articles

img

டிரம்ப் வரி அதிகரிப்பும் சர்வதேச வர்த்தக ஒழுங்கு முறிவும் - கே.என். ஹரிலால்

டிரம்ப் வரி அதிகரிப்பும் சர்வதேச வர்த்தக ஒழுங்கு முறிவும்

சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு பல தரப்பு கொள்கையின் இலட்சியத்திலிருந்து வேகமாக விலகிக் கொண்டிருக்கிறது. டிரம்பின் வரி அதிகரிப்பு கொள்கை உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிமுறைகளை பல வழிகளில் மீறியுள்ளது.   உலக வர்த்தக அமைப்பின் சரிவும் டிரம்ப்பின் தாக்கமும் உலக வர்த்தக அமைப்பின் மையக் கொள்கை பாரபட்சமின்மை ஆகும். மோஸ்ட் ஃபேவர்டு நேஷன் (MFN) கொள்கையின்படி, ஒவ்வொரு உலக வர்த்தக அமைப்பு உறுப்பின ருக்கும் மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான மதிப்பு அளிக்க வேண்டும். ஆனால் டிரம்ப், அமெரிக்கா ஒவ்வொரு வர்த்தக கூட்டாளியுடனும் வெவ்வேறு வரிக் கொள்கையை கொண்டிருக்க விரும்புகிறார்.  உலக வர்த்தக அமைப்பு அரசாங்கங்களின் எல்லை நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால் வர்த்தகத்தையும் போட்டியையும் சிதைக்கும் பெரிய உலகளாவிய நிறுவனங்களின் வளர்ந்துவரும் செல்வாக்கை கணக்கில் கொள்ள மறுக்கிறது; அதனால் எழும் பிரச்சனைகளை முற்றிலும் புறக்கணிக்கிறது. உலகளாவிய மதிப்பு கொண்ட உற்பத்தி மற்றும் சப்ளை சங்கிலிகளில் முன்னணி நிறுவனங்கள் விதிகளை உருவாக்குகின்றன, இது வர்த்தக ஆளுமையை, முற்றாக கார்ப்பரேட் மயமாக்குவதற்கு சமம்.   இந்தியாவின் வர்த்தக உத்தி உலக வர்த்தக அமைப்பு மேற்கூறிய விதத்தில் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது;அதை, இந்தியா தனக்கு  சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.  இந்தியாவுக்கு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு வரவேண்டும் என்ற அபரிமிதமான தேவை உள்ளது. நாட்டில் ஏராளமாக உள்ள உபரி தொழிலாளர்களையும், உள்நாட்டு சந்தையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். வர்த்தக ஒப்பந்தங்களில், வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பதை முன்னுரிமையாக கருத வேண்டும். வேளாண்மை துறையின் பாதுகாப்பு அவசியம் - உணவுப் பாதுகாப்பையும், மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேரின் வாழ்வாதாரத்தையும் சமரசம் செய்ய முடியாது. இதை மனதிற்கொண்டு, ஒப்பந்தங்கள் போடலாம். உலகளாவிய உற்பத்திப் பொருட்கள் வழங்கல் சங்கிலிகளை மறுகட்டமைக்கும் சூழலில், இந்தியா தற்போதுள்ள சங்கிலிகளுக்கு மாற்றுகளை உருவாக்குவதில் ஆற்றல்மிக்க பங்கு வகிக்க முடியும்; அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். அரசின் பங்குதான் வளர்ச்சியை உறுதி செய்யும் சீனா மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (OECD) நாடுகளின் அனுபவம் காட்டுவது என்னவென்றால், வர்த்தகத்தில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது தான். எல்லாவற்றையும் சந்தைக்கு விட்டுவிடு வது அனைத்து பங்கேற்பாளர்களின் நலனை யும் அதிகபட்சமாக்கும் என்று நம்புவது யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் தேசிய அரசுகளின் ஆதரவுப் பங்கைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் அரசுப் பங்கேற்பின்  விரிவாக்கம் அவசியம். அடிப்படை உள்கட்டமைப்பு முதலீடு: சீனாவின் “பெல்ட் ஆண்ட் ரோடு” போன்ற திட்டங்கள் போக்குவரத்து செலவுகளைக் குறைத்து நிறுவனங்களின் போட்டித்திறனை அதி கரிக்கின்றன. இந்தியாவில் சாலைகள் மற்றும் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான சமீபத்திய சில திட்டங்களை, சாதகமானவையாக குறிப்பிடலாம். மாற்று விலை மேலாண்மை: போட்டி மாற்று விலையை பராமரிப்பது முக்கியம். சீனா நீடித்த வர்த்தக உபரி மற்றும் அந்நிய நேரடி முதலீடு (FDI) வரவுகள் இருந்தபோதிலும் தங்கள் நாணயம் (யுவான்) அதிக மதிப்பேற அனுமதிக்கவில்லை. ஆனால் இந்தியாவில் ஊக வெளிநாட்டு முதலீட்டாளர் வரவுகள் மீதான சார்பு அன்னிய செலாவணி சந்தையை நிச்சயமற்றதாக ஆக்குகிறது. எரிசக்தி விலைக் கொள்கை: எரிசக்தி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அரசு