தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு (தற்போதைய டான்ஜெட்கோ (TANGEDCO) சொந்தமான அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கொண்டு வரும் கடல்சார் போக்குவரத்து மற்றும் வணிக நிர்வாகப் பணியை மேற்கொள்வதற் கென்று முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் மாநில பொதுத்துறை நிறுவனமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் 1973-ல் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் மின்சார வாரியத்துக்குச் சொந்தமான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் சென்னை எண்ணூர் அனல்மின் நிலையங்களுக்கு கப்பல்கள் மூலம் நிலக்கரியை கொண்டு வரும் பணியை பிரதான பணியாகவும் பின்னர் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் விசைப் படகுகளை இயக்கும் பணியை துணைப்பணியாகவும் மேற்கொண்டு வந்தது. இதற்கென சென்னையில் தலைமை அலுவலக மும், தூத்துக்குடியில் கிளை அலுவலகமும், கன்னி யாகுமரியில் படகுத்துறையும் இயங்கி வந்தன. இந்தி யாவில் கடல்சார் வணிக நடவடிக்கைகளில் அனுப வம் பெற்ற ஒரே மாநில அரசுத்துறை நிறுவனம் பூம்பு கார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மட்டுமே என்பது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகும். இந்த நிறு வனத்துக்கு சொந்தமான தமிழ் பெரியார், தமிழ் காமராஜ், தமிழ் அண்ணா ஆகிய 3 கப்பல்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மின்சார வாரி யத்துக்கு சொந்தமான தூத்துக்குடி, மேட்டூர், எண்ணூர் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்க ரியை உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் கொண்டு வரும் பணியை செய்து வந்தன.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கடல்சார் வணிக துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு தமிழக அரசால் இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு கடல்சார் கழகம் (TAMILNADU MARITIME ACADAMY) கப்பல் மாலுமிகளுக்கான பயிற்சி அளித்து வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாலுமிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கப்பல்துறை பொறியியல் படிப்பு முடித்த பொறியாளர்கள், பூம்பு கார் கப்பல் போக்குவரத்துக் கழக கப்பல்களில் பணி யமர்த்தப்பட்டு வந்தனர். பூம்புகார் நிறுவன கப்பல்க ளில் பெறும் அனுபவத்தின் மூலம் உலகம் எங்கும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் வணிகக் கப்பல்க ளில் வேலைவாய்ப்புகளும், கப்பல் தலைமை பொறி யாளர் மற்றும் தலைமை மாலுமி (பைலட்) போன்ற உயர் பதவிகளும் பெற்று வந்தனர்.
முடக்கும் முயற்சியைத் துவக்கிய அதிமுக ஆட்சி
தனது கடல்சார் பணிகள் மூலம் நல்ல முறையில் பெரும் லாபமீட்டி வந்த பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தின் நடவடிக்கைகளை திட்டமிட்டு முடக்கும் முயற்சிகள் முந்தைய அதிமுக ஆட்சியா ளர்களால் துவக்கப்பட்டன. நிறுவனத்துக்கு சொந்த மான கப்பல்களை புதுப்பித்து இயக்க வாய்ப்பி ருந்தும் அதிமுக அரசு 2017-ஆம் ஆண்டு 3 கப்பல்க ளையும் தகுதி இழப்பு செய்து விற்பனை செய்து விட்டது. முதலில் இதற்கு பதிலாக புதிய கப்பல்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற் கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மின்சார வாரியம் தனது நிலக்கரி தேவைகளுக்கு தனியார் வணிக கப்பல்களை மட்டும் சார்ந்திருக்கும் நிலை உரு வாக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் தமிழ்நாடு மின்வாரி யத்துக்கு 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அர்ப்பணிக்கப்பட்ட கரித்தளம் 1 மற்றும் கரித்தளம் 2 (Dedicatd Coal Jetties 1 & 2) ஆகிய இரண்டு தளங்களில் கையாளப்படும் கப்பல்களில் இருந்து தூத்துக்குடி 1050 மெ.வா அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி ஏற்றி இறக்கும் பணியையும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகமே செய்து வந்தது. தூத்துக்குடி வ.உ.சி துறைமுக நிர்வாகம் கரித் தளங்களை புதுப்பித்து மேம்படுத்தி கையாளும் திறனை அதிகரிப்பதாக கூறி இரண்டு கரித்தளங்க ளையும் 2017 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கரித்தளம் 2-ன் ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த தளமும் ‘புதுப்பிப்பதற்கு’ என்ற பெயரில் துறைமுக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட ‘பூம்புகார்’
துறைமுக நிர்வாகம் தற்போது முதல் கரித் தளத்தை மேம்படுத்தி தமிழ்நாடு மின்உற்பத்தி கழ கத்திடம் ஒப்படைத்துள்ளது. இரண்டாவது கரித்தள புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் இன்னும் துவக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இவ்வாறு திட்டமிட்டு அதிமுக அரசு மின்சார வாரி யத்தை நிர்பந்தித்து தூத்துக்குடி துறைமுகத்தின் இரண்டு கப்பல் தளங்களையும் புதுப்பிக்கும் சாக்கில் துறைமுக நிர்வாகத்திடம் ஒப்படைத்து கரி கையாளும் பணியில் இருந்து பூம்புகார் நிறுவனத்தை வெளியேற்றி யது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கிளையில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தால் பணிப் பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் சென்னை தலைமை அலுவலகத் திற்கும், கன்னியாகுமரி படகுத் துறைக்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி துறைமுகத்தின் கரித் தளங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒப்பந்த உரிமை முறையாக நிலைநாட்டப்பட்டிருந்தால் இரண்டு கப்பல் தளங்களையும் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் மின்நிலையத்துக்கும், எதிர்காலத்திற்கென திட்டமிடப் பட்ட உப்பூர் உள்ளிட்ட அனல்மின்நிலையங்களுக்கும் தேவையான நிலக்கரியை ரயில் மார்க்கமாக குறைந்த செலவில் கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கி இருக்க முடியும்.
