தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன் முயற்சி களில் ஒன்று டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம். 2009 டிசம்பர் 20 - இது துவக்கப்பட்ட நாள். கோயம்புத்தூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அன்றைய அமைப் பாளர் பி.சம்பத், ஆதித் தமிழர் பேரவை யின் தலைவர் அதியமான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு. கோவைக் கோட்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மையத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அறிவித்த துவக்கம். இன்று சென்னை, மதுரை, திருச்செங்கோடு, கறம்பக்குடி, தாராபுரம், கும்பகோணம் என தனது செயல்பாடுகளை விரிவு செய்திருக்கும் வளர்ச்சி. 13 ஆண்டுகளை கடந்து நடை போடும் டாக்டர் அம்பேத்கர் மையத்தின் அனுபவங்கள் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கான இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆற்ற வேண்டிய கட மைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.
கட்டணம் இல்லா பயிற்சி
முழுக்க முழுக்க கட்டணம் இல்லா மல் நடத்தப்படும் இம் மையம் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு கள், அரசு வங்கி, கிராம வங்கி அதிகாரி கள் - ஊழியர்கள், எல்ஐசி அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள் - மத்திய அரசு வேலை வாய்ப்புகள், காவல் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் என எல்லா வகையான பணிகளிலும் அம்பேத் கர் மைய மாணவர்கள் அமர்ந்துள்ளனர். கோவை, சென்னை, கறம்பக்குடி, கும்பகோணம், தாராபுரம், மதுரை, திருச்செங்கோடு மையங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. கோவிட் காலத்தில் கூட ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன. அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம் கோவை, சென்னை மையங்களையும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) மதுரை மையத்தையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றன. கோவையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பங்க ளிப்பு முக்கியமானது. மின் வாரிய நியமன பயிற்சியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) இணைந்து பல மையங்க ளில் பயிற்சியை நடத்தியது. மதுரை மையத்தில் கோவிட் காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை சரி செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கோவை மையத்தில் மட்டுமே
முதல் நிலை தேர்வுகளில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றி ருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று பின்னணியில் வர்த்தக ரீதியாக இயங்கும் கல்வி நிலையங்களே மூடப்பட்ட சூழலில் நமது கோவை மையம் இணைய வழியில் தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்தியது. கறம்பக்குடி மையம் கிராமப்புற மாணவர்களை ஈர்ப்பதும், தாராபுரம், கும்பகோணம், திருச்செங்கொடு மையங்கள் நகரங்களுக்கு பணி களை விரிவாக்கி இருப்பதும், சென்னை மையம் மாநகரத்தில் உள்ள நிதியாதா ரம் உள்ளிட்ட பல சிரமங்களுக்கு மத்தி யிலும் பணிகளை தொடர்வது குறிப்பி டத்தக்கது. ஆசிரியர் தேர்வுகள் வந்த போது 32 ஊர்களுக்கு பயிற்சியை விரிவாக்க முடிந்தது.
நெகிழ்வான அனுபவங்கள்
கோவை மையத்தில் பயின்ற பார்வைச் சவால் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி தரப்பட்டது. வங்கி உதவி யாளர் தேர்வில் இங்கு பயிற்சி பெற்ற வர்கள் பணியில் அமர்ந்தனர். 2010-ல் இந்த மையத்தின் மூலம் பணியில் அமர்ந்த இளைஞர்கள் இன்றை க்கு பல்வேறு பதவி உயர்வுகளை பெற்று ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசில்தார் போன்ற பொறுப்புகளில் மக்கள் பணி ஆற்றி வருகிறார்கள். அம்பேத்கர் மையம் எங்களுக்கு தேர்வுக்கான பயிற்சி மட்டு மல்ல, மக்கள் மத்தியில் பணியாற்றுவ தற்கான அக்கறையையும் சேர்த்து கற்றுக் கொடுத்தது என்கிறார்கள் அவர்கள். வங்கித் தேர்வு வகுப்பில் வெற்றி பெற்று கூட்டுறவு வங்கியில் பணியில் சேர்ந்த மாணவி தனது அனுபவத்தை பகிர்கிறபோது, நான் கணக்கு பாடத்தில் பலவீனமானவள், எனக்கு கணக்கு வராது, ஆனால் தேர்வில் கணக்கு பாடத்தில் கூடுதலாக மதிப்பெண் பெற்று பணி நியமனம் பெற்றேன், அதற்கு அம்பேத்கர் மையம்தான் காரணம் என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
