articles

img

கிராமப்புறப் பெண்கள் நிலை : ஒரு பார்வை - அ.ராதிகா

ஒரு பக்கம் ‘கடவுள்’ அளவிற்கு’ உயர் வாக’ சித்தரிக்கப்படுவது, இன் னொரு பக்கம் மனிதர்களாகவே நடத்தப்படாமல் இருப்பது. இதுதான் இந்தியப் பெண்களின் வாழ்நிலை. சாதி, மதம், ஆணாதிக்க முறை, வர்க்கம் – இவற் றின் அடிப்படையில் மிகுந்த ஒடுக்கு முறைகளைச் சந்திப்பவர்கள் பெண் கள். கிராமப்புறங்களில் பெண்கள் சந்திக் கும் ஒடுக்குமுறைகள் மிகமிக அதிகம். நிலவுடைமை சமூக அமைப்பு உயிர்ப் போடு இருக்கும் பகுதி கிராமங்கள். எனவே, நகர்ப்புறப் பெண்களைக் காட்டி லும் கிராமப்புறங்களில் பெண்கள் சமூகக் கலாச்சார ஒடுக்குமுறைகளை அதிகம் அனுபவிக்கிறார்கள்.

ஒரு சில ஒடுக்குமுறைகளின்  பட்டியல் இது:

1) கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறப்பே வெறுக்கப்படும் விஷயமாக இருக்கிறது. வரதட்சணை கொடுத்து பெண்களுக்கு திருமணம் செய்து கொடுப்பது, மிகப்பெரும் சுமை எனக் கருதி, பெண் குழந்தைப்பேறையே வெறுக்கும் நிலை இருக்கிறது.

2) திருமணம் நோக்கியே பெண்களின் வாழ்க்கை கொண்டுசெல்லப்படும் சூழலில், பெண்களைப் படிக்க வைப்பது, உயர்கல்வி பெறச் செய் வது, முறைசார் தொழில்களில் வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்வதற்கு பக்க பலமாக இருப்பது எனப் பெண்களின் வளர்ச்சிக்கான விஷயங்களில் குடும்ப அமைப்பு கவனம் செலுத்துவதில்லை.

3) ‘ஆண் குழந்தை கட்டாயம் வேண்டும்’ என்ற சிந்தனையால், இரண்டு குழந் தைகள் பிறந்த பிறகும், குழந்தை பெற வேண்டிய கட்டாயச் சுமை கிராமப் புறப் பெண்கள் மீது திணிக்கப்படுகி றது. கருவிலேயே குழந்தையின் பால் கண்டறியப்பட்டு கருக்கலைப்பு செய்ய பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். (’கருவிலே குழந்தையின் பால் கண்டு பிடிப்பது சட்டப்படி தடுக்கப்படுகிறது’ என அறிவிப்பு வைத்தாலும், சத்தமில் லாமல் இந்த குற்றம் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது)

4) பெண்களுக்கு வரதட்சணை தரவேண்டி யதைக் காரணம் காட்டி, குடும்பச் சொத்தில், குறிப்பாக குடும்பத்தின் விவ சாய நிலத்தில் பெண்களுக்கு தர வேண்டிய பங்கை மறுப்பது என்பது கிராமப்புறங்களில் மிகவும் சாதாரண மான விஷயம். சொத்தில் பங்கு கேட் டால், பிறந்த வீட்டினரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும். நகை, நிலம் உள்ளிட்ட எந்தவிதமான சொத்துகள் பெண்களுக்கு இருந்தாலும், அவை எல்லாம் கணவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். சிறிய வேலைவாய்ப்புகள் மூலம் கிராமப்புறப் பெண்கள் ஈட்டும் சொற்ப வருமானத்தின் மீதும் குடும்ப ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

