articles

img

சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படைக் காரணிகள்-பேரா. சதீஷ்தேஷ் பாண்டே

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடத்தி முடிக்கப் பட்ட சாதிவாரி கணக்கெடுப்புகளின் தரவுகளை பயன்படுத்தி ஒரு புதிய வகை சமூக அரசியல் நிகழ்ச்சிகளை துவக்கும் வாய்ப்பு ஆளும் கூட்டணிக்கு கிடைத்துள்ளது.

சமூக நீதிக்கான பாதையில் ஒன்றிய அரசை விடவும் பிற மாநிலங்களை காட்டிலும் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை பீகார் அரசு முன்னெடுத்துள்ளது. மக்கள் தொகை  கணக்கெடுப்பு மற்றும் பல்வேறு சாதிக் குழுக்களுடன் தொடர்புடைய மக்கள் தொகை யின் எண்ணிக்கையை பொதுவெளியில் அறியத் தந்தது. அதைவிட முக்கியமான சாதி களின் பரந்த சமூக பொருளாதார நிலையை நமக்கு தெரிவிக்கும் கூடுதல் தரவுகளை இப்போது அனைவருக்கும் வெளிப்படுத்தி உள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம்- ஐக்கிய ஜனதா தள கூட்டணி அரசு,சமூக நீதி நிகழ்ச்சிகளுக்கு புத்துயிர் அளிக்க இந்த நல்வாய்ப்பை பயன் படுத்த முனைப்பு காட்ட வேண்டும். இதுவரை அறிவிக்கப்பட்ட நடவடிக்கையான , அதாவது 65சதவீத அளவிற்கு இட ஒதுக்கீட்டை விரிவாக்கம் செய்வது என்பது  மட்டுமே போதுமானதல்ல.

தற்போதைய சமூக பொருளாதாரச் சூழ லில் ஒரு புதிய சமூக நிகழ்ச்சி நிரலுக்கான நட வடிக்கைகள் நான்கு முக்கிய பரிமாணங்களை கொண்டதாக இருக்கும்:

1. கண்ணியமான வேலையை வழங்குவது

புதிய தாராளமயக் கொள்கைகள் மாநிலங் களின் சமூக நலன் காக்கும் திறமைகளை கட்டுப் படுத்துகின்ற  அதே வேளையில் சந்தையை செயல்படுத்தும் நாடுகளாக  நிலை நிறுத்தும் வகையில் உலகப் பொருளாதாரச் சூழல் நிலவு கிறது. 40 ஆண்டுகளாக சந்தைக்கு ஏற்ற  கொள்கைகள் அமலாக்கப்பட்டதில் பொரு ளாதாரத்தின் முறை சார்ந்த (Formal Sector)துறைகளில் 8 சதவீதத்திற்கும் குறைவான வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு விளிம்பு நிலை வாழ்வினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு முறையாக இருந்தாலும் சமூகத்தில் நீடிக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கான வாய்ப்பையும் அதற்குரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு வகைப்படுத்தும் கண்ணியமான வேலை என்பதை பரந்த வெகுஜன மக்களுக்கு வழங்கும் புதிய வழிமுறைகளை கற்பனை செய்வது சவால் நிறைந்தது மட்டுமல்ல. மிகக் கடினமானதாகவும் இன்றைய சூழல் மாற்றி இருக்கிறது.

2. தனிநபர் வழிபாடு மற்றும் ஆளுமை

உலகின் பல நாடுகளைப் போலவே இந்தியா விலும் தனி மனிதனை புகழ் பாடும் ஒரு ஆளுமை வழிபாட்டு முறையை மையமாகக் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சி வந்துள்ளது. நமது குடியரசின் வரலாற்றில் முன்பு எப்பொழு தும் இல்லாத வகையில் இந்திய அரசின் வடிவத்தையும் அதன் தன்மையையும் மாற்ற இந்த ஆட்சியில் மேலாதிக்க சக்தி முயல்கிறது என்பதும் மிக முக்கிய அம்சம்.