மின்வாரியத்தின் அதீத செலவினம்
அதிமுக அரசின் நடவடிக்கையால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் கப்பல்களை கையாளும் ஸ்வீடோரிங் மற்றும் நிலக்கரி ஏற்றி இறக்கும் பணிகளில் இருந்து விலகி கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் சார்ட்டரிங் பணியை மட்டும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் தொடரமைப்பு கழகம் (TANGEDCO), பூம்புகார் நிறுவனத்தின் கடல்சார் வணிக அனுப வத்தையும் புறக்கணித்து கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் பொறுப்பையும் பின்னர் பறித்துக் கொண்டது. கடல் வணிக அனுபவமின்மை காரண மாக கடந்த 3 ஆண்டுகளில் மின்வாரியத்தின் நிலக்கரி கையாளும் செலவினம் பெருமளவு அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசின் பாரதீப் துறைமுகத்தின் மூலம் கையா ளாமல் தாம்ரா மற்றும் காக்கிநாடா தனியார் துறை முகங்கள் மூலமாக நிலக்கரியை கையாளுவதாலும், கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் ஏற்படும் குளறுபடிகளாலும் செலவினம் கடுமையாக அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை எண்ணூரில் தமிழக அரசும், தேசிய அனல்மின் கழகமும் இணைந்து 2012-ஆம் ஆண்டு முதல் இயக்கி வரும் 1500 மெ.வா. மின்சார உற்பத்தித் திறன் கொண்ட என்டிஇசிஎல் (NTECL) நிறுவனத்துக்கு ஆண்டுக்கு தேவையான சுமார் 6 மில்லியன் டன் நிலக்கரி ஒடிசாவின் பாரதீப் துறை முகத்தில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத் துக்கு எடுத்து வர கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் பணியை மட்டுமே பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
புதிய அபாயம்
இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் கன்னி யாகுமரி படகுத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் எண்ணூர் என்டிஇசிஎல் நிறுவனத்திற்கு கப்பல் களை வாடகைக்கு அமர்த்தி நிர்வகிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே ஆண்டிற்கு சுமார் ரூ.12 கோடி லாபமீட்டி வருகிறது. தற்போது அதனையும் முடக்கும் வகையில் பூம்புகார் நிறுவனத்தின் தலைமை, என்டிஇசிஎல் நிறுவ னத்திற்கு கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி நிர்வகிக்கும் பணியையும் அந்த நிறுவனத்திடமே திரும்ப ஒப்ப டைப்பது என்று முடிவு செய்து என்டிஇசிஎல் நிறுவ னத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் நெருக்கடியில் வீழ்ந்து நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட எர்ன்ஸ்ட் & யங் (ERNEST & YOUNG) நிறுவனத்தின் ஆலோசனை அடிப்படையில்பூம் புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தை மூடி விடவும், கன்னியாகுமரி படகுத்துறையை கடல்சார் அனுபவம் இல்லாத சுற்றுலா துறையிடம் ஒப்படைக்கவும் திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பரிந்துரைகள் அடிப்ப டையில் தான் இப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைகள் தமிழக அரசின் பெருமைக் குரிய பொதுத்துறை நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தை சீர்குலைக்கும். கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு நாட்டிற்கே முன்னு தாரணமாகத் திகழும் நிறுவனம் மூடப்படும் நிலையை உருவாக்கும். எனவே தமிழக முதல்வர் அவர்கள் இப் பிரச்சனையில் உரிய தலையீடு செய்து தமிழகத்தின் பெருமையாக திகழும் பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தை சீரமைத்து இயக்குவதற்கு தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் : சிஐடியு மாநிலச் செயலாளர்