articles

img

அதிகரிக்கும் வேலையின்மைக்கு முடிவு கட்டுக!

உலக மக்கள் தொகையில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் வந்தி ருப்பதாக பல்வேறு கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. பன்னெடும் காலமாக இந்தியாவின் முதற்பெரும் சிறப்பாகக் கூறப்படுவது இங்கு 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்கள். ஆனால் அந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பது மாபெரும் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் தொகை உயர உயர தேவை அதிகரிக்கும், தேவைக் கேற்ப உற்பத்தியும் வேலை வாய்ப்பும் பெருகும் என்பதே நிதர்சனம். ஆனால் கார்ப்பரேட் கைக்கூலியான பாசிச பாஜகவின் பிற்போக்குத்தனமான, பெருமுத லாளிகளுக்கு ஆதரவான கண்மூடித்தனமான பொருளா தாரக் கொள்கை மற்றும் நிலைபாடுகளால் இந்தியாவின் நிலைமை தலைகீழாக உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய கணக்கெ டுப்பின்படி இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவிகிதம் ஆகும். இது கடந்த 45 ஆண்டில் இல்லாத அளவு அதிகமா கும். தற்போது 2023 பிப்ரவரி மாத சிஎம்ஐஇ கணக்கெடுப் பின்படி இந்தியாவின் வேலையின்மை விகிதம் நகர்ப் புறங்களில் 7.93 சதவிகிதம் ஆகவும் கிராமப்புறங்களில் 7.45 சதவீதமாகவும் உள்ளது.  தற்போது அது  8.30 சத விகிதமாக   உயர்ந்து நிற்கிறது.

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும்...

பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்கில் தொழிலாளர்க ளை வேலையில் இருந்து நீக்குவது என்பது 2019-இல் (கொரோனா பேரிடர்) இருந்து தொடர் நிகழ்வாகி விட்ட நிலையில் இந்த சதவீதமானது மேலும் பன்மடங்கு உயரும் என அஞ்சப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை யானது தற்போது அனைத்து அரசுத் துறைகளிலும் புகுத்தப்பட்டு விட்டது. நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாகும் வகையில் இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் அக்னி பாத் திட்டம் என்கிற பெயரில் 17.5 - 21 வயதுடைய இளைஞர்களை வேலைக்கு சேர்த்து அவர்களை முறையான கல்வியை தொடர விடாமல் செய்கிறது.  ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை - ஒழிப்பு) சட்டம் 1970 பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால் அவற்றை முழுமையாகப் பின்பற்றாமல் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை மேலும் மேலும் ஊக்குவிக்கும் வகையிலும், வளர்த்தெடுக்கும் வகையிலும் ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒரு சில நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி, எதிர்காலப் பாதுகாப்பு, நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இடையே வேறுபாடு காட்டக்  கூடாது போன்றவை நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்ப பட்டுள்ளன. இருப்பினும் முதலாளிகளின் நலனையே பிரதானமாகக் கொண்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர் முறையானது தற்போது அரசாங்கங்களால் கைக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதுதான் குறைந்த ஊதியத்திற்கு இளைஞர்களை பணியமர்த்தி அவர்களின் உழைப்பையும் திறமையையும் சுரண்ட முடியும். முதலாளிகளின் பணம் மிச்சம் ஆகும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு காப்பீடு, போனஸ், ஓய்வூதியங்கள் போன்றவை வழங்கத் தேவையில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகக் கூட எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து நீக்கலாம்.

ஒழிப்பதற்குப் பதிலாக ஊக்குவிக்கும் ஆணைகள்...

