தடம் புரளும் அரசு ஊடகமும் தறிகெட்டுச் செயல்படும் ஊடகங்களும் - அ.விஜயகுமார்
“பாதுகாப்புத்துறையினர் மேற்கொள்ளும் தாக்கு தல் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் செயல் பாடுகளை நேரலையில் ஒளிபரப்புவதை அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் தனிநபர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற முக்கிய நட வடிக்கைகளை நேரலையில் வெளியிடு வதன் மூலம், ராணுவத்தின் செயல்திறன் பாதிக்கப்படுவதுடன், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலையும் உண்டாக்கும். கடந்த காலங்களில் நடந்த கார்கில் போர், மும்பை தாக்கு தல், காந்தஹார் விமானக் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் இதுபோன்ற செய்தி வெளியீட்டினால் பெரும் விளைவு கள் ஏற்பட்டன. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, அதுபற்றி விளக்கங்க ளைக் கொடுப்பார். அனைவரும் தங்க ளின் விழிப்புணர்வு மற்றும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று கடந்த வெள்ளியன்று (மே 9) மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் ஊடகங்க ளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
வேண்டுகோளை ஏற்றனவா ஊடகங்கள்?
இந்த வேண்டுகோளை ஏற்று ஊடகங் கள் நடந்துகொண்டதா என்றால் இல்லை. எல்லையில் பாகிஸ்தான் எப்படி அத்துமீறி தாக்குதல் நடத்துகிறதோ அது போல் இந்திய ஊடகங்கள் தன் பங்கிற்கு அத்துமீறுகின்றன. ஒரு தகவலோடு கொஞ்சம் மசாலா சேர்த்து பரபரப்பான செய்தியாக வெளியிடுவது பெரும்பா லான ஊடகங்களின் வழக்கம். ஆனால் ஒட்டு மொத்த செய்தியே மசாலாவாக இருந்தால் எப்படி இருக்கும்? மர்மக் கதைபோலத்தான் இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் எல்லை யையொட்டியுள்ள நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் பதற்றம் நிலவுகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்து டன் இருக்கிறார்கள். இதற்காக நாள்தோ றும் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்து கொண்டு நமது ராணுவத்தின் நடவ டிக்கையை பார்த்துக்கொண்டிருக்கி றார்கள். விவாதம் செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை மற்ற வர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். சில செய்திகள் குறித்து கருத்துக்களையும் தெரிவிக்கிறார்கள். இத்தோடு பொது ஜனத்தின் வேலை முடிந்துவிடுகிறது. ஆனால் பொது ஜனம் என்ற பெயரில் ஒரு கூட்டமே பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்கப்பார்க்கிறது.
இஸ்ரேல் தாக்குதல் வீடியோக்கள்...
காசா மீது இஸ்ரேல் நடத்திய விமானம் மற்றும் ட்ரோன் தாக்குதல் வீடியோக்க ளை வெளியிட்டு இந்தியா விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் என்று பொய்யான தகவல்களை வெளியிட்டு குதூகலித்துக் கொள்கிறார்கள். இவர்கள் வெளியிடும் வீடியோக்களை உண்மை அறியும் குழுவினர் அடுத்த நொடியிலே யே அம்பலப்படுத்தினாலும் கோயபல்ஸ் வாரிசுகள் வெட்கப்படுவதாக இல்லை. ராணுவத்தின் நடவடிக்கைகளை முப்படைகளின் அதிகாரிகள் நாள்தோறும் தில்லியில் செய்தியாளர்களுக்கு விளக்கி பேட்டியளிக்கிறார்கள். அவர்கள் சொல்லாத தகவல்களை கூட, இவர்கள் சொல்வதுதான் விசித்திரமாகவும் ஆச்சரி யமாகவும் உள்ளது. இத்தகைய தக வல்களை ஆளும் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களும் அந்த கட்சியின் பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களும் பரப்பு வதை வாடிக்கையாக வைத்திருக்கி றார்கள். ஒரு பக்கம் அரசு உண்மையான தக வல்களை அறிந்துகொள்ள பொறுமை யாக இருங்கள் என்று கூறுகிறது. மறு பக்கம் உறுதிப்படுத்தப்படாத மற்றும் மிகைப்படுத்தி வெளியிடப்படும் தகவல்க ளை வெளியிடும் ஊடகங்களை அரசு கண்டு கொள்ளவில்லை. “போர் வேண்டாம், சமாதானம் வேண்டும்” பாகிஸ்தானுடன் ராஜீய ரீதியில் பேச்சு நடத்தலாம் என்று கூறும் வயர்போன்ற பொறுப்பான இணைய ஊடகம் முடக்கப் பட்டுள்ளது. மே 6 ஆம்தேதி இரவு, பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் என்று சந்தே கிக்கப்படும் அமைப்புகளை குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் துல்லியமான 9 தாக்குதல்களை நடத்தியதிலிருந்து, இந்திய ஊடகங்கள் அதிரடியாகச் செயல்படத் தொடங்கிவிட்டன. அவர்கள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல் பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் சொந்தக் கதையை எழுதத் தொடங்கிவிட்டனர். உண்மையில், பஹல்காமில் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சில நாட்களுக்குள், தொலைக்காட்சி செய்தி தொகுப்பா ளர்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும், அது எவ்வாறு நடத்தப்பட வேண் டும் என்பதைக் கூட செய்து காட்டினர்.