5) பெண்கள் தனக்கான வாழ்க்கைத் த்துணையைத் தேடிக்கொள்வது, சாதி கடந்து காதலித்து மணமுடிப்பது மிகப்பெரும் ’கௌரவப் பிரச்சனை’ என சமூகத்தில் பார்க்கப்படுகிறது. கிராமங்களில் இது மிக அதிகம். ஆண வக் கொலைகளுக்கு சாதி ஒரு காரண மாக இருப்பது போலவே, ஆணாதிக்க  ஆணவமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

6) தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களாக இருந்தால், நிலைமை இன்னும் மோசம். இந்தப் பெண்கள் அனுபவிக்கும் வன்கொடுமைகள் நாகரிக சமூகத்தில்தானா நாம் வாழ்கி றோம் என்ற சந்தேகத்தைக் கிளப்பு கின்றன. இப்படி கிராமப்புறப் பெண்கள் சந்திக்கிற கலாச்சார ஒடுக்குமுறைகளை அடுக்கடுக்காக நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஒரு கட்டுரை போதாது.

கல்வி மறுப்பு

2011 மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, இந்தியாவின் மக்கள் தொகை யில் 68 சதவிகிதத்தினர் கிராமப்புறங்க ளில் வசிக்கிறார்கள். இவர்களில் பாதி யளவு பெண்கள். அவர்களில் 58 சதவிகி தத்தினர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்க ளாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 51 சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். ஒரு கோடியே 8 லட்சம் பெண்கள் தமிழ்நாட் டின் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் நகர்ப்புறப் பெண்களின் கல்வியறிவு விகிதம் 82 சதவிகிதமாக இருக்க, கிராமப்புறங்களில் 65% பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளார்கள்.  பெண்கள் உயர்கல்வி பெற்றிருந்தா லும் கிராமப்புறக் குடும்பங்கள் திரு மணத்திற்கு முன்பாக அவர்களை வெளிவேலைக்குச் செல்ல அனுமதிப்ப தில்லை. பெரிய படிப்பிற்கான வேலைக்கு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர வேண்டி இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய பெண்களின் தனிப்பட்ட இடப்பெயர்வு விரும்பப்படுவதில்லை. திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்க வேண்டிய அதிகபட்ச விஷயமாகப் பார்க்கும் போக்கு கிராமப்புறங்களில் அதிகம் இருப்பதால், முறைசார் பணிகளில் கிராமப்புறப் பெண்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

சமவேலைக்கு சமகூலி கிடையாது! குடும்ப வேலைக்கு மதிப்பு கிடையாது!

நிலமற்ற கூலித்தொழிலாளர் வர்க்கத் தைச் சார்ந்த பெண்கள், விவசாயக் கூலித் தொழிலில் ஈடுபடுவது, அக்கம்பக்க கிராமங்கள், ஊர்களில் கட்டட வேலை போன்ற விவசாயம் சாராத கூலி வேலைக ளுக்குச் செல்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். நிலமிருக்கும் குடும் பங்களில், குடும்ப விவசாய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சிறு, குறு விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் நிலத்தில் உழைத்தது போக, கூலிக்கும் அடுத்தவர் நிலத்தில் உழைப் பது உண்டு. கிராமப்புறப் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தே இருக்கிறது. பெண்களின் உழைப்பை அதிகம் கோருகிற தொழிலாகவும் விவ சாயம் உள்ளது. என்றாலும், பெண்களு க்கு சமவேலைக்கு சமகூலி தரப்படுவது கிடையாது. ’பெண்கள் ஆண்களுக்குச் சமமான மனிதர்கள் இல்லை, ஆண்களை விடத் தாழ்வானவர்கள்’ என்ற ஆணா திக்க சமூகத்தின் பார்வைதான் இந்த பொ ருளாதாரச் சுரண்டலுக்கு அடிப்படையாக இருக்கிறது.  விடிந்ததில் இருந்து இரவு வரை வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்களே  செய்கிறார்கள். அவர்கள் செய்கிற இந்தக் குடும்ப வேலைக்கும் மதிப்பு கிடையாது. ‘உழைத்து ஓடாய் தேய்வதே பெண்களின் கடமை’ என்கிற பார்வை உள்ளது. எனவே, பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலையால், வீட்டு வேலை போக, பெண் கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டா லும், கிராமப்புறங்களில் நடைபெறும் வேறு பணிகளிலும் பங்களித்தாலும், பெண்களு க்கு சமகூலி வழங்கப்படுவதில்லை.

