articles

img

மண்ணுரிமைக்கும் பெண்ணுரிமைக்கும் தன்னை அர்ப்பணித்த வீரத்தாய்! - ஏ. லாசர்

1917. இந்த உலகை புரட்டிப் போட்ட ஒரு சோசலிசப் புரட்சி ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் நடத்தப்பட்ட ஆண்டு. ஒரு புதிய சமூக அமைப்பு உரு வான அந்த ஆண்டில் தான் தமிழ்நாட்டில் மகத்தான தலைவர் கே.பி.ஜானகி அம்மாள் பிறந்தார். 75 ஆண்டுகள் வாழ்ந்த அவர் மதுரையை மையமாகக் கொண்டு 60 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு அரசியலுக்கு பெருமை சேர்த்தார்.  தன்னுடைய கம்பீரமான குரல் வளத்தின் காரண மாக, நாடக மேடையின் மூலமாக  ஒரு பாடகராக அறிமுகமான தோழர் கேபிஜே. 12 வயதில் அறிமுக மான அம்மா, 15 வயதிலேயே பிரபல்யமானார். அந்த நாடக கம்பெனியில் ஹார்மோனியம் வாசிப்பவராக இருந்த குருசாமி காங்கிரஸ் கட்சிக்காரர். அவரு டைய அரசியல் கருத்துக்கள் அம்மாவை ஈர்த்தன. எனவே அவர், காங்கிரஸ் மேடைகளிலும் பாட குரு சாமி ஊக்கப்படுத்தினார். குருசாமி அண்ணா என்று அழைக்கப்பட்ட இவர், அம்மாவின்  கணவனாகவும் ஆனார். இரண்டு பேரும் இணைந்து மேடைகளில் வலம் வந்தது, சுதந்திரப் போராட்ட நடவடிக்கைக ளுக்கும் மக்களை திரட்டுவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. 

இந்நிலையில், 1938ஆம் ஆண்டு வத்தலகுண்டில் நடைபெற்ற காங்கிரஸின் அரசியல் மாநாடு அம்மா வின் தேசிய கீதத்துடன் தொடங்கியது. அவரது குரலும் பாட்டும் மொத்த கூட்டத்தையுமே ஈர்த்தது. அந்த மாநாட்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளாக செயல் பட்ட தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவா, எம்.ஆர்.வெங் கட்ராமன் போன்ற தலைவர்கள் எல்லாம் பங்கெடுத் துள்ளனர். இவர்கள் அம்மாவை மேடைப் பேச்சாள ராக மாற்றவும் அரசியலில் போராட்டக் களங்களில் அம்மாவை ஈடுபடுத்தவும் முடிவு செய்தனர். காங்கி ரஸ் கட்சியின் மாநகர தலைவராக செயல்பட்ட ஜானகி அம்மா கம்யூனிஸ்ட் அரசியல் பயிற்சியும் பெற்றார். மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக பட்டாபி சீதாராமையாவை நிறுத்திய பொழுது அவ ருக்கு எதிராக சுபாஷ் சந்திரபோசை சோசலிஸ்டுகள் முன்னிறுத்தினர். அவர் நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வந்தார். மதுரையில் மகத்தான வரவேற்பை சுபாஷ் சந்திர போஸுக்கு கொடுத்து நகர் முழு வதும் அழைத்துச் சென்று கொடிகளை ஏற்ற வைத்து  பின்பு தமுக்கம் கலையரங்கில் பல்லாயிரக்கணக் கான பேர் பங்கு கொண்ட பொதுக்கூட்டமும் நடத்தப் பட்டது. இதற்கு அம்மா தான் தலைமை வகித்தார். உலகின் பெரும் பகுதியை தனது ஆட்சியின் கீழ், அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கருதி நாஜிச வெறியோடு உலக யுத்தத்தை துவக்கிய ஹிட்லர், பிரிட்டன் மீதும் பிரான்ஸ் மீதும் தாக்குதலை தொடுத்தான். பிரிட்டிஷ் அரசு, இந்திய மக்களும் இந்திய ராணுவமும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதை காங்கிரஸ் கட்சி யில் இருந்த கணிசமான தலைவர்கள் ஏற்கவில்லை. பிரிட்டிஷாருக்கு ஆதரவான நிலையை எதிர்த்து யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். பிரிட்டிஷ்  அரசு க்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் தோழர் கேபிஜே அவர்கள் ஈடுபட்டதினால் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். குருசாமி அண் ணாவும் கைது செய்யப்பட்டு கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத காலம் சிறைக் கொடுமை களை முதல் முதலாக அனுபவித்ததால் அவர் கடும் பாதிப்புகளுக்கு உள்ளானார். சிறையை விட்டு ஆஸ்துமா நோயோடு வெளியில் வந்தார். 22 வயதில் சிறைக் கொடுமை, தரமற்ற உணவு, இவைகளின் காரணமாக நோயாளியாக மாறியவர் 53 ஆண்டுகள் நோயோடு போராடிக் கொண்டே தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.

தமிழகத்தில் அரசியல் நடவடிக்கைகளில் முதல் முதலாக கைது செய்யப்பட்ட பெண், தோழர் கே.பி.ஜானகி அம்மாள் தான். அதை அன்றைய பத்திரி கைகள் வெளியிட்டிருந்தன. கே.பி.ஜே அவரது அரசி யல் வாழ்க்கையில் ஐந்து முறை சிறை சென்றார். முதல் இரண்டு முறை வெள்ளையர்கள் ஆட்சிக் காலம். மற்ற மூன்று முறை காங்கிரஸ் ஆட்சிக் காலம்.  தோழர் கே.பி.ஜே. அவர்கள், மதுரையை மையமாகக் கொண்டு துவங்கிய அரசியல் நடவடிக்கையில் ஆங்கி லேயர்களுக்கு சொந்தமான ஹார்வி மில் தொழிற்சங்க போராட்டம் மிக முக்கியமானது.  கடுமையான வேலைச் சுமை. குறைவான கூலி. இவைகளை எதிர்த்த பொழுது கொடும் அடக்குமுறைகளினால் பெண் தொழிலாளி கள் பாதிக்கப்பட்ட பொழுது அவர்களை திரட்டுவதிலே  முன்னணியில் நின்று பல போராட்டங்களை நடத்தினார்.  இதே காலத்தில் கிராமப்புறங்களில் நில உரிமையா ளருக்கு  75 சதவீதம் உழைக்கின்ற விவசாயிக்கு 25 சத வீதம் என்ற நிலையில் கடும் சுரண்டலுக்கு ஆளான விவசாயிகள், செங்கொடி இயக்கத்தினால் விவசாய சங்கங்களில் திரட்டப்பட்டுப் போராடினார்கள். அந்த விவசாயிகளுக்காக களம் இறங்கினார் அம்மா. விவசாயிகளுக்கு 60 சதவீதம் உற்பத்தியில் பங்கு வேண்டும் என்று கோரி போராடினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், குறிப்பாக ஆண்கள் அனைவரும் போலீசை கொண்டு அடித்து விரட்டப்பட்டனர். எனவே பெண்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அம்மா அவர்கள் வீடுவீடாகச் சென்று பெண்களை சந்தித்து, வயல்வெளிகளிலே வேலை  செய்யும் வெளியூர்க்காரர்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை துவக்கினார். அம்மாவின் தலைமை யிலே வயல்களை உழவடை செய்வது, விளைந்த பகுதிகளிலே அறுவடை செய்வது ஆகிய பணிகள் நடைபெற்றன. இந்த செய்தி மாவட்டம் முழுவதும் பரவி அம்மாவை மதுரை நகரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அனைத்து விவசாயிகளும் தேடி வந்தனர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள இதே போன்ற நிலையை போக்க தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். பல அடக்குமுறைகளையும் எதிர்த்து இந்த போராட்டம் வெற்றிகரமாக நடந்து 60  சதவீதம் விவசாயிகளுக்கும் 40 சதவீதம் நில உரிமை யாளர்களுக்கும் என்ற நிலையை உருவாக்கினார். அதன் விளைவாக விவசாயிகள் சங்கத்தின் தலை வராக அவர் மாறினார். மாவட்டம் முழுவதும்  விவசாயி கள் சங்கக் கிளைகள் அமைக்கப்பட்டன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராட்டக் களத்தை உருவாக்கினார் அம்மா. பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் போன்ற தலைவர்களு டன் இணைந்து ஜனநாயக மாதர் சங்கத்தை தமிழ் நாட்டில் உருவாக்கினார். அதன் ஸ்தாபக தலைவராக செயல்பட்டார். அவர் மறையும் வரை அப்பொறுப்பில் நீடித்தார். வரதட்சணைக் கொடுமைகளினால் பாதிக் கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்களை பாது காக்க மாவட்டம் தோறும் மாநாடுகளை நடத்தி அந்த பெண்களுக்கு நம்பிக்கை அளிக்க தகுந்த நேரடி கள நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன் விளைவாக பெண்களிடம் ஜனநாயக மாதர் சங்கத்தின் மீதும் தோழர் கேபிஜே மீதும் பிடிப்பு ஏற்பட்டது.

இதே காலத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து அம்மா குரல் கொடுத்தார். இவர் 1967-இல் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் சட்டமன்றத்தில் விவசாயிகளுக்காக, விவ சாய தொழிலாளிகளின் நியாயமான கூலி உயர்வுக் காக, பெண்களின் வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைகளை தடுத்து நிறுத் தப்பட வேண்டும் என்பதற்காக சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று பலமுறை குரல் எழுப்பி விவாதங்க ளை நடத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளில் அவர் ஆற்றிய மகத்தான மக்கள் சேவை மறக்க முடியாத வரலாறு.  மதுரை யில் மண்டையன் ஆசாரி சந்தில் உள்ள ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு மாவட்டம் முழுவதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து செயல் பட்டார். அவர்  மாவட்ட கவுன்சில் உறுப்பினராக, மதுரை நகராட்சி மன்ற உறுப்பினராக, விவசாய சங்க தலைவ ராக, ஜனநாயக மாதர் சங்கத் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக எண்ணற்ற பொறுப்புகளில் இருந்து செயல்பட்ட காலங்களில் எள்ளளவும் இந்த பொறுப்பு களை தன்னுடைய சுயநலத்துக்கு பயன்படுத்தாத உன்னதமான தலைவர். இன்றைய அரசியல் சூழ் நிலையில் பதவிக்காக, பணத்துக்காக, பகட்டான வாழ்க்கைக்காக, ஆடம்பரத்தை அனுபவிப்பதற்காக கொள்கைகளை தூக்கி எறிந்து விடும் கேவலமான நிலையைப் பார்க்கிறோம். 

அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வள்ளுவரின் குறளின் நடமாடும் உருவமாக அம்மா வாழ்ந்து காட்டி னார். பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்து, தான் இருந்த இயக்கத்திற்கும் புகழ் சேர்த்து, எந்த மக்களுக் காக களம் இறங்கினாரோ அந்த மக்களின் வாழ்க்கை யில், அவர்கள் வைத்த கோரிக்கையில் வெற்றி அடைவ தற்காகதன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான வீரமங்கை தான் தோழர் கே.பி.ஜானகி அம்மாள். அவர் புகழ் நீடூழி வாழ அவர் வழி பின் தொடர்வோம்.