articles

img

முதுகுடைந்த தொழிலாளர்களை நிமிர வைத்த செங்கொடி இயக்கம் - சு.வெங்கடபதி

முதலாளிகள், நிறுவனங்கள், கொடுப்பது தான் கூலி. சொல்வதை எல்லாம் கேட்டு அடிமை போல வேலை செய்தால் தான் நிறுவனத்தில் வேலை. எப்படி கேவலமாக திட்டினா லும் மறுவார்த்தை சொல்லாமல் கேட்டுக்கொண்டால் தான் கூலி கிடைக்கும். இது தான் தமிழகத்தில் சுமைப் பணித் தொழிலாளர்களின் நிலையாக இருந்தது.  இப்படி வாய்பேச முடியாமல் இருந்த தொழிலா ளர்களை வாய்பேச வைத்ததும், கொடுப்பது தான் கூலி என்ற நிலையை மாற்றி ஓரளவு நியாயமான கூலி, இரண்டாண்டுக்கு ஒருமுறை, மூன்றாண்டுக்கு ஒரு முறை என ஒப்பந்தங்கள், தொழில் செய்யும் இடங்க ளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகள் மீது இயக்கங்கள் என இதுநாள் வரை ஆளும் வர்க்கத்தால் முதுகுடைக்கப்பட்ட இத்தொழிலாளர்களை தமிழ கத்தில் செங்கொடி சங்கம் உள்ள இடங்களிளெல்லாம் நிமிர வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் மார்க்கெட் பகுதிகளில், கடை வீதிகளில், கடைகளில் ஒன்றிய மாநில அரசு கிடங்கு களான இரயில்வே கூட்செட், சென்ட்ரல் வேர்ஹவுஸ், டாஸ்மாக் கிடங்குகள், தமிழ்நாடு வேர்ஹவுஸ், டிபிசி  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சிவில் சப்ளைஸ் குடோன்கள், கூட்டுறவு நிறுவனகிடங்குகள், ஊராட்சி மன்ற கிடங்குகள், தனியார் வேர்ஹவுஸ் கிடங்குகள், காய்கறி மார்க்கெட்டுகள், கோயம்பேடு மார்க்கெட் என பரவலாக 3 லட்சத்திற்கும் அதிக மான சுமைப்பணித் தொழிலாளர்கள் தமிழகம் முழு வதும் பணிபுரிந்து வருகிறார்கள். கொரோனா பெருந் தொற்றால் ஊரடங்கு காலங்களில் கடுமையாக வேலை பாதிக்கப்பட்ட தொழில் சுமைப்பணியாகும்.

தொழில் பாதுகாப்பு

சுமைப்பணி தொழிலாளர்கள் குவியலாக வேலை செய்யும் இடங்களில் கேரள மாநிலத்தில் ஒவ்வொரு மையத்திலும் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு அந்த மையத் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய பகுதிகளும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட தொழி லாளர்களை தவிர வேறு சுமைப்பணித் தொழிலா ளர்கள் பணி செய்ய முடியாது. அரசே அந்த ஏற்பாட்டை செய்துள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே பணி செய்யும் சுமைப் பணித் தொழிலாளர்கள் சங்கம் அமைத்து தங்கள் ஒற்றுமை மூலம் சொந்த பாதுகாப்பை ஏற்படுத்தி யுள்ளனர். தாங்களாகவே ஏற்படுத்தியுள்ள இந்த பாது காப்பிற்கு அவ்வப்போது காவல்துறையால், அரசால் பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது. மார்க்கெட் பகுதி களில், கடைவீதிகளில், கடைகளில், காய்கறி மார்க்கெட் போன்ற பகுதிகளில் பணியாற்றும் சுமைப் பணித் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் மூலம், ஓரளவு பணிப் பாதுகாப்பும், கூலி உயர்வுக்கான ஒப்பந் தங்களும், தொழிற்சங்கம் தொடர்ச்சியாக இயக்கங் கள் நடத்தி தொழிலாளர்களை பாதுகாத்து வரு கிறது.