மாநிலங்களின் அரசியல் அமைப்பு, நிறு வனங்கள் தனித்தன்மை வாய்ந்த செயல்முறை, மேற்பார்வை வழிமுறைகள் ஆகியவையும் அரசாங்கம், கட்சி மற்றும் தனிப்பட்ட தலைவர் - மூன்றிற்கும் இடையே உள்ள வேறுபாடு, இந்திய அரசின் அடிப்படை கூட்டாட்சி அமைப்பு போன்றவை மாற்றி அமைக்கப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அடைந்துள்ள  பாதிப்புகளில் இருந்து அதனை மீட்டுக் கொண்டு வருவது கடின மாக மாறி உள்ளது.

3. ஒரு கருத்தியல் மேலாதிக்கம்!
இன்றைய நமது சமூகம் மற்றும் அரசியலை பாதிக்கின்ற இந்துத்துவா என்ற போர்வையில் வருகை புரிந்துள்ள வட இந்திய உயர் சாதி மேலாதிக்க மற்றும் ஆக்கிரமிப்பு சக்தி, சாதி பரிமாணத்துடன் நேரடியாக தொடர்புடையது மட்டுமல்ல. ஆபத்தும் ஏற்படுத்தக் கூடியது மாகும். இந்த மேலாதிக்கம் புதியதல்ல, சுதந்திரத் திற்கு பிறகு குறிப்பாக 1990களில் ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு இது நிரந்தர  அச்சுறுத்த லாக மாறிவிட்டது.

உயர் சாதி ஆதிக்கம் இருந்தாலும் கூட சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மையை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அதே நேரத்தில் அதனை உணர்த்துமாறு நேரு சகாப்தத்திலும் அதற்கு பின்னும் ஆட்சி நடை பெற்றது. ஆனால் இன்றைய மோடி காலத்தின் பாதிப்பு இந்த இரண்டு விஷயத்தில் நேர் எதிர் மாறாக இருக்கிறது.ஒரு தேசம்,ஒரு தலைவர், ஒரு மதம் மட்டுமே இருக்க வேண்டும். அது  இந்து மதம் மட்டும் தான்.இந்தியராக இருப்ப தற்கு இது மட்டுமே பொருத்தமானது என்பதை வன்முறை நிறைந்த, மதச்சார்புடைய, குழு - கூட்டுக் களவாணி முதலாளித்துவ (Crony Capitalism) ஆதிக்கம் வடிவமைத்து தந்திருக்கிறது. இந்து மதத்தின் சாதியப் படி நிலைகள் உயர் சாதியினரால் வடிவமைக்கப் பட்ட ஒரு பெரிய இந்து அடையாளமாக கட்ட மைக்கப்பட்டுவிட்டது. மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது வெறுப்புணர்வை உரு வாக்கும் வகையிலும் இது வரையறுக்கப் பட்டுள்ளது.

4. நான்காவது பரிமாணம்

சமூக நீதியின் பார்வையில் இது மிகவும் சவா லானது. இப்போதுள்ள ஒவ்வொரு பெரிய சாதிக் குழுவின் மறுக்க முடியாத அம்சமாக உள்ள வேறுபாடுகளுடனும்  தொடர்புடையது. ஒவ்வொரு சாதிக் குழுவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகள் உள்ளன. இந்த வெவ்வேறு வகுப் பினரின் நலனும்  ஒரு குறிப்பிட்ட சாதி அரசி யலுடன் எளிதில் இசைவாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி அரசியல் மென் மேலும் கூட்டணியாக மாற வேண்டும். மற்றும் பல சாதிகளில் உள்ள ஒரே தன்மையுடைய வர்க்கப் பிரிவினர்களுக்கு தீர்வு காண்பவை யாகவும் தேர்தலில் களம் அமைவதை சாத்தி யமாக்க  வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இது சாதிகளுக்குள் ஒரு வர்க்க துருவ முனைப்பை தூண்டுவதால் கற்பனை செய்ய முடியாத விளைவுகளை உண்டாக்கும். சமச்சீரற்ற தன்மையையும்  ஏற்படுத்தும்.

உயர் சாதி அரசியலுக்கு அதிலுள்ள ஏழை களின் பிரச்சனைகளை கையாளுவது, தாழ்ந்த சாதி அரசியலுக்கு அதிலுள்ள பணக்காரர் களின் பிரச்சனையை கையாள்வதை விட  எளியது. முந்தையது ஜனநாயக நடைமுறை களோடு ஒத்துப் போனாலும்.  பிந்தையது அந்த நீரோட்டத்திற்கு எதிரானது.

