தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் டிசம்பர் 29 (இன்று) தமிழகம் முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், துணை ஆணையர் அலுவலகங்களின் முன் அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் தொடர் முழக்க போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள 44292 -க்கும் மேற்பட்ட கோவில்க ளுக்கு சொந்தமான மனைகளில் பல லட்சக் கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக அடிமனை வாடகைதாரர்களாக சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார்கள். அறநிலையத்துறையின் வலைத்தள தகவல் படி 56 ஆயிரம் குடும்பங்கள் வாடகை தாரர்களாக வரன்முறைப்படுத்தப்பட்டவர்கள் என்றால், வாடகைதாரர்களாக வரன்முறைப் படுத்தப்பட வேண்டிய பல்லாயிரக்கணக்கான குடும் பங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. இவர்களை வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்துவதை தமிழக அரசு தற்போது முதன்மைப்படுத்தி செயல் படுத்தி வருகிறது. ஆனால் அப்பணி அரசு எதிர் பார்க்கும் வேகத்தில் நடைபெறவில்லை.
1992ஆம் ஆண்டுக்குப் பின் உலகமயமாக்கல் கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வந்த சூழலில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்ய வகை செய்யும் அறநிலையத் துறையின் சட்டம் 1959 இன், பிரிவு 34 இன்படி பல்வேறு பகுதிகளில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் கிரயம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வாடகை நிர்ணயம் செய்யும் நடைமுறை முன்னெ டுக்கப்பட்டது. கோவில்களுக்கு சொந்தமான கட்டி டங்கள், நிலங்கள், வீடுகள் முதலானவற்றை, வாடகை தாரர்க்கு வாடகையை நிர்ணயம் செய்ய அரசாணை எண் 56 முதன் முதலாக வெளியிடப்பட்டது. இந்த அர சாணையை தொடர்ந்து பல்வேறு அரசு ஆணை களும், (353,131,340,456,298) அதன் அடிப்படையிலான சுற்றறிக்கைகளும் தமிழக அரசாலும் அறநிலை யத்துறையாலும் வெளியிடப்பட்டு வந்துள்ளது. அரசாணை 56க்கு முன், அந்தந்த கோவில்களின் அறங்காவலர்கள், தக்கார்,அறநிலையத்துறையின் செயல் அலுவலர்கள், குறிப்பிட்ட கோவில்களின் நிதித் தேவைகளை ஒட்டியே அந்தந்த பகுதி மக்க ளோடு கூட்டஅமர்வு நடத்தி வாடகையை நிர்ணயம் செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக கோவில்களின் அடி மனைகளில் வாடகைதாரர்களாக வாழ்ந்த மக்கள் பெரும் நெருக் கடிகளை சந்திக்கவில்லை. பல பகுதிகளில் தாமா கவே மக்களே முன்வந்து கோவில்களுக்கு வாட கையை உயர்த்திக் கொடுத்தனர்.
அரசாணை எண் 56 க்குப்பின், வெளியிடப்பட்ட அரசாணை எண் 353-ஐ 2001- இல், அப்போதைய அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது நியாய வாடகை நிர்ணயம் என்ற பெயரில், வாடகைதாரர்களுடனான கூட்டமர்வை நடத்தாமல் ஒரு சார்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் மட்டத்தி லேயே வாடகைகள் தீர்மானிக்கப்பட்டு வாடகை தாரர்க்கு அறிவிக்கப்பட்டது. வாடகை நிலுவை என்று முன் தேதியிட்டு பல லட்சக்கணக்கான ரூபாய் செலுத்த வேண்டும் என்று மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
100 மடங்கு வரை வாடகை உயர்வு
நியாய வாடகை நிர்ணயம் என்ற பெயரில் அநியா யமாக 100 மடங்கு வரை உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் நிலுவைத் தொகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீதிமன் றங்களை நாடினர். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டன. மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக 2006-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரசாணை எண் 456/2007 மற்றும் 298/2010 வெளியிடப்பட்டு வாடகை நிர்ணயம் மற்றும் நிலுவைத் தொகை பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் திரும்பப் பெறப் பட்டு வாடகைதாரர்கள் செலுத்தும் வாடகை பிரச்ச னைக்கு சுமூகமான நிலை உருவானது. ஆனால் 2011 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக ஆட்சி யில் நிலைமை மாறியது.
திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணைகள் கிடப்பில் போடப்பட்டு 2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு என்ற பெய ரில் வாடகையை பல நூறு மடங்கு உயர்த்தி வாட கைதாரர்களுக்கு மீண்டும் நிலுவைத்தொகையோடு அறிவிக்கப்பட்டது. சுமார் 2530 கோடி ரூபாய் அற நிலையத் துறையால் தன்னிச்சையாக வாடகையாக அறிவிக்கப்பட்டு பெரும் சுமையாக ஏழை, எளிய மக்களை அச்சுறுத்துகிறது. உயர்த்தப்பட்ட வாடகை யையும், நிலுவைத் தொகையையும் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் அப்படி செலுத்த தவறி னால் அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78, 79 கீழ் வாடகை தாரர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற் றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அற நிலையத்துறை அறிவித்தது. பல இடங்களில் வாடகைதாரர்களை வெளியேற் றும் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளப் பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் பரவா யில்லை என்ற போக்கில் வல்லடியாக அறநிலையத் துறை இந்த அராஜகச் செயல்பாடுகளில் இறங்கி வரு கிறது. பல ஆண்டுகளுக்கு முன் சென்னை வண்ணா ரப்பேட்டையில் ஒரு அடிமனை வாடகைதாரர் கோவி லுக்கு முன்பாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தன்னை எரித்துக் கொண்டார். அதுமட்டுமின்றி கும்பகோணத்தில் ஒருவர் அறநிலையத் துறை அதிகாரிகளின் அச்சுறுத்த லால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
அரசியல் செல்வாக்கும் அதிகார பலமும் ஆக்கிரமிப்பும்
மீண்டும் 2006ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலை போல வழக்குகளும், மக்கள் போராட்டங்களும் தொடர் கதையாக மாறிய நிலையில், அதிமுக அரசு வரு வாய் துறையின் மூலமாக அரசாணை 318 வெளியிட்டு கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு இலவச மாக வீட்டுமனைகள் பட்டா வழங்கப்படும் என்றும், அதற்காக கையகப்படுத்தும் சுமார் 600 ஏக்கர் நிலத் திற்கு வருவாய்த்துறை மூலம் அறநிலையத்துறைக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தது. பல தலை முறைகளாக கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று கருதி இருந்த நிலை யில் அரசு ஆணை எண் 318 க்கு எதிராக பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தில் சனாதனவாதிக ளால் வழக்குத் தொடுக்கப்பட்டு தடையாணை பெறப்பட்டு இன்றுவரை அது கிடப்பில் போடப்பட்டுள் ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் கோவில்க ளுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் அரசி யல் செல்வாக்கும், அதிகார பலமும் பெற்ற பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவற்றை அறநிலையத்துறை உடனடியாக மீட்க வேண்டும் என்று சொன்ன நீதிமன்றத்தின் உத்தரவு எதுவும் அதிமுக அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.
வரவேற்கத்தக்கது
தற்போது தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு வருவது வரவேற்கப்பட வேண்டியதே. அதேபோல் தமிழகம் முழுவதும் கோவில் மனைகளில் பல ஆண்டு களாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களை அரசாணை எண் 340 இன்படி வாடகைதாரர்களாக வரன் முறைப்படுத்தும் நடவடிக்கையும், ஏற்கனவே வாடகைதாரர்கள் ஆக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் தற்போதைய பயனாளிகளின் விவரங்களையும் கணினியில் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வரவேற்கக் கூடியதே.
அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக
அதே நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் தான் தோன்றித்தனமாக உயர்த்தப்பட்ட பல மடங்கு வாடகை மற்றும் நிலுவைத் தொகை குறித்தும், கொரோனா பெரும் தொற்று காலத்தில் பொருளா தார ரீதியில் நலிவடைந்த நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வாடகைதாரர்கள் வாடகைத் தொகை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், பெயர் மாற்றம், மின் இணைப்பு பெறுதல், பழுதடைந்த வீடு களை சீர் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கம் வைத்துள்ளது. கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி அரசாணை 318 இன்மீது தொடுக்கப்பட்ட வழக்குக்கு நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்யப்படும் என்றும், நியாய வாடகை நிர்ணய குழு அமைக்கப்பட்டு அமை ப்புகளுடன் கருத்தறிந்து புதிய வாடகை நிர்ணயிக் கப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில் சென்னை, தேனி, கோவை, மதுரை, திருப்பூர், திருநெல் வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக பல மடங்கு வாடகை உயர்வு அறிவிக்கப்பட்டு அவற்றை உடனடியாக கட்ட வேண்டும் என்ற அச்சுறுத்தல் அறநிலையத்துறை அதி காரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தீர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
கோவில் நிலங்களிலும் வக்பு போர்டுகளுக்கு சொந்தமான நிலங்களிலும் குத்தகை விவசாயம் செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு குத்தகை மறு ஏலம் என்ற பெயரில் வெளியேற்றும் நடவடிக்கையை அற நிலையத்துறையும், வக்பு போர்டும் திட்டமிட்டு செயல் படுத்தி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் 18ஆம்தேதி யன்று அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின் போது, அற நிலையத் துறை ஆணையர் குமரகுருபரனிடம் கோரிக்கைகளை முன்வைத்து விளக்கம் அளித்த பின்பும் பயனாளிகளின் கோரிக்கைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப் படும் என்று அறநிலையத்துறையாலோ தமிழக அர சாலோ இதுவரை அறிவிக்கப்படவில்லை.
கிரையம் செய்வதே வழி
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு இந்து அறநிலையத்துறைச் சட்டப்பிரிவு 34 இன்கீழ் கோவில் நிலங்களில் சொந்த மாக வீடு கட்டி அடி மனை வாடகைக்கு குடியிருந்து வரும் ஏழை எளிய நடுத்தரவர்க்க மக்களுக்கு அந்த இடங்களை கிரையம் செய்வது ஒன்றே ஆகும். அதை தமிழக அரசு செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து அற நிலையத் துறையால் முன் வைக்கப்படும் எந்த தீர்வு களும் நிச்சயம் அந்த மக்களை பிரச்சனைகளில் இருந்து வெளியேற்றாது.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம்.