பெண்களின் எழுச்சி இல்லாமல் பெரிய சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்பது வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரியும். -காரல் மார்க்ஸ்-
மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்பது ஒரு போராட்ட வரலாறு. அதனுடைய வரலாற்று முக்கியத்துவம் தெரியாமல் உலகமயச் சூழலில் அந்த தினம் வணிகமயமாகிவிட்டது. அதன் முக்கியத்துவம், அதற்கு போராடியவர்கள் யார் என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம் முன் இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான சம்பளம் வேண்டும், வேலை நேரம் வேண்டும், வாக்குரிமை வேண்டும், சுகாதாரமான பணிச் சூழல் வேண்டும் என்பதற்காக பஞ்சாலைகளில், ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்த ஆயிரக்க ணக்கான பெண்களின் சமரசமில்லா போராட்டத்தின் வெளிப்பாடுதான் பெண்கள் தினம். 1910 ஆம் ஆண்டு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்ட சர்வதேச பெண்கள் தின மாநாட்டில் உலகின் சிறந்த மார்க்சிய சிந்தனை யாளரும், பெண்ணியவாதியுமான கிளாரா ஜெட்கின் அவர்கள், உரிமைக்காகக் போராடிய வீரமிக்க பெண்களின் நினைவைப் போற்றவும், அவர்களுக்கு நன்றியையும் அஞ்சலியையும் தெரிவிக்கும் விதத்தில், போராட்ட நாளை சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதுதான் இன்று வரை சர்வதேச பெண்கள் தினமாக தொடர்கிறது.
இன்றும் பொருந்தும் முதல் முழக்கம்
1975 ஆம் ஆண்டு தான் ஐ.நா. சபை மார்ச் 8- ஐ சர்வதேச பெண்கள் தினமாக முறைப்படி அறி வித்தது. அதன் முதல் முழக்கமாக “சமத்துவத்தை யோசி-அறிவுப்பூர்வமாக கட்டி எழுப்பு -மாற்றத் திற்காக புதுமையாக சிந்தி “என்று முன் வைத்தது. ஆனால் இன்றும் அதே முழக்கத்தை முன்வைக்க வேண்டிய நிலையே தொடர்கிறது. மார்ச் 8 பெண்கள் தினம்- பெண்களின் பிரச்சனை களை முன்னிறுத்தி அதற்கு தீர்வு எப்படி காண்பது, பெண்களின் திறமையை- அறிவை- ஆளுமையை அதிகரிக்க, வெளிப்படுத்த அரசும், சமூகமும் செய்ய வேண்டியவை என்ன என்பதை விவாதித்து தீர்வு காணும் நாளாகும். மார்ச் 8 பெண்கள் தினம் என்பது உலகம் முழுவதும் பெண்ணுரிமைக்காக குரல் எழுப்பிய, போராடிய வெற்றி கண்ட பெண்களை அதாவது 1848 இல் பெண்க ளுக்கான முதல் பள்ளியை புனேவில் ஆரம்பித்த முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே, சமூக நீதிக்காக போராடிய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, பெண் கல்விக்காக போராடிய நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய் என்று சமூக சிந்தனைக ளோடு பல பெண்கள் களப் போராட்டம் நடத்தி இருக்கி றார்கள், நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.
சர்வதேச மகளிர் தினத்தின் முக்கிய கருப்பொரு ளாக கல்வி- சுகாதாரம்- வேலை வாய்ப்பு- பொருளா தாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய வற்றில் பெண்களின் முக்கியத்துவம் தான். 2023 உலக பாலின இடைவெளி அறிக்கை 146 ஆண்டுகளில் மதிப்பீடு செய்துள்ளது. அதில் ஆண் -பெண் இடையேயான ஒப்பீடு 68.4 சதவீதம் முழு பாலின சமத்துவம் அடைய 131 ஆண்டுகள் ஆகும் என்கிற அதிர்ச்சி தகவலை கூறுகிறது. 146 நாடுகளில் பாலின சமத்துவம் இந்தியா 127 ஆவது இடத்தில் உள்ளது, கல்வியில் 107 ஆவது இடத்திலும், உயர் பதவிகள் போன்ற பொருளாதார பங்கேற்பில் 36.7 சதவீதம் ஆகும் அரசியல் அதிகாரம் 25.3 சதவீத மாகவும் உள்ளாட்சிகளில் 44.4 சதவீதமாகவும் ஆய்வு அறிக்கை சொல்கிறது. பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியான போராட்டத்திற்கு நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.