எந்தவித பணிப் பாதுகாப்பும் இல்லாமையால் மன அழுத்தத்துடனேயே இயந்திரத்தனமாக இளைஞர்கள் உழல்கின்றனர். நெடும் போராட்டம் நடத்தி எட்டு மணி  நேர வேலை உரிமை பெற்று நேரச் சுரண்டலை தடுத்தோம். ஆனால் உழைப்புச் சுரண்டலை தடுக்க முடிய வில்லை. உழைப்புச் சுரண்டலின் பெரும் வடிவமாக ஒப்பந்தத் தொழிலாளர் முறை உள்ளது.  தற்காலிக, குறுகிய கால வேலை என்ற போதிலும் கூட சம வேலைக்கு  சம ஊதியம் கிடைப்பதில்லை. (ஒரு நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் பணி புரியும் ஒருவரின் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை கூட அதே நிறுவனத்தில் அதே  அளவிலான வேலையைச் செய்யும் ஒப்பந்தப் பணியாளர் பெறுவதில்லை.) பல நேரங்களில் அந்த  சொற்ப ஊதியம் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. இந்நிலை யில் பல்வேறு பொதுத்துறைகளில் உள்ள நிரந்தரப் பணியிடங்களுக்கு மூடு விழா நடத்தும் வகையிலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பதிலாக அதனை ஊக்குவிக்கும் வகையிலும் ஒன்றிய மாநில அரசுகள் பல்வேறு ஆணைகளை அவ்வப்போது பிறப்பிக்கின்றன. ஓய்வு பெற்ற நபர்களுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை பறிக்கின்றது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கோடியை கடந்து விட்டது. சொற்ப காலிப்பணியிடங்களுக்கு கூட லட்சக்கணக்கில் இளை ஞர்கள் விண்ணப்பிக்கின்றனர். வேலைவாய்ப்பற்ற பல இளைஞர்கள் கல்வித் தகுதியை உதறிவிட்டு கிடைக்கும் ஏதோ ஒரு வேலையை செய்கின்றனர். இன்னும் சில இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட பல கொடிய போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சமூக விரோதிகளாக மாறுகின்றனர். இவர்களை சாதிய, மதவாதக் கும்பல்கள் தங்களுக்கு கைக்கூலிகளாக மாற்றிக் கொள்கின்றனர். இப்படியாக வேலையில்லா திண்டாட்டம் என்பது தனி மனிதனையும் அவனது குடும் பத்தை மட்டும் பாதிப்பதாக இல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தைச் சீரழிக்கும் வகையில் உள்ளது.

ரயில்வேயில் 3 லட்சம்  காலிப் பணியிடங்கள்    

அரசின் பல்வேறு துறைகளில் உள்ள லட்சக்கணக் கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பதிலாக ஒன்றிய மாநில அரசுகள் அந்தப் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால் பணியில் இருக்கும் ஊழி யர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. சமீபத்திய ஒடிசா ரயில் விபத்தின் போதுதான் ரயில்வே பாதுகாப்புத் துறையில் லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ரயில்வே துறையில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.   இத்தகைய பின்னணியில் கடந்த 2017-21 ஆம் ஆண்டு வரையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் விபத்துக் கள் ஏற்பட்டுள்ளன. விபத்துகளில் 217 பேர் உயிரி ழந்துள்ளனர். ஆனால் பாலசோர் ரயில் விபத்தில் மட்டும் 288 பேர் பலியாகி உள்ளனர். காலிப் பணியிடங்க ளை நிரப்பாததன் விளைவு, அரசின் அலட்சியம் இவை இந்த கொடிய விபத்திற்கு பிரதான காரணமாக உள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளிலும் பல்லாயி ரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.  தமிழ்நாடு அரசு தற்போது போக்குவரத்துத்  துறையிலும் அவுட்சோர்சிங் முறையை புகுத்தி யுள்ளது. அரசு பணிகளுக்கு கூட ஊழியர்களை பணிய மர்த்துவதற்கு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அரசின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இவை அனைத்தும் ஒன்றிய, மாநில ஆட்சியா ளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை யினால் உருவாகக்கூடியவை. இத்தகைய மிக மோச மான கொள்கைகளுக்கு எதிராக, வேலையின்மைக்கு எதிராக கூட்டுப் பிரச்சாரம் ,கூட்டுப் போராட்டம் தீவிர மடைய வேண்டும். வேலை அடிப்படை உரிமை  என்பதை சட்டம் ஆக்கிட வேண்டும். சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு கோருகிறது.