ஆண்களின் குடிப்பழக்கமும், பெண்கள் மீதான கூடுதல் சுமையும்

கிராமப்புறப் பெண்களிடம் நீங்கள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை என்ன வென்று கேட்டால், தங்களுடைய குடும்ப ஆண்களின் குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்படுவதைத் தான் அவர்கள் முதலில் குறிப்பிடுவார் கள். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற  வளர்ச்சிக் காரணிகளில் தமிழ்நாடு முன் னிலை வகித்தாலும், குடிப்பழக்கத்திலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பது தான் சோகமான உண்மை. “குடிப்பழக்கம் என்பது உடல்நலத் திற்கு மட்டும் கேடல்ல; சமூகநலத்திற்கும் கேடு’ என்று மதுபாட்டில் லேபில்களில் ஒட்ட வேண்டும். அந்த அளவிற்குப் பெண்களின் வாழ்க்கையையும், குடும் பங்களையும், சமூகத்தையும் மது சீரழிக் கிறது. கிராமப்புறங்களில் குடும்ப வரு மானம் என்பதே மிகச் சொற்பம் என்ற நிலை. இந்த சூழலில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பொருளாதாரச் சுமை பெண் கள் தலையில்தான் விழுகிறது. வேலை வாய்ப்பு கடினமாகக் குறைந்து, கிட்டத் தட்ட இல்லவே இல்லாத நிலையில், மூன்று வேலை உணவை குடும்பத்தின ருக்கு உறுதி செய்து,

குழந்தைகள் கல்வி, பிற தேவைகள் அனைத்தையும் பெண்கள் தான் கவனிக்க வேண்டியுள்ளது. போதாதக் குறைக்கு குடிப்பழக்கத் தால் ‘ரிப்பேர்’ ஆகும் ஆண்களின் உடல் நிலையைக் கவனிக்க மருத்துவம் பார்க்க வேண்டும். குடிப்பழக்கத்தால் ஏற்படுகிற இருதய நோய், முடக்குவாத நோய், சிறு நீரக நோய்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் கிடைக்கும் சிகிச்சை குறைவு தான். எனவே கைக்காசைப் போட்டு தனி யார் மருத்துவமனையில் சேர்த்து வைத்தி யம் பார்க்கும் சுமையும் பெண்களுக்கு இருக்கிறது. இருக்கிற பொட்டு நகை களை விற்று, அண்டா குண்டா என இருக்கிற அனைத்தையும் அடமானம் வைத்து, கந்துவட்டிக்காரர்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்று குடும்பத்தை நடத்துகிறார்கள் பெண்கள்.  இந்த நுண்நிதி தனியார் நிறுவனங்கள் கடனைத் திரும்பப் பெறு வதற்கு பெண்கள் மீது செலுத்தும் வன்முறை மிகக் கொடூரமானது. கிராமப்புற மக்களுக்கு வங்கியின் கடன் சேவை எட்டாக்கனியாகவே இருக்கிறது. முறையான சிறிய கடன்கள் கிடைக்காத சூழலில், பெண்கள் தனியார் கடன் நிறுவனங்களிடம் சிக்கி வன்கொடுமைகளை அனுபவிப்பது தொடர்கதையாக இருக்கிறது. கந்துவட்டிக் கொடுமை யைத் தடுக்க அரசும், காவல்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் கண்துடைப்பாகவே இருக்கிறது.

