articles

img

வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம்! - வி.குமார்

இந்திய தொழிற்சங்கஅரங்கில் 50 ஆண்டு களுக்கு முன்னால் சிஐடியு தோன்றிய நாளி லிருந்தே தொழிலாளிவர்க்கம் சந்தித்து வந்த பொதுவான பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டதொரு இயக்கத்தை உருவாக்குவதில் முக்கியமான பங்கினை  சிஐடியு வகித்துள்ளது. இந்த காலப் பகுதியில் தொழி லாளி வர்க்கத்தின் நலன்களுக்காக வாதாடும்-போரா டும் முன்னணிப்படை என்ற பெயரையும் சிஐடியு பெற்றுள்ளது. சிஐடியுவின் அமைப்புச்சட்டமானது ஸ்தாபனத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை மிகச் சரியாக வே விவரித்துள்ளது. தொழிலாளர்களின் அன்றாடக் கோரிக்கைகளுக்காகப் போராடும் அதே நேரத்தில் சமூக மாற்றத்துக்காக தொழிலாளி வர்க்கத்தை தயார் படுத்தும் பணியையும் மேற்கொண்டுள்ளது. முதலா ளித்துவச் சுரண்டல் முறையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டாமல் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் நிலையான மேம்பாட்டை ஏற்படுத்த முடியாது என்பதை சிஐடியு உறுதியாக நம்புகிறது. 

சிஐடியு தனது அமைப்புச் சட்டத்தில் கீழ்காணும் வகையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது: “உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுவதை ஒழிக்க அனைத்துவிதமான உற்பத்தி விநியோகம் மற்றும்  பரிவர்த்தனையை சமூகமயமாக்குவதும், சோசலிச அரசை நிறுவுவதன் மூலமே முடியும் என்று சிஐடியு நம்புகிறது. சோசலிச லட்சியத்தை உறுதியாகப் பற்றியி ருப்பதுடன், அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந் தும் சமூகத்தை முழுமையாக விடுவிக்க சிஐடியு முனைந்து நிற்கும்.’’

கடந்து வந்த பாதை

சிஐடியு உருவாக்கப்பட்ட உடனே நடைபெற்ற ஒன்றுபட்ட போராட்டங்களில் மிக முக்கியமானது 1974ம் ஆண்டில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் அகில இந்திய வேலை நிறுத்தம் ஆகும். இந்த வேலை நிறுத்தம் ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் வர்க் கத்தையும் கிளர்ந்தெழச் செய்தது.  மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளையும் பழி வாங்கல் நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு 20 நாட்கள் நடைபெற்ற வேலை நிறுத்தம். நாடுதழுவிய ஒன்றுபட்ட போராட்டத்திற்கு ரயில்வே தொழிலாளர்க ளை ஒன்றுதிரட்டுவதில் சிஐடியு சங்கமும் முக்கியப் பங்காற்றியது. வரலாற்று சிறப்புமிக்க இவ்வேலை நிறுத்தத்தை வழிநடத்தும் ரயில்வே தொழிலாளர்க ளின் போராட்டத்திற்கான அகில இந்திய ஒருங்கிணைப் புக்குழுவில் ஐஎன்டியுசியைத் தவிர அனைத்து பிரதான மத்திய தொழிற்சங்கங்களும் இடம் பெற்றிருந்தன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் ஜனநாயக  உரிமைகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும், தாக்குதலையும் எதிர்த்து சிஐடியு வலுவாக போராடியது. சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ஐஎல்ஓ) புகார் அளித்து, தொழிற்சங்க உரி மைகள் மீது அரசு தொடுக்கும் தாக்குதலை அம்பலப் படுத்தியது. அவசரநிலைக் காலத்தில் போனஸ் 8.33 சதவீதத்தை 4 சதவீதமாக குறைத்ததை எதிர்த்து உறுதி யான - விடாப்பிடியான போராட்டம் நடத்தியதின் விளைவாக மறுபடியும் 8.33 சதவீதம்  போனஸ் என்றுசட்டமானது.