தனது வருவாய் திரட்டலின் எளிய ஆதாரமாக கருதுவது ஏற்றுமதி வளர்ச்சியில் தடையாக உள்ளது. எரிசக்தி - ஆற்றல் ஒரு உலகளாவிய உள்ளீடு; இந்தியா போட்டியாளர்களுடன் ஒப்பி டும்போது எரிபொருள் விலைகளைத் தொடர்ந்து மிக அதிகமாக வைத்திருக்க முடியாது. மனித வள மேம்பாடு: மக்கள்தொகை வளர்ச்சியின் பலன்களை அறுவடை செய்வது உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும்  மனித வளங்களில் பொது முதலீட்டை பெரிதும் சார்ந்துள்ளது. இதில் இந்தியாவுக்கும் சீனா வுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. நகர்ப்புற மேம்பாடு : இந்தியாவின் நிதி பழமைவாதத்தின் குறிப்பிடத்தக்க பாதிப்பை அடைந்திருப்பது அதன் நகரங்கள். நகரங்கள் நாட்டின் வளர்ச்சியின் இயந்திரங்களாக இருக்க  வேண்டும். நகர்ப்புற உள்ளூர் அரசாங்கங் களின் வரி விதிக்கும் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. ஜிஎஸ்டி அறிமுகம் உள்ளூர் அரசாங்கங்களின் வரி வருவாயையும் வறண்ட தாக்கியுள்ளது.  சீனா - இந்தியா:  வேறுபட்ட பாதைகள் சீனாவின் அரசு இயந்திரம் நாட்டை “உலகின் பட்டறையாக” மாற்றியது. நீடித்த வர்த்தக உபரி மற்றும் அந்நிய நேரடி முதலீடு (FDI) வரவுகள் இருந்தபோதிலும் அவர்கள் தங்கள் நாணயம் அதிக மதிப்பேற அனுமதிக்கவில்லை. இது சீன ஏற்றுமதியாளர்களுக்கு போட்டி நன்மையை வழங்கியுள்ளது. 2024இல் சீனாவின் வர்த்தக உபரி ரூ.8,31,500 கோடியை எட்டியது - வரலாற்றில் மிக உயர்ந்த நிலை இது. இதற்கு மாறாக, இந்தியாவில் 1980களில் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாகத்  தொடங்கியதில் இருந்து அரசின் பங்களிப்பு நிலையாக உள்ளது. ஆனால், பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஇசிடி) நாடுகளில், அரசின் பங்களிப்பு, அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) யை விட 50% வரை பெரியது. அவர்களில், தனியார் துறையை விட  அரசுத்துறைவேகமாக வளர்ந்தது. அரசாங்க முதலீடு தனியார் வணிகத்தை வெளியேற்றுவது பற்றி புகார்கள் வரவில்லை. மாறாக, அரசுகளின் பெரிய செலவு, தனியார் துறைக்கு செலவுகளைக் குறைத்து போட்டித்திறனை அதிகரிக்க உதவுகிறது. ஊக முதலீட்டு சார்பு ஏற்றுமதியாளர்களுக்குத்தான் நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது.  உடனடி நடவடிக்கை தேவை எனவே, இத்தகைய பின்னணியில், இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1. வேலைவாய்ப்பு தாக்கங்களை ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் முன்னுரிமை வைத்தல் 2. மதிப்புச் சங்கிலி நிர்வாகத்துக்கான தனி பணியகம் அமைத்தல் 3. நிதி பழமைவாதத்தை கைவிட்டு அரசின் பங்கேற்பை அதிகரித்தல். 4. அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் மனித வள மேம்பாட்டில் பெரிய அளவு முதலீடு 5. நகர்ப்புற நிதி அமைப்பு சீர்திருத்தம் 6. போட்டி மாற்று விலை மற்றும் எரிசக்தி கொள்கை தேவை.  கடைசி ஆணி இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச வர்த்தக அமைப்பு சரிந்துவிட்டது.  டிரம்ப் விதித்துள்ள வரிகள் அந்த சவப்பெட்டியில் கடைசி ஆணியாக மாறலாம். இந்த உலகளாவிய மறுசீரமைப்பின் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா தனது பங்கை மறுவரையறை செய்ய வேண்டும்.  சீனா மற்றும் ஓஇசிடி (OECD) நாடுகளின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, அரசு முன்முயற்சியான பங்கு வகிக்க வேண்டும். அடிப்படை உள்கட்டமைப்பு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு, பொது சுகா தாரம் போன்றவற்றில் பெரிய அளவில் முதலீடு களைச் செய்வதன் மூலம் இந்திய தொழில் முனைவோர்களுக்கு சமமான வர்த்தகக் களத்தை  உத்தரவாதம் அளிக்க முடியும். இந்த உலகளாவிய மறுசீரமைப்பின் தருணத்தில், இந்தியா தனது பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்தி, மக்கள் நலனை முன்னிறுத்தி, நிலையான மற்றும் சமத்துவமான வளர்ச்சியை நோக்கிய புதிய பாதையை அமைக்க முடியும். இதற்கு தேவை அரசியல் பொருளாதார உறுதி கொண்ட அரசு, தெளிவான தொலைநோக்கு மற்றும் மக்கள் சார்ந்த கொள்கைகள் மட்டுமே.