‘நிரந்தரப் பணி நியமனமே இல்லை’ பிரச்சாரக் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேச்சு
இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய பாஜக அரசு பொய்யை பரப்புகிறது. உலகின் 4 வது பொருளாதார நாடாக மாறி விட்டதாக கூறுகிறது. மக்களின் சராசரி மாத வருமானம் உயர்ந்துள்ளதா? ஒருசில முதலாளிகள் 10 லட்சம் கோடி ரூபாய் வைத்திருந்தால் அது வளர்ச்சி அல்ல. நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை ஒன்றிய அரசு குறைக்கிறது. விவசாய நிலங்கள், மலைகள், காடுகள், கனிம வளங்களை பெருமுதலாளிகளிடம் கொடுக்க ஒன்றிய பாஜக அரசு துடிக்கிறது. தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற தொழிலாளர் சட்டங்களை திருத்துகிறது. கடந்த 4 ஆண்டுகளாக எந்த தொழிற் சாலையிலும் நிரந்தர தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. அனைத்து நியமனங் களும் ஒப்பந்த முறையிலேயே செய்யப்படு கிறது. தமிழ்நாடு அரசு நிறுவனமான, மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருமே ஒப்பந்த தொழிலாளர்கள்தான். ஒன்றிய பாஜக அரசு அனைத்து விலைகளையும் உயர்த்துகிறது. சேவை வரி என்ற பெயரில் அனைத்திற்கும் வரி போடு கிறது. முதலாளிகள் வரம்பின்றி விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கிறது. ஒன்றிய அரசின் கொள்கையால் மக்கள் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. முதலாளிகள் கொள்ளை அடிக்க வேலை நேரத்தை உயர்த்துகிறார்கள். சட்டங்களை திருத்துகிறார்கள். இவற்றை தொழிலாளி வர்க்கம் அனுமதிக்காது. மக்கள் தங்கள் தேவைக்கு தங்கத்தை வங்கியில் அடகு வைக்க சென்றால் ஏராளமான நிபந்தனைகளை விதிக்கிறது. வட்டிக் கடையை நோக்கி அனுப்புகிறது. இத்தகைய சூழலில் உழைப்பாளிகளை பாதுகாக்க முறைசாரா தொழிலாளிகளுக்கு ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.