உடல் நலம் காப்பதில் ஸ்மார்ட் ஸ்டெதாஸ்கோப் முதல் மருத்துவமனைகளில் நோயாளிகளுக் குரிய படுக்கை வசதி இருப்பு பற்றிய முன்னேற்பாடுகள் வரை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உதவு கிறது. சுகாதாரத்துறையில் சேகரிக்கப் பட்ட ஆய்வு விவரங்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ஐந்து முக்கியத் துறைகளில் எவ்வாறு உதவுகின்றன. மனிதர்களை காட்டிலும் எவ்வாறு திறமை யாக இவை செயல்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. யுகே தேசிய சுகாதாரம் மற்றும் உடல் நலம் குறித்த ஆய்வுக்கழகம் (National Institute for Health&Care Research NIHR)சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வில் இது பற்றிய விவரங்கள் தெரி விக்கப்பட்டுள்ளன. 2020-2023 ஆண்டு களுக்கு இடையில் வெளிவந்த பல ஆய்வ றிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதய நோய்கள்
நூறு விடலைப்பருவத்தினரில் ஒருவ ருக்கு இதயக்கோளாறு உள்ளது. வழக்கமாக இது மருத்துவமனைகளி லேயே கண்டுபிடிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஸ்டேதஸ்கோப் பத்து பேரில் ஒன்பது பேருக்கு இதயம் பழுதுபட்டுள்ள தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறுகிறது. உலகளாவிய திறமைமிக்க நிபுணர்களின் பரிந்துரைகள் (GTS referrals), நோயாளிகளுக்கு நல்ல பலன்கள், மருத்துவ செலவைக் குறைக்க இந்த வசதி உதவும். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட் டுள்ள ஒரு செயலி வழக்கமாக ஒருவர் இரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் போது அவர் முன்பு விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டதால் அவசர விபத்து மற்றும் மருத்துவ உதவி சிகிச்சைப் பிரிவில் (A&E) இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு பற்றிய விவரங் களைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
நுரையீரல் புற்றுநோய்
புற்றுநோய் மரணங்களில் உலகில் அதிக உயிரிழப்புகள் நுரையீரல் புற்று நோயால் ஏற்படுகிறது. சி டி ஸ்கேனில் தெரியும் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி புற்றுநோயால் ஏற்பட்டதா என்பதை அறிய இரண்டு செயற்கை நுண்ணறிவு கருவிகள் உதவுகின்றன. இது பற்றிய ஆய்வு வேறு பட்ட செல் வளர்ச்சிகளைக் கண்டறிய உதவும் இரண்டு கருவிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இரண்டு கருவிகளும் தொழில்ரீதியாக செயல்படும் நிறுவனங்கள் வழக்கமாக பயன்படுத்தும் நிலைப்படுத்தப்பட்ட ப்ரோக் அளவுகோலை (Standard Brock score) காட்டிலும் புற்றுநோய் இருப்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து கூறியது. செயற்கை நுண்ணறிவு இத்துறையில் முன்கூட்டியே நோய் இருப்பதைக் கண்டு பிடித்து நோயாளிகளின் உயிர் காக்க உதவுகிறது. இது மார்பகப் புற்றுநோய் பிரிவில் இரண்டு ரேடியோ கதிரியக்க வியல் நிபுணர்கள் செயல்படுவது போல திறம்படச் செயல்படுகிறது. இது பாது காப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதனால் மருத்துவ நிபுணர் களின் வேலைப் பளு குறையும் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.
