articles

img

பன்மைத்துவமே இந்தியாவின் அழகு! - சு.வெங்கடேசன் எம்.பி., ,மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

இந்திய அர சியல் வர லாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே சட்டம், ஒரே மொழி என்ற ஒற்றைவாதக் கருத்தியல் மிகத்தீவிர மாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். நமது பன்மைத்துவத்தின் மீதான தாக்குதலும், ஒருமைவாத செயல்பாட்டிற்கான கட்டமைப்பும் ஒருசேர நடந்து கொண்டிருக்கிறது. 

பண்பாட்டு ஆதிக்கம் 

வர்ணாஸ்ரம கோட்பாடு முன்வைக்கும் இந்துத்துவா பண்பாடு மட்டுமே இந்தியப் பண்பாடு என கட்டமைக்கின்ற பணி ஒவ்வொரு நாளும் பண்பாட்டுத்துறையில் முன்னெடுக்கப்படுகிறது.  கூட்டாட்சி முறையின் சிதைவு  இன்னொரு புறம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை மாநிலங்களின் சுயஅடையாளத்தை அழித்து ஒற்றைத்தேர்தல் என்ற கோட்பாட்டை இந்துத்துவா சக்திகள் முன்னெடுக்கின்றன என்பதை நாம் பார்க்கின்றோம். குறிப்பாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் முன்னாள் குடியரசுத் தலைவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு சுமார் 18 ஆயிரம் பக்க அறிக்கையை குடியரசுத்தலைவரிடம் கொடுத்து 18 ஆவது நாடாளுமன்றத்தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்காத பாஜக இன்று அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தும் மசோதாவை மக்களவையில் முன்மொழிந்துள்ளது. அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்தி மொழித் திணிப்பு மொழி ஆதிக்கத்தின் தொடக்கம் 

பண்பாட்டு துறையிலும், அரசியல் துறை யிலும் ஒற்றைவாதம் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படும் வேளையில் தான் ஒற்றை மொழி மட்டுமே இந்தியாவின் அதிகார மொழியாக கட்டமைக்கும் வேலையை மிகத்  தீவிரமாக ஒவ்வொரு நாளும் செய்து கொண்டுள்ளது ஒன்றிய அரசு.  திட்டங்களில் மொழித் திணிப்பு  சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு அதிலிருந்து கிளைத்து வந்த மொழியான இந்தியை பரப்புகிற வேலையை மற்ற மொழி களுக்கு உள்ள இடங்களையெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் அகற்றி விட்டு அனைத்து தளங்களிலும் அனைத்து இடங்களிலும் இந்தியை மட்டும் நிலைநிறுத்துகிற பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்கான பல உதாரணங்களை நாள்தோறும் பார்க்க முடியும். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 80 சதவீதமான திட்டங்கள் அதாவது பாஜக கொண்டு வந்த புதிய திட்டங்கள் அனைத்துமே இந்தியில் மட்டுமே பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே  இருந்த பழைய திட்டங்களில் பெரும்பான்மை யான திட்டங்களின் பெயர்கள் இந்திக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்தியில் மட்டுமே இருப்பதால் திட்டத்தினுடைய முதல் எழுத்தை மட்டுமே சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். 

நாடாளுமன்றத்தில்  கடிதப் போக்குவரத்து 

அனைத்து திட்டங்களுக்கும் இந்தியில் பெயர் என்பது இன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கடிதம் எழுதினால் ஆங்கிலத்திலோ அல்லது கடிதம் எழுதப்பட்ட மொழியிலோ தான் பதில் சொல்லவேண்டும். தமிழ்நாடு போன்ற விதிவிலக்கு பெற்ற மாநிலங்களுக்கு ஒருபோதும் இந்தியில் பதில் சொல்லக்கூடாது. ஆனால் திட்ட மிட்டு வேண்டும் என்றே நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஆங்கிலத்தில் எழுதும் கடிதத்திற்கு இந்தியில் பதில் சொல்வதை இடைவிடாமல் செய்து கொண்டுள்ளது ஒன்றிய அரசு. 

நீதிமன்ற வழக்கும்  தொடரும் மீறல்களும் 

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த நான்கு ஆண்டு களுக்கு முன் நான் வழக்கு ஒன்றை தொடுத்தேன். அப்படி வழக்கு தொடுத்தபோது ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் நிர்வாகத் தவறால் இப்படி நடந்து விட்டது இனி இப்படி நடக்காது என நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக அறிக்கை அளித்தார். அதனை ஏற்றுக் கொண்டு மொழி பிரச்சனையில் ஒரு அரசு விழிப்புடனும் இருக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.  தொடரும் மீறல்கள்  ஆனால் இப்போது 18 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பல நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஆங்கிலத்தில் எழுதும் கடிதத்திற்கு ஒன்றிய அரசு இந்தியில் மட்டுமே பதில் அனுப்பும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டுள்ளது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சர் இந்தியில் பதில் எழுத அதனை அவர் கண்டித்து மலை யாளத்தில் பதில் கடிதம் எழுதினார். 