துறைவாரித் தொழிலாளர்கள்

ஒன்றிய மாநில அரசு கிடங்குகளில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை அவரவர்களுக் கான கோரிக்கைகளை வென்றெடுக்க இரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழு, டாஸ்மாக் சுமைப்பணி ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு வேர்ஹவுஸ் சுமைப்பணி ஒருங்கிணைப்புக் குழு, நேரடி நெல் கொள்முதல் (டிபிசி) சுமைப்பணி தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு என பல்வேறு ஒருங்கிணைப்புக்குழுக்கள் மூலமாக அத்தொழிலா ளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மீது நடவடிக்கைக ளும், இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது இரவு நேரத்திலும் பணி செய்ய வேண்டும் என்று இரயில்வே நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இங்கு பணிசெய்யும் சுமைப்பணித் தொழிலாளர்க ளுக்கு ஒன்றிய அரசு நிறுவனமோ, இரயில்வே நிர்வா கமோ எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆண்டுக்கணக்கில் போராடியும் கூட அடையாள அட்டை வழங்கமறுக்கிறது. அவ்வப்போது இரயில்வே பாதுகாப்பு காவல்துறையால் கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் மீதே அத்து மீறி நுழைந்ததாக வழக்கு போடும் மோசமான நிலை இருந்தது. தொழி லாளர்களின் போராட்டத்தால் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது. பிராவிடண்ட்பண்ட், இஎஸ்ஐ, எந்த சட்டமும் இவர்களுக்கு பொருந்தாது.தற்போது 24 மணிநேர மும்,(இரவு நேரத்திலும்) பணி செய்ய வற்புறுத்தப் படுகிறது. இதற்கான போராட்டங்களை தொழிற் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஒன்றிய அரசுக்கு சொந்தமான சென்ட்ரல் வேர்ஹவுஸ் பெரும்பாலான இடங்களில் தனியார் நிறுவனங்களுக்கு விடப்பட்டு விட்டன. சேமிப்புக் கிடங்குகளை கூட ஒன்றிய அரசு தனி யாருக்கு தாரைவார்த்து வருகிறது. சென்ட்ரல் வேர்ஹவுஸ் சுமைப்பணித் தொழிலாளர்களுக்குரிய இழப்பீடு வழங்கவோ, வேறுமாற்று வேலைக்கான ஏற்பாடோ ஒன்றிய அரசிடம் இல்லை. தமிழகத்தில் 63 இடங்களில் வேர்ஹவுஸ் கிடங்கு கள் உள்ளன. இதில் பல கிடங்குகள் பெயரளவுக்கே செயல்படுகின்றன. இங்கு பணியாற்றும் சுமைப் பணித் தொழிலாளர்கள் பணி என்பது அனைத்தும் ஒப்பந்த முறையே குறைந்தபட்ச கூலி பிஎப், இஎஸ்ஐ எந்த சட்டமும் இங்கு அமலாகாது. தொழிற்சங்கம் வலுவாக உள்ள இடங்களில் மட்டுமே ஓரளவு கூலி, கூலிக்கான ஒப்பந்தம் உள்ளது. மற்ற இடங்களில் தமிழக அரசு சட்ட உரிமைகளை அமல்படுத்த எந்த நடவடிக்கை யும் எடுப்பதில்லை.

தமிழகம் முழுவதும் 43 கிடங்குகள் உள்ளன. 2500க்கும் மேற்பட்ட சுமைப்பணித் தொழிலாளர்கள் மதுபான உற்பத்தியாளர்களிடமிருந்து லாரிகளில் வரும் பெட்டிகளை கிடங்குகளில் இறக்கி வைப்பதும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மதுபான கடைக ளுக்கு லாரிகளில் பெட்டிகளை ஏற்றி அனுப்பும் பணியை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இறக்கு கூலி தமிழகம் முழுவதும் ஒரே மாதியான கூலியாக  மதுபான உற்பத்தியாளர்கள் வழங்குகிறார்கள். ஆனால் ஏற்றுக்கூலியோ டிரான்ஸ்போர்ட் காண்ட்ராக் டர்கள் மூலம் அந்தந்த காண்ட்ராக்டர்கள் அவரவர் கள் நிர்ணயித்த அடிமட்ட கூலி வழங்குகிறார்கள். காண்ட்ராக்டர்கள் எல்லாம் எப்போதும் ஆளுங் கட்சிக்கு வேண்டியவர்கள் என்பதால் கூலி உயர்த்தி கேட்டால், பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை.

கடும் வெப்பத்தால் அல்லது பெட்டிகளில் அடைத்து  லாரிகளில் வரும் போதோ அல்லது வெயில் காலங்க ளில் வெப்பத்தால் பாட்டில்கள் வெடிக்கும் போதோ பாட்டில்களுக்கான முழுத்தொகையும் தொழிலாளர் கள் பெரும் சொற்பத் தொகை கூலியிலிருந்து ஆயிரக் கணக்கில் Rabdlibg lass என்ற பெயரில் செலுத்த வேண்டும். இறக்கு கூலி தமிழகம் முழுவதும் ஒரே கூலி வழங்கும் போது அதே பெட்டியை ஏற்றுவதற்கு ஏன் ஒரே கூலி வழங்க முடியாது என்ற கேள்வி உள்ளது. ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் வருமானம் பண்ணு வதற்கான வழியே தவிர வேறொன்றுமில்லை.  இந்த கிடங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் தவிர லாரிகளில் பெட்டிகளை ஏற்றிச் சென்று வெளி யில் டாஸ்மாக் கடைகளில் இறக்கும் தொழிலாளர்கள் லாரி டிரான்ஸ்போர்ட் காண்ட்ராக்டர்களின் கீழ் பணி செய்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் கடைகளில் பெட்டிகளை இறக்கிவிட்டு டாஸ்மாக் கடை ஊழி யர்களிடம் கேட்டு அவர்கள் கொடுக்கும் காசை பெறுகி றார்கள். இதுதான் இவர்கள் செய்யும் வேலைக்கான  கூலி. இவர்களது கூலியை முழுமையாக காண்ட்ராக் டர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள். காண்ட்ராக்டர்க ளிடம் கூலி கேட்டால் இவர்களுக்கு வேலையில்லை. இவர்களுக்கான கூலியை காண்ட்ராக்டர்கள் வழங்குவதில்லை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

