articles

 ஜூன் 12-இல்  மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறப்பு

 ஜூன் 12-இல்  மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறப்பு

சென்னை, ஏப். 25 - தமிழக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 9.30 மணிக்கு கூடியதும், அதிமுக உறுப்பினர் காமராஜ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.  “மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குள்ளாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் எனவும், நடப்பு ஆண்டில் கால்வாய்கள், வடிகால்கள் என 822 தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது” என்றும் கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வடிகால் மற்றும் ஆறுகளில் மணல் திட்டு ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்காக சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றும் கூறினார். மேலும், “98 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு டெல்டா மாவட்டத்திற்கும் தனியாக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துத் தூர்வாரும் பணிகளும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும்; பாசனத்திற்காக ஜூன் 12 ஆம்  தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.