‘சமமான தளம்’ எனக் கூறப்பட்டாலும் உண்மையில் மாணவர்களின் ‘கல்விக் களம்’ சமமானதாக அமைந்திருக்கவில்லை. வரலாற்று ரீதியில் ஒதுக்கப்பட்டவர்கள் மேல்நோக்கி ஓட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சாதிகளுக்கு இடையிலான தூரங்கள் வேறுபடுவது மட்டுமல்ல; 50 மீட்டர் கீழ்நோக்கி உயர்சாதியினர் ஓட வேண்டுமென்றால் பிற மாணவர்கள் மேல்நோக்கி 500 மீட்டர் மூச்சுத் திணற ஓட வேண்டியிருக்கிறது.
தர்ஷன் சோலங்கி. இந்திய தொழில் நுட்பக் கழகம் (ஐஐடி) மும்பையில் வேதியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர். பிப்ரவரி 12, 2023 அன்று தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் ஒரு தலித் மாணவர். இது குறித்து விசாரணை நடத்த 12 பேர் கொண்ட ஒரு குழுவை அந்நிறுவனம் அமைத்தது. அது மார்ச் 2 அன்று ஓர் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இப்படி கூறப் பட்டிருந்தது. “மாணவர் தர்ஷன் சோலங்கியின் செயல்திறன் கடந்த வருடத்தின் இரண்டாவது பாதியில் மோசம டைந்தது என்பது அவருடைய சில பாடங்களில் மதிப்பெண் குறைந்ததிலிருந்து தெரிகிறது. இது அவரை மிகவும் பாதித்திருக்கலாம். அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் சாதி அடிப்படையிலான பாகு பாடுகளை எதிர்கொண்டார் என்பதற்கு அவருடைய சகோதரி அளித்த அறிக்கையை தவிர குறிப்பிட்ட ஆதாரங்கள் எவையும் இல்லை.” சாதியப் பாகுபாடு எவ்வாறு மனிதர்களின் உணர்வு களை கடுமையாக பாதிக்கிறது என்பதை நிரூபிப்பது மிகவும் கடினம். அப்படி நிரூபிக்க முடியாது என்பதா லேயே பாகுபாடு இல்லை என்றும் கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களிடம் நாம் அனுதாபம் காட்டுவது இயல்பான போக்கு. ஆனால் பாகுபாடுகளை அடி யோடு ஒழிப்பதற்கு வெறும் அனுதாபம் மட்டுமே போது மானதல்ல. அரசியல் உறுதிப்பாடுடன் எடுக்கக்கூடிய உருப்படியான நடவடிக்கைகள் மட்டுமே தேவை.
பாகுபாட்டின் வடிவங்கள்
பாகுபாடு என்பது ஒரு நிலையான வடிவத்திலோ அல்லது எப்போதோ ஒருமுறை நடத்தப்படுவதோ அல்ல. இது தினந்தோறும் நடப்பது. ‘நாம்’, ‘அவர்கள்’ என்ற பிரிவினைச் சூழலை ஏற்படுத்துவது. புன்னகை, சிரிப்பு, கை சைகை அல்லது அமைதியுடனான புன்முறு வல் என மேலோட்டமான தீங்கற்ற பல வடிவங்களி லும் கூட இது நிகழ்த்தப்படுவது. உயர் அடுக்கு மனிதர்களிடையே உள்ள தற்பெரு மையும், அவமதிக்கும் குணாம்சங்களும் ‘தகுதி’ என்ற போர்வை மூலம் பாகுபாட்டை ஒரு இயல்பான விளைவாக மாற்றும் என்று மைக்கேல் சான்டல் “தகுதியின் கொடுங்கோன்மை” (The Tyranny of Merit) என்ற நூலில் விவரிக்கிறார். ஐ.ஐ.டி.யில் உள்ள ஒவ்வொரு உயர்சாதி மாணவர்களும் பாகுபாடு காட்டுகிறார்களா அல்லது ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட மாணவர்களும் பாதிக்கப்பட்டதாக உணர்கிறார்களா என்பது இங்கே வாதம் அல்ல. ஆனால் ஒரு சில உயர்சாதி மாணவர்கள் பாகுபாடு காட்டுவதை,
ஒரு தகுதியுடன் செய்வதாக கருதிக் கொள்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களை இழி வாகப் பார்ப்பதற்கு தனக்கு எல்லா உரிமையும் உள்ளது என்பது போல நடக்கின்றனர். சமத்துவ மின்மை கூட இங்கே தர வரிசைப்படுத்தப்படுகிறது. இத்தகைய வளாகங்களில் ஒலிக்கின்ற தகுதி (Merits) என்ற ஆணவக் கருத்தாக்கங்களுக்குள் அது வேரூன்றி அமர்ந்து கொள்கிறது. ஒருவர் ஐ.ஐ.டி போன்ற மிக உயர்ந்த கல்வி நிலையத்திற்குள் வளா கத்தில் நுழைந்த உடனேயே ஆதிக்க படிநிலையின் நன்கு வரையறுக்கப்பட்ட அடுக்குகளுக்குள் நுழை கின்றார். நீங்கள் இளங்கலைப் பட்டதாரி அல்லது முதுகலை மாணவரா என்பது தான் முதல் படிநிலை. இளங்கலைப் பட்டதாரிகளுக்கு நுழைவுத் தேர்வில் அவருடைய (Rank) ரேங்க் அடிப்படையில் அவரின் திறமைகள் உடனடியாக அனைவரின் மனதிலும் பச்சை குத்தப்படுகிறது. பிறப்பால் பாகுபாடு காட்டுவது போல் ஒருவரது படிப்பின் தரமும் பாகுபாடு காட்ட ஒரு காரணமாகிறது. இதுவே பின்னர் தகுதி என்ற அடிப்படையில் பாகுபாடு செய்வதற்கு ஒரு தனித்துவ அடையாளமாக மாறி விடுகிறது.
‘உயர்சாதி’ மாணவர்களின் வாய்ப்புகள்
இதனால் ஒருவர் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு குறித்து அவர்களிடம் ஒரு ஆர்வமின்மை மற்றும் ஏமாற்றம் ஏற்படுகிறது. ஆனால் இந்தப் பாகுபாடு ‘சாதி’யைக் கடந்து மாணவர்களிடையே வித்தியாச மாக விளையாடுகிறது. படிப்பில் ஆர்வமில்லாத ஒரு சில ‘உயர்சாதி’ மணவர்களுக்கு பிறஅம்சங்களை ஆராயும் வாய்ப்பும் அமைகிறது. படிப்பில் அவர்கள் பின்தங்கி விட்டால் அவர் தம் குடும்பத் தொடர்புகள், பணபலம், செல்வாக்கு ‘வெற்றிகரமான’ நபர்களுடன் உள்ள தொடர்பு இவற்றின் காரணமாக சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையும் அத்தகைய மாணவர்க ளிடம் ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்கள் எவ்வித சாகசத்திற்கும் தயாரானவர்களாக மாறு கின்றனர். மறுபுறத்தில் இடஒதுக்கீடு என்ற பொறி மூலம் தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு பாடப்பிரிவில் ஒரு சில மாணவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். கடின மான சூழலை ஆராயவோ அல்லது வெல்லவோ உயர்சாதி பிரிவு மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. செல்வச் செழிப்பு, பணபலம், சமூக வலைப்பின்னல் தொடர்பு கள் போன்றவையும் கிடைப்பதில்லை. தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்தால் திறமையற்றவர்களாக களங்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும், அவநம்பிக்கையும் தாழ்வுமனப்பான்மையை உண்டாக்கி விடுகின்றன. ஒருவருடைய சாதியும் அந்தஸ்தும் வாய்ப்புகளைப் பெறும் சுதந்திரத்திற் கான நிபந்தனைகளாக மாற்றப்படுகின்றன.
இளமை யின் மிதப்பு எல்லா மாணவர்களிடமும் ஒரே சீராக இருப்பதில்லை. தொடக்கப்புள்ளி, முன்னேற்றம், சமூகப் பின்னணி, செல்வ செழிப்பு, தப்பெண்ணங் கள், கஷ்டங்கள் போன்றவை தகுதியைத் தீர்மா னிக்கும் காரணி அல்ல என்பதை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். ‘சமமான தளம்’ எனக் கூறப் பட்டாலும் உண்மையில் மாணவர்களின் ‘கல்விக் களம்’ சமமானதாக அமைந்திருக்கவில்லை. வர லாற்று ரீதியில் ஒதுக்கப்பட்டவர்கள் மேல்நோக்கி ஓட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சாதிகளுக்கு இடையி லான தூரங்கள் வேறுபடுவது மட்டுமல்ல; 50 மீட்டர் கீழ்நோக்கி உயர்சாதியினர் ஓட வேண்டுமென்றால் பிற மாணவர்கள் மேல்நோக்கி 500 மீட்டர் மூச்சுத் திணற ஓட வேண்டியிருக்கிறது. ஆனால் இரண்டு பிரிவினருக்கும் ஒரே மாதிரியான முடியும் நேரம் (Finish line) தரப்படுகிறது. தகுதிகளும், தரவரிசை களும் இப்படிப்பட்ட முற்றிலும் சமமற்ற போட்டியின் மூலம்தான் தீர்மானிக்கப்படுகிறது. தகுதி என்பதை நிர்ணயிக்க இவர்கள் பயன் படுத்தும் அலகுகள் மிகவும் தவறானவை. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்பதை அறிய, அவரின் வயது, பாலினம், ஏற்கனவே உள்ள சுகாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர் உடலின் வெப்பநிலையை மட்டுமே பயன்படுத்து வதற்கு இது ஒப்பாகும்.
வரலாற்று அநீதி
எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிப்பது என்பது உண்மையில் வரலாற்றில் நிகழ்த்தப்படும் ஒரு அநீதியாகும். பாகுபாடற்ற ஒரு சமுதாயத்தை வளர்ப்பதற்கு இது போதுமான கொள்கை இல்லை. பிரிட்டிஷ் பொருளாதார வரலாற்று ஆசிரியர் ஆர்.எச்.டானியை மேற்கோள் காட்டி மைக்கேல் சான்டல் இப்படி எழுதுகிறார்: “சமூக நல்வாழ்வு என்பது ஒற்று மையுடன், ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வாழ்வது என்பதே. ஒருவர் பொருளாதார ரீதியாக உயர்ந்தா லும், உயரமுடியாவிட்டாலும் ஒரு கண்ணியமான, கலாச்சாரப்பூர்வ வாழ்க்கை நடத்த முடிந்தால் தான் ஒருவரின் சமூக நல்வாழ்வை உறுதிப்படுத்திட முடியும்”. இரண்டு உயர்கல்வி நிறுவனங்களின் (ஐஐடி) வெவ்வேறு கிளைகளின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ரீதியாக சலுகை பெற்ற உயர்சாதியி னரிடம் அடையாளம் காணப்பட்ட அணுகுமுறையின் கண்ணோட்டத்தில் இதை எழுதியுள்ளோம். இது உணர்வுப்பூர்வமான ஒப்புதல் வாக்குமூலமோ அல்லது அங்கு நிலவும் சாதிப்பாகுபாடு குறித்த கோட் பாடுகளோ அல்ல. நாம் பார்த்தவைகளின் பிரதி பலிப்பாகும்.
ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு
தகுதி என்பதன் பேரில் எவ்வாறு பாகுபாடுகள் செயல்படு கின்றன என்பதை இயல்பாகவே அறியாமல் ஒரு மிதப்பு நிலையில் இருக்கிறோம். ஐஐடியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் அதில் நுழையவே பெரு மளவு முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. தகுதி என்ற ஒற்றைச் சொல்லில் அதை நியாயப்படுத்தி விடுகிறோம். இதை நாம் உணரவே சற்று காலம் பிடிக்கிறது. உயிரிழந்த மாணவர் தர்ஷன் சோலங்கியின் சோக மான உதாரணம், அதில் உள்ள ஆயிரக்கணக்கான உயர் அடுக்கு முன்னாள் மாணவர்களுக்கு அவர்க ளின் மாணவ நாட்களில் அவர்கள் கொண்டிருந்த பாரபட்சங்களின் இருண்ட புள்ளிகளை புரிந்து கொள்ளவும், சிந்திக்கவும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும். அங்குள்ள வகுப்பறைகளை பாரபட்சங் கள் இல்லாத அல்லது தகுதியின் பேரால் பாகுபாடு காட்டப்படாத ஒரு சமமான இடமாக மாற்ற வேண்டிய பொறுப்பு அங்குள்ள ஆசிரியர்களுக்கு சற்று கூடுதலாக உள்ளது. சமத்துவம், கண்ணியம் மற்றும் சகோதரத்துவ கலாச்சாரத்தை குறுகிய நோக்கு நிலை திட்டங்கள் மட்டுமே தோற்றுவிக்காது. ஐ.ஐ.டி.யின் பாடத்திட்டங்களுக்குள்ளேயே இவைகள் கட்ட மைக்கப்பட வேண்டும். கற்றல் நடைபெறும் சரணால யங்களாக அவை மாற வேண்டும். இவை தார்மீகத் தேவைகள் மட்டுமே அல்ல. மாறாக ஆரோக்கியமான வளமான நாட்டிற்கு வழிவகுப்பவை, பெரும்பங்கை யும் வகிப்பவை ஆகும்.
நன்றி : தி இந்து (ஆங்கிலம்),
கட்டுரையாளர்கள்: இருவரும் லிப்டெக் இந்தியா நிறுவனத்தின் சமூக ஆய்வாளர்கள்; ராஜேந்திரன் நாராயணன் பெங்களூருஅசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர்
தமிழில்: கடலூர் சுகுமாறன்