articles

img

‘ஊழல் ஒழிப்பு’ அரசின் மெகா ஊழல்கள் - அ.அன்வர் உசேன்

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதியில் முன்வைக்கப்பட்ட தலைமை தணிக்கை ஆணையரின் ஆய்வறிக்கை 5 பெரிய ஊழல்களையும் முறைகேடுகளையும் தேவையில்லாமல் அரசுக்கு உருவான நட்டங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இவற்றில் நெடுஞ்சாலை பிரிவில் நடந்த முறைகேடுகள் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன.

பாரத்மாலா பரியோஜனா ஊழல்கள்

பாரத்மாலா பரியோஜனா என்பது தேசிய நெடுஞ் சாலை திட்டங்களுக்கு வைக்கப்பட்ட பெயர். இத்திட்டத்தின் முதல் பகுதி அமலாக்கத்தில் 2017 முதல் 2021வரை திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை உருவாக்கு வது என பா.ஜ.க. அமைச்சரவையால் முடிவு செய்யப் பட்டது. என்ன அமலாக்கப்பட்டது? எத்தகைய முறை கேடுகள் நடந்துள்ளன? தணிக்கை ஆணையம் கீழ்கண்டவாறு கூறுகிறது: 6 ஆண்டுகள் கடந்த பின்னரும் மார்ச் 2023 வரை 26,316 கி.மீ. நீளத்துக்கு அதாவது 77% அளவுக்குதான் டெண்டர்கள் தரப்பட்டுள்ளன. 13,499 கி.மீ. நீளம் அதாவது 39% அளவுக்குதான் சாலைகள் பூர்த்தி செய்யப் பட்டுள்ளன. இதன் மூலம் முந்தைய அரசுகளைவிட தனது அரசு மின்னல் வேகத்தில் செயல்படக்கூடியது எனும் பிரத மரின் கூற்று உண்மை அல்ல என்பது தெளிவாகிறது.  77% சாலை நீளத்துக்குதான் டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டாலும் திட்டச்செலவில் 158% நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட செலவு ஒரு கி.மீக்கு ரூ.15.37 கோடி. ஆனால் செலவு செய்யப்பட்டது ஒரு கி.மீ.க்கு 32.17 கோடி.

ரூ.4,42,109 கோடி எங்கே போனது?

சாலை அமைப்புக்கு முந்தைய செலவுகள் 1 கி.மீ.க்கு ரூ.1.39 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால் செலவு செய்யப்பட்டதோ ரூ.8.28 கோடி. அதாவது டெண்டர் தரப்பட்ட 26,316 கி.மீ. நீளத்துக்கு  சாலைகள் அமைப்பதற்கு முந்தைய பணிகளுக்கு ரூ.1,81,317 கோடி கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது. எங்கே போனது இவ்வளவு பெரிய தொகை? சாலைகள் அமைப்பதற்கான கட்டுமானச் செலவு ஒரு  கி.மீ.க்கு அனுமதிக்கப்பட்டது ரூ.13.98 கோடி. ஆனால் செலவு செய்யப்பட்டதோ 23. 89 கோடி. கூடுதல் செலவு ரூ.2,60,792 கோடி.  ஆக மொத்தம் ரூ.4,42,109 கோடி கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது. என்ன ஆயிற்று இவ்வளவு பெரிய தொகை? இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க இயலும். ஒன்று மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அல்லது அரசு மிக மிக திறமையற்றுச் செயல்பட்டுள்ளது. ஒருபுறம் பா.ஜ.க. தலைவர்கள் தமது அரசு இந்தியா கண்ட அரசு களிலேயே அசுர திறமை கொண்டது என்கின்றனர். மறுபுறம் ஊழல் தங்களை பார்த்தாலே பயந்து பல மைல் தூரம் ஓடிவிடுகிறது என கதைக்கின்றனர். ஆனால் தணிக்கை ஆணையத்தின் அறிக்கையோ முற்றிலும் மாறுபட்ட செய்தியை சொல்கிறது.

தணிக்கை ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் இத் தோடு நிற்கவில்லை. டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ள 23,316 கி.மீ. நீளச் சாலைகளில் 10% BOT (Build Operate Transfer) மாடலில்- அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அந்த சாலைகள் மற்றும் கட்டண வசூல் உரி மையை அரசுக்கு மடைமாற்ற வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் சாலைகள் அரசின் பொறுப்பில் வரும். இதனால் சுங்க கட்டணத்தை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ இயலும்.  இந்த மாடலை முதலில் உருவாக்கியது சீன அர சாங்கம்தான்! சீனாவின் தொழில் வளர்ச்சிக்கும் பின்னர் அந்த வளர்ச்சி அரசின் கைகளில் மாறியதற்கும் இந்த மாடல் அடிப்படைக் காரணம் ஆகும். இந்த மாடலில் 10% என நிர்ணயிப்பதே மிக குறைவு.  எனினும் மோடி அரசு நடைமுறைப்படுத்தியதோ வெறுமனே 1.75% தான்! இதன் பொருள் என்ன? சுங்க கட்டணம் மூலம் தனியார் கொள்ளைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்பதுதான்.  சாலைகள் அமைப்பதற்கான மூலதன முதலீட்டை சுங்க கட்டணம் மூலம் திரும்ப எடுத்த பின்னர், சுங்க கட்டணத்தை 40% குறைக்க வேண்டும் எனவும் வழிகாட்டு தல் உருவாக்கப்பட்டது. இது அமலாக்கப்படவில்லை எனவும் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு மாறாக சுங்க கட்டணம் அதிகரிப்பதுதான் நடக்கிறது. சாலை கட்டுமானத்தில் தனியாருக்கு கொள்ளை அடிக்க கதவுகள் அகலமாக திறந்துவிடப்பட்டுள்ளன. 