1982 எழுச்சி

மத்தியில் 1978-ல் ஜனதா கட்சி அரசு கொண்டு வந்த தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் தொழில் உறவு மசோதாவை தயாரித்த போது, அனைத்து தொ ழிற்சங்கங்களும் தேசியக் கருத்தரங்கு நடத்தி நாடாளுமன்றம் நோக்கி மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதால், அச்சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள் ளும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. 1981ல் நடைபெற்ற பம்பாய் கருத்தரங்கில் தேசிய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு (The National Campaign Committee of Trade Unions) உருவாக்கப்பட்டது. முதன் முதலாக அனைத்து தொழிற்சங்க இயக்கத்தின் கூட்டு பொதுவேலைநிறுத்தம் இந்தியாவில்  1982 ஜனவரி 19ல் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் எழுப்பியது.இந்தப் போராட்டத் தில் சிஐடியு முக்கியப் பங்கு வகித்தது.தொழிலாளி- - விவசாயத் தொழிலாளி,விவசாயி உட்பட 10 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். இதை நினைவு கூரும் விதமாக ஒவ் வொரு ஆண்டும் ஜனவரி 19ஐ தொழிலாளி - விவசாயி ஒற்றுமை தினமாக சிஐடியு கடைப்பிடித்து வருகிறது. பொதுத்துறை தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்தி பொதுத்துறை சங்கங்களின் குழு அமைப்பதில் ‘ஒன்று பட்ட மேடையை உருவாக்குவதில் சிஐடியு முன்னணிப்  பங்கு வகித்தது. சிபிஎஸ்டியு பதாகையின் கீழ் பொதுத் துறை தொழிலாளிகள் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்க ளின் பொதுத்துறை தனியார்மய நடவடிக்கைகளை போராடிப்பெற்ற உரிமைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தினர். தற்போதைய மோடி ஆட்சியில் இந்த அச்சுறுத்தல்கள்மேலும் பல மடங்கு கூடியி ருக்கிறது. இது மத்திய பொதுத்துறை சங்கங்களை மேலும் பலப்படுத்தவேண்டிய - தேவையை அரசின் நடவடிக்கைகளை முறியடிக்கக்கூடிய வகையில் போ ராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது.

21 பொது வேலை நிறுத்தங்கள்

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் (ஐஎம்எப்) இவற்றின் உதவியோடு சர்வதேச நிதி மூலதனம், உலகமயம் என்று அறியப்படும் கட்டமைப் புச் சீரமைப்புத் திட்டத்தை உருவாக்கியது. 1990-91ல் ஏற்பட்ட அந்நியச் செலவாணி நெருக்கடியின் காரண மாக உலக வங்கி சர்வதேச நிதி ஆணையம் விதித்த நிபந்தனைகளை ஏற்று அந்நியச் செலாவணி நெருக்க டியை எதிர்கொள்ள அரசு கடன்வாங்கியது. இந்த நிபந்த னைகளை ஏற்றதால் இந்தியப் பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தது. கட்டமைப்பு சீர மைப்புத் திட்டத்தால் தொழிலாளி வர்க்கமும் தொழிற் சங்கங்களும் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து 1991 நவம்பர் 29ல் முதல் பொது வேலைநிறுத்தம் நடை பெற்றது. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் ஒன்றுபட்ட போராட்டங்களின் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கியது.அடுத்தடுத்து வந்த பத்தாண்டுகளில் தொடர்ச்சியான நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்களும்,துறைவாரியான எண்ணற்ற வேலைநிறுத்தங்களும் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக நடந்தன. தொழிற்சங்கங்களின் ஸ்பான்சரிங் கமிட்டி மற்றும் வெகுஜன அமைப்புகளின் தேசிய மேடை நாடு தழுவிய பல பொது வேலைநிறுத்தங்களை நடத்தியது. இப்படிப்பட்ட விரிவான தொழிற்சங்க மேடைகளை உருவாக்குவதில், பொது வேலைநிறுத் தத்தை வெற்றிபெறச் செய்வதில் சிஐடியு முன்னணிப் பாத்திரம் வகித்து வருகிறது.  2009ம் ஆண்டு முதல் முறையாக ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டு மேடையில் இணைந்தன. 2014ல் மோடி அர சாங்கம் அமைந்த பிறகு கூட்டியக்கத்திலிருந்து பி.எம்.எஸ். விலகிக் கொண்டது. இதுவரை 21 நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இந்த ஆண்டு மார்ச் 28-29 தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். கிட்டத்தட்ட 25 கோடி தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதுடன், எளிய சாதாரண மக்கள் தங்களது பரவலான ஆதரவை இதற்கு அளித்தனர்.

புதிய சவால்கள்

பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததன் விளை வாக; தினக்கூலி, ஒப்பந்தமுறை, அவுட்சோர்சிங், தற்காலிக குறைந்த கால வேலை ஆகியவை:  கடுமையாக அதிகரித்தன் விளைவாக வேலையின் தரமும் பாதுகாப்பும் வீழ்ந்துவிட்டது. தொழிலாளர் சட் டங்கள். முதலாளிகள் விரும்பும் வகையில் திருத்தப் படுகின்றன. இதனால் பெருமளவுக்கு தொழிலாளர் சட்ட மீறல்கள் நடந்து வருகின்றன. மூலதனப் பங்குகளை விற்பதும், குறைப்பதும் உள்ளிட்ட தனியார்மய நடவடிக்கை மூர்க்கத்தனமாக அமலாக்கப்படுவதால் பொதுத்துறைகள் சீர்குலைக் கப்படுகின்றன. சமூக நீதியுடனான பொருளாதார வளர்ச்சிக் கேள்விக் குறியாக உள்ளது. உற்பத்திச் செலவை வெட்டுவது என்கிற பெயரால் தொழிலா ளர்களின் சமூகப் பாதுகாப்பின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. பாரம்பரியத் தொழில்களிலும், சிறுதொழில்க ளிலும் ஏராளமாக அந்நிய மூலதனம் ஊடுருவியதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வர்க்கத்தின் தொழிற்சங்க உரிமைகள் மீது கொடியத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த உரிமை பறிக்கப்படுகிறது.