திருந்தாத ஊடகங்கள்
எல்லையில் ராணுவம் ஒரு குண்டை வீசினால் செய்தி அலைவரிசைகள் 100 குண்டுகளை வீசுகின்றன. ஏசி அறை களில் இருந்துகொண்டே பாகிஸ்தானின் பல நகரங்களை இந்த ஊடகங்கள் கைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. இதையே ஒரு பத்திரிகையாளர், பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத், துறைமுக நகர மான கராச்சி, ராவல் பிண்டி மற்றும் சியால் கோட் போன்ற முக்கிய நகரங்களை பாலிமர் டிவி கைப்பற்றியது; ஏவுகணை தாக்குதல்கள் புதிய தலைமுறை கட்டுப் பாட்டிலும் கராச்சி துறைமுகம் தந்தி டிவி கட்டுப்பாட்டிலும் இருக்கிறது; ராணுவம் தொடர்பான அத்தனை முடிவுகளையும் அடுத்தகட்ட நகர்வுகளையும் இந்த மூன்று ஊடகங்களே வடிவமைக்கின்றன; அவர்களுக்கு நாம் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம் என்று கிண்டல் செய்தி ருந்தார். இதன் பின்னரும் இந்த ஊட கங்கள் திருந்தவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகாரப்பூர்வமான மோதல் தொடங்கி யவுடன் செய்தி அலைவரிசைகளுக்கு கூடுதல் வெடிமருந்து கிடைத்தது போல் ஆகிவிட்டது. தவறான தகவல்கள், காதுக ளைப் பிளக்கும் உளறல்கள், கற்பனை யான வசனங்களை அள்ளி தெளித்து வருகின்றன. தொலைக்காட்சியைப் பார்த்தால் இது எப்போதும் நடப்பதுதானே என்று நீங்கள் கருதக்கூடும். ஆனால், ஒரு நாடு அதன் அண்டை நாட்டுடன் போரில் இருக்கும்போது, பாதுகாப்புப் படையினரின் அதிகாரப்பூர்வ தகவல்க ளுக்காக காத்திருக்கக்கூட அவர்களுக்கு நேரமில்லை.
தடம் புரண்ட டிடி நியூஸ்...
அரசாங்க ஊடகமான டிடி நியூஸ் அலைவரிசையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மே 6 அன்று தனது விவாத நிகழ்ச்சி யை விளம்பரப்படுத்தும் ஒரு பதிவில், தூர்தர்ஷன் தொகுப்பாளர் அசோக் ஸ்ரீவஸ்தவா, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத்தின் புகைப்படங்களு டன் ஒரு சுவரொட்டியை வெளியிட்டார். ‘பாரத் தயார் பர் கர் மே கிட்னே கட்டார்? (இந்தியா தயாராக உள்ளது, ஆனால் நாட்டில் எத்தனை துரோகிகள் ?)’ என்ற வாசகத்துடன். காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே மற்றும் எம்பி இம்ரான் மசூத் ஆகியோரை “கத்தார்” என்று முத்திரை குத்தினார். இதற்கு பாஜகவும் ஒன்றிய அரசும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது. ஆனால் அரசாங்கத்திடமிருந்து இதுவரை ஒரு பதிலும் இல்லை. துல்லியமான மற்றும் கண்ணியமான செய்திகளை வழங்கும் பாதையில் இருந்து டிடி நியூஸ் தடம்புரண்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது.
