articles

img

தனிவார்ப்பாய் வார்க்கப்பட்ட வார்ப்படத் தொழிலாளி - ஜி.ராமகிருஷ்ணன்

கோவை மாவ ட்டத்தில் இயக்கம் வளர்த்த வேர்மட்டத் தோழர்கள் பலரை யும் பற்றிய கட்டு ரைகள் ‘களப்பணி யில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் இடம் பெற்றுள்ளன. இப்போது நாம் சந்திக்க விருப்பது தோழர் தங்கவேல்.  1948-ல் கோவை நகரின் சித்தாபுதூர் பகுதியில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர் தங்கவேல். தந்தையார் துணி வியாபாரம் செய்து கிடைக்கும் வரு வாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். ஏழ்மை நிலை காரணமாக இவரை 5 ஆம் வகுப் பிற்கு மேல் பெற்றோரால் படிக்க வைக்க இயல வில்லை. குடும்பத் தேவைகளுக்காக அந்தச் சிறு  வயதிலேயே தங்கவேல் வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. தையல் வேலைக்குச் சென்று கிடைத்த குறைந்த கூலியைக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார். தையல்  வேலையில் மிகக் குறைவான கூலியே கிடைத் ததால் ஒரு வார்ப்படப் (மோல்டிங்) பட்டறையில்  மாதம் 10 ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் சேர்ந் தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேறொரு வார்ப்படப் பட்டறையில் மாதம் 37 ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். தனது செலவிற்காக 5 ரூபாய் எடுத்துக் கொண்டு மீதத்  தொகையைக்  குடும்பத்திற்கு அளித்து வந்தார். அந்தப் பட்டறையிலும் தொடர்ந்து வேலை செய்ய முடியாத சூழலில் 1970-ல் ரேணுகா பவு ண்டரி என்ற நிறுவனத்தில் பணியில்சேர்ந்தார். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்று உணர்ந்தவராக அந்த நிறுவனத்தின் சக  தொழிலாளர்களைத் திரட்டினார். சிஐடியு அமைப்புடன் இணைக்கப்பட்டதாக உரு வாக்கப்பட்ட சங்கத்தில் கிளைத் தலைவராகப் பொறுப்பேற்றார். சந்தை நிலவரங்களால் 1975ஆம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப் பட்டது. தொழிலாளர்களுக்கு இழப்பீடு கேட்டு  போராட்டம் நடந்தது. மாவட்ட சிஐடியு தலை யீட்டால் தொழிலாளர்களுக்கு இழப்பீடு கிடைத்தது.  அதையடுத்து 1976ஆம் ஆண்டு கருங்கலத் (கன்மெட்டல்) தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தார். அங்கேயும் தனது சங்கப் பணிகளைத் தொடர்ந்தார்.

முழுநேரப் பணி

1977ஆம் ஆண்டு தங்க வேல் - உமாராணி திருமணம் நடைபெற்றது. நகரில் ‘தீக்கதிர்’ விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டபோது கட்சியின் மாவட்டக்குழு முடிவிற்கிணங்க தோழர் தங்கவேல் 1978 ஆண்டில் அந்தப் பொறுப்பை ஏற்றார். 2005 வரையில் முழு நேரப்    பணியாக ‘தீக்கதிர்’ விநி யோகத்தை மேற்கொண்டார். கோவையில் டவுன்ஹால், ராஜவீதி, செட்டி வீதி, மாநகராட்சி வீதி, காந்தி பார்க், ஆர்.எஸ். புரம், காட்டூர், வடகோவை, டாட்டாபாத், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, காந்திபுரம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 300 ‘தீக்கதிர்’  படிகளை விநி யோகித்து வந்தார். காலை 4 மணிக்கு இரயில் நிலையம் சென்று ‘தீக்கதிர்’ கட்டுகளை எடுத்து வந்து முகவர்களுக்குப் பிரித்து வைத்துவிட்டு 4.30 மணிக்குத் தொடங்கி தான் ஏற்றுக் கொண்ட பகுதிகளில்  விநியோகத்தில் ஈடுபடு வார். பணி முடிவதற்கு 11.30 மணியாகிவிடும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு விநியோகி க்கப்பட்ட பத்திரிகைகளுக்கான சந்தா வசூலிக்க செல்வார். அக்காலத்தில் தோழர் தங்கவேல் மட்டுமே ‘தீக்கதிர்’ விநியோகித்த அந்தப் பகுதி களில் இப்போது 7 தோழர்கள் அந்தப் பணி யைச் செய்து வருகின்றனர். ‘தீக்கதிர்’ விநியோ கிப்பதற்கும் சந்தா நிலுவைகளை வசூலிப்ப தற்குமாக நாளொன்றுக்கு சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளில் சென்று வந்ததை நினைவு கூர்கிறார் தங்கவேல். இப்பணி முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு  இதர இயக்கப் பணிகளுக்காக கட்சி அலு வலகம் செல்வார். இத்தகைய பணிகளை முடி த்து இரவு 11 மணிக்குத்தான் வீட்டிற்குச் செல் வார்.

