articles

img

‘மூலதனச் செலவு’ என்ற பெயரில் கூட்டுக் களவாணிகளின் கொள்ளை - பேரா.பிரபாத் பட்நாயக்

அரசாங்கத்தின் சொந்த மதிப்பீட்டின்படியே பார்த்தால் கூட, நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, அடுத்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமான விகிதம் மாறாமல் அப்படியே இருக்கும். செல்வ வரியினை விதிப்பதன் மூலம் அல்லது செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் பிற வரிகளின் மூலம், அரசு வருமானத்தை உயர்த்தும் முயற்சிகளை இன்னும் தெளிவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

இன்றைக்கு இந்திய பொருளாதாரம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை என்ன வென்றால் நுகர்வுச் செலவின வளர்ச்சி  விகிதம். அதன்  உண்மை மதிப்பில் மந்தமாகியுள்ளது என்பது தான்.  2019-20க்கும் 2022-23க்கும் இடையில் ஒரு தனி நபரின் உண்மை நுகர்வுச் செலவினம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்து டன் ஒப்பிடும்போது 5 சதத்திற்கும் குறைவாகத் தான் அதிகரித்துள்ளது. பெருந் தொற்றுக் காலத்துடன் ஒப்பிடும் போது ஆழமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஒரு சிறிய அளவிற்கு மீட்சி ஏற்பட்டுள்ளது என்ற போதும், அது முதலீட்டினால் ஏற்பட்ட மீட்சியே தவிர,  நுகர்வினால் ஏற்பட்ட மீட்சியல்ல.   இதில் வெளிப்படையான இரண்டு பிரச்சனைகள் உள்ளன.

தேக்க நிலையிலேயே வெகுமக்களின் நுகர்வு

முதலாவதாக, முதலீடு காரணமாக ஏற்படும் மீட்சி நிலைக்கக் கூடியது அல்ல.   இது, வெறுமனே பயன் படுத்தப்படாத உற்பத்தித் திறன், (அதாவது - கிராக்கி யை மிஞ்சிய உற்பத்தி), பயன்படுத்தப்படாத உள்கட்ட மைப்பு வசதி ஆகியவற்றின் குவியலுக்கு வழி வகுக்கும்.  எனவே, வங்கிகளின் கடன்கள் திருப்பி வசூலிக்க முடியாததாக ஆக்கப்படும்.   வங்கிகளால் திரும்பப் பெற முடியாத கடன்களின் காரணமாக, நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை அச்சுறுத்தப்படுவதோடு, தவிர்க்க முடியாமல், அது பொருளாதார மீட்சியைத் தடுக்கும்.  இரண்டாவதாக, வளர்ச்சி என்பது சாதா ரண வெகுமக்களின் வாழ்நிலையை மேம்படுத்த வேண்டும். வெகுமக்களின் நுகர்வு தேக்க நிலையி லேயே இருக்குமென்றால் அவர்களின் வாழ்க்கை மேம்படவில்லை என்பதும், வளர்ச்சி என்பதைப் பேசுவ தற்கு ஒன்றுமில்லை என்பதும் வெளிப்படையாகிறது.

நுகர்வினைத் தூண்டுவதே பிரதான கடமை 

எனவே, 2023-24 பட்ஜெட்டின் முக்கிய பிரதான கடமை என்பது பொருளாதாரத்தில் நுகர்வினைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.  அதற்கு சமூக நலத்துறையின் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டி ருக்க வேண்டும்.  உதாரணத்திற்கு இந்திய உணவு தானியக் கிட்டங்கிகளில் பயன்படுத்தப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் உணவு தானியங்களை எடுத்துக் கொள்வோம்.  பசியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், அடிப்படை சுகாதாரத்திற்கு, மருத்துவச் செலவினங்களுக்கு, வீட்டிற்கு, கல்விக்கு என- இது போன்ற நிர்பந்திக்கும் தேவைக்கான செலவினங்கள் போக, மக்களின் கைகளில் வாங்கும் சக்தி என்று எதுவும் மிஞ்சவில்லை. இதன் காரணமாகத்தான், உணவு தானியக் கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் வாங்குவாரின்றி குவிந்து கிடக்கின்றன.  ஆனால் பட்ஜெட் இதற்கானதை செய்யவில்லை; மாறாக, மூலதனச் செலவினங்களை மேலும் அதிகரிப்ப தற்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்காக, சமூகத் துறைகளில் அரசாங்கச் செலவினங்களை மேலும் வெட்டிச் சுருக்குவதை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய உதாரணம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டம்.  இந்த சட்டத்தின் கீழ் செலவின நிதி ஒதுக்கீட்டினை ரூ. 60000 கோடிகளுக்கு - அதாவது பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த அளவிற்குக் குறைத்துள்ளது.  2021-2022ல் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.1,12,000 கோடிகளில் இது பாதியளவு மட்டுமே.  அரசாங்கம் இந்தத் திட்டத்தை ஒட்டு மொத்தமாக இழுத்து மூட விரும்புகிறது என்பது தவிர்க்க முடியாமல் வெளிப் படையாகத் தெரிகிறது.