டெல்டா மாவட்டங்களில் கூடுதலான நெல் கொள் முதல் நிலையங்களும் இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மட்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகப் பொறுப்பில்  செயல்படுகின்றன. இங்கு பணி யாற்றும் ஆயிரக்கணக்கான சுமைப்பணித் தொழிலா ளர்களுக்கு எந்த சட்டபாதுகாப்பும், உரிய கூலி உள்பட எந்த உரிமையும் அமல்படுத்தவும் NCSC நிர்வாகம் தயாராக இல்லை. தொழிற்சங்க நடவடிக்கை மூலம் ஓரளவு கூலி கிடைக்க ஏற்பாடு உள்ளது. அவ்வளவு தான். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை யும், அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் விடும் நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தனி யாருக்குவிடும் இத்தகைய போக்கை கைவிட்டு சிவில் சப்ளைஸ் நிர்வாகமே தொடர்ந்து செயல்படுத்து வதுதான் பாதுகாப்பானது ஆகும். அரசு கிடங்கில் பணியாற்றும் சுமைப்பணித் தொழி லாளர்கள் தவிர கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு கடைகள் மற்றும் நிறுவனச்சட்டம் எங்குமே தமிழ கத்தில் அமல்படுத்தப்படுவதில்லை. இவர்களுக்கான  வேலை பாதுகாப்பு,ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தங் கள் தொழிலாளர்கள் ஒற்றுமை தொழிற்சங்க நடவ டிக்கையால் மட்டுமே ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனைகள்

உரிமைக்காக ஜனநாயகரீதியான போராட்டங்கள் நடத்தும் போது காவல்துறை கைது, வழக்கு, சிறையில் அடைப்பது போன்ற அத்துமீறல்கள் தொடர்கிறது. இப்படி சுமைப்பணி தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்ச னைகளை களைந்திடவும்,  கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் சுமைப்பணித் தொழிலாளர்களுக் கென தனிநலவாரியம் அமைக்க வலியுறுத்தியும், மாநிலந் தழுவிய இயக்கங்களை தமிழ்நாடு சுமைப் பணித் தொழிலாளர் சம்மேளனம் தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில்,

  1.  சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் உடனடியாக தமிழக அரசே அமைத்திடு.
  2.  சுமைப்பணி செய்யும் இடங்களில் தொழிலாளர் களின் வேலை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்து. P குவியலாக பணி செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓய்வறை அமைத்திடு.
  3.  அனைத்து சுமைப்பணித் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிடு.
  4.  இரயில்வே கூட்செட்டுகளில் இரவு நேலத்தில் சுமைப்பணி செய்ய வலியுறுத்தாதே. P Rabdlibg lass  என்ற பெயரில்சட்டத்திற்கு புறம்பாக டாஸ்மாக் தொழிலாளர்களின் கூலியில் பிடிக்கும் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகமே கைவிடு.
  5.     சுமைப்பணித் தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களில் எழும் பிரச்சனைகளை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்காமல் தொழிற்தாவா பிரச்ச னையாக அணுகவேண்டும். காவல்துறை தலை யீட்டை கைவிட வேண்டும்.  P கோயம்பேடு மார்க்கெட்டில் 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனை மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஓய்வறை அமைத்திட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளன 9ஆவது மாநில மாநாடு 2022 அக்டோபர் 9,10 தேதிகளில் சேலத்தில் நடைபெறுகிறது. 9.10.2022ஆம் தேதி ஞாயிறு காலை 9.30 மணியளவில் சேலம் ஜங்ஷன் இரயில் கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பிருந்து பேரணி புறப் படுகிறது. மாநாட்டில் ஏற்றப்படவுள்ள கொடி சென்ற மாநில மாநாடு நடைபெற்ற விழுப்புரத்தில் இருந்து அந்த மாவட்ட சுமைப் பணி தலைவர் எம்.பழனி தலைமையிலும், சேலம் சிறைதியாகிகளில் ஒரு வரான அரியாகவுண்டம்பட்டி தோழர்.ஆறுமுகம் நினைவாக ஜோதி சேலம் மாவட்ட சுமைப்பணி சங்க தலைவர் தோழர்.பி.ஆறுமுகம் தலைமையிலும், தோழர்.எம்.சீரங்கன் நினைவு ஜோதி சேலம் இரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தோழர்கள். சங்கர்,முனுசாமி ஆகியோர் தலைமையிலும் கொண்டு வரப்படுகிறது.  9ஆவது மாநில மாநாட்டை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன்  துவக்கி வைத்து சிறப்புரை யாற்றுகிறார். சிஐடியு மாநில செயலாளர்களில் ஒரு வரான சி.திருவேட்டை அவர்கள் நிறைவுரையாற்று கிறார். மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து  மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்களை தலைமை யேற்று வழி நடத்திய அனுபவம் வாய்ந்த 250க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர். தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர்கள் சம்மேளனம்.