articles

img

புகுஷிமா பொய்கள் - க.ஆனந்தன்

இந்நேரம் சீனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அணுக் கழிவுகளை கடலில் கொட்டினால்- மேற்கத்திய ஊடகங்கள் - அவை எழுத்து ஊடகமானாலும் சரி, காட்சி ஊடகமானாலும், எவ்வுளவு பரபரப்பை ஏற்படுத்தி நாம் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்கிற அளவிற்கு பிரச்சாரத்தை மிகுந்த வன்மத்துடன் கொண்டு சென்றிருக்கும்.

2011ஆம் ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், அதன் பின் ஏற்பட்ட சுனாமியினாலும் சேதப்பட்டது நினைவிருக்கலாம். விபத்துகளை தரம் பிரிக்கும் போது அந்த விபத்திற்கு சமமான மற்றொரு விபத்து செர்னோபில் விபத்து.

சீனா, தென்கொரியா,     பசிபிக் கடல் நாடுகள் எதிர்ப்பு 

தற்போது புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள சுமார் 1.34 மில்லியன் டன்கள் கதிரியக்க நீரை பசிபிக் பெருங்கடலில் ஆகஸ்ட் 24 முதல் திறந்து விடத் தொடங்கியுள்ளது ஜப்பானிய அரசு. இதற்கு சீனாவும், பசிபிக் கடலில் உள்ள தீவு நாடுகள் கூட்டமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

ஜப்பானிய கடல் உணவுகளுக்கு தடை

அமெரிக்காவின் கைப்பாவை நாடான தென் கொரியாவும் உள்நாட்டில் நிலவும் கடும் அதிருப்தியால் உதட்டளவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவும், தென் கொரியாவும் ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை தடை செய்துள்ளன. புகழ்பெற்ற சூறை (டூனா) மீன் பிடிப்பில் பாதியளவு பசிபிக் பெருங்கடல் பகுதியில்தான் பிடிக்கப்படுகிறது. அதன் கதிரியக்க தன்மை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.  

    அமெரிக்காவின் இரட்டை வேடம்

செர்னோபில் விபத்து நடந்த போது, அப்போதைய சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலிருந்தும் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட அனைத்து உணவு தானியங்களையும் அமெரிக்கா மற்றும்  மேற்கத்திய நாடுகள் எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமலே தடை செய்தன. தற்போது சீனா அரசியல் செய்வதாக குற்றம் சாட்டுகின்றன, அதே மேலை நாடுகள்.  அதேசமயம்  அமெரிக்கா இறக்குமதி செய்யும் ஜப்பானிய கடல் உணவுகள், மற்றும் அரிசி வைன் (Rice wine) போன்றவை அளவில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிக்கை தெரி விக்கிறது. அந்த பத்திரிக்கை அமெரிக்க அரசு ஜப்பானின் செயலுக்கு காட்டும் ஆதரவிற்கு ‘புவி அரசியல்’ காரண மென தெரிவிக்கிறது.  

சீனாவின் அணு மின் நிலையங்கள்     சுற்றுச்சூழலை அதிகமாக பாதிக்கின்றனவா?

ஆனால், வழக்கம் போல மேற்கத்திய ஊடகங்கள் சீனாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்கின்றன. அணு உலை நீரை வெளியிடும் ஜப்பான், தாங்கள் வெளியிடும் நீரில் டிரைடியம் என்ற ஹைட்ரஜினின் ஐசோடோப்புகள் அளவு சீனாவின் அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள டிரைடியத்தைவிட குறைவு என்று அறிவித்துள்ளது.  இதில் அரசியல் உள்ளது. அது டிரைடியம் வெளியீடு சம்பந்தமானது. சீனா வெளியிடும் டிரைடியத்தின் அளவிலேயே தென் கொரியாவும் வெளியிடுகிறது. ஆனால் பிரிட்டன் சீனாவைப் போல் 8 மடங்கும், அமெரிக்கா 1.6 மடங்கும்,  கனடா 15 மடங்கும், பிரான்ஸ் 250மடங்கும் அதிகமாக வெளியிடுகின்றன. உலகம் முழுவதும் சீனா வெளியிடும் டிரைடியத்தின் அளவே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டதற்கு புவி அரசியலே காரணம். 

    அணு  உலை குளிர் நீரும் புகுஷிமா கழிவு நீரும் ஒன்றா?