அதிர்ச்சியடையும் பாதுகாப்புத் துறையினர்
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு பிறகு பல தனியார் செய்தி அலைவரிசைகள் வெளியிடும் தகவல்க ளை கண்டு பாதுகாப்புத் துறையினரே அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். கராச்சி துறை முகத்தின் மீது அரபிக்கடலில் இருந்து ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் தாக்கு தல் நடத்தியதாகவும் தாக்குதலில் துறை முகம் சின்னாபின்னமாகிவிட்டதாகவும் மேற்கு வங்கத்தில் இருந்து ஒளிபரப்பா கும் பிரபல வங்காள தொலைக்காட்சியான ஏபிபி ஆனந்தா ஒரு வீடியோவை ஒளி பரப்பியது. கடைசியில் அந்த காணொலி போலியானது என தெரியவந்தது. அமெ ரிக்காவில் பென்சில்வேனியாவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. இதற்காக அந்த தொலைக்காட்சி சிறிய வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.
போலி வீடியோக்களும் கண்டு கொள்ளாத அரசும்
இதுபோன்ற பல போலியான வீடி யோக்களை தனியார் தொலைக் காட்சிக ளும் இணைய ஊடகங்களும் வெளியிட்டு மக்களிடையே போலியான தேசிய உணர்வை கட்டமைத்து வருகின்றன. இதுபோன்ற போலியான செய்திகள் மற்றும் தகவல்களை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் மீது தற்போதுள்ள சட்டங்க ளின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தி ற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசு தரப்பில் ஒரு மென்மையான கண்டனம் கூட இல்லை? அரசாங்கம் அதன் அதிகா ரப்பூர்வ விளக்கங்களுக்கு மாறாக அவற்றைப் பேச அனுமதிப்பது அவர்க ளுக்கு வசதியாக இருக்கிறது. அரசாங்கம் நேரடியாக சொல்ல முடியாததை தங்க ளுக்கு சாதகமான ஊடகங்கள் வாயிலாக சொல்லிக்கொண்டிருக்கிறது. இப்படி தீவிர தேசியவாத வெறியை ஊட்டி வரு வதை கேள்விகேட்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்து கிறார்கள்.
எல்லைப் பகுதி மக்களின் துயரம்...
ஆபரேசன் சிந்தூர்க்குப் பிறகு, அனைத்து முக்கிய செய்தித்தாள்களிலும் செய்தி வெளியீடு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகில் வசிக்கும் காஷ்மீரிகளின் துயரம் குறித்த கதை மட்டும் இல்லை. விதிவிலக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டும் அதை வெளியிட்டி ருந்தது. அது எல்லையைத் தாண்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் பெயரையும் வயதையும் வெளியிட்டது. எல்லையில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை உறுதிப் படுத்தாத அரசாங்கத்தை இந்த ஊட கங்கள் கேள்வி கேட்க தயாராக இல்லை. அப்படி அவர்கள் கேட்டிருந்தால் போர் காலத்தின் போது ஊடகங்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற வரை யறைகளுக்கு அது அர்த்தமாக இருந்தி ருக்கும். மேலும் இந்தப் போருக்கு ஒரு மனிதாபிமான முகம் கிடைத்திருக்கும்.
