articles

img

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்

தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி  நிலம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு  ஏராளமான நிபந்தனைகளோடு ஆங்கிலேயே  ஆட்சிக் காலத்தில் இந்த நிலம் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு ஏக்கர் நிலம் கூட பட்டியலின மக்க ளிடம் இல்லை.  உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆணை யிட்டும், அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும், சட்டப்படி நிலத்தை கையகப்படுத்த மறுக்கிறார்கள். சட்டத்தடை இல்லை; மனத்தடை மட்டுமே உள்ளது.  பஞ்சமி  நிலத்தை மீட்பு மக்களுக்கு வழங்கி தமிழக அரசு புதிய சாதனையை படைக்க வேண்டும். அரசுக்குதானே பெருமை! நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் மிகச்சிறந்த திட்டம். 50 லட்சம் ஏக்கர் வழங்கப்படும் என்று கூறி ஒரு லட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே வழங்கப்பட்டது. ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட சிறப்பான அந்த திட்டம் யாருக்கும் தெரியாமல் அடங்கிப் போய்விட்டது. எனவே, புறம்போக்கு நிலங்களில் விவ சாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். குடிமனைப்பட்டா பிரச்சனையும் தீர்க்கப்படாமல் உள்ளது. பட்டா கேட்பது குற்ற மல்ல. அது அரசுக்கு எதிரானதல்ல. மக்கள் நலன் சார்ந்தது. பட்டா இல்லாத குடும்பமே தமிழ கத்தில் இல்லையென்றால் திமுக அரசுக்குத் தானே பெருமை. அதனை செய்ய வேண்டும். நீதிபதிகளின் உத்தரவால் மோதல் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கண்மூடித்தனமாக செயல்படு கிறது. மனிதாபிமானமற்ற  உத்தரவுகளை பிறப்பிக்கிறது. நீர்நிலைகள் தற்போது எப்படி உள்ளன என்பதை ஒரு குழு அமைத்து ஆய்வு கூட செய்யாமல் நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர்.அவற்றை உடனே செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிடு கின்றனர். சவடால் பேசுகின்றனர்.  அரசுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக தீர்ப்பு வழங்கு வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால்  அர சுக்கும் மக்களுக்கும் மோதலை உருவாக்கு கின்றனர். மேல்முறையீட்டு வழக்கு உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், உயர்நீதிமன்றம் ஏ1 குற்றவாளியை விடுதலை செய்தது. இதை எதிர்த்து அரசு, மார்க்சிஸ்ட்  கட்சி, சங்கரின் மனைவி கவுசல்யா ஆகி யோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். 5 ஆண்டுகளாக விசார ணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மேல்முறை யீட்டு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வற்புறுத்துமாறு தலைமைச் செயலாளரை சந்தித்து கோரினோம். அதன்மீது  இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கும் வழங்க வேண்டும். சிறு தொழில்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இலவச மின்சாரத்திற்கு எதற்கு ஸ்மார்ட் மீட்டர்? டன் கரும்புக்கு 4 ஆயிரம் தரப்படும், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரு கிறோம். மாதந்தோறும் மின் அளவீடு செய்யும் முறையை அமல்படுத்துவோம் என்று கூறி விட்டு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிறார்கள். இலவச மின்சாரம் பெறும் 23 லட்சம் விவசாய மின் இணைப்பு, 11 லட்சம் குடிசைகளுக்கு எதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும்? வீண் செலவு ஏன் செய்ய வேண்டும்? எனவே இவற்றையெல்லாம் தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதிலிருந்து...