நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட் டணி 230க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கம் வகிக் கும் தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றாலும், பாஜக தனி பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு – புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகு திகளிலும் வெற்றி பெற்று, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு பலத்த அடி கொடுத் துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக செயல்பட்டு வந்த அதிமுக, பாஜகவினர் தற் போது தேர்தல் முடிவுகளால் ‘அப்செட்’ ஆகி சமூக வலைதளத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு ஆட்சி புரிந்து வந்தாலும், இந்த முறை தமிழ்நாட் டில் அதிக இடங்களில் பாஜகவினர் போட்டி யிட்டதால், எப்படியும் பல இடங்களில் வெற்றி பெறுவார்கள் என நினைத்திருந் தோம். குறிப்பாக, கோவையில் பாஜக மாநி லத் தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என மிக எதிர்பார்ப் போடு காத்திருந்தோம்.
ஆனால், எங்களு டைய எண்ணத்திற்கு மாறாக திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற் றது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை எங்களுடன் நட்பு பாராட்டிய அதிமுகவினர், ஏதோ ஒன்று, இரண்டு இடங்களில் வெற்றி பெற்று இருந்தால் கூட, எங்களுக்கு ஒருவித ஆறுதல் இருந்திருக்கும்.
ஆனால். அவர்க ளும் தோற்றுள்ளதால் திமுக கூட்டணி தனிப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் பலரும் எங்களை கிண் டல் கேலி செய்து வசை பாடுவதால் நாங்கள் வலைதளங்களுக்கு வருவதை தவிர்த்து வரு கிறோம் என்றார். அதேபோல, அதிமுகவை சேர்ந்தவர்க ளும் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது தான் தோல்வியுற்றோம். தற்போது தனித்து நிற்கிறோம்; கட்டாயம் வெற்றி பெற்று விடு வோம் என நினைத்திருந்த நிலையில் எங்கள் எண்ணத்தில் இடி விழும் வகையில் தேர்தல் முடிவுகள் உள்ளது. முன்பு பாஜக உடன் கூட் டணி வைத்ததின் விளைவு தற்போது வரை எங்கள் தோல்வி தொடர்கிறது என்றனர். இந்த தேர்தல் முடிவுகள் அதிமுக, பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பேரிடியை தந்துள்ளது என்பதே எதார்த்த உண்மை.
-எம்.பிரபாகரன்