பீகாரில் ஆளும் கூட்டணி அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில் நிற்கிறது.நம் நிகழ் காலத்தின் பல்வேறு பரிமாணங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு புதிய வகை சாதிய அரசியலை அது துவக்கி வைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. ஆனால் இதை செய்வதற்கு முன்னால் கடந்த கால பழக்கங் களையும் அது உடைத்தெறிய வேண்டும். அதே நேரத்தில் சமூகநீதி நிகழ்ச்சி நிரலின் மைய மான அம்சங்களையும் அது தொடர்ந்து பாது காக்க வேண்டும். சாதி அரசியலை இனி சமூக நீதி அரசியலுடன் தானாகச் சமன்படுத்திட முடியாது (கடந்த காலத்தில் இது இப்படித்தான் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்).

அப்படி அது ஒருவேளை தவறாக கருதப்பட்டிருந்தால் மேலாதிக்க உயர் சாதி  கருத்தியலால் தூண்டப்பட்டதாகவே இருந்திருக்கும்.

அது தவறான அங்கீகாரமும் ஆகும். சாதி அரசியல் என்பது கீழ் சாதி அரசியலை குறிப்பதாக கருதியதும் அப்படித்தான். இரண்டு விளைவுகள் இதில் ஏற்பட்டன.ஒன்று உயர்சாதி அரசியலை கண்ணுக்குப் புலப்படாமல் செய்தது, இரண்டு கீழ் சாதி அரசியலை விமர்சன ஆய்வுகளுக்கு உட்படுத்தாதவாறு பார்த்துக் கொள்வது.

மாநில உரிமைகளுக்காகப் போராடுவது!

மறுபுறம் தாழ்த்தப்பட்ட சாதியினரின் அரசியல் அது சமூக நீதிக்காகப் போராடாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலனுக்காக போராடி னாலும் தற்போதைய அரசியல் வெளியில் புதிய அவதாரமான இந்துத்துவ அரசியலுக்கு ஒரு பயனுள்ள எதிர்வினையாகக் கூட அதை கருத முடியும். இந்தியா முழுவதும் இந்துத்துவா அரசியலின் வெற்றி பயணத்தைத்  தடுத்து நிறுத்துவதன் மூலம் பீகார் ஏற்கனவே ஓரளவு அந்த பணியினை ஆற்றி வருகிறது. சமீப காலங்களில் கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியாவின் கூட்டாட்சி மாண்புகள் அரிக்கப்படுவதை தடுக்கும் பணியையும் அது  செய்துள்ளது. சாதிக் கணக்கெடுப்பை நடத்துவது என்பது உள்ளூர் மட்டங்களில் கொள்கைகளை வடிவமைக்க உதவும். மாநிலங்களின் உரிமையை வலி யுறுத்துவதுமாகும்.

ஒரு தேசம் என்ற அளவில் நம் அனை வருடைய எதிர்காலத்தையும் ஆழமாகப் பாதிக்கும் கேள்விகளையும் இந்த கணக் கெடுப்பு எழுப்புகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுக்கப்பட்ட எண்ணிக்கை குறைத்தது. அதிகமான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு சலுகை அளிக்கிறது. வேறு  வகையில் கூறினால், பெரும்பான்மை வாதத் திற்கு வித்திடுகிறது. அத்தகைய பெரும்பான்மை யினர் ஆளும் தேர்தல் முறையின் பின்னணி யில் சாதிகள் போன்ற அடையாளங்களை கணக்கிடுவது எதற்காக? நம்முடைய அரசியல் பிரதிநிதிகள் நம்மைப் பிரதிபலிக்கின்றார்களா? நம் சார்பில் சிறப்பாகச் செயல்படுகிறார்களா? என்பதை மதிப்பிடவும் இது பயன்பட வேண்டும். பீகார் மாநிலத்தின் முயற்சிகள் நமக்கு அந்த நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது

தி இந்து 15/11/23
- தமிழில்: கடலூர் சுகுமாரன்