கண்ணில் ஏற்படும் கோளாறு
மேக்குலா அழிவு குறைபாட்டால் ஒரு வருக்கு ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் இன்னொரு கண்ணும் பாதிக்கப்படுமா என்பதை அறிய செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. முன்னேற்றமடைந்த வாஸ் குலர் மேக்குலா பாதிப்பு (Advanced Macula Degeneration AMD) என்று அழைக்கப்படும் இக்குறைபாடு விரை வான பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. இக்கோளாறு அரிதாக ஏற்படும் ஒன்று. கண்ணின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைவதால் இது ஏற்படு கிறது. மேக்குலாவின் உலர் தன்மையால் (dry AMD) வரும் குறைபாட்டால் பின்னா ளில் ஒருவருக்கு ஏற்படும் கோளாறே இது. இது ஈரத்தன்மையுடைய மேக்குலா விழிக் கோளாறு (Wet AMD) என்று அழைக்கப் படுகிறது. மேக்குலா என்பது கண்ணில் பார்வைத் திறனுக்கு உதவும் ஒரு முக்கிய உள்ளு றுப்பு. இத்துறையில் 2,500 பேரிடம் நடத்தப் பட்ட ஆய்வில் இப்பிரிவு நிபுணர்கள் ஆறு பேரில் ஐந்து பேரை விட செயற்கை நுண்ணறிவுக் கருவி திறமையாக செயல் படுகிறது என்று தெரியவந்துள்ளது. வயிற்றுப்புண் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் குடற்புண் அல்சரைட்டிஸ் கோலிட்டிஸ் (ulcerative colitis) என்ற நோயுடன் உள்ளவர்களுக்கு அல்சர் நோய் வரு வதைப் பற்றி முன்கூட்டியே அறிய செயற்கை நுண்ணறிவுக் கருவி உதவுகிறது. வீக்கம், சிவந்து போவது, அதிக வலியை ஏற்படுத்தும் புண்களை உருவாக்கும் நோய் இது. இதனால் தோலும் பாதிக்கப்படுகிறது. இதை வேகமாக கண்டறிந்து மருத்துவர்களுக்கு முன்கூட்டியே கணித்துக்கூற இந்தக் கருவி உதவுகிறது.
தனிப்பட்ட சிகிச்சைமுறை
12 மணி நேரத்திற்குள் புற்றுநோயாளி களுக்கு எந்த வகை மருந்துப்பொருட்க ளின் கூட்டு மருந்து பயனளிக்கும் என்பதை யறிய மற்றொரு நுண்ணறிவு கருவி பயன்படுகிறது. புற்றுநோய்க்கு எதிரான இலக்கு நோக்கிய (targeted drugs) மருத்துவ சிகிச்சையில் இது நல்ல பலன் களை தருகிறது. கொரோனா வைரஸ் காலத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றவர்களை விட உயிரி ழக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. உலகளவில் 8,500 நோயாளிகளி டையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவி அறுவைசிகிச்சை நடந்த மாதத்தில் இவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு பற்றி துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறியது. மருத்துவமனை செயல்பாட்டில் மருத்துவமனைக்கு வரும் மக்களில் யாருக்கு அவசர மருத்துவ உதவி சிகிச்சை தேவைப்படாது என்பதை அறிய உதவும் ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவியை ஆய்வாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள யார்க்ச யரில் (Yorkshire) அவசர சிகிச்சைப் பிரிவு டன் இணைக்கப்பட்டுள்ள நூறு வாகன ஆவணங்கள் மற்றும் மருத்துவமனை களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
படுக்கை வசதிகள்
மற்றொரு நுண்ணறிவுக் கருவி வரப்போகும் நோயாளிகளில் எத்தனை பேருக்கு அவசர படுக்கை வசதி தேவைப் படும் என்பதைக் கண்டறிந்து மருத்துவ மனை மேலாளர்களுக்கு கூறுகிறது. லண்டனில் உள்ள ஒரு மருத்துவ மனையில் 2,00,000 வருகையாளர்களின் மெய்நிகழ் (real time) தரவுகளைப் பயன் படுத்தி உருவாக்கப்பட்ட இந்த கருவி நான்கு முதல் எட்டு மணி நேரத்திற்கு முன்பே இது பற்றி துல்லியமாகக் கணித்துக் கூறுகிறது. இது அந்த மருத்துவ மனையில் உள்ள முன்கூட்டி திட்டமிடல் செயல்பாட்டை விட சிறந்த முறையில் உள்ளது. மேலும் ஆய்வுகள் தேவை உடல் நலத்தைக் காப்பதில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் எவ்வாறு பயன் படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. வாடிக்கையான கிளினிக்கல் பரிசோதனைகளில் இவற்றின் பயன்பாடு, நோய்களுக்கான தீர்வில் இவற்றின் நீண்ட கால நன்மை கள் மற்றும் மருத்துவ செலவைக் குறைப் பதில் இந்த வகைக் கருவிகள் எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி மேலும் ஆய்வு கள் நடத்தப்படவேண்டும் என்று தேசிய சுகாதாரக்கழகத்தின் (NIHR) மூத்த ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் டாக்டர் ஜெம்மா க்விண்ட் (Dr Jemma Kwint) கூறுகிறார். வருங்காலத்தில் இத்தொழில்நுட்பத் தின் பயன்பாடு நோய் கண்டறிதல் மற்றும் நோய்களைத் தீர்ப்பதில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.