கேள்வி கேட்காத ஊடகங்கள்
காஷ்மீர் டைம்ஸ் செய்தது போல், இந்திய ஊடகங்கள் ஏன் இந்தக் கேள்வி களைக் கேட்கவில்லை? கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், காஷ்மீர் டைம்ஸ் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதிக் கப்பட்ட காஷ்மீரிகளின் வாழ்க்கை குறித்து தினசரி செய்திகளை வெளியிட்டு வருகிறது. உரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களுக்கு நீங்கள் சென்றால், காஷ்மீரின் இரு பக்கங்களையும் பிரிக்கும் நீலம் நதியுடன் கூடிய ஆழமான பள்ள த்தாக்கின் குறுக்கே, மறுபக்கத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம். இரு நாடு களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் இருபுறமும் உள்ள மக்கள் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்கின்றனர். ஆனாலும், பெரும்பாலும், அவர்க ளின் கதைகள் ஒருபோதும் பேசப்படுவ தில்லை. போரின் உண்மையான விலை யை இதுபோன்ற சாதாரண மக்களே செலுத்துகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பற்றி செய்தி வெளியிடாத அச்சு ஊடகங்கள் நியாய மான கேள்விகளைக் கேட்பதில்லை. உதாரணமாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேசன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறும்போது, அவர்கள் யார், அவர்கள் எங்கிருந்தார்கள், பாகிஸ்தானில் குறி வைக்கப்பட்ட ஒன்பது இடங்களில் ஏதே னும் ஒன்றில் இருந்தார்களா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை, அத்தகைய கேள்வி கேட்கப் படவில்லை. இனியும் கேட்கப்படுமா என்பது சந்தேகமே. பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியது. இதுகுறித்து சில புகைப்படங்கள் வெளி யிடப்பட்டன. அது குறித்து நிறைய கேள்வி கள் உள்ளன. ஆனால் அதற்கு அரசாங் கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் இல்லை. டான் அல்லது ஜியோ நியூஸ் போன்ற பிரபல பாகிஸ்தான் ஊட கங்களின் தளங்களை கூட இந்திய அரசு முடக்கியுள்ளதால், இந்திய பத்திரி கையாளர்கள் மறுபுறம் என்ன நடக்கிறது. அங்கே என்ன சொல்லப்படுகிறது என்ப தைப் புரிந்துகொள்ள பிபிசி போன்ற சர்வ தேச ஊடக நிறுவனங்கள் அல்லது ராய்ட்டர்ஸ் போன்ற செய்தி நிறுவனங்க ளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
பொய்ச் செய்திகளுக்கு சுதந்திரம் வினா எழுப்பினால் முடக்கம்
பொய்ச் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படும் போது ஆதாரங்களோடுகேள்வி கேட்கும் ஊடகங்கள் அச்சத்துடனே செயல்பட வேண்டியுள்ளது. சமூக ஊடக தளமான X இல் 8,000 கணக்குகள் இந்திய அர சாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகள் ஏன் முடக்கப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான பதில் அரசாங்கத்திடமும் எக்ஸ் சமூக வலை தள நிறுவனத்திடமும் இல்லை.
பல்கலை பேராசிரியர் பணி நீக்கமும் பாஜகவின் மிரட்டலும்
இந்தியன் எக்ஸ்பிரஸின் முசாமில் ஜமீல் மற்றும் காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசின் போன்ற மூத்த காஷ்மீர் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆபரேசன் சிந்தூரில் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதை கேள்வி கேட்டதற்காக எஸ்ஆர்எம் பல்கலைக் கழக பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை எந்த கல்வி நிலையத்திலும் சேர்க்கக் கூடாது என்று கல்வி நிறுவனங்களை பாஜக மிரட்டுகிறது. ஆபரேசன் சிந்தூரை விமர்சித்ததற்காக கேரளாவை தளமாகக் கொண்ட மக்தூப் செய்தி தளத்தில் எழுதிவரும் இளம் பத்திரிகையாளர் ரெஜாஸ் நாக்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நட்புறவு பராமரிக்கப்பட வேண்டும். போர் எதற்கும் தீர்வல்ல. பேச்சுக்கள் மூலமே தீர்வு காணவேண்டும் என்று சொன்னால் அந்த ஊடகத்தின் கதையை முடித்து விடுகிறார்கள். உண்மை உறங்கச்சென்றால் பொய் ஊர் சுற்றும் என்பார்கள். ஆனால் உண்மை விழித்துக்கொண்டே இருந்தா லும் நமது நாட்டில் பொய்தான் சுதந்திர மாக சுற்றிக் கொண்டிருக்கிறது. ஏனென் றால் கடந்த சில ஆண்டுகளாக அதற்கு தான் மவுசு அதிகமாக உள்ளது.