ஒருநாள் நமது மையத்திற்கு ஒரு மாணவனின் தாயார் வந்திருந்தார். நான் வருமானம் ஈட்டி தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. மகனுக்கு அரசாங்க வேலை எல்லாம் வேண்டாம் ஏதாவது ஒரு தனியாரிடம் வேலை பார்த்து மாதம் 7000/- கொடுத்தால் போதும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மையத்தில் உள்ள ஒருவரை சமாதானம் செய்து மூன்று மாதங்கள் பொறுத்து இருக்க சொன்னோம். அடுத்த மாதமே அவர் கனரா வங்கியில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார். இன்று அவர் பதவி உயர்வு பெற்று அதிகாரியாக பணி யாற்றுகிறார் . அவரின் குடும்பத்தில் நடந்த மாற்றங்கள் அளப்பரியது இதேபோல் மற்றொரு மாணவியின் தாயார் தனது மகனின் மேற்படிப்புக்கு செலவு செய்ய வேண்டிய உள்ளதால் ஹாஸ்டலை காலி செய்து விட்டு மகளை ஊருக்கு அழைத்துச் செல்வதாக சொன்னார். அந்த மாணவி ஈரோட்டில் இருந்து கோவை வந்து தங்கி நம் மையத்தில் படித்து வந்தார். நாம் அவரது தாயாரிடம் ஆறு மாத காலம் காத்திருக்கச் சொன்னோம். இன்று அவர் எல்ஐசி-யில் வளர்ச்சி அதிகாரியாக மிகச் சிறப்பாக பணியாற்று வருகிறார். வெளியூரில் இருந்து வந்து கோவை யில் தங்கி படித்த மற்றொரு மாணவனின் கதை சுவாரசியமானது. தனது படிப்பு செலவுக்காக ரேபிடோ என்ற பைக் டாக்ஸியை அவர் பகுதி நேரமாக ஒட்டி இருந்தார். வாடிக்கையாளரை ஏற்றுவ தற்கு கோவை ரயில்வே நிலையம் முன்பு அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கட்டிடம் முன்பு காத்திருப்பார். அந்த நேரத்தை பயன்படுத்தி படித்துக் கொண்டிருந்தவர் இன்று அதே ஸ்டேட் வங்கியில் வேலைக்கு தேர்வாகி பணி ஆற்றுகிறார்.
இப்படி நிறைய கதைகள்.
வேலை மட்டுமல்ல...
உரிமைக்கான கல்வியும்...
இந்த மையத்தின் சிறப்பு இந்த மையத்தில் பயின்றவர்களே ஆசிரியர்க ளாக மாறி மையத்தை முன்னெடுத்துச் செல்வதுதான். சென்னை மையம் தமிழ்நாடு அரசுப் பணிக்கான கேள்வித் தாளை உருவாக்கி பிற மையங்களுக்கும் தந்ததில் இந்த “மாணவ ஆசிரியர்களின்” பங்கு முக்கியமானது. தனியார் பயிற்சி நிறுவனங்கள் பல்லாயிரம் சம்பாதிக்கும் பணிகளை, உணர்வுப் பூர்வமாக எந்த பிரதி பலனும் எதிர்பாராது இவர்கள் செய்து தந்தனர். இந்த “சமூக இணைப்பு” மையத்தின் வெற்றி. இந்த மையத்தின் தன்னார்வலர்கள் ஆக செயல்படும் தோழர்கள் தங்களின் எல்லா விடுமுறை நாட்களையும் மையப் பணிகளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் கல்விப் பணிக்கு வந்தாலும் சாதிய சமூகம் குறித்த தெளிவோடு சமூக செயற்பாட்டாளர் ஆக மாறுவதும் முற்போக்கு தொழிற்சங்க அமைப்பு களின் தலைவர்களாக வளர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மையம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி போன்ற நியமனங்களில் நிகழ்ந்த இட ஒதுக்கீடு மீறல்களை சரி செய்து நூற்றுக் கணக்கா னவர் வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்தது. இம் மையத்தின் மாணவர்கள் கழிவு நீர்த் தொட்டி மரணங்கள் உள்ளிட்ட சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக தாங்கள் வாழும் பகுதி மக்களை திரட்டிய, தீண் டாமை ஒழிப்பு முன்னணியுடன் அம்மக் களை இணைத்த அனுபவமும் உண்டு.
மேல் நிலைக் கல்வி வழிகாட்டல் பயிற்சிகளை குடியிருப்புப் பகுதிகளில் நடத்தியதும் இதன் பணிகளின் விரிவுக்குச் சான்று. திருச்செங்கொடு மையம் கல்லூரி மாணவர்களுக்கு வழி காட்டல் நிகழ்வு களை நூற்றுக் கணக்கான மாணவர்க ளை பங்கேற்க செய்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 14-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டாக்டர் அம்பேத்கர் மையம் இன்னும் தனது பணிகளை விரிவாக்க வேண்டியுள்ளது.