போராட்டக் களத்தில் உதித்த செஞ்சூரியன் ஏகேஜி
“நான் என்றும் மக்கள் ஊழியனே” - ஒரு தியாகியின் சுயசரிதை
“கட்சியை தங்கள் ரத்தத்தினாலும் சதையினாலும் கட்டி வளர்த்த தியாகிகளின் பெயர்களும், செயல்களும் எனக்கு ஆவேசம் அளிக்கட்டும். தோழர் களே முன்னேறுங்கள். முன்னேறுங்கள்!” இவையே ஏ கே கோபாலனின் 300 பக்க சுயசரிதையின் கடைசி வரிகள். இந்த வரி களில் ஒரு வாழ்நாள் முழுக்க போராடிய புரட்சியாளரின் உள்ளம் முழுவதும் துடிக்கிறது. இன்று நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு சுதந்திரத்தின் காற்றிலும் கம்யூனிஸ்டு களின் தியாகமும் உழைப்பும் கலந்திருக் கிறது. நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு உரிமைக்கு பின்னாலும் மகத்தான போராட்ட வரலாறு மறைந்திருக்கிறது. அந்த வரலாற்றின் மிக முக்கியமான அத்தி யாயமே ஏ கே ஜியின் வாழ்க்கை. இந்திய நாடு முழுவதும் எங்கெல்லாம் போராட்டம் நடந்ததோ, அங்கெல்லாம் ஏ.கே.ஜியின் கால்கள் பயணித்தன. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டமாக இருந்தாலும், காலனி விடு தலைக்குப் பிறகு இந்திய முதலாளித்துவ வர்க்க காங்கிரஸ் அரசாக இருந்தாலும், அவரது போராட்டப் பயணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. அவரை விடுதலைப் போராட்ட கள த்தில் கைது செய்தார்கள், சிறையில் அடைத் தார்கள், சித்திரவதை செய்தார்கள், தனி மைச் சிறையில் அடைத்து சொல்ல முடி யாத துயரத்தைத் தந்தார்கள். அத்தனை யும் அனுபவித்து உறுதி மிக்க தலைவராக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். நாடே விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஏ கே ஜி. இந்த வரியை வாசிக்கும்போது கண்களில் கண்ணீர் வருவது மட்டுமல்ல, நெஞ்சத்தை யே பிழிந்தெடுக்கக்கூடிய மனநிலை யை உருவாக்குகிறது. ராஜதுரோக குற்றச்சாட்டுப்பட்டு விடுதலைக்குப் போராடிய தேசத்தின் தலைசிறந்த புதல்வன் சிறையிலேயே அடைக்கப் பட்டிருந்த கொடுமை ஏன்? இந்திய விடு தலையின் பின்பு உருவான அரசின் வர்க்க உள்ளடக்கம் தெளிவாகிறது. மாணவப் பருவத்திலேயே தேசிய இயக்கங்களில் நாட்டம் கொண்டு கிராமம் கிராமமாக சுற்றினார். ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்று கண்ணூர் திரையிலும், பிறகு வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். குருவாயூர் சத்யாகிர கம், பட்டினி பட்டாள யாத்திரை, மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், ஆந்திரா என போராட்டங்களின் நாயகனாக வலம் வந்தார். காசர்கோட்டில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்டு இந்தியாவின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கினார். நாடாளு மன்றத்தில் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் தனது வர்க்கத்தையும் வர்க்க நலனையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. அதன் மயக்கும் பசப்பு வார்த்தைகளையும் வாழ்க்கைச் சூழலை யும் எள்ளி நகையாடினார். உழைப்பாளி மக்களின் உயர்ந்த குரலை எங்கும் எதிரொலித்தார். “வரலாறு எங்களுக்கு நீதி வழங்கும்...” அரைபாசிச அடக்குமுறை கொண்டுவந்த அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். “கடந்த 45 ஆண்டுகளில் 17 ஆண்டுகள் சிறைவாசம் செய்த எனக்கு சிறை மீது பயமில்லை. ஆனால், இரண்டு நாட்கள் சிறையில் கிடைத்த மிருகத்தனமான தாக்குதல்கள் எனக்கு தீராத மனவேதனையைத் தந்துள்ளது” என்று துவங்கிய அந்த உரை, தேர்தல் முடிவுகள், ஜனநாயகப் பறிப்பு, தொழிலாளர்-விவசாயிகள் உரிமைகளைப் பறித்தது, போலீசும்-ஆளும் கட்சியும், பெருமுதலாளியும்-நில பிரபுக்களும் இணைந்து நாடு முழுவதும் நடத்துகின்ற வன்முறையை, அதிகார துஷ்பிரயோகத்தைப் பட்டியலிட்டது. விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் தனிநபர் சுதந்திரத்திற்கான அவரது வழக்கு இன்றைக்கும் இந்தியாவின் தலைசிறந்த வழக்காகும். இன்றைக்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுதந்திரத்தைப் பேணிக் காக்கக்கூடிய முன்மாதிரியான வழக்காக அமைந்துள்ளது. மக்களுக்கான போராட்டத்தையும் ஏ கே ஜியைப் பிரித்துப் பார்க்க இயலாது. நாடாளுமன்ற வாதத்தையும் சந்தர்ப்ப வாதத்தையும் மார்க்சிய நெறிகொண்டு வீழ்த்திய மாமனிதர் அவர். உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மாநாடுகளில் பங்கேற்று அனுபவங் களைப் பரவலாக்கினார். மார்க்சிய லெனி னிய போராட்டக் களத்தின் அனுபவத் தால் புடம்போடப்பட்ட மார்க்சிய கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். கம்யூனிஸ்டுகள் எந்த சூழ்நிலையில் பணியாற்றினார்கள்? போராட்டக் களத்தை யும் அரசு நிர்வாகத்தையும் எத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டார்கள்? அதன் மூலம் மக்களின் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை அறிய வேண்டுமானால், நீங்கள் தவறாது வாசிக்க வேண்டிய புத்தகம் இது.