையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது பரிந்துரைத்திருந்தார். அதில் பழங்குடியி னரான குறவர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று போராடி, தமிழ்நாடு பழங்குடியி னர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டு மென்று கோரி அதில் வெற்றி பெற்றது தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம். அனைத்து குறவன் இன அமைப்புக ளையும் ஒன்றிணைத்து மாநில கூட்டமைப்பை உரு வாக்கி பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் பரிந்து ரையை ஏற்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டி போராடியது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய தமிழ் மாநில செயலாளர் தோழர்.என்.வரதராஜன் அவர்கள் முதலமைச்சருக்கு இது குறித்து கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல மைச்சர் மு.கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து வற்புறுத்தியதன் விளைவாகத்தான் குறவர் இனத்தின் அனைத்து உட்பிரிவினரையும் பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்த கலைஞர் அவர்கள் மூலமே, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்து ரைக்க செய்த மாற்றத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஒன்றுபட்டு நின்று உரிமையைப் பெறவேண்டும்
எனவே, குறவர் சமூகத்தின் நலனுக்காக போராடும், பாடுபடும் நண்பர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சனை, குறவர் இனத்தின் உட்பிரிவினர் அனை வரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அழுத்தத்தை ஒன்றிய - மாநில அரசுகளுக்கு தருவதே ஆகும். குதர்க்கம் பேசி இரண்டு பட்டு நிற்பதற்குப் பதிலாக ஒன்றுபட்டுப் போராடி உரிமைகளைப் பெறுவதே சாலச் சிறந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இப்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரிலாவது நரிக்குறவர், குரு விக்காரன், குறுமன் ஆகிய பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக்கப்பட வேண்டும். ஒன்றிய ஆட்சியா ளர்களின் அலட்சியம் காரணமாக அச்சமூக மக்கள் மிகப் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மேலும் கால தாமதம் செய்யாமல் உடனடி நடவடிக்கை தேவை. இதே போல், குறவன் இனத்தின் உட்பிரிவினர், குறு மன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், ஈரோடு மாவட்ட மலை யாளி, மலைப்புலையன், வேட்டைக்காரன் ஆகிய இனங்க ளை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். மேற்கண்ட இனங்கள் குறித்தெல்லாம் தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். அதனடிப்படையிலேயும், இவர்க ளெல்லாம் உண்மையில் பழங்குடியினர் என்பதா லேயே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இக்கோ ரிக்கையில் அழுத்தமாகத் தலையிடுகிறது. இந்திய பதிவாளர் துறை உள்ளிட்ட பல்வேறு மட்டத்தி லும் கேட்பது விளக்கங்கள் தானே தவிர, இவர்கள் பழங்குடியினர் அல்ல என்ற முடிவுக்கு வரவில்லை. எனவே, ஒன்றிய அரசு கேட்டுள்ள விபரங்கள், விளக்கங்க ளை தாமதமில்லாமல் அனுப்பி நடவடிக்கையை துரிதப் படுதத் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம் இதற்கான முன்னெ டுப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளும். நரிக்குறவர் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குறவர் சமூக நண்பர்கள் தங்களது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டு மென்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்