ஏழைகளையே மேலும் உறிஞ்சி...

இந்த அரசாங்கம், ஒருபுறத்தில் 81 கோடி மக்களுக்கு மாதம் ஒன்றுக்கு இலவசமாக 5 கிலோ உணவு தானியம் அளிப்பதனை தன்னுடைய சாதனையாக தமுக்கடித்துக் கொண்டிருக்கிறது. மறு புறத்தில்,  2022-23 ஆம் நிதியாண்டிற்கான மறு மதிப்பீட்டுத் தொகையுடன் ஒப்பிடுகையில், உணவு மானியம் என்பது 31 சதம் வெட்டப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன? ஏழை மக்களில் ஒரு பிரிவினர்க்கு இலவச தானியம் வழங்க, அதே ஏழை மக்களில் மற்றொரு பிரிவினரை உறிஞ்சிப் பிழிகிறது என்பது தானே?   அதே போன்று ஊரக வளர்ச்சிக்கான செல வினத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்தில், உண்மை மதிப்பீட்டில் அல்லாமல் பெயரளவிற்கு, சிறிய அதிகரிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது இந்தத் துறைகள் உண்மை மதிப்பீட்டில், செலவினத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் நிச்சயம் சரிவினை சந்திக்கும். 

மாநில நிதி பங்குகள்  வெட்டிக் குறைப்பு

ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி பங்குகள் உள்ளிட்ட மொத்த அரசாங்கச் செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட குறைவான விகிதத்திலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022-23இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இதன் பங்கு 15.3 சதவீதமாக இருந்தது. தற்போது 14.9 சதவீதமாகக் குறைகிறது.  2022-23ல்  நிதிப் பற்றாக்குறையின் விகிதம் 6.4 சதவீதமாக இருந்தது.  தற்போது 5.9 சதவீதமாக வீழ்ச்சியடைந் துள்ளது.  எனவே, கிட்டத்தட்ட, நிதிப்பற்றாக்குறையின் விகிதத்திலேயே அரசாங்கச் செலவினமும்  சரிந்துள்ளது. நுகர்வைத் தூண்டுவதில் அரசு காட்டும் அளவுக்கு அதிகமான சிக்கனம், மாநில அரசுகளுக்கான நிதி பங்கீடுகள் ஒதுக்கீட்டிலும் பிரதிபலிக்கிறது. 2021-22ல் ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கான நிதி பங்கீடு ரூ.4,60,575 கோடியாக இருந்தது. இது 2022-23ல் ரூ.3,67,204 கோடியாகக் குறைந்தது; இது திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மேலும் ரூ.3,07,204 கோடியாக குறைக்கப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.3,59,470 கோடிகளை மட்டுமே ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்குவதற்கு ஒதுக்கியுள்ளது. 2022-23 இல் ஏற்பட்ட பற்றாக்குறையை சரிசெய்வதற்கு தேவைப்படும் தொகையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.  இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டை விட குறைவாக உள்ளது. சமூக நலனுக்கான செலவினங்களுக்கு மாநில அரசுகள் தான் கணிசமான பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், ஒன்றிய அரசு, இந்த விஷயத்தில் கஞ்சத்தனமாக இருப்பதோடு, மாநில அரசுகள் மீதும் அந்த கஞ்சத்தனத்தை திணிக்கிறது. ஒன்றிய அரசு வேண்டுமென்றே நிதியாதார வளங்களை மையப் படுத்துவதன் மூலம் கூட்டாட்சி கட்டமைப்பை – நிதி கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துகிறது.

