articles

‘மோடியை யாருக்கும் பிடிக்கவில்லை’

‘மோடியை யாருக்கும் பிடிக்கவில்லை’

மக்களின் தோழர்கள் “

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் எல்லாம் சாதாரண வீடுகளை சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். கட்சியின் இந்த பிரச்சாரப் பணிக்காக அவர்கள் வேலைக்கு போவதை தள்ளிவைத்தனர். தமிழ்நாட்டில் கூட்டத்திற்கு வருவதற்கே பணம் கொடுக்கிற கலாச்சாரம் ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களுக்கு பணம் செலவு செய்யவில்லை - பிரச்சாரத்திற்கு வந்த தோழர்கள் தான் கட்சிக்கு செலவு செய்தனர்.”

தலைமுறை தலைமுறையாக...

“ஏப்ரல் 6ஆம் தேதி 1.5 லட்சம் பேர் பங்கேற்ற மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். கடைக்காரர் ஒருவர் கேட்டார் - ‘தலைக்கு 300 ரூபாய் கொடுத்திருப்பீர்களா? 100 கோடி செலவு செய்திருப்பீர்களா?’ நாகப்பட்டினத்திலிருந்து வந்த பெண் தோழர்கள் பதில் சொன்னார்கள் - ‘தலைமுறை தலைமுறையாக நாங்க காசு  கொடுத்துதான் செயல்படும் என்கிற உழைக்கும் மக்கள் கட்சியில் இருக்கிறோம். தன்மானத்தோடு இயங்குகிற அரசியல் கட்சி இது.’” மோடி அரசின் தோல்விகள் “2014இல் 400 ரூபாய் ஆக இருந்த சிலிண்டர் இன்று 1000 ரூபாய். 68 ரூபாய் ஆக இருந்த பெட்ரோல் இன்று 110 ரூபாய். 2000 வீடுகளில் சென்று பேசினோம் - யாருக்குமே மோடியை பிடிக்கவில்லை. மோடியைப் பற்றி மக்கள் சொன்ன வார்த்தைகளை மேடையில் பேச முடியாது. அவ்வளவு மனக்குமுறல்.” அதானி-அம்பானி செல்வ ஆட்டம் “அதானி வீட்டு திருமணத்தில் 72 வயதில் ரஜினிகாந்த் நடனமாடினார். அம்பானியின் மருமகள் அணிந்திருந்த சேலையே நகையால் நெய்யப்பட்டது. ஒரு குடும்பம் சேலையையே நகையால் செய்ய முடியும் என்றால் அந்த குடும்பத்துக்கு சேவை செய்கிற மோடியை என்னவென்று சொல்வது?” பெட்ரோல் கொள்ளை “கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கை யில் பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது? 110 ரூபாய் பெட்ரோலில் - அரசின் வரி 30 ரூபாய், கச்சா எண்ணெய் விலை 30 ரூபாய், மீதம் 40 ரூபாய் அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு போகிறது. அரசாங்க கம்பெனி செய்து கொண்டிருந்த பணியை அம்பானிக்கு கொடுத்துவிட்டார்கள்.” வேலைவாய்ப்பு மறுப்பு “ஒன்றிய அரசு கம்பெனிகளில் 10 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன. இதில் லட்சக்கணக்கான இந்துக்களுக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? உண்மையில் இந்துக்கள் மீது அக்கறை இருந்தால் இதைதான் செய்ய வேண்டும். ஏன் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறீர்கள்?” மதுரை எய்ம்ஸ் கேலிக்கூத்து “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவோம் என்று சொன்னீர்கள் - ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. பத்து வருடம் ஆகிவிட்டது. என்ன கட்டுகிறீர்கள் - மருத்துவமனையா அல்லது விண்வெளி மண்டலமா?” பாசிஸ்ட்டுகளின் பொய்மை “ஜெர்மன் அறிஞர் ஆய்வின்படி - ஹிட்லர், முசோலினி, டிரம்ப்பை விட அதிகம் பொய் சொல்பவர் மோடி. பாசிஸ்டுகள் ஏன் பொய் சொல்கிறார்கள்? மக்கள் நம்பிவிடுவார்கள் என்ப தற்காக அல்ல - தொடர்ந்து பொய் சொன்னால் மக்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடலாம் என்பதற்காக.” கம்யூனிஸ்ட் சாதனைகள் “2004இல் ஜோதிபாசு பிரதமராக வேண்டும் என்று எல்லா கட்சிகளும் கேட்டன. ஒரு வாரம் காத்திருந்து பெரும்பான்மை இல்லை என்று மறுத்தோம். பிரதமர் பதவியை ஏற்கவில்லை - ஆனால் 100 நாள் வேலை திட்டத்தை இடதுசாரி எம்.பி.களின் ஆதரவால் அரசை நிர்ப்பந்தித்து கொண்டுவந்தோம்.” மது பாதிப்பு அதிர்ச்சி “சென்னை குடிசைப் பகுதிகளில் மாதர் சங்கம் ஆய்வு நடத்தியது. 40% வீடுகளில் உழைக்கும் தன்மையில் ஆண்கள் இல்லை. 20% வீடுகளில் மது அருந்தி இறந்துவிட்டார்கள், மீதி 20% வீடுகளில் வேலைக்கு போக முடியா மல் ரத்த சோகையாகி கிடக்கிறார்கள்.” எச்சரிக்கை “அண்ணாமலை அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிறார். அதிமுக-பாஜக கூட்டணி தலைமை குறித்து பஞ்சாயத்து நடக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக தலையெடுத்துவிடக்கூடாது. மக்கள் இந்த கபட நாடகத்தை புரிந்துகொள்ள வேண்டும்.” மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டி,  செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற மூன்று நாள் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் நிறைவுக்கூட்டத்தில் சிபிஎம் மாநில  செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ்  ஆற்றிய உரையில் இருந்து...