வேலை வாய்ப்பு
சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்குப் பிறகும் வேலையின்மை அதிகரித்தபடியே இருக்கிறது. வருடத்திற்கு 2 கோடிப் பேருக்கு வேலை கொடுப் போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளில் 10 லட்சத்திற்கு மேல் காலிப் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கிடைக்கும் வேலை கூட படிப்பு- திறமை- தகுதிக்கு ஏற்றதாக இல்லை. வேலைவாய்ப்பு பெறுவதில் தொடங்கி, ஊதிய விகிதம், பதவி உயர்வு, பதவிக்கான அதிகாரம் என்று சவாலான விஷயமாகவே பெண்களுக்கு இருக்கி றது எல்லா துறைகளிலும் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகள் எல்லாம் ஒப்பந்த முறைக்கு தள்ளப்படும் பொழுது அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
பெண்களின் பாதுகாப்பு
பெண்கள் மற்றும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறிக் கொண்டு இருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் வன்முறை,காஷ்மீர் சிறுமி ஆசிபா,பில்கிஸ்பானு மீது தாக்குதல், மணிப்பூரில் இளம்பெண்களை நிர்வாணப்படுத்தியது என்று தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்கள் மனரீதியாக வும் உடல் ரீதியாகவும் பாதிப்பு அடைகிறார்கள். இதை தடுக்க 2013 ஆம் ஆண்டு அரசு கொண்டு வந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றும் இடங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற சட்டம் பல அரசு நிறுவனங்க ளில் கூட இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
திட்டப் பணியாளர்கள்
அங்கன்வாடி, ஆஷா ,மக்களை தேடி மருத்து வம் போன்ற திட்ட பணியாளர்கள் அரசின் நலத்திட்டங் களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணி செய்கிறார்கள். ஆனால் இவர்கள் யாரும் அரசு ஊழியர் கிடையாது, தொழிலாளி என்று கூட அங்கீகா ரம் கிடையாது. பாதுகாப்பு நிரந்தரம் குறித்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி உள்ளது.
மகப்பேறு விடுப்பு
அரசு நிறுவனங்களில் 12 மாதங்கள் மகப்பேறு விடுப்புச் சட்டம் வந்துவிட்டது. ஆனால் திட்டப் பணி யாளர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மகப்பேறு விடுப்பு உரிமை என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரே அடிப்படையில் கிடைக்கும் விதத்தில் இந்த மார்ச் 8 தினத்தில் கோரிக்கை வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதை உறுதி செய்யும் நாள்
மார்ச் எட்டு பெண்கள் தினம் என்பது பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி தீர்வு காண்பது எப்படி, பெண்களின் உரிமைகளை தனிநபர் -சமூகம் மற்றும் அரசு ஒருங்கிணைந்து சமத்துவ மின்மையை அதிகரிக்கும் தடைகளை தகர்த்து முழுத் திறமையை உணர்ந்து ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவதை உறுதி செய்யும் நாளாகும். மார்ச் 8 பெண்கள் தினம் என்பது, பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளை சாத்தி ரங்கள் என்ற பெயரில் வைத்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்கள் பாலின சமத்துவத்தை முன்வைத்து தமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டிய நாளாகும். மார்ச் 8 பெண்கள் தினம் என்பது, பெண் விடு தலைக்கு பொருளாதார சுதந்திரம் நிச்சயம் தேவை. அது வேலை வாய்ப்பினால் கிடைக்கும் என்றாலும் சம்பாதிக்கும் வருமானத்தை செலவு செய்ய பெண்கள் முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறார்க ளா என்பதையும் உறுதி செய்யும் நாளாகும்.
பாஜக ஆட்சியை அகற்றிட...
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் அனை வரும் வீட்டிலும், பணியிடங்களிலும் சமூக அடிமை விலங்கை உடைத்து, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க போராட வேண்டி உள்ளது. பொதுவெளி என்பது இன்னும் ஆணுக்கு உரித்ததாக இருக்கி றது. பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களை அவதூறா கப் பேசுவது, தங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து பெண் தெரிவித்தால் தாக்குதல் தொடுப்பது அதி கரித்து வருகிறது. வீட்டில் செய்கின்ற பெண்களின் உழைப்பு உழைப்பாகவே கருதப்படவில்லை. இந்த மார்ச் 8 பெண்கள் தினம் தேர்தல் காலத்தில் இருப்பதால் பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் வெறுப்பு அரசியலை பேசி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத, மத வெறியை தூண்டுகிற, பெண்க ளுக்கு எதிரான ஆட்சியை, தலித்துகளுக்கும், பழங்குடி யினருக்கும் எதிரான ஆட்சியை அகற்றுவது பெண்க ளின் தலையாய வர்க்கக் கடமை என்பதை பெண்களா கிய நாம் உணர்ந்து அரசியல் மாற்றம் அடைவதற்கு உணர்வுப்பூர்வமாக பணியாற்றுவோம் என்று சபதம் ஏற்போம். “விண்ணில் பாதியை பெண்கள் தாங்கிக் கொண்டி ருக்கிறார்கள்” என்ற மாவோவின் சொற்கள் சக்தி வாய்ந்தவை. அனைத்து சாதி, மத ,வர்க்க வேறுபாடு களை தாண்டி பெண்களை ஒருங்கிணைத்து பாலின சமத்துவத்தை நோக்கி நமது போராட்டங்களை தொடர வேண்டும்.
“எந்த ஒருசமுதாயத்திலும் ஒட்டுமொத்த மாநிலத்தின் விடுதலை வளர்ச்சி என்பது பெண் விடுதலையின் வளர்ச்சியை பொறுத்தே அமையும்”
-சார்லஸ் பூரியர்- (பிரெஞ்சு தத்துவ அறிஞர்)
கட்டுரையாளர்: மாநில அமைப்பாளர்,
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு