articles

img

ஒன்றுபட்ட பேரெழுச்சி நமது வெற்றிக்கு வழிகாட்டும்! - விஜூ கிருஷ்ணன்

‘மோதானி’ மாடலும் இடதுசாரி மாடலும்

அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவானது 2017 ஜூன் மாதம் மண்டாசூர் எனுமிடத்தில் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு போராடிய விவசாயிகள் மீது பாஜக அரசாங்கம் துப்பாக்கிச்சூடு நடத்தி ஆறு பேரின் உயிரைப் பறித்த கொடிய சம்பவத்திற்குப் பிறகு அமைக்கப்பட்டது. நாங்கள், கொல்லப்பட்ட அந்த விவசாயிகளின் வீடுகளுக்கு சென்றிருந்தோம். அவர்கள் விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அல்ல; அவர்களது வீடுகளில் பாஜக கொடிதான் பறந்து கொண்டிருந்தது. அவர்கள் உண்மையில் சங் பரிவாரத்தில் தீவிரமாக செயல்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் செய்த தவறு என்ன? ஏன் அவர்கள் துடிதுடிக்க துப்பாக்கிச்சூட்டில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டார்கள்? அவர்கள் பூண்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள். பூண்டு கிலோ ஒன்றுக்கு உற்பத்திச் செலவு 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை ஆகிறது. ஆனால் பாஜக அரசாங்கம் வெறும் 27 ரூபாய்தான் உற்பத்திச் செலவு என்று நிர்ணயிக்கிறது. அரசாங்கம் சொல்வது உண்மையே என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு ஹெக்டேர் பூண்டு விவசாயம் செய்ய விவசாயிகள் 1.5 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ஆனால் நீமச் எனும் நகரில் உள்ள மொத்த விலை மார்க்கெட்டில் உள்ள வணிகர்கள் இந்த விவசாயிகளுக்கு பூண்டு கிலோ ஒன்றிற்கு வெறும் 1 ரூபாய் மட்டுமே விலை வைத்தார்கள். அதே நாளில் ரிலையன்ஸ் பிரெஷ் விற்பனை மையங்களில் பூண்டு ஒரு கிலோ 147 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  தில்லி மார்க்கெட்டில் ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுதான் மோடி, அதானி மற்றும் அம்பானி போன்றவர்களின் கார்ப்பரேட் கொள்ளை மாடல். இந்த மாடலுக்கு ‘மோதானி மாடல்’ என்று பெயர் வைக்கலாம். இதுதான் இந்திய விவசாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 

கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு 16 காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்திருக்கிறது. அதன்படி பூண்டு ஒரு கிலோவிற்கு 139 ரூபாய் அடிப்படை விலை கிடைக்கும். இதுதான் மோடி தலைமையிலான மோதானி மாடலுக்கு பதிலாக நாம் முன்வைக்கும் இடதுசாரி மாடல்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35ஆவது அகில இந்திய மாநாடு கேரளா வில் உள்ள திருச்சூரில் டிசம்பர் 13 முதல் 16 வரை பெரும் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. வர லாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுபட்ட விவசாயிகளின் பேரெ ழுச்சி மாபெரும் வெற்றி பெற்ற பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அந்த பேரெழுச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் செங்கொடியே முன் னின்றது, தலைமை  தாங்கியது. வேறொரு விவசாயி கள் சங்கத்தின் தலைவர் ஒருவர், “தில்லி விவசாயி கள் எழுச்சியின் மூளையாகவும், முதுகெலும்பாகவும் திகழ்ந்தது அகில இந்திய விவசாயிகள் சங்கமே” என்று வர்ணித்தார். அப்படி இதர சங்கங்களைச் சேர்ந்தவர் கள் பாராட்டுவது என்பது பெருமைக்குரிய விசயம். 

1.4 கோடி விவசாயிகள்

இத்தகைய ஒன்றுபட்ட இயக்கம் அளித்த உத்வேகம் காரணமாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை மேலும் 20 லட்சம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கோடியே 40 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கிறார் கள். உலகிலேயே மிகப் பெரிய விவசாயிகள் அமைப் பாக அகில இந்திய விவசாயிகள் சங்கமே மிளிர்கிறது. இந்தியாவில் அந்தமான் - நிகோபார் தீவுகள் உட்பட 26 மாநிலங்களில் கிளைகள் பரப்பி பரந்து விரிந்துள்ள  ஒரே விவசாயிகள் பேரியக்கமாக அகில இந்திய விவசா யிகள் சங்கம் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.

பிர்சா முண்டா நினைவாக...

சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்கு முன்பு இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. கடந்த நவம்பர் 15 அன்று, ஆதிவாசி மக்க ளின் எழுச்சி நாயகனான பிர்சா முண்டாவின் பிறந்த நாள் விழாவை நாடு தழுவிய முறையில் கொண்டாடி னோம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நிலபிரபுத்துவ நிலச்சுவான்தார்களுக்கு எதிராகவும் போராடிய மாபெரும் போராளி அவர். அவரது நினை வாக நாடு முழுவதும் கொடிநாள் கடைப்பிடித்தோம். அன்றைய தினம், மாநாடு நடைபெறவுள்ள திருச்சூரில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் விவசாயிகள் சங்கத்தின் செங்கொடி ஏற்றப்பட்டது. கேரளாவில் 30 ஆயிரம் இடங்களில் விவசாயிகள் சங்க கொடி ஏற்றப் பட்டது. நாடு முழுவதும் 400க்கும் அதிகமான மாவட்டங் களில் லட்சக்கணக்கான கொடிகள் ஏற்றப்பட்டன. 

மூன்று சுடர்ப் பயணங்கள்

தற்போது திருச்சூர் மாநாட்டை நோக்கி மூன்று இடங்களில் இருந்து தியாகிகள் சுடர் பயணம் புறப் படுகின்றன. முதலாவது பயணம் விவசாயிகள் சங்க நிதிச் செயலாளர் பி.கிருஷ்ண பிரசாத் தலைமையில் தெலுங்கானா மாநிலம் கடிவெண்டி கிராமத்திலிருந்து புறப்படுகிறது. தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியின் முதல் தியாகி தொட்டி கொமரய்யாவின் ஊர் அது. தெலுங்கானா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்களின் மகத்தான எழுச்சியின் விளைவாக 4 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் விடுதலை செய்யப் பட்டன; ஜமீன்தார்களின் கைகளில் குவிந்திருந்த நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன; பரந்து விரிந்த பிரதேசம் முழுவதிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு தெலுங்கானா புரட்சி முடிவுகட்டியது.  இரண்டாவது தியாகிகள் சுடர் பயணம், நமது மகத்தான கீழ் வெண்மணி கிராமத்திலிருந்து புறப்படு கிறது. 1968 டிசம்பர் 25 அன்று 44 விவசாயத் தொழிலா ளர்கள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் அரங்கேறிய பூமி இது. பெண்களும், குழந்தைகளும் உட்பட ராமய்யாவின் குடிசையில் தஞ்சமடைந்திருந்தபோது நிலபிரபுக்கள் அந்த குடி சையைக் கொளுத்தினார்கள். இந்த தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காக, நில உரிமைக்காக சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக, உறுதியோடு போராடியவர்கள்; செங்கொடியை எக்காரணம் கொண்டும் கீழே இறக்க முடியாது என்று உரத்து குரல் கொடுத்த மகத்தான தியாகிகள். 

சேலம் சிறைத் தியாகிகள்

தெலுங்கானாவிலிருந்தும் கீழ வெண்மணியிலி ருந்தும் திருச்சூர் நோக்கிச் செல்லும் இந்த தியாகிக ளின் சுடர் பயணங்கள் டிசம்பர் 9 அன்று காலை சேலம் மாநகரை அடைகிறது.  சேலம் சிறைச்சாலையில் 1950 பிப்ரவரி 11 அன்று அந்த பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. 22 விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் தோழர்கள் உயிர்ப்பலி ஆனார்கள். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் கள். எஞ்சிய 19 பேர் கண்ணூரையும் கோழிக்கோட்டை யும் சேர்ந்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் நிலப் பிரபுக் களின் அட்டூழியங்களுக்கு எதிராக வர்க்க போராட்டக் களத்தில் துணிவுடன் நின்ற இருபெரும் இயக்கங்கள் அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் ஆகும். நிலப்பிரபுத்து வத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை ஒடுக்க முயற்சித்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கம், அன்றை க்கு ஒன்றுபட்ட பிரதேசமாக இருந்த சென்னை மாகா ணத்தின் (மதராஸ் மாகாணம்) மலபார் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தலைவர்களையும், தோழர்களையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தது. அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டி ருந்தது. சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதி களை ஆட்சியாளர்கள் திருடர்களைப் போலவும், கிரிமினல் குற்றவாளிகளைப் போலவும் நடத்தி னார்கள். கிரிமினல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவர்களுக்கு கருப்புத் தொப்பி அணிவிப்பது அங்கு வழக்கம். அதே போன்ற கருப்புத் தொப்பிகளை, அரசியல் கைதிகளாக கொண்டு வரப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கும் சிறைக் காவலர்கள் அணிவித்து இழிவுபடுத்தினர். கடு மையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கினர். இதற்கு எதிராக சிறைக்குள் போராட்டம் வெடித்தது. ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட நாளில் சேலம் சிறையில் தோழர்கள் கொடுமைகளுக்கு எதி ராக மனு அளித்து முறையீடு செய்தனர். ஆனால் கொடுமைகள் அதிகரித்தன. இந்த நிலையில் துணைச் சிறை அதிகாரியின் தலை மையில் சிறைக்குள் அதிக எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் அரசியல் கைதிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அவர் கள் அளித்த புகார் மனுவை வாபஸ் பெறுமாறு நிர்ப் பந்திக்கப்பட்டனர். அதை ஏற்க மறுத்ததால், காக்கை குருவிகளை சுடுவதைப் போல 22 தோழர்களை சுட்டுப் படுகொலை செய்தனர். தோழர்கள் சி.கண்ணன், கந்தலோட்டு குஞ்ஞம்பு மற்றும் எம்.கணாரன் ஆகி யோர் காயமடைந்தனர். 17 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர். 5 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும், காவல் துறையால் தாக்கப்பட்டும் உயிரிழந்தனர்.  நமது உரிமைகளுக்காக தங்களது இன்னுயி ரைத் தியாகம் செய்த இவர்கள் உட்பட ஆயிரக்க ணக்கான தியாகிகளை நினைவு கூர்ந்து இந்த மூன்று சுடர்களும் பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து டிசம்பர் 10 அன்று மதியம் கேரளா சென்றடைகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். 35 தடகள வீரர்கள் இந்த சுடர்களை ஏந்தியவாறு டிசம்பர் 12 மாலை திருச்சூரை அடைகிறார்கள்.  தெலுங்கானாவிலிருந்து புறப்படும் தியாகச் சுடர் பயணம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மூத்த துணை தலைவரான சரம்பள்ளி மல்லா ரெட்டி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கீழ வெண்மணி தியாகிகள் சுடர் பயணத்தை காணொலி வாயிலாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் துவக்கி வைத்துள்ளார். 

4 லட்சம் விவசாயி -  தொழிலாளி தற்கொலை

விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு, இந்திய நாட்டின் விவசாயிகளும், தொழிலாளர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக மோச மான தாக்குதல்களைச் சந்தித்து வரும் சூழலில் நடை பெறுகிறது. கடந்த எட்டு ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி யில் 4 லட்சம் விவசாயிகளும் தினக்கூலி தொழிலாளர்க ளும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக ஆகும் என்று மோடி விவசாயிகளுக்கு வாக்குறுதி கொடுத்தார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவு டன் கூடுதலாக 50 சதவீதம் வைத்து ஒன்றரை மடங்கு  விலையை குறைந்தபட்ச ஆதார விலையாக (MSP) நிர்ணயிக்கப்படும் என்று மோடி சொன்னார். கிராமப் புற வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலை யும், கூடுதல் ஊதியமும் வழங்குவோம்; விதைகளும், உரங்களும் மானிய விலையில் தருவோம்; குறைந்த வட்டிக்கு கடன் கொடுப்போம்; பயிர்க் காப்பீடு, அனை த்து நிலங்களுக்கும் பாசன வசதி செய்வோம்; ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை தருவோம்; விலை வாசியை குறைப்போம் எனவும் மோடி வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் அத்தனை வாக்குறுதிகளும் பொய்த்துப் போயின. இந்திய விவசாயிகளுக்கு மோடி துரோகம் செய்து விட்டார்.  ‘சவ வாகினி’ கங்கை கோவிட் பெருந்தொற்று பரவிய காலத்தில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜனும் உணவும் கொடுப்ப தற்கு பதிலாக மதரீதியாக பிளவுபடுத்துவதற்கு இந்த ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். ஆக்சிஜன் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். கோவிட்டால் மரணமடைந்து அந்த உடல்கள் தூக்கி வீசப்பட்டதால் கங்கை நதி லட்சக்கணக்கான உடல்க ளை சுமந்து திரிகிறது என்று பரூர் கக்கர் என்ற கவிஞர் எழுதினார். கங்கை நதி ஒரு சவ வாகினியாக (இறந்த உடல்களை சுமக்கும் வாகனமாக) மாறி விட்டது என்று அவர் தனது கவிதையில் குமுறினார்.

