நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப் படுத்தும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்தப்பட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கண்ணூரில் நடைபெற்ற சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி சனியன்று (ஏப்.9) நடந்த மத்திய-மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை பினராயி விஜயன் துவக்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: கேரளத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு 18 மக்க ளவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் இந்த மாநிலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை பெற முயற்சிக்கவில்லை. முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சி காலத்தில் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதற்கான நிலைப்பாடுகளை இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்டன. ஆனால் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உறுதியளித்தவற்றை அமல்படுத்த வும், மத்திய-மாநில உறவுகளை ஜனநாயகப்படுத்த வும், தாராளமய உலகமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் காங்கிரஸ் முன்வரவில்லை. இந்த கொள்கை அணுகுமுறையை மேலும் தீவிரமாக பாஜகஅமல்படுத்துகிறது.
வலுவான ஒன்றியம், தன்னிறைவான மாநிலங்கள், வட்டார அரசுகளாக மாறும் உள்ளாட்சி அமைப்புகள் என்கிற கோட்பாட்டை முன்வைத்தே கூட்டாட்சி குறித்த நிலைப்பாட்டை இடதுசாரிகள் கடைப்பிடிகிறார்கள். கூட்டாட்சித் தத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்க்கிறது. அவர்களது நொக்கம் மத்திய- மாநில உறவுகளை பலவீனப்படுத்துவதும் ஜனநாயகத்தை தகர்ப்பதுமாகும். ஜம்மு-காஷ்மீரை பிளவுபடுத்தி, மாநிலம் எனும் தகுதியை அகற்றினர். லட்சத்தீவு விசய த்திலும் அதுபோன்ற நிலைப்பாடு மேற்கொள்ளப் படுகிறது. இத்தகைய பிரச்சனைகளை அதிக அளவில் எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளமும் மாற்றப் பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 2.50 சதவிகி தமே கேரள மக்கள். வழங்கப்படும் வரி விகிதம் 1.92 சதவிகிதம் மட்டுமேயாகும். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உறவுகள் புனரமைக்கப்பட வேண்டும். பொருளாதார விசயங்களில் மறுசீரமைப்பு முக்கிய தேவையாகும். மாநிலங்களை பாதிக்கும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு விவாதிக்கப்பட வேண்டும். வளைகுடா மலையாளி களின் நலன் உள்ளிட்ட பிரச்சனைகளில் கேரளம் கூறும் கருத்துகளை செவிமடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் கொள்கைகள் அமலாக்கும்போது மாநில அரசுள் செயல்படுத்தும் திட்டங்களை அரசியல் காரணத்துக்காக தடுக்கக் கூடாது. மத்திய- மாநில உறவுகளை சாத்தியமாக்க உதவும் வகையில், ஆளுநர்களின் அதிகாரம் மறுவரை யறை செய்யப்பட வேண்டும். நிதி ஆணைத்தின் பரிசீல னைக்குட்பட்ட விசயங்கள் மாநிலங்களுடன் கலந்து இறுதி செய்யப்பட வேண்டும். ஒன்றிய அரசு வரிகளை அனைத்தும் வசூலிப்பதுடன் அதில் பலவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளாத நிலையும் மாற வேண்டும்.
இந்தி திணிப்பு கூடாது
மாநில மொழிகளை அங்கீகரிக்காமல் இந்தியை திணிக்க முயன்றால் அதை ஏற்க முடியாது. தேசிய வழிகாட்டுதலின் பகுதியாக பயன்படுத்தப்பட்ட மொழியே இந்தி. தேசிய மொழி என்கிற அளவில் இந்தியை ஏற்கலாம். மாநில மொழிகளை ஒழிப்பதற்கான நகர்வு ஆபத்தானது. அனைத்து மாநிலங்களிலும் இந்தி பேச வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். இது தேவையற்ற கருத்தாகும். இந்தி தின கொண்டாட்டத்தின்போது ஒருநாடு ஒரு மொழி என்கிற கருத்தை முன்வைத்ததும் இந்த நேரத்தில் நினைவு கூரத்தக்கது. தேசிய கல்வி கொள்கை விரைவில் இந்தி கட்டாயமாக்கப்பட்டதற்கு தேசிய அளவில் பரவ லாக எதிர்ப்பு எழுந்தது.
வேறுபட்ட மொழிகளும் கலாச்சாரமுமே தேசத்தின் சிறப்பு. நீண்டகால போராட்டங்களுக்கு பிறகே மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதன் முக்கியத்துவத்தையும் மொழிகளையும் அங்கீக ரிக்க மறுப்பதே சங்பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரல். இதன் தொடர்ச்சியே மாநில மொழிகளை பலவீனப்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகும். பலவேறு பகுதி களில் உள்ள மக்களின் பண்பாடுகளுக்கும், வாழ்விய லுக்கும் அடிப்படையானது மொழியாகும். இதை ஒழித்துக்கட்டி நாட்டை ஒற்றை தன்மைக்கு மாற்று வதே சங்பரிவாரின் நோக்கம். இது நாட்டின் ஒற்றுமை யையும், இறையாண்மையையும் தகர்க்கும். இந்த போக்கு ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.