சொந்த வேலைகள் குறுக்கிட்டாலும் ‘தீக்க திர்’ போடுவதை இவர் நிறுத்தியதே கிடை யாது. என்றாவது ஒருநாள் உடல்நலம் பாதிக்கப் பட்டோ, தவிர்க்க முடியாத வேறு காரணத்தி னாலோ ‘தீக்கதிர்’ விநியோகம் செய்ய முடி யாமல் போய்விட்டால் மனம் நொந்து போகும் என்று கூறினார். ‘தீக்கதிர்’ இதழுடன் மலை யாள இதழ்களான ‘தேசாபிமானி’ (படிகள் 70), ‘சிந்தா’ (40), ஆங்கில இதழான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ (75) ஆகியவற்றையும் விநியோகம் செய்தார்.  மூட்டுவலி ஏற்பட்டு தொடர்ந்து சைக்கிள் ஓட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் ‘தீக்கதிர்’ விநியோகப் பொறுப்பை நிறுத்தினார். 2012 ஆகஸ்ட் 18  அன்று கோவை நகரத்தில் நடை பெற்ற ‘தீக்கதிர்’ பொன்விழா நிகழ்ச்சியில் முகவர்களும் விநியோகிப் பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர். கட்சியின் அன்றைய பொதுச்செய லாளர் தோழர் பிரகாஷ்காரத் அந்தத் தோழர்களின் பணியைப் பாராட்டி, தங்கவேல் உள்ளிட்டு அனை வருக்கும் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார். வார்ப்படத் தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்த காலத்திலேயே தொழிற்சங்கத்தில் உறுப்பினரானார்.  அக்காலத்தில் மாவட்டத்தில் கட்சித் தலைவர்களாக இருந்த தோழர்கள் எம். பூபதி, டி.பாலன் போன்றோரோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் இயக்கம் குறித்துப் பேசினார் தங்கவேல். குறிப்பாக தோழர் பூபதி தொடர்ந்து அரசியல் பற்றியும், கட்சிக் கொள்கைகள்  பற்றியும் விளக்கங்கள் அளித் தார். இந்தப் பின்னணியில் தோழர் தங்கவேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1966ஆம் ஆண்டு உறுப்பினராகச் சேர்ந்தார். தோழர் டி.பாலன் வழிகாட்டுதலின் படி தங்கவேல் தொழிற்சங்கப் பணியாற்றினார்.

மக்கள் மன்றம்

1980ஆம் ஆண்டு தங்கவேல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து பத்தாண்டுக் காலம் கிளை நிர்வாகியாகச் செயல்பட்டார். வாலிபர் சங்கம் நடத்திய எல்லா இயக்கங்களிலும் பங்கேற்றார். வாலிபர் சங்க அறைகூவலின்படி நடைபெற்ற விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியலில் கலந்துகொண்டு,  கைது செய்யப்பட்டு மற்ற தோழர்களுடன் 13  நாட்கள் சிறையில் இருந்தார். அப்பகுதியில் வாலிபர் சங்கம் வளர்ந்தது. அதில் உறுப்பி னராகி இயக்கங்களில் கலந்து கொண்ட பல தோழர்களும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  இணைந்தார்கள். கட்சியின் கிளைச் செயலாளராகச் செயல் பட்டபோது தோழர் தங்கவேல் தாம் வாழ்ந்த பகுதியில் மக்கள் மன்றம் என்ற ஒரு  அமைப்பை உருவாக்கி அதற்காக அலுவல கத்தையும் அமைத்துச் செயல்பட்டு வந்தார்.  இம்மன்றத்தின் பெயரில் அப்பகுதி மக்களு டைய பல கோரிக்கைகளுக்காகப் பல இயக்கங் களை நடத்தியிருக்கிறார். தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் கோவை நக ரத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபோது, இம்மன்ற த்தைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிட த்தக்கது. இந்த மன்றத்தில் இணைந்து செயல் பட்ட இளைஞர்கள் 15 பேரை பல இயக்கங் களில் பங்கேற்கச் செய்து பிறகு கட்சி உறுப்பினர் களாக்கினார். இவ்வாறு கட்சி உறுப்பினர் களான தோழர் ஞானமூர்த்தி உள்ளிட்ட பலரும்  இப்போதும் இயக்கத்தில் செயல்பட்டு வரு கிறார்கள். இந்த மன்றக் கட்டடத்தில் அந்நாட் களில் கட்சியின் சார்பாக மாணவர்களுக்கு இலவசப் பாடசாலையும் நடத்தப்பட்டது. அவசர நிலை ஆட்சிக் காலத்தில் தோழர் தங்கவேல் கைது செய்யப்பட்டு காவல் நிலை யத்தில் அடைக்கப்பட்டார். “நான் பத்திரிகை போடுகிறவன், என்னை லாக்கப்பில் வைத்திருந் தால் பத்திரிகைகளுக்குத் தகவல் கொடுத்து போலீஸ் அடக்குமுறையை அம்பலப்படுத்து வேன்,” என்று காவல்துறை அதிகாரியிடம் வாதிட் டார்.