அதிகரிக்கப்படும்  மூலதனச் செலவினம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் ம்போது ஒன்றிய அரசின் செலவினங்கள் குறைக்கப் பட்டுள்ளன. இந்த குறைக்கப்பட்ட செலவினங்க ளுக்குள், மூலதனச் செலவில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் தனது உரையில் மூலதனச் செலவை ரூ. 7.5 லட்சம் கோடியி லிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தியதைக் குறிப்பிட்டு, தற்போது இந்தியாவை கடுமையாகப் பாதித்துக் கொண்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இது ஒரு பரிகாரமாக அமையும் என்று குறிப்பிட்டார். என்னதான் பகட்டுத்தனமான பளபளப்புடன் அவர் இதனை முன் வைத்தாலும், நான்கு அடிப்படை அம்சங்களைப் பற்றி விளக்க வேண்டியுள்ளது; முதலாவதாக, மேற்கண்ட மூலதனச் செலவு ஒதுக்கீட்டைப் போல சமூகத்துறையில் அதே அளவு பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் அதே அளவு வேலை வாய்ப்பினை உருவாக்கியிருக்கும்.  இரண்டாவதாக, இந்தத் தொகை, சமூகத் துறைக்காகச் செல வழிக்கப்பட்டிருந்தால், முந்தைய நாள் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய் வறிக்கையில் ஒப்புக்கொண்டபடி, உண்மை ஊதி யத்தில் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள சரிவினை சரிசெய்ய உதவியிருக்கும்; உழைக்கும் மக்களுக்கு நேரடியாகப் பலனளித்திருக்கும். மூன்றாவதாக, சமூகத் துறையில் அதே அளவு பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், பொது மூலதனச் செலவினங்களின் பலன்களை விட, பலமடங்கு பலனளிக்கும் வகையில், உழைக்கும் மக்களின் கைகளில் வாங்கும் சக்தியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகரித்திருக்கும். இது வேலை யின்மையின் மீதும் நல்லதொரு தாக்கத்தை  ஏற்படுத்தி வேலைவாய்ப்பினை உருவாக்கி யிருக்கும். நான்காவதாக, மூலதனச் செலவினத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் இருந்து மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது “கசிந்து” விடுவதைப் போலல்லாமல் உழைக்கும் மக்களின் நுகர்வினை அதிகரிக்க உதவியிருக்கும்.  எனவே, இந்த இரண்டு விதமான முதலீட்டு முறைகளின் சமச்சீரற்ற வேலைவாய்ப்பு விளைவுகளைப் பற்றிய மிக முக்கியமான கருத்தினை இதன் மூலம் மேலும் வலுவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது.

நவீன தாராளவாத ஆட்சிமுறையின் கீழ், சமீபத்திய ஆண்டுகளில், மூலதனச் செலவினங்கள் அதிக அளவில் இறக்குமதியை சார்ந்துள்ளது.  இதுவே, சமீப காலமாக மூலதன முதலீட்டு மீட்சி நடவடிக்கை யைத் தாண்டி, நாம் சந்தித்துக் கொண்டிருக்கும், சொந்த உள்நாட்டு மூலதனப் பொருட்கள் துறையின் ேக்கநிலை நீடிப்பதற்கு முக்கிய காரணமாகும். சொந்த உள்நாட்டு மூலதனப் பொருட்கள் துறைக்கு அதிக பாதுகாப்பு இல்லாத நிலையில், குறிப்பி டத்தக்க பெரிய உள்நாட்டு வேலைவாய்ப்பை உருவாக்க பெரிய அளவில் மூலதனச் செலவினம் உதவும் என்று எதிர்பார்ப்பது, அடைய முடியாத, கற்பனையான நம்பிக்கை கொண்ட திட்டமாகவே இருக்கும். இந்த பட்ஜெட், இறக்குமதியை பெரிய அளவில் குறைப்பதற்கு மாறாக, பல்வேறு இறக்குமதி களுக்கு சுங்க வரிகளைக் குறைத்துள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலைகளில், முன்மொழியப்பட்ட மூலதனச் செலவினம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறுவது வெறும் சொற்புரட்டு ஆகும்.