நாடாளுமன்றத்தில் இந்தி ஆதிக்கம்

 இப்படி எல்லாத்துறைகளிலும் இந்தி திணிப்பு உள்ளது. நாடாளுமன்றத்தில் ஏறக்குறைய 80 சதவீதத்துக்கும் அதிகமான நடவடிக்கைகள் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆங்கிலத்தில் மட்டுமே மசோதாவை முன்வைத்து விவாதத்தின் மீது பதில் சொல்கின்ற அமைச்சர் என பார்த்தால் அநேகமாக யாரும் இல்லை. எல்லோரும் இந்திக்கு மாறிவிட்டார்கள். இதற்கு காரணம் அந்தக்குழு. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான இந்தி ஆட்சி மொழிக்குழு.  மொழி அறியாதோரின் இக்கட்டு  கொடுத்துள்ள நிபந்தனைகள் வழிகாட்டு தல்கள் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனுடைய விளைவு என்னவென்றால் இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர் - அவர் அமைச்சராகவே கூட இருக்க லாம் - அவரால் நாடாளுமன்றத்தில் முழுமை யான ஈடுபாட்டுடன் முழுமையான ஆற்றலுடன் ஈடுபடவே முடியாதது. அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது இந்தி யில் தான் கேள்வி கேட்கப்படும் அல்லது இந்தியில் கேள்வி கேட்டால் உடனடியாக பதிலுரைக்க இயலாமல் திணறுவார். 

அரசமைப்பின் 75வது ஆண்டு விழா சர்ச்சை 

குடியரசுத் தலைவரின் இந்தி வாசிப்பு 

இதனுடைய உச்சகட்ட நிகழ்ச்சிதான் அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது நாடாளுமன்றத்தில் நடந்தது. அரசியல் சாசன சட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை கடந்த மாதம் நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டு அவையில் மக்களவை மாநிலங்களவை இரண்டு அவை உறுப்பினர்களும் கொண்டாடினோம். அப்போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. 

முகவுரை வாசிப்பின் முரண் 

குடியரசுத் தலைவர் அரசியல் அமைப்பு சாசன முகவுரையை வாசிக்கிறார். அவர் ஒவ்வொரு சொல்லாக சொல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரும்ப சொல்வது என அறிவிக்கப் பட்டது. இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கை. நம்முடைய மிகப்பெரிய பெருமைமிகு அடை யாளம் இந்திய அரசியல் அமைப்பின் முகவுரை. இந்த முகவுரை அரசியல் சட்டத்தின் மைய அச்சை வார்த்து வடிவமைக்கப்பட்டது. 

வரலாற்று பின்னணி   அம்பேத்கரின் நிலைப்பாடு

குடியரசு தலைவர் என்பவர் எப்படி அழைக்கப்பட வேண்டும் என கேள்வி எழுந்த போது அரசமைப்பு சபையில் நடந்த விவாதம் மிக முக்கியமானது. அந்த விவாதத்தில் குடி யரசுத் தலைவரை ராஷ்டிரபதி என்று தான் அழைக்கப்பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். அப்போது அரசமைப்பு சட்டத்தின் வரைவுக்குழு தலைவராக இருந்த டாக்டர். அம்பேத்கர் அவர்கள் அந்த விவாதத்தை இறுதிப்படுத்தும் போது ராஷ்டிரபதி என்பது இந்தி சொல், நான் அரசியல் சாசனத்தை ஆங்கிலத்தில் தான் எழுதுகிறேன். எனவே அரசியல் சாசனம் ஆங்கில வார்த்தைகளில் தான் இருக்கும். நீங்கள் அவரவர் தாய்மொழியில் மொழிப் பெயர்ப்பு செய்து கொள்ளுங்கள். 

தற்போதைய நிலையும் எதிர்காலமும் 

தற்கால சூழ்நிலை 

இந்தியாவை இந்தி மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நிலைநிறுத்தும் அதிகாரபூர்வமான நிகழ்ச்சி நிர லின் அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள் ளோம். 

எதிர்கால அச்சுறுத்தல்கள் 

அரசு நிறுவனங்களின் இலட்சினைகள் முழு வதுக்கும் காவிநிறம் பூசுவது, அரசு திட்டங்களின் முழுமைக்கும் இந்தி பெயர் சூட்டுவது, சமஸ்கிரு தத்தை தேவபாஷை எனவும், இந்திய மொழி களுக்கு எல்லாம் தாய்மொழி என மீண்டும் மீண்டும் அறிவிப்பது இவையெல்லாம் மோடி  அரசு நாள்தோறும் செய்யும் செயலாக இருக்கிறது.  மொழி சமத்துவமே நமது அடையாளம்  நாம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் இவ்வளவு தேசிய இனங்களை கொண்ட இந்திய ஒன்றியத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். எந்த ஒரு தேசிய மொழியும் இன்னொரு தேசிய மொழியின் மீது ஆதிக்கத்தை செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பன்மைத்துவமே இந்தியாவின் அழகு. மொழி சமத்துவமே நமது அடையாளம். இதற்கு எதிராக மோடி அரசு முன்வைக்கும் ஒற்றைவாத மொழி கோட்பாட்டை முறியடிப்போம்.