சீனாவில் மட்டுமல்ல. அணு உலை இயங்கும் நாடுகளில் அணு உலையைக் குளிர்விக்க பயன்படுத்தும் நீருக்கும், புகுஷிமாவில் தற்போது வெளியேற்றப்படுகிற கழிவுநீருக்கும் அடிப்படையில் பெரும் வித்தியாசம் உள்ளது.  புகுஷிமாவில் அணு உலையே வெடித்ததால், அணு உலையின் உள்ளேயுள்ள கார்பன்14, ஸ்டரான்சியம் 90, மற்றும் அயோடின் 129 ஆகிய அதிக கதிரியக்கம் கொண்ட தனிமங்கள் அந்த நீரில் கலந்துள்ளன. ஆகவே அந்த அணுக் கதிரியக்க கழிவும், மற்ற அணு உலைகளில் குளிரூட்டப் பயன்படுத்தும் நீரும் ஒன்றல்ல என்ற அடிப்படையையே மறைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. 

ஜப்பான் மீன்களில் கதிரியக்கம்  இல்லை என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

கடலில் வெளியிட்டவுடன் மீன்களை சோதித்ததாகவும் அவற்றில் கதிரியக்கம் இல்லையென்றும் ஜப்பானிய அரசு அறிவித்தது. அதற்கும் கிரின் பீஸ் இயக்கம் பதிலளித்துள்ளது.  “ஜப்பானிய அரசாங்கமும் டைச்சி பவர் கார்ப்பரேஷனும் வேண்டுமென்றே தாங்கள் வெளியிடும் கதிரியக்க அணுக்கள் பற்றி குறைத்து தகவல்களை கொடுக்கின்றனர்.  கதிரியக்க ஸ்ட்ரான்சியம்90, அயோடின் 129 மற்றும் கார்பன்14 ஆகியவை மீன்களின் உடல்களில் டிரைடியத்தைப் போல 50,000 மடங்கு அதிக கதிரியக்கம் கொண்டவை. நீடித்து இருக்கக் கூடிய ஆபத்தானவை”என்கிறது கிரீன் பீஸ் இயக்கம்.  “நமது சூழலியலில் ஸ்ட்ரான்சியமும் கால்சியம் போன்றே செயல்படும். இந்த கதிரியக்க நீரை உட்கொள்ளும் செடிகள் மற்றும் உயிர்களின் உடலில் சென்று 70-80 சதவீதம் கழிவில் வெளியேறிவிடும். ஆனால் மீதமுள்ளவை எலும்புகளிலும், எலும்பு மஜ்ஜை யிலும் தங்கிவிடும். 1 சதவீதம் வரை இரத்தத்திலும் மிருது வான தசைகளிலும் தங்கிவிடும். இந்த கதிரியக்க தனிமம்  இருப்பதால் எலும்பிலும், எலும்பு மஜ்ஜையிலும் அதை சுற்றியுள்ள திசுக்களிலும் புற்று நோய் பரவும். இந்த ஸ்டரான்சியம் 90 கண்டறிய நீண்ட காலம் பிடிக்கும். அதற்கு சிறப்பு ஆய்வகங்கள் தேவைப்படும். ஆகவே இந்த கழிவு பற்றி அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று அறிவித்துள்ளது ஜப்பானின் கிரின் பீஸ் இயக்கம். 

மேற்கத்திய ஊடகங்களின் இரட்டை வேடம்

இந்நேரம் சீனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அணுக்  கழிவுகளை கடலில் கொட்டினால்- மேற்கத்திய ஊடகங்கள் - அவை எழுத்து ஊடகமானாலும் சரி, காட்சி ஊடகமானா லும், எவ்வுளவு பரபரப்பை ஏற்படுத்தி நாம் உயிரோடு  இருக்கிறோமா இல்லையா என்கிற அளவிற்கு பிரச்சா ரத்தை மிகுந்த வன்மத்துடன் கொண்டு சென்றிருக்கும். ஆனால், ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு தினத்திலேயே,  அணுகுண்டு வீசி குடிமக்களைக் கொன்ற நாட்டின் பெயரைக்கூட உச்சரிக்க அச்சப்படும் பிரதமரைக் கொண்ட நாடு ஜப்பான் என்பதால், அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள மேற்கத்திய ஊடகங்கள், இருந்த விஷயத்தை  அடக்கி வாசிக்கின்றன.  பேரா.நோம்சம்ஸ்க்கி சொன்னது போல, அவை “மக்களின் சம்மதத்தை உற்பத்தி செய்து கொண்டிருக் கின்றன”.