மோடி அரசின் நேரடித் தாக்குதல்

மோடி அரசாங்கம் தேசியச் சொத்துக்களை விற்பது என்கிற தனது எண்ணத்தை எவ்வித முகமூடியும் அணி யாமல் மேற்கொண்டு வருகிறது. “அரசாங்கத்திற்கு வியாபாரம் செய்வது வேலையில்லை, வியாபாரத்தில் அரசாங்கத்திற்கு எவ்வித இடமுமில்லை’’ என பாஜக அரசு கூறுகிறது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு சேவகம் செய்வது என்ற ஒற்றைக் குறிக் கோளுடன் செயல்பட்டு வருகிறது. தனியார் மயம் மட்டு மல்ல, வேளாண் சட்டங்களாகட்டும், அந்நியநேரடி முத லீட்டு கொள்கையாகட்டும், நிலக்கரி போன்ற மிக முக்கியமான தாதுப்பொருட்களை எளிய முறையில் விற்பனைக்கு ஏற்றவாறு மாற்றுவதாகட்டும்; மோடி அரசாங்கத்தின் அனைத்து பொருளாதார கொள்கை களும் பிற்போக்கானவை.  பொதுமக்களுக்கு சேவை புரிந்து வரும் பொது சுகாதாரம், ரயில்வே, மின்சாரம் போன்ற துறைகளிலும் தனியார் கார்ப்பரேட் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சட்டங்களை திருத்துகிறது. மக்களை தனியார்மயமாக்கல் கொள்கைக்கு எதிராக திரட்ட வேண்டிய கடமை சிஐடியுவிற்கு பிரதானமாக உள்ளது.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியது சிறு-குறு தொழில் களாகும்.பெரிய கார்ப்பரேட்களுக்கு சாதகமான கொள்கைகள் இந்த துறைக்கு சாவுமணி அடித்துள் ளது.பல்லாயிரக்கணக்கான சிறு-குறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.இலட்சக்கணக்கான தொழிலாளர் கள் வேலையை இழந்துள்ளார்கள். இதுவும் முதலா ளித்துவ நெருக்கடியை சமாளிக்க இந்திய முதலாளித் துவம் மேற்கொள்ளும் வழிதான். ஆட்சியதிகாரத்தில் இருக்கும் எதேச்சதிகார வலதுசாரி அரசாங்கத்தைப் பயன்படுத்தி தனது லாபத்தை பெருக்கிக் கொள்ள தொழிலாளர்களைச் சுரண்டுவது மட்டுமல்லாமல் சிறு-குறு நிறுவனங்களையும் வணிகங்களையும் அழிப் பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்திய முதலாளித்துவம் கடுமையாக முயற்சிக்கிறது. இதுவரை காணாத பணவீக்க உயர்வு காரண மாக,கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நுகர்வு குறைந்துள்ளபோதிலும், அத்தியாவசியப் பொருட் களின் விலையேற்றம் மிகவும் கவலைக்குரிய அம்ச மாகும். எரிபொருள் விலையில் ஏற்படும் கட்டுப்படுத் தப்படாத விலைஉயர்வு பிற பொருட்களின்  விலை உயர்வுக்கு முக்கியக் காரணியாகும்.

விலைவாசி உயர்வு தானாக நடப்பதில்லை என்ற உண்மையை நாம் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி வரு கிறோம்.வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள தங்க ளது எசமானர்களுக்கு சேவை செய்வதற்காகவே ஆளும் அரசால் நடத்தப்படும் சுரண்டல் திட்டத்தின் ஒரு  பகுதியே விலைவாசி உயர்வு ஆகும்.  தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்பை மக்களுக்கு விளக்கி, தனியார் மயமாக்கலை எதிர்த்த போராட்ட நடவடிக்கைகளில் மக்களை திரட்டும் கடமையை சிஐடியு மேற்கொள்கிறது. அனைத்துச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக ளுக்கு முடிவுகட்டும் நோக்கத்துடன் தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்து  உழைக்கும் மக்களையும் ஒன்றி ணைக்கும் நோக்கத்துடன் உதயமான சிஐடியு, உழைக் கும் வர்க்க ஒற்றுமையை நிலைநிறுத்த; கார்ப்பரேட் மதவாத கூட்டை தோற்கடிக்கும் இந்தப் போராட்டத்தில் எப்போதும்போல் முன்னணியில் இருக்கும் என உறுதி யளிக்கிறது.வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டு மற்றும் அவர்களின் மதவெறி முயற்சிகளை தோற்கடிக்க, அனைத்து பிளவுவாத சக்திகளுக்கு எதிரான போராட் டங்களையும் புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல சிஐடியுவின் அமைப்பு தினத்தில் சபதம் ஏற்போம்.

கட்டுரையாளர் : சிஐடியு -மாநில உதவி பொதுச் செயலாளர்