articles

img

“தரமே தாரக மந்திரம்”- முனைவர் பி.சசிகுமார்

தரம் என்ற வார்த்தை இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. பிறக்கும் குழந்தை முதல் கல்லறை செல்லும் மனிதன் வரை ஒவ்வொரு பொருளிலும் தரம் தேவைப்படுகிறது.  இப்படிப்பட்ட தரம் பிறந்த கதையை கூறும் நூல் இது.
தரம் என்ற வார்த்தையை கேட்டு அறியாத மனிதன் 
எப்படி வானளாவிய கட்டிடங்களை உருவாக்கினான்.
தொழிற்புரட்சி உருவான காலத்தில் யாரெல்லாம் தரத்தை உருவாக்க கோட்பாடுகளைக் கொண்டு வந்தார்கள், என்ற கதையுடன் ஆரம்பிக்கும் புத்தகம் பாதி தாண்டியவுடன், இந்த கோட்பாடுகள் எப்படி நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படும் என்று விவரிக்கிறது. நம்மை கடந்து செல்லும் அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக கொண்டு தரத்தின் கோட்பாடுகள் விளக்கப்படுவது இந்த புத்தகத்தின் சிறப்பு. 
நூலாசிரியர் முனைவர் பி.சசிகுமார், நூல் பெற புதையல் பதிப்பகம்
தொடர்புக்கு: 9865257071, writersasibooks@gmail.com 
88 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ரூ.120/-