துவாரகா நெடுஞ்சாலை:  மெகா முறைகேடு'

கீழ்கண்ட முறைகேடுகளையும் தணிக்கை ஆணை யம் சுட்டிக்காட்டுகிறது:

  •  ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் முறையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. 
  •  தகுதியில்லாத ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  •  குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சாலைப்பணியை செய்வதற்குதகுதி படைத்தவர்தானா என்பதை ஆய்வு செய்யாமல்பணி தரப்பட்டது.
  •  பல பணிகள் நிலத்தை கையகப்படுத்தாமலேயே தரப்பட்டன.
  •  சூழல் ஆய்வு பற்றி கவலைப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள செட்டிக்குளம்-நத்தம் சாலை உட்பட வனத்துறையின் அனுமதி பெறாமல் பல பணிகள் தொடங்கப்பட்டன. இவையெல்லாம் பணிகள் தாமதமா வதற்கும் அதன் விளைவாக திட்டச்செலவுகள் அதி கரிப்புக்கும் காரணமாக அமைந்தன. இந்த முறைகேடுகளைத் தூக்கிச் சாப்பிடும் விதத்தில், துவாரகா அதிவேக சாலை செலவுகள் அம்பலமாகியுள்ளன. 29.06 கி.மீ. நீளமுள்ள இந்த சாலைக்கு ரூ.7,287.29 கோடி அதாவது ஒரு கி.மீ நீளத்துக்கு ரூ.250.77 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட செலவு ஒரு கி.மீ.க்கு ரூ.18.20 கோடிதான்! இந்த 29 கி.மீ. சாலையில் மட்டும் ரூ. 6758 கோடி கூடுதலாக செலவு செய்யப்பட்டுள்ளது. இன் னொரு கோணத்தில் சொல்வதானால், செவ்வாய் கிரகத்துக்கு செல்ல இஸ்ரோவுக்கு ஆன செலவு ரூ.450 கோடி. ஆனால் துவாரகா சாலைக்கு 2 கி.மீ. க்கு ஆன செலவு ரூ.500 கோடி. இந்த செலவை ஈடுகட்ட சுங்க கட்டணமாக ரூ.60க்கு பதிலாக ரூ.290 நுகர்வோர்க ளிடம் தனியார் வசூல் செய்கின்றனர். 

குஜராத்துக்கு ரூ.46 கோடி பரிசு

துவாரகா சாலைக்காக விமான நிலைய ஆணையத்தி டமிருந்து சுமார் 5.65 ஏக்கர் நிலத்தை ரூ.106 கோடிக்கு வாங்கி ஆனால் அதனை முறையாக பயன்படுத்தாமல் உள்ளது எனவும் தணிக்கை அறிக்கை இடித்து காட்டு கிறது. மேலும் இந்த சாலையில் மழை நீர் வடிகாலுக்காக குஜராத் அரசாங்கம் தர வேண்டிய ரூ.46.60 கோடியை நெடுஞ்சாலை அமைச்சகம் வாங்காமல் விட்டுவிட்டு தனது செலவில் சேர்த்துள்ளது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை பிரிவு உருவாக்கியுள்ள சாலை அமைப்பு கள் துவாரகா சாலையில் இருக்கும் பொழுது இந்த செலவு முழுவதுமே தேவையற்றது எனவும் இந்த முடிவுக்கு அடிப்படையாக எந்த முழுமையான திட்ட அறிக்கை யும் ஆய்வும் செய்யப்படவில்லை எனவும் தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்த நெடுஞ் சாலைப் பணிக்கு எவ்வித சூழலியல் அனுமதியும் பெறப் படவில்லை. இந்த சாலைத்திட்டம் சுமார் 6 மாதங்கள் முதல் 13 மாதங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் திட்டச்செலவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.

என்னே மோடி அரசின் திறமை?

