நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நடவடிக்கையும் கடைசி நடவடிக்கையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது ஏன்? குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்? என்கிற கேள்விகளுக்கான விடை, நாட்டு மக்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
சு.வெங்கடேசன் எம்.பி.,
ஜனாதிபதி இல்லாமல் நாடாளுமன்றம் சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கியது. சில நிமிடங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்தார். அவர் வந்து உரிய இடத்தில் நின்றதும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அவையிலிருந்த எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. ஏனென் றால் சபாநாயகரோ, செக்கரட்டரி ஜெனரலோ அவையில் இல்லை. அவர்கள் சரியாக 11 மணிக்கு இருக்கைக்கு வருவார்கள். அதன் பின்னர்தான் அவை நட வடிக்கை துவங்க வேண்டும். ஆனால் மோடி வந்ததும் நாட்டுப்பண் இசைக்கப் பட்டு விட்டது. இடையில் அதனை நிறுத்த முடியாது. எனவே, முழுமையாக இசைக்கப்பட்ட பின்னர் சபாநாயகரும், செக்கரட்டரி ஜெனரலும் தனது இருக்கைக்கு வந்தார்கள். பின்னர் மீண்டும் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப் பட்டது இதுவே முதல் முறை. அவையின் மாண்பு கருதி இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் மிக பக்குவமாக கையாண்டனர். இந்த தவறு குறித்து விசாரிக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.
மோடி ‘மைய’ ஆட்சியில் மரபு, விதிகளுக்கு மதிப்பில்லை
மோடி ‘மைய’ ஆட்சியில் அவர்தான் அடிப்படையே தவிர வேறு எந்த விதி களும், மரபுகளும் முக்கியமல்ல என்ற கருத்தோட்டத்தின் வெளிப்பாடே இந்த செயல். அதனால்தான் குடியரசு தலைவர் இல்லாமல் புதிய நாடாளு மன்றம் திறக்கப்படுவதையும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்படு வதையும் இந்த நாடு பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நிகழ்வென்றால் கடைசி நிகழ்வு இன்னும் மோசமாக நடந்து முடிந்தது. 21-ஆம் தேதி வியாழன் இரவு 10 மணிக்கு பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி பேச ஆரம்பித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிகபட்சம் பத்து பேர் அவையில் இருந்திருப்போம். கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டி யன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி மற்றும் நான், கேரளாவைச் சேர்ந்த பென்னி, இவர்கள் தவிர வட இந்திய எம்.பி.க்கள் டேனிஷ் அலி உள்ளிட்ட ஒரு சிலர் இருந்தார்கள். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பத்துப் பதினைந்து பேர்தான் இருந்தீர்களா? மற்றவர் கள் ஏன் இல்லை என்ற கேள்வி எழலாம். பாஜக-வின் வெளிப்படையற்ற நிர்வாக முறையே இதற்கு காரணம்.
முன்னறிவிப்பே இல்லாமல் நள்ளிரவு வரை விவாதம்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமைதான் முடிவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் 21-ஆம் தேதி வியாழன் அன்று மக்கள வையில் சந்திரயான்-3 வெற்றி பற்றிய விவாத நிகழ்வாக நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்ப பட்டது. பகலில் விவாதம் நடைபெற்றது. வழக்கம் போல மோடியை புகழ்ந்தால் தாராளமாக பேசலாம். விமர்சித்தால் உங்களின் நேரம் தானாக சுருக்கப்படும். நான் சந்திரயான்-3 வெற்றி குறித்து பேசும்பொழுது, நான்கரை நிமிடத்தில் மணி யடிக்கப்பட்டது. அதற்கு ஒரு உதாரணம். அவை வழக்கம் போல் ஆறு மணிக்கு முடியும் என்றுதான் விவாதங்கள் நடத்தப்பட்டன. ஆனால் பின்னர் நட வடிக்கை நள்ளிரவு வரை நீண்டது. மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதம் நடைபெற்று வந்தது. அந்த அவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, அதன் தகவல் மக்களவை யில் தெரிவிக்கப்பட்ட பின், அவை நடவடிக்கைகள் முடிவுற வேண்டும்.
நள்ளிரவோடு முடிக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர்!
இயல்பாக 21-ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும். அதன் பின்னர் 22-ஆம் தேதி அந்த செய்தியை மக்களவையில் பதிவு செய்து, பின்னர் நாட்டுப்பண் பாடப்பட்டு கூட்டத்தொடரை முடிப்பார்கள். அதுதான் மரபு. ஆனால், திடீரென நிகழ்சி நிரல் மாற்றம டைந்தது. அன்று இரவே கூட்டதொடரை முடிக்கத் தயாரானார்கள். அதனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறி வரும் வரை மக்களவையை நடத்த முடிவு செய்தார்கள். கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேர ஒதுக்கீட்டுப்படி அனைவரும் இரவு 7 மணிக்குள் பேசி முடித்தோம். ஆனால் அவையை நடத்த வேண்டும் என்ப தற்காக அதன் பிறகு பலருக்கும் பேச வாய்ப்பளித்தனர். விவாதம் மீதான குறுக்கீடு என்ற அடிப்படையில், அறிவியல் மற்றும் விண்வெளித்துறைக்கான தனிப் ப்பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜிதேந்தர் சிங் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு முடிய இன்னும் இரண்டு மணி நேரமாகும் என்று சொன்னார்கள். எனவே, அமைச்சரின் பேச்சுக்குப்பின் மீண்டும் விவாதம் தொடர்ந்தது.
சந்திரயான் விவாதத்தில் புராணக் கட்டுக் கதைகள்
பொதுவாக காலையிலிருந்தே சந்திரயான்-3 வெற்றியின் பாராட்டு என்ற பெயரில் பாஜக-வினர் புராணக் கட்டுக்கதைகளை அளவில்லாமல் அள்ளி விட்டுக் கொண்டிருந்தனர். நான் நண்பகல் சுமார் 3.30-க்கு பேசினேன். அப்பொழு தே நாடாளுமன்றம் கோயில் மடங்களில் நடைபெறும் கதாகாலட்சேபம் போல் மாறிவிட்டதை சுட்டிக்காட்டி உரையாற்றினேன். நேரம் செல்லச் செல்ல ஆளுங்கட்சியினரின் உரை மிக மோசமடைந்தபடி இருந்தது. சந்திரயானின் வெற்றியை புராணக்கதைகளோடு இணைத்து மோடிக்கு புகழாரம் சூட்ட பெரும்பாடு பட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரைகளுக்கு மோசமான எதிர்வினைகளை புரிந்துவந்தனர்.
மட்டரகமாக பேசுவதையே வழக்கமாக கொண்ட பிதுரி
இந்நிலையில்தான் பாஜக-வின் ரமேஷ் பிதுரி இரவு சுமார் பத்து மணிக்கு பேசத் துவங்கினார். பொதுவாக அவர் எப்பொழுது பேசினாலும் எதிர்க்கட்சி களை மிக மோசமாக, மட்டரகமாக பேசுவதையே வழக்கமாக கொண்டவர். அன்றும் மோசமாக பேசினார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்களைப் பார்த்து பயங்கரவாதிகள் என்றார். நாங்கள் அனைவரும் எழுந்து எங்கள் ஆட்சே பணையைத் தெரிவித்து குரல் எழுப்பினோம். அப்பொழுது இன்னும் மோசமாக பேச ஆரம்பித்தார்.
பெருங்குரலில் எதிர்ப்பை தெரிவித்த டேனிஷ் அலி
குறிப்பாக, டேனிஸ் அலியைப் பார்த்து வசை பொழிந்தார். அவர் என்ன சொல்கிறார் என்று எங்களுக்கு முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால் அவரின் வசைகேட்டு டேனிஷ் அலி துடித்துப்போனார். அவையில் இவ்வளவு அநாகரிகமாக பேசுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? என்று ஆளுங் கட்சியினரைப் பார்த்து பெருங்குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவரு டன் சேர்ந்து நாங்கள் அனைவரும் வலிமையான எதிர்ப்பை தெரிவித்தோம். நான்தான் அவர் அருகில் இருந்தேன். அவரது உடல் நடுங்கியது என்றே சொல்ல வேண்டும். அவர் ஏன் அவ்வளவு பதற்றமாகி குரல் கொடுக்கிறார் என்று எங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அவரை தோள்தொட்டு சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். சிறிது நேரத்தில் முன்வரிசை யில் இருந்த கனிமொழி கருணாநிதி அவர்கள் எங்கள் வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த முயற்சித்தார். டேனிஷ் அலி தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதில் உறுதியுடன் இருந்தார். நாங்கள் ஒரு பக்கம் அவரை சமாதா னப்படுத்தவும் மறுபக்கம் ஆளுங்கட்சியினரின் நடவடிக்கையை கண்டித்து குரல் எழுப்பியப் படியும் இருந்தோம்.
10 பேர்களே இருந்தாலும் கடுமையாக போராடினோம்
இந்த நேரத்தில் ஆளுங்கட்சி வரிசையில் இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் எங்களை நோக்கி எதிர்க்கட்சி வரிசைக்கு வந்து சமாதானப்படுத்த ஓரிரு வார்த்தையை சொன்னார். இவர்தான் தில்லி தேர்தல் கலவரத்தின் போது “கோலி மாரோ” அதாவது எங்கள் எதிரிகளை சுட்டுத்தள்ளுவோம் என்று பேசியவர். அதா வது, ரமேஷ் பிதுரி வகை பேச்சுகளைவிட மோசமாக பேசியவர். பேசும்முன் இணை அமைச்சராக இருந்தவர், பேசிய பின்னர் கேபினட் அமைச்சரானார். இவர்தான் சமாதானம் பேச வந்தவர். அவரது குரலுக்கு எந்த மதிப்பும் தர நாங்கள் தயாராக இல்லை. வந்தவர் அதே வேகத்தில் திரும்பிப் போய்விட்டார். அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. நாங்கள் 10 பேர்தான் இருந்தோம் ஆனாலும் அவையில் பெரும் போராட்டத்தை டேனிஸ் அலிக்கு ஆதரவாக நடத்திக் கொண்டிருந்தோம்.
வருத்தம் தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்
இறுதியாக அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து வருத்தம் தெரிவித்தார். அதன் பின்னரே நாங்கள் அவை நடவடிக்கையை அனுமதித்து இருக்கையில் அமர்ந்தோம். அப்போதும் கூட ரமேஷ் பிதுரி, தனது பேச்சுக்காக குறைந்த பட்சம் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. அவை இரவு சுமார் 11.30 க்கு முடிவுற்றது. மறுநாள் காலைதான் ரமேஷ் பிதுரி பேசியதன் முழு அர்த்தத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எழுத முடியாத அநாக ரீகத்தின் உச்சம். எனவே, அவற்றை இப்பொழுது குறிப்பிடவில்லை. டேனிஸ் அலியின் உடல் ஏன் அவ்வளவு நடுங்கியது? ஏன் அவ்வளவு கொந்தளித்துப் பேசினார் என்பதை அர்த்தம் தெரிந்த பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது.
சகோதரத்துவத்தை, அடிப்படைவாத கும்பலிடம் இழக்க மாட்டோம்
இது பாஜக ஊட்டி வளர்க்கும் வெறுப்பு அரசியலின் விளைச்சலாகும். பாசிசத்தின் அடிப்படை குணம், வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருப்பது. பிரதமர் துவங்கி எல்லோரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறுப்பையும், நஞ்சையும் உமிழ்ந்து கொண்டே இருக்கின்றனர். 17-ஆவது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.களைப் பார்த்து தீவிரவாதிகள், பாகிஸ்தான் கைக்கூலிகள், தேசத் துரோகிகள் என்று எண்ணற்ற முறை சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லா வற்றின் தொடர்ச்சி மற்றும் உச்சம்தான் ரமேஷ் பிதுரி பேசியது. இதன்மீது சபாநாயகர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் டேனிஸ் அலியின் கரங்களை இறுகப் பற்றி நிற்போம். ரமேஷ் பிதுரிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக, வெறுப்பை உமிழும் பாசிசத்திற்கு எதிராக மனித மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம். இந்தியா தனது சகோதரத்துவத்தை அடிப்படைவாத கும்பலிடம் ஒரு போதும் இழக்காது.