20 கோடிக் கும் மேலான வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டன. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வருமா னம் இழந்தார்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவி யும் கிடைக்கப் பெறாமல் பல லட்சக்கணக்கான மக்கள் பல நூறு கிலோமீட்டர் தூரம் சொந்த ஊர்களுக்கு  நடந்தே சென்ற துயரக் காட்சிகளை இந்த நாடே பார்த்தது.  ஒன்றுபட்ட இயக்கத்தின்  முதல் வெற்றி கடந்த எட்டாண்டு காலத்தில் இந்தக் கொடுமை களுக்கு எதிராக செங்கொடி இயக்கம் பல பிரம் மாண்டமான போராட்டக் களங்களை உருவாக்கியி ருக்கிறது. மோடி அரசு அராஜகமான முறையில் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மீனவர் சமூகங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து ‘நிலம் எங்கள் உரிமை’ என்ற முழக்கத் துடன் மாபெரும் போராட்டக் களத்தில் இறங்கின. நில உரிமையும், வன உரிமையும் முதன்மையானவை என்றும் இந்த உரிமையை பறிக்கும் கார்ப்பரேட்க ளுக்கு எதிராகவும் இந்த போராட்டம் பெரும் எழுச்சியு டன் நடந்தது. இந்தப் போராட்டம் மோடி அரசுக்கு முதல் தோல்வியை பரிசளித்தது. ஒன்றுபட்ட இயக்கத்தின் முதல் வெற்றியை விவசாயிகள் இயக்கம் கைப் பற்றியது. 

மகாராஷ்டிராவில் செங்கொடியின் கீழ் பல்லாயி ரக்கணக்கான விவசாயிகளும், ஆதிவாசிகளும் மாபெரும் நெடும் பயணத்தை நடத்தினார்கள். மார்ச் 2018இல் நாசிக் முதல் மும்பை வரை நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான நடைபயணம் நாடு முழுவதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. கொப்பளங்களுடன் நடந்த ரத்தம் தோய்ந்த கால்கள், மகாராஷ்டிரா பாஜக அர சாங்கத்தை மண்டியிடச் செய்தது; கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்கச் செய்தது.  ராஜஸ்தான், கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் சங்கம் தனித்தும், சிஐடியு மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்தும் எண்ணற்ற போராட்டங்க ளை நடத்தியுள்ளது. 2018இல் மகாராஷ்டிராவில் நடை பெற்ற விவசாயிகளின் நெடும் பயணம் ஏற்படுத்திய உத்வேகத்தைத் தொடர்ந்து 2018 ஆகஸ்ட்டில் நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தினோம். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றார்கள். 2018 செப்டம்பர் 4 அன்று நாடாளுமன்றம் நோக்கி நடைபெற்ற பேரணி யில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் பங்கேற்றார்கள்.

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு

முன்னதாக 2017இல் பிரச்சனைகளின் அடிப்படை யில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்து அகில இந்திய விவசா யிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப் பட்டது. 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இந்த அமைப்பின் கீழ் ஒன்றுபட்டன. இரண்டு முக்கிய கோரிக்கைகளை இந்த ஒருங்கிணைப்புக் குழு முன் வைத்தது. ஒன்று, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு அளவிற்கு நியாய மான குறைந்தபட்ச ஆதார விலை; மற்றொன்று, கடன் வலையிலிருந்து விவசாயிகளுக்கு விடுதலை. இந்தக் கோரிக்கைகளுக்காக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாடாளுமன்ற முற்றுகை மற்றும் விவசாயி கள் நாடாளுமன்றம் போன்ற பெரிய இயக்கங்கள் நடை பெற்றன. விவசாயிகள் நாடாளுமன்றம், மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும் முன்னிறுத்தி சட்டங்க ளை வீதிகளில் நிறைவேற்றியது. அந்த சட்டங்கள், நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாக்களாகவும் முன்மொழியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  இருபெரும் வர்க்கங்களான விவசாயிகளும், தொழி லாளர்களும்தான் இந்த நாட்டின் செல்வங்களையும், உபரி மதிப்பையும் உற்பத்தி செய்திருக்கிறார்கள். அந்த செல்வ வளங்களை பறிமுதல் செய்து பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது மோடி அரசு. இதற்கு எதிராக ஒன்றுபட்ட பேரெழுச்சிகளின் மகத்தான வெற்றிகள் நமக்கு வழி காட்டுகின்றன. அதற்கு உந்து சக்தியாக தெலுங்கானா, கீழ வெண்மணி, சேலம் சிறை தியாகிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தியாகிகளின் தியாகங்கள் நமக்கு வழி காட்டும். 

கட்டுரையாளர் : இணை செயலாளர்,  அகில இந்திய விவசாயிகள் சங்கம்