தில்லி-வதோதரா-மும்பை நெடுஞ்சாலை

2017ம் ஆண்டு 74,942 கி.மீ. நீளத்துக்கான சாலைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பொழுது வதோதரா-மும்பை சாலை பட்டியலில் இருந்தது. ஆனால் தில்லி-வதோதரா சாலை அந்த பட்டியலில் இல்லை. நவம்பர் 2018ஆம் ஆண்டு தில்லி- வதோதரா சாலை திட்டம் திடீரென இணைக் கப்பட்டது. அதுவும் மிக மிக முன்னுரிமை சாலையாக வரையறுக்கப்பட்டது. தில்லி-மும்பைக்கு ஏற்கெனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. அப்படியிருக்கும் பொழுது தில்லி-வதோதரா-மும்பை நெடுஞ்சாலை தேவைதானா எனவும் இதற்கான முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை எனவும் தணிக்கை ஆணையம் குறிப்பிடுகிறது. சரியான ஆய்வு செய்யப்படாததால் தில்லி-வதோதரா-மும்பை  நெடுஞ்சாலை 24 ஆண்டுகளுக்கு மிக குறைவாகவே பயன்படும் எனவும் அதனால் வீண் செலவு எனவும் புள்ளி விவரங்களுடன் தணிக்கை ஆணையம் அம்பலப் படுத்துகிறது. அதுவும் ரூ.44,000 கோடி செலவு செய்து தில்லி-வதோதரா சாலை அமைக்கப்படுவது நியாயம் தானா எனும் கேள்வியை தணிக்கை ஆணையத்தின் அறிக்கை எழுப்புகிறது. மிக முன்னுரிமை எனில் 2017லி லேயே ஏன் இந்த சாலை பட்டியலில் இல்லை?ஏன் பின்னால் சேர்க்கப்பட்டது? வதோதரா குஜராத்தில் உள்ளது என்பதாலா? 

மரங்களும், வளமான  நிலங்களும் அழிப்பு

தில்லி - வதோதரா சாலைக்காக மொத்தம் 31 ஒப்பந் தங்கள் தரப்பட்டன. இதில் 20 ஒப்பந்ததாரர்கள் மட்டும் 74,778 மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இதன் விளைவாக உருவாகும் சூழலியல் பாதிப்பு ஆய்வு செய்யப்படவில்லை. மாற்று மரங்களை நடும் திட்டமும் இல்லை. இந்த சாலைக்காக 556.76 ஹெக்டர் வன நிலமும் செழிப்பான 3,875.48 ஹெக்டேர் விளைநிலமும் அழிக்கப்பட்டுள்ளன. சூழலியல் குறித்து சிறிதும் அக்கறை இல்லாமல் அரசு செயல்படுகிறது என்ப தையே இது வெளிப்படுத்துகிறது. பழங்குடி இன மக்களை அப்புறப்படுத்தி வனங்களை கார்ப்பரேட்டுக ளுக்கு தாரை வார்க்கும் ஒரு அரசு சாலை மரங்களை வெட்டி தள்ளுவதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

ஒப்பந்ததாரர்களுக்கு சலுகைகள்

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் தனியார் ஒப்பந்த தாரர்களுக்கு தரப்பட்டசில அதீதமான நிதிச் சலுகைகளை தணிக்கை ஆணையம் கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறது:

  1.  அனந்தபுரம்-அனகாப்பள்ளி சாலை - ரூ.5.78 கோடி அபராதத் தொகை பெறப்படவில்லை.
  2.  வதோதரா - மும்பை சாலை ஒப்பந்ததாரர் திட்டம் பூர்த்தி செய்வதில் 390 நாட்கள் தாமதம் செய்த பின்னரும் அவரிடமிருந்து அபராதத் தொகை பெறப்படவில்லை.
  3.  கோழிக்கோடு புறவழிச்சாலை ஒப்பந்ததாரர் 898 நாட்கள் தாமதம் செய்தார். அதற்கான ரூ.27.97 கோடி அபராதம் பெறப்படவில்லை.
  4.  ஹபூர் - மொராதாபாத் சாலை ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.39.45 கோடி அபராதம் வசூல் செய்யப்படவில்லை.
  5.  பனியாலா-மொர்- நர்னவுல் சாலை ஒப்பந்ததார ரிடமிருந்து ரூ.46 கோடி நிபந்தனைக்குட்பட்டு பெறப் பட்டு அதே நாளில் வேறு ஒரு பணி என்ற பெயரில் திருப்பி தரப்பட்டது.  
  6.  இதேபோல கவுஜ்வாலா-பூகல்-பாப் சாலை ஒப்பந்த காரருக்கு ரூ.46 கோடி தரப்பட்டது.
  7.  வதோதரா-மும்பை சாலை ஒப்பந்தகாரருக்கு விதி களை மீறி 139.31 கோடி தரப்பட்டது.
  8.  கல்லகம்-மீன்சுருட்டி மற்றும் கோழிக்கோடு புற வழிச்சாலை ஒப்பந்ததாரர்கள் தர வேண்டிய பிணைத் தொகை பற்றிய தகவல்கள் இல்லை. ஆணையத்தின் கேள்விகளுக்கு அமைச்சகம் பதில் தரவில்லை.
  9.  ஹுபூர் - மொராதாபாத் ஒப்பந்தகாரர் தனது பிணைத் தொகையான ரூ.3,359 கோடி தொகையை பரஸ்பர நிதிகளுக்கு திருப்பிவிட்டார். எவரும் அதனை விசார ணைக்கு உட்படுத்தவில்லை.

ரூ.3598 கோடி அரசுக்கு நட்டம்

இவ்வாறாக ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் காரணமாக அரசுