articles

குதிரையை வளைத்துப் பிடிக்கிறது குயுக்தி பாஜக! எஸ்.பி.ராஜேந்திரன்

குதிரையை வளைத்துப் பிடிக்கிறது குயுக்தி பாஜக!

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நடைபெறும் தந்தை-மகன் மோதல் வெறும் குடும்பச் சண்டை அல்ல. இது, இந்திய அரசியலில் பிராந்திய கட்சிகளை திட்டமிட்டு உடைத்து விழுங்கி வரும் பாஜக உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. 1பாஜகவின் நுட்பமான  அரசியல் சூழ்ச்சி பிராந்திய கட்சிகளை உடைக்கும் பாஜகவின் உத்தி நான்கு நிலைகளில் செயல்படுகிறது. முதலில், கட்சிக்குள் ஏற்கனவே இருக்கும் முரண்பாடுகளை கூர்மைப் படுத்துதல். இரண்டாவது, இளைய தலைவர்களுக்கு அதி காரம் மற்றும் பதவிகளை வாக்குறுதி அளித்தல். மூன்றா வது, வெளிப்புற அழுத்தங்களை - நிதி, ஊடகம், அமலாக்க அமைப்புகள் - பயன்படுத்துதல். நான்காவது, விரும்பிய தலைவர்களை தங்கள் கட்சியில் உள்வாங்குதல். இந்த முறையை மகாராஷ்டிராவில் சிவசேனா, அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், கர்நாடகாவில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றின் மீது ‘வெற்றிகரமாக’ பயன்படுத்தியுள்ளனர். மகாராஷ்டிரா பாடம்: சிவசேனாவின் சோகம் பால் தாக்கரே நிறுவிய சிவசேனா துவக்கம் முதலே பாஜக வின் கூட்டாளியாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் பதவி விவகாரத்தில் உத்தவ் தாக்கரே பாஜகவுடன் முரண்பட்ட போது, ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சர் பதவி வாக்குறு தியுடன் கிளர்ச்சி செய்ய தூண்டியது பாஜக. 2022ல் 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஷிண்டே பிரிந்து சென்றார். இதன் பலன் : பாஜக கட்டுப்பாட்டில் மகாராஷ்டிரா அரசு. அருணாச்சல அதிசயம்:  43/44 எம்.எல்.ஏ.க்கள் மாற்றம் 2016இல் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி யில் இருந்தது. ஆனால் 2017க்குள் 44 எம்.எல்.ஏ.க்களில் 43 பேர் பாஜகவில் சேர்ந்துவிட்டார்கள். எப்படி? சி.பி.ஐ. வழக்குகள் திடீரென்று ரத்து, புதிய ஒப்பந்தங்கள், அமைச்சர் பதவிகள் என்ற பேரங்களில் அங்கு காங்கிரஸ் ஒரே நாளில் கரைந்துபோனது. இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் பாமகவின் தற்போதைய நெருக்கடியை நோக்க வேண்டும். 2 பாமகவில் பாஜகவின் சூழ்ச்சி - அறிகுறிகளும் சான்றுகளும் டாக்டர் ராமதாஸ் மே 29 அன்று வெளியிட்ட வாக்குமூலம் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “அன்புமணியும் சௌமியாவும் என் கால்களைப் பிடித்து ஒரு மணி நேரம் அழுதார்கள். பாஜக கூட்டணியில் சேரவேண்டும் என்று கெஞ்சினார்கள். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினர்” என்ற அவரது வெளிப்பாடு குடும்ப அரசியலின் அடிப்படை முரண்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. ஆனால் இதில் கவனிக்கத்தக்க விஷயம், அன்புமணி யின் தீவிர பாஜக சார்பு மனோபாவம். 2024 தேர்தலில் பாமக மோசமாக தோற்றபோதும் - 10 இடங்களில் போட்டி யிட்டு 1 இடத்தை மட்டும் வென்று 4.33% வாக்குப் பங்கு மட்டுமே பெற்றபோதும் - அவர் பாஜக கூட்டணியைத் தொடர விரும்பியது ஏன்? மாநிலங்களவை இடம்: சிறிய தூண்டில், பெரிய மீன் பாஜக தரப்பில் அன்புமணிக்கு மாநிலங்களவை இடம் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இது பாஜகவின் பழைய தந்திரம். மகாராஷ்டிரா வில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி, அஸ்ஸாமில் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு முதலமைச்சர் பதவி, கர்நாடகாவில் 10 விசுவாசத் துரோகிகளுக்கு அமைச்சர் பதவிகள் என்ற அதே பாணியில், அன்பு மணிக்கும் “பரிசு” நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம்.ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு இழுக்க அவரது குடும்பத்தினர் மீது அழுத்தம் கொடுத்த அதே பாணியில், அன்புமணியின் மனைவி சௌ மியாவும் பாஜக கூட்டணியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. 3 துக்ளக் குருமூர்த்தியின் மூன்று மணி நேர “தற்செயல்” சந்திப்பு ஜூன் 5 அன்று காலை 10 மணிக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமியும் தைலாபுரம் சென்றார்கள். மூன்று மணி நேரம் ராமதாசுடன் “நட்பு” பேச்சு நடந்ததாம்! வெளியே வந்த குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறினார்: “எனக்கு அன்புமணி இங்கே வந்ததே தெரியாது. பாஜகவிற்காக நான் இங்கு வரவில்லை. ராமதாஸ் என்னுடைய நீண்ட நாள் நண்பர்.” மேலும் அவர் சொன்னார்: “பிரச்சனை இருக்கும் இடத்திற்கு நான் செல்லவில்லை, நான் இருக்கும் இடத்திற்குத்தான் பிரச்சனை தேடி வருகிறது.” இந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருது கொடுக்கலாம்! திட்டமிட்ட நாடகம் ஆனால் யாராவது இதை நம்புவார்களா? பாஜக எல்லா இடங்களிலும் தங்கள் “நம்பகமான” நபர்களை அனுப்பி “சமாதானம்” பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா பிளவுக்கு முன்பும், கர்நாடகாவில் “ஆபரேஷன் லோட்டஸ்” க்கு முன்பும்  இதே போன்ற “நட்பு” சந்திப்புகள் நடந்துள்ளன. குருமூர்த்தியின் (முன்பு ‘சோ’ வின்) துக்ளக் இதழ் நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் - பாஜக சார்பு கருத்துகளை முன்வைத்து வருகிறது. அவரது “தற்செயலான” வருகை உண்மையில் பாஜகவின் “சாம பேத தான தண்ட” நீதியின் “சாம” கட்டம் என்றே கருத வேண்டியுள்ளது. 4 பாஜகவின் தமிழ்நாடு        ஊடுருவல்: எச்சரிக்கை மணிகள் இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டு தீர்மானத்தில் பாஜகவின் தமிழ்நாடு ஊடுருவல் பற்றி அளித்துள்ள தெளி வான பகுப்பாய்வு முக்கியத்துவம் பெறுகிறது. அத்தீர்மானத்தின் படி, “தமிழ்நாட்டில் பாஜகவின் செயல்பாடுகள் மற்றும் இந்துத்துவ கருத்தியலின் தாக்கம் அதிகரித்துள்ளன. மாநிலம் முழுவதும் ஏற்படும் சிறு பிரச்சனைகளைக் கூட மதச்சாயம் பூசி பெரிது படுத்துவது, மத வெறியை வலுப்பெறச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.” தீர்மானம் மேலும் சுட்டிக்காட்டுகிறது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நடவடிக்கைகள் கிராமங்கள் வரை பரவியுள்ளன. ஷாகாக்கள் அதிகரித்துள்ளன.” “பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாக சில  அரசு மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறையின் ஒரு பகுதி, நீதிபதிகள், வழக்கறிஞர்களின் ஒரு பகுதியினர் செயல்பட்டு வருகின்றனர்” என்ற தீர்மானத்தின் கூற்று ஆபத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. “ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரம், பண பலம், ஊடகங்கள் என அனைத்தையும் பயன்படுத்துகின்றனர்” என்று, பாஜக எதையும் செய்யத் தயங்காது என்பதை மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபட சுட்டிக்காட்டுகிறது. பாமகவின் தேக்கம் அதே தீர்மானத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, பாமக பற்றியும் தெளிவான மதிப்பீடு அளிக்கிறது: “பாமக மிகவும் தேக்கமான நிலையில் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்த லில் கடைசி வரையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு இறுதியாக பாஜக கூட்டணியில் சேர்ந்தது இக்கட்சி அணிகளுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.” “கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக பெற்ற வாக்குகளில் சரிபாதியே நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்துள்ளது”  “சாதிய அணி திரட்டல், தலித் விரோத அணுகுமுறை யைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது” என்று பாமக வின் அரசியலின் பிற்போக்குத் தன்மையையும் - அது தேங்கிக் கிடக்கிறது என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் அடையாளம் காட்டுகிறது. இந்தப் பின்னணியில், பாமக தனது தேக்கத்தை உடைத்து, பதவி, பணம் பெறும் உந்துதலில் எதையும் செய்யும் நிலையில் உள்ளது; அதை சாதுரியமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக எத்தனிக்கிறது. 5 108 மாவட்ட செயலாளர்கள் -  கட்சி இயந்திரம் உடைகிறது பாமகவில் 108 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் ராமதாஸ் கூட்டிய கூட்டத்திற்கு வெறும் 20 பேர்தான் வந்தார்கள்! அன்புமணி பக்கம் 22 பேர், நடுநிலை 66 பேர். இதற்கு என்ன அர்த்தம்? கட்சி இயந்திரம் முழுவதுமாக உடைந்து வருகிறது. இதுதான் பாஜகவின் “ஆபரேஷன் லோட்டஸின்” முக்கிய அறிகுறி. மேல்மட்டத்தில் பிளவு, கீழ்மட்டத்தில் குழப்பம், நடுநிலையாளர்கள் எந்தப் பக்கம் காற்று வீசுகிறது என்று பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள். அருணாச்சல பிரதேசத்திலும் இதேதான் நடந்தது. முதலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் பிளவு, பின்னர் ஒருவர் ஒருவராக பாஜகவில் சேர்ந்தார்கள். முதலாளித்துவ அரசியலில் கட்சிகள் தனிநபர்களின் சொத்துக்களாக மாறும்போது, அவை எளிதில் வாங்கப்பட லாம், விற்கப்படலாம், உடைக்கப்படலாம். பாமகவில் நடப்பதும் இதுதான். குடும்பச் சொத்து, ஜனநாயகமற்ற முடிவெடுப்பு, வர்க்க அடிப்படை இல்லாத அரசியல் - இவை எல்லாம் சேர்ந்து அக்கட்சியை பலவீனப்படுத்தியுள்ளன. 6ஆதரித்த மக்களின்  நம்பிக்கையிழப்பு 2024 தேர்தலில் பாமகவின் வாக்குப் பங்கு 4.33% ஆக குறைந்தது. முன்பு 5-6% வரை இருந்தது. இது அப்பகுதி மக்கள் பாமக தலைமையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று பொருள். பாமக செல்வாக்கு உள்ளதாக கூறுகிற வன்னியர் சமூக மக்களின் உண்மையான பிரச்சனைகள் - நிலமின்மை, வேலையின்மை, கல்வியின்மை - இவற்றை தீர்க்காமல் வெறும் சாதிய அரசியல் செய்வதால் மக்கள் சலித்துப் போயுள்ளனர் என்பதே உண்மை. தலித் எதிர்ப்பு: பிற்போக்கு அரசியலின் வெளிப்பாடு மார்க்சிஸ்ட் கட்சித் தீர்மானம் சுட்டிக்காட்டுவது போல், பாமக “சாதிய அணி திரட்டல், தலித் விரோத அணுகு முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.” இது உழைப்பாளி வர்க்க ஒற்றுமையை உடைக்கும் பிற்போக்கு அரசியல். வன்னியர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்தி, இருவரையும் ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் வைக்கும் தந்திரம். இத்தகைய பாமகவின் அரசியல், பின்னர் தனக்கு கைகொடுக்கும் என்றும் பாஜக கணக்குப் போடுகிறது. பாஜகவின் “தமிழ்நாடு புராஜெக்ட்” வடக்கு மாநிலங்களில் பாஜக “ராமர் கோவில், இந்துத்வா, இந்தி” என்று நேரடியாக செல்லும். ஆனால் தமிழ்நாட்டில் இது வேலைக்காகாது. அதனால் அவர்கள் “கூட்டணி அரசியல், சாதிகளை ஒருங்கிணைத்தல், உட்சாதிகளின் சக்திகளைக் கைப்பற்று தல், பிராந்திய கட்சிகளை உடைத்தல், விழுங்குதல்” என்ற வழியைப் பின்பற்றுகிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சித் தீர்மானம் இதையும் தெளிவாக அடையாளம் காட்டுகிறது: “சமூக விரோத சக்திகள், நிதி முறைகேடு செய்பவர்கள், ரியல்  எஸ்டேட் மாஃபியாக்கள் உள்ளிட்டவர்களை கட்சியின் பொறுப்புகளில் பாஜகவினர் கூச்சமின்றி நியமித்துள்ள னர்.” அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அத்தகைய இலக்குகளில் ஒன்று தான் பாமகவை கைப்பற்றுவது. 7  பாமகவின் மூன்று         சாத்தியக்கூறுகள் தற்போதைய நிலையில் பாமகவின் எதிர்காலத்திற்கு மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளன: முதலாவது: ராமதாஸ் வெற்றி பெற்று கட்சியைக் காப்பாற்றி, பாஜகவிடமிருந்து விலகுதல். ஆனால் 20 செயலாளர்கள் மட்டுமே ஆதரவு என்ற நிலையில் அவரால் இயலுமா? இரண்டாவது: அன்புமணி வெற்றி பெற்று கட்சியைக் கைப்பற்றி, பாஜகவுடன் நெருக்கமாகுதல். வாக்கு வங்கி அரிப்புடன் இது நடக்கலாம். மூன்றாவது: கட்சி முழுவதுமாக பிளவுபட்டு இரண்டு பாமக, இரண்டு திசைகள். இதுதான் அதிக சாத்தியம்.தற்போதைய சூழ்நிலையில் இரண்டாவது அல்லது மூன்றாவது சாத்தியக்கூறே அதிகம்.  “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று சொல்லும் பாஜக, உண்மையில் குருமூர்த்தியை அனுப்பியதன் மூல மாக குதிரையை வளைத்துப் பிடித்து, உள்ளே நுழை வதற்காக காத்திருக்கிறது. பாமகவின் குடும்ப கலகம்  இதற் கான வாய்ப்பை அளிக்கிறது. எப்படி இருப்பினும், இதுவரை பாமகவை ஆதரித்து வந்த எளியமக்கள், அப்பகுதி இளைய தலைமுறையினர் இதை உணர வேண்டும்.