2014 இல் பாஜக தனது தேர்தல் அறிக்கை யில், ‘ஆண்டுக்கு 2 கோடி இளை ஞர்களுக்கு வேலை கொடுப்போம்’ என்று கூறியது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டி ருந்தால் 2019 மக்களவைத் தேர்தலை சந்தித்தபோது, 10 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நிலைமையை ஆய்வு செய்தால் பத்து கோடி பேருக்கு வேலை கிடைக்காதது மட்டு மல்ல, இந்த அரசு பின்பற்றிய கொள்கைகளின் விளை வாக வேலை செய்துகொண்டிருந்த 70 லட்சம் பேரது வேலை பறிபோனது என்பதே உண்மை.
18 மணி நேரம்
அதே கொள்கை தற்போதும் தொடர்கிறது. ஒன்றிய அரசில் ஏற்படும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங் கள் நிரப்பப்படவில்லை. இந்திய ரயில்வேயில் மட்டும் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு நியமனங்கள் செய்ய ரயில்வே யும் ஒன்றிய பாஜக அரசும் முன்வரவில்லை. அதன் விளைவாக இந்தியாவில் ரயில் பயண பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு பணியில்கூட போதிய ஊழியர்களை நியமனம் செய்ய முன்வரவில்லை. ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதெல்லாம் ரயில் பயணத்தின் பாதுகாப்பை பாதிக்கின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே.
உலகத்திலேயே மிக அதிகமானோர் வேலை செய்துவந்த பொதுத்துறை நிறுவனமாக இருந்தது இந்திய ரயில்வே. கடந்த 20 ஆண்டுகளில் ரயில் களின் எண்ணிக்கையும் இயக்கமும், புதிய ரயில் பாதைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் ஓய்வுபெற்ற ஊழியர்களின் இடத்தில் நியமனங்கள் இல்லை. நியமனத்துக்கு தடை விதித்து வேலைக்காக காத்தி ருக்கும் இளைஞர்கள் இளம் பெண்களுக்கு எதிராக சவால் விடுகிறது ஒன்றிய பாஜக அரசு. மற்ற பொதுத்துறை நிறு வனங்களை எடுத்துக்கொண்டால் அங்கெல்லாம் நிய மனங்கள் இல்லாதது மட்டுமல்ல, அவை தனியாருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக கடந்த மார்ச் 28, 29 தேதிகளில் நாடு முழுவதும் தொழிலா ளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்த சட்டங்க ளை திரும்பப் பெற வலியுறுத்தி ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டம் நடந்தது. இறுதியாக அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டது. விவசாயிகளிடமும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டி வந்தது.
இந்துக்களையும் கொல்லும் ஆர்எஸ்எஸ்
வேலையின்மையையும் மக்கள் சந்திக்கும் துய ரங்களையும் திசை திருப்ப வகுப்புவாத பதற்றத்தை தீவிரப்படுத்துகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர மதவெறியை ஏற்றுக்கொள்ளாத, மதச்சார் பின்மையை பின்பற்றும் இந்துக்களும் ஆர்எஸ்எஸ்சின் எதிரிகளாவர். கோவிந்த் பன்சாரே முஸ்லீம் அல்ல. ஆனால், அவரைக் கொன்றனர். நரேந்திர தபோல்கர் முஸ்லீமோ கிறித்தவரோ அல்ல. அவரை கொன்ற னர். எம்.எம்.கல்புர்கி கர்நாடகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்தவர். அவர் கிறித்தவரும் அல்ல முஸ்லீமும் அல்ல. ஆனால் அவரை துப்பாக்கி யால் சுட்டுக் கொன்றனர். கவுரி லங்கேஷ், சாந்தனு பவுமிக் ஆகியோர் எந்த சிறுபான்மை சமூகத்தையும் சார்ந்தவர்களல்ல, அவர்களையும் கொன்றனர். அப்படி யென்றால் முஸ்லிமோ, கிறித்தவரோ, தலித்தோ, கம்யூனிஸ்ட்டோ அல்ல என்றாலும் ஆர்எஸ்எஸ்சின் மதவாதத்தை எதிர்த்தால், கொன்றுவிடுவார்கள் என்பதுதான். மதச்சார்பின்மையை பின்பற்றினால் கொன்றுவிடுவோம் என்கிற அணுகுமுறையைத்தான் ஆர்எஸ்எஸ் பின்பற்றுகிறது.
ஆர்எஸ்எஸ்சைப் பொறுத்தவரை முஸ்லிம், கிறித்தவர், தலித், கம்யூனிஸ்ட், மதச்சார்பின்மையை பின்பற்றும் அனைத்து இந்துக்களும் அவர்களது எதிரிகள்தான். மதவெறியை பின்பற்றும் ஒரு பகுதி யினரை பாதுகாப்பது என்பதே அவர்களது அணுகு முறை. அந்த நிலைப்பாடுதான் மகாத்மா காந்தியைக் கொன்றது. நாதுராம் கோட்சே என்கிற மதவெறியன் அந்த கொடிய செயலைச் செய்தான். தனது தந்தை கொல்லப்பட்டதை அறிந்த காந்தியின் மகனும் பத்திரிகையாளருமான தேவதாஸ் காந்தி திகைத்துப் போனார். என்ன செய்வதென்று அறியாமல் நாடாளு மன்ற தெருவில் உள்ள காவல்நிலையம் சென்றார். அங்கு கொலையாளியான கோட்சேவை கண்டார். தேவதாஸ் காந்தியை நேருக்கு நேர் சந்தித்த கோட்சே கூறினான், “இன்றைய தினம் உங்கள் வாழ்நாளில் மிகவும் துயரம் நிறைந்தது என்பதை அறிவேன். துரதிர்ஷ்ட வசமாக அதற்கு கொலைகாரனான நான் காரணமாகிவிட்டேன்” என்றான். அதிர்ந்துபோனார் தேவதாஸ் காந்தி. கோட்சே தொடர்ந்தான்; “உங்கள் தந்தையிடம் எனக்கு எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை”. பின் எதற்காக என் தந்தையை கொன்றாய் எனக்கேட்டபோது, “நீங்கள் என்னை நம்ப வேண்டும். அதற்கு காரணம் அரசியல் மட்டுமே” என்றான்.
மத அரசியல்
மகாத்மாவின் உயிரைப்பறித்த அந்த அரசியல் யாதெனில், அதற்கான விடை 1923 இல் ஆங்கிலேய ரிடம் ஆறாவது முறையாக மன்னிப்பு கோரி அந்தமான் சிறையில் இருந்து விடுதலை பெற்ற வி.டி.சாவர்க்கர் எழுதிய ஒரு புத்தகத்தில் உள்ளது. அந்த புத்த கத்தின் பெயர் ‘தி எசன்ஸியல் ஆப் இந்துத்துவா’ என்ப தாகும். அந்த புத்தகம் எழுதப்பட்டதை அறிந்து நாக்பூரில் இருந்து கேசவராம் ஹெட்கேவார் ரத்தின கிரி சென்று சாவர்க்கரை சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போதுதான், ஒரு மதம் சார்ந்த அரசின் நிர்மாணம் குறித்து-அதன் தனித்துவம் குறித்து பேசி விவாதித்து உறுதி செய்து சாவர்க்கரின் உத்தரவும் ஆசியும் பெற்று ஹெட்கேவார் நாக்பூர் திரும்புகிறார். இந்த சந்திப்பு க்குப் பிறகுதான் ஆர்எஸ்எஸ் உருவாக்கப்படுகிறது. அந்த ‘எசன்ஸியல் ஆப் இந்துத்துவா’ புத்தகத்தில் சாவர்க்கர் முன்வைக்கும் கோட்பாடுதான் ‘மத அரசியல்’. அந்த மத அரசியலைத்தான் ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதுபோல் தங்களது மத அரசியலுக்கு இடையூறாக வரும் எவராக இருந்தாலும் அவர்களை அழித்து ஒழிப்பது, வேறுபாடு கள் இல்லாத ஒரு ‘மதவெறியர்களின் ராஜ்ஜியமாக’ இந்தியாவை மாற்றுவது என்பதுதான் நோக்கம். முஸ்லீம்கள், கிறித்தவர்கள், இதர மதத்தினர் இல்லாத இந்தியா; பழங்குடியினர், தலித்துகள் இல்லாத இந்தியா; கம்யூனிஸ்ட்டுகள், மதச்சார்பின்மை நிலை பாடு மேற்கொள்வோர் எவரும் இல்லாத இந்தியா என ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற நோக் கத்துடன் செயல்படுகிறார்கள்.
அனைவருக்குமான இந்தியா
இந்த நாட்டின் அரசமைப்பு சாசனத்திற்கு வடிவம் கொடுக்க சட்ட விவாதங்கள் நடந்தபோது இந்தியா யாருடையது என்கிற கேள்வி முதன்மையாக எழுந்தது. அதற்கு பதில், இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கு மானது இந்தியா என்கிற கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஏதேனும் ஒரு பகுதியினருடையது அல்ல இந்தியா; இந்து, கிறித்தவர், சீக்கியர், புத்த, ஜைனர், பார்சிகளும் மதம் இல்லாதோரும் கலந்ததுதான் இந்தியா. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாத வர்கள் என அனைவருக்குமானது இந்தியா. அதனால்தான் இந்திய அரசமைப்பு சாசனத்தின் முகப்பில் ‘வி த பீப்பிள் ஆப் இந்தியா’ என பொறிக்கப் பட்டுள்ளது. இதில்தான் இந்தியா ஒரு ஜனநாயக சோசலிச மதச்சார்பற்ற குடியரசு எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மதச்சார்பற்ற குடியரசாக இருப்பதால்தான் நமதுநாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. மதச்சார்பு நாடாக மாறினால் இந்தியாவில் முடிவில்லாத மோதல்கள் ஏற்படும். இந்த நாடு ஒரு பிணக்காடாக மாறும். பெரும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் இந்தியாவின் அனைத்து அரசியல் நிபுணர்களும், பொறுப்பான அரசியல் தலை வர்களும் மதச்சார்பின்மை என்கிற முழக்கத்தை எப்போதும் உயர்த்திப் பிடித்தனர்.
வேலை, இளைஞர்களின் உரிமை
மத அடிப்படையில் மனிதர்களை பிளவுபடுத்தும் மிகவும் ஆபத்தான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் ஒன்றிய அரசுக்கும் ஒன்றிய அரசுக்கு தலைமை வகிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எதிராக இந்திய மக்களை உண்மையான பிரச்சனைகளின் பால் ஈர்க்க வேண்டும். இந்திய இளைஞர்கள் ‘வேலை’ என்கிற அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையிலான உரி மையை நிலைநாட்ட முன்வர வேண்டும். படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ப வேலை கோருவது இளை ஞர்களின் உரிமையாகும். சுதந்திரம் என்பது ஒரு இளைஞனை பொறுத்தவரை அவனது படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை கிடைப்பதாகும். பட்டமும் மேற்படிப்பும் முடித்த பிறகு வேலைதேடி தெருத் தெருவாக அலைவதற்கான உரிமை அல்ல சுதந்தி ரம். சுதந்திரம் என்றால் வேலை செய்வதற்கான உரிமையாகும்.
குமரி மாவட்டம் கொல்லங்கோட்டிலிருந்து புறப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பயணத்தை துவக்கி வைத்து ஆற்றிய உரையின் பகுதிகள்,
தொகுப்பு: சி.முருகேசன்