அருகி வரும் வேலை வாய்ப்பும்,  பெண்கள் மீதான தாக்கமும்

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு மிகக் கடுமையாகக் குறைந்த நிலையில், இடதுசாரிகள் கொடுத்துவந்த தொடர்ச்சியான அழுத்தத்தினால், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை 2005 ஆம் ஆண்டு ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தில் பெண்கள் குறைந்தபட்சம் 30 சதவிகிதப் பயனாளிகளாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் நூறு நாட்கள் வேலைவாய்ப்பை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்பது திட்டத்தின் இலக்கு. ஆனால் இத்தனை ஆண்டுகளில் ஒரு ஆண்டில் கூட நூறு நாள் வேலை உறுதி செய்யப்பட்டதில்லை. மாநிலத்திற்கு மாநிலம் கூலியில் சிறிய மாறுபாடு உண்டு. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இந்தத் திட்டத்தில் ஒரு நாள் வேலைக்கு 281 ரூபாய் கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  டிஜிட்டல் முறை வருகைப் பதிவு, வங்கிக் கணக்கில் கூலிப் பட்டுவாடா, ஆதார் இணைப்பு என தொழில்நுட்ப ரீதியான துன்புறுத்தல்களை கிராமப்புறப் பெண்கள் அதிகம் சந்திக்கிறார்கள். நாம் வேலைநாட்களை அதிகரிக்க வேண்டும், கூலியை உயர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். ஆனால் ஒன்றிய அரசாங்கமோ, ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கான ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வெட்டிக் கொண்டே வருகிறது. இந்தாண்டு அது ஒதுக்கியுள்ள வெறும் 60 ஆயிரம் கோடி என்ற தொகையை வைத்து, 30 நாட்களுக்குக் கூட வேலை வழங்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. புதிய தாராளமயக் கொள்கைகளை அதி தீவிரமாகச் செயல்படுத்தி, தன்னுடைய கார்ப்பரேட் குரோனிக்களை கொளுக்கச் செய்வதில் மட்டுமே மோடி அரசாங்கத்திற்கு அக்கறை இருக்கிறது. கடன் தள்ளுபடி, வரி குறைப்பு எனப் பல்வேறு  சலுகைகளை கார்ப்பரேட்களுக்கு வழங்குகிற மோடி அரசு, ஏழைமக்க ளை, குறிப்பாக கிராமப்புற ஏழைகளைக் கண்டுகொள்வதே கிடையாது என்பதற்கு சாட்சியாக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை அது மெதுவாகக் கொலைசெய்து வரும் செயல் இருக்கிறது. இதனால் கிராமப்புறப் பெண்கள் மீது கூடுதல் சுமை ஏற்றப்படுகிறது.

பாஜக தொடுக்கும் கலாச்சார ஒடுக்குமுறை

பாஜக ஆட்சியில் மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதுகின்றன. நவீன இந்தியாவின் வர லாற்றிலேயே பெண்கள் மிகக்கடுமையான ஒடுக்குமுறையை சந்திக்கி றார்கள். ஏற்கனவே சாதிய, ஆணாதிக்கக் கட்டமைப்புகள் வேறூன்றி இருக்கிற கிராமப்புறங்களில், பாஜக, சங்பரிவாரங்களின் மனித உரிமை களுக்கு எதிரான பிற்போக்குப் பார்வையால் நிகழும் மாற்றங்களை நாம் கவனிக்க வேண்டும். இந்துத்துவவாதிகள் சாதிப்பற்று மிக்க கிராமப்புற இளைஞர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் சூழலில், கலாச்சார ரீதியாகப் பெண்கள் மென்மேலும் தாழ்த்தப்படும் சூழல் கிராமப்புறங்களில் அதிகரித்துக்கொண்டே போகிறது. ‘கன்னியமான வாழ்க்கை சாமானியர்களுக்கு இல்லை; அதிலும் கிராமப்புற வாசிகளுக்கு இல்லை; குறிப்பாக, கிராமப்புறப் பெண்க ளுக்கு இல்லை; அவர்களில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடிப் பெண்களுக்கு அறவே இல்லை’ என்கிற நிலை மோடி  அரசாங்கத்தில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற இடதுசாரி ஜனநாயக சக்திகள் நாடு முழுவதிலும் உழைக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில், குறிப்பாக பெண்களை உள்ளடக்கி கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.