இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், ஜங்கமநாயக்கன்பாளையம் கிளை சார்பாக, வெயிலின் தாக்கத்தை ஈடுசெய்ய பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள், ந.ராஜா, தேவகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன், சண்முககனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.