உழைக்கும் வர்க்கத் திற்காக பொருள்வாதம், முத லாளித்துவம் பற்றி வாழ்நாள் முழுவதும் சிந்தித்து, செயலாற்றி கொண்டு இருந்த காரல் மார்க்ஸ்க்காக, தன்னுடைய வசதியான வாழ்க்கையை துறந்து, தனது குழந்தைக்கு பால் கொடுக்கக் கூட இயலாமல், நலிவுற்று இறந்த ஜென்னி மார்க்ஸ் நம்மினத்தின் முதல் முன்னோடி சமூக சேவகி / போராளி. நாம் இன்று பெற்றிருக்கிற வாக்குரி மையை 18 ஆம் நூற்றண்டில், தெருவில் இறங்கி போராடிப் பெற்ற, கிளரா ஜெட்கினை மகளிர் தினத்தில் போற்றி கொண்டு இருக்கிறோம். இன்று சனாதனம் / மனுநீதி என்று எல்லாம் பேசிக்கொண்டு இருக்கும் நேரத்திலே கூட, பழங்குடி இனத்தை சார்ந்த ஜவ்வாது மலைத் தோழி ஸ்ரீபதி முதல் பழங்குடி பெண் சிவில் நீதிபதியாக ஆகியிருப்பது, பெண்கள் தங்களையும் தாங்கள் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற, கல்வியை கற்று முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருபுறம் கல்வியில் பெண்களின் பங்கு அதிகமாகி கொண்டு இருக்கிற நேரத்திலே இந்தியாவின் முதல் குடிமகள் (ஜனாதிபதி திரெளபதி முர்மு) அவர்களை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு கூட அழைக்கப்படவில்லை என்பதை, நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். தேவதாசி முறைய ஒழிக்க பாடுபட்ட முத்து லட்சுமி ரெட்டி இருந்த, நம் நாட்டில்தான் சனாதனத்தை பேசிக்கொண்டு திரைக்கலை ஞர் ஒருவர் பத்திரிகை துறையில் பணியாற்ற பெண்கள் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என நா கூசாமல் பேசுகிறார்.
தில்லியில் நிர்பயா, திரிபுராவில் ஆசியா பேகம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி, வாச்சாத்தி பெண்கள், மணிப்பூரில் பெண்களின் நிலை ஆகியவை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண் கள் தடம் பதிக்காத துறையே இல்லை என்று சொன்னாலும் இன்றும் அடக்குமுறை, ஆணவக்கொலை, பாலியல் வன்கொடுமை போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கி றது என்பதை உணர்த்துகிறது. வாச்சாத்தி பெண்கள் பில்கிஸ் பானு போன்ற பெண் களின் நிலை, மாவட்டத்தின் உயர்ந்த காவல்துறை பெண் அதிகாரியும் பாலியல் கொடுமைகளுக்கு, எதிராக அவர் போராடிக் கொண்டு இருக்கிற நிலையை நாடே அறியும். சென்னையில் கலாசேத்ராவின் மாணவி களை பேராசிரியர் பாலியல் சீண்டல், அருப்புக் கோட்டை கல்லுரி மாணவிகளிடம் முன்னாள் கவர்னர் நடந்து கொண்ட விதம் என்பது, பெண்கள் இஸ்ரோவில் பங்கெடுத்தாலும், இராணுவம், காவல்துறை போன்ற துறை களில் தலைமை பண்பை ஏற்றாலும், 50% க்கு மேல் அரசு பணியில் இருந்தாலும், 55% உயர்கல்வி பயின்றாலும், அடக்குமுறை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதன் ஒரு பகுதிதான் சமீபத்தில் சென்னையில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தனது மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய நிகழ்வு, இவ்வள விற்கும் அவர் ஒரு அரசு மருத்துவர், பெண்கள் எவ்வளவு முன்னேறினாலும், சட்டமன்றம், நாடாளுமன்றம், ஆகியவற்றில் 33% இடஒதுக்கீடு வழங்கவில்லை. பாரத் ஸ்டேட் வங்கியில் கர்ப்பிணி பெண்கள் சேர முடி யாது என அறிவித்த நிலையில், இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை.சு.வெங்க டேசன் அவர்கள், இந்த அவல நிலையை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து, அதை தடுத்து நிறுத்தினார்.
சமூக நீதி என்று கூறிக்கொண்டு இருக்கின்ற நேரத்திலே, பெண்கள் அதிகம் இருக்கின்ற தூய்மை பணியாளர்களின் ஊதியம் 6000/- ஆகவும், அனைத்து துறை களின் கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியம் 5000/- முதல் 10000/- என நிர்ணயிப்பது கவலைக்குரியது. குறைந்தபட்ச ஊதியம் 26000/- , ஓய்வூதியம் 9000/- என கேட்டு கொண்டு இருக்கிற நேரத்தில் அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. பெண்ணின் குடும்ப சூழலை, பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு துன்புறுத்தல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. விதவையோ, விவாகரத்து ஆனவரோ களத்தில் நின்று போராடினால் குடும்பத்தை பாதுகாக்க தெரியாத இவர்கள், மற்றவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என விமர்சனம் இன்றும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன முன்னேறினாலும் பெண்ணின் ஊதியம், ஏடிஎம் கார்டு அவள் கணவனிடம். ஆனால் கணவனின் ஊதியம் பெரும் பாலான மனைவிக்கு தெரிவதில்லை. தமிழக அரசு மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம், மாணவிகளின் கல்வி உதவி தொகை, முதிர் கன்னி உதவி தொகை போன்றவை வழங்கினாலும், 100% மகளிரே பணிபுரியும் மருத்துவம், சத்து ணவு போன்ற தோழியரின் ஊதியம் வரை முறை படுத்தபடாமல் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். கிராம பகுதி, ஒடுக்கப்பட்ட சமூகம், பின் தங்கிய, தாழ்த்தப் பட்ட, கருணை அடிப்படை பணிகளை முற்றி லும் இல்லாமல் செய்வது கவலைக்குரிய விஷயமாகும். இவ்வாறு பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அச்சுறுத்தல் ஏற்படும் போதும் நாம் உரிமைக் காக போராடும் போதும் நம்மோடு களத்தில் நிற்கும் சகோதர்களின் தோழர்களின் பங்கும், அளப்பரியது என்பதை உணர்கிறோம். அவர்களின் ஒத்துழைப்போடு நடக்கும் மாபெரும் மகளிர் மாநாடு வெல்ல சபத மேற்போம்!