அதிகரிக்க வேண்டிய  செலவினம் எது? 

மேலும், பெரிய அளவில் மூலதனச் செலவுகளை அதிகரிப்பதிலோ அல்லது பெரிய அளவில் சமூகச் செலவுகளை அதிகரிப்பதிலோ ஆகிய இந்த  இரண்டு வழி முறைகளில், முந்தையது அதிக அளவில் இறக்குமதியையே சார்ந்து  உள்ளது. இது, நாட்டின் சர்வதேச பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் வித்தி யாசத்தை அதாவது இழப்பை மேலும் மோச மாக்கும். ரூபாயின் மதிப்பு பெருமளவு சரிந்துள்ள  போதிலும், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி உலகப் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.  நம்மிடம் உள்ள சமீபத்திய காலாண்டிற்கான நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 4 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. எனவே மூலதனச் செலவை அதிகரிப்பதற்குப் பதிலாக சமூகச் செலவினங்களை இந்த பட்ஜெட்டில் அதிகரித்திருந்தால், அது மக்களின் பொது வாழ்வாதார நிலையை நேரடியாக மேம்படுத்தியிருக்கும்; அது மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை உயர்த்தியி ருக்கும்; அது தற்போதைய  நடப்பு பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருந்திருக்கும். அதற்கு பதிலாக, அரசு வெளிப்படையாக மிகவும்  அபத்தமானதொரு ஒரு விருப்பத் தேர்வினை செய்துள்ளது.

அபத்தமான விருப்பத் தேர்வுகள்

இதுவரையில் அரசாங்கத்தின் முன் இருந்த இந்த இரண்டு விருப்பத் தேர்வுகள் குறித்து மட்டுமே ஒப்பிட்டு, இங்கு அது விவாதிக்கப்பட்டு, அரசு மிக மோசமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதை விவரித்துள்ளோம். ஆனால் நிச்சயமாக அரசாங்கம் இந்த இரண்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசாங்கத்தின் சொந்த மதிப்பீட்டின்படியே பார்த்தால் கூட, நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, அடுத்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமான விகிதம் மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால், வருமான ஏற்றத்தாழ்வும் செல்வாதார ஏற்றத்தாழ்வும் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது அனை வரும் அறிந்ததே. மேலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், செல்வ வரி இல்லாத நிலையிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமான விகிதத்தை தானாகவே அதிகரித்திருக்க வேண்டும். செல்வ வரியினை விதிப்பதன் மூலம் அல்லது செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் பிற வரிகளின் மூலம், அரசு வருமானத்தை உயர்த்தும் முயற்சிகளை இன்னும் தெளிவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

இந்த பட்ஜெட், சம்பளம் பெறும் வகுப்பினரின் சில பிரிவுகளுக்கு வருமான வரிச் சலுகையை வழங்கியி ருக்கலாம். ஆனால், வருமான ஏற்றத்தாழ்வுகளும் செல்வாதார ஏற்றத்தாழ்வுகளும் கடுமையாக அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமான விகிதாச்சா ரத்தை - அரசாங்க வருவாயை உயர்த்த வேண்டி யதன் அவசியத்தை முற்றிலும் அலட்சியப் படுத்துகிறது.  மற்றொன்று, உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கக்கூடிய சமூகச் செல வினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் அவசியத்தை முற்றிலும் அலட்சியப்படுத்துகிறது.  மாறாக, ஒன்றிய அரசு, தனது கூட்டுக் களவாணி களுக்கு அதிகபட்ச சலுகைகளைச் செய்துள்ளது. கூட்டுக் களவாணி முதலாளிகளின் ஆர்வம் அதிகம் உள்ள பகுதி உள்கட்டமைப்புத் துறைதான். எனவே மூலதனச் செலவு என்ற பெயரில் உள்கட்ட மைப்புத் துறையில் செலவு செய்வது என்பது அரசின் ‘‘கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு” உதவும் நடவடிக்கையே ஆகும்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி பிப்.5, 2023) 
தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்