இந்தத் துணிவைக் கண்ட காவல்துறை இவரை விடுவித்துவிட்டது. 2002ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் வீட்டு மனைகள் வாங்கி ஊழியர்களுக்கு உரிய விலைக்குக் கிரயம் செய்து கொடுத்தனர். அதில் இரண்டு மனைகள் பொதுக் காரியத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன. கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வந்த தோழர் தங்கவேலுக்கு ஒரு  மனை அளிக்கப்பட்டபோது, “எனக்கு வேண்டாம், அதைப் பொது அமைப்பிற்காகப் பயன்படுத்துங்கள்,” என்று கூறிவிட்டார். தோழர் தங்கவேல் ‘தீக்கதிர்’ முகவராகவும் கட்சிக் கிளைச் செயலாளராகவும் வரவு-செலவு கையாள்வதில் கறாராக இருந்திருக்கிறார். ஒருமுறை கட்சிக் கிளை மாநாட்டில் வரவு-செலவு கணக்கு வைத்தபோது இரண்டு ரூபாய்  துண்டு விழுவதாக விவாதத்தில் தோழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விடியவிடிய கிளை மாநாடு நடைபெற்றது. தோழர் தங்கவேல் வரவு -செலவு சம்பந்தபட்ட கணக்கு நோட்டுகளை கொண்டுவந்து ஒப்படைத்தார். நிறைவாக வரவை விட 7 ரூபாய்  கூடுதலாக இவர் செலவு செய்திருப்பது தெரிய வந்தது.

மற்றவர்களோடு விவாதம்

அண்ணாநகர் கட்சிக் கிளை அலு வலகத்திற்கு இடம் வாங்கிக் கட்டடம் கட்ட வழி செய்தவர் தோழர் தங்கவேல். தாம் வாழ்ந்த பகுதியில் நடுத்தர வர்க்கத் தோழர்கள் பலரைக் கட்சிக்குக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு.  இளைஞர்கள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்களோடு இவர் தொடர்ந்து அரசியல் விவாதம் செய்வார். இவர் வைத்த அரசியல் கருத்தியலுக்கு மேலாக இவ ருடைய தன்னலமற்ற களப்பணி மற்றவர் களை ஈர்த்தது என்று தோழர்கள் குறிப்பிடு கிறார்கள். ஒருமுறை ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு வர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை வெட்டி விட்டார். கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் திரட்டிய தங்கவேல்  நிர்ப் பந்தம் கொடுத்து கம்பத்தை வெட்டியவரையே மீண்டும் அதனை நட வைத்து அதில் கொடி யேற்றினார். இவ்வாறு கட்சியை, கட்சித் தோழர்களைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இவருடைய துணைவியார் மாதர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்டிருக்கிறார்.

இவருக்கு மகள், மகன் உள்ளனர். மகன் சந்திர சேகர் எம்.டெக். படித்தவர். தற்போது கோவை யில் இணையதள சேவை மையம் நடத்தி வரு கிறார். அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு. தங்கவேலு பற்றிக் கேட்டேன். “அப்பா வுக்கு கட்சி வேலைதான் வாழ்க்கை. என்னை யும் எனது தங்கையையும் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். உயர் கல்விக்கு எங்கள் தாய்மாமன்தான் அப்பா வின் பணிகளை மதித்து, முழுமையாக உதவி செய்தார்,” என்று கூறினார்.இவ்வாறு இணை யரும் பிள்ளைகளும் உறவினரும் பின்புல மாக இருந்ததால் தங்கவேல் முழுமையாக இயக்கப் பணிகளை நிறைவேற்ற முடிந்தது. தங்கவேல், உமாராணி இருவரும் தங்கள் மகன் வீட்டில் வசித்து வருகிறார்கள். தற்போது 75 வயதாகும் தோழர் தங்கவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி உறுப்பினராகத் தொடர்கிறார். தம்மால் இயன்ற கட்சிப் பணிகளைச் செய்து வருகிறார். கட்சிக் கிளைச் செயலாளராக, வாலிபர் சங்கக் கிளை நிர்வாகியாக, ‘தீக்கதிர்’ முகவர் மற்றும் விநியோகிப்பாளராக அர்ப்பணிப்போடு செயல்பட்டவர் தோழர் தங்கவேல். முழுநேர ஊழியருக்கான ஊதியம் பெறாமலேயே 27 ஆண்டுகள் ‘தீக்கதிர்’ விநியோகத்தை முழுநேரப் பொறுப்பாக நிறைவேற்றி வந்த தோழர் தங்கவேலுவைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் ஏது! கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் தங்கவேல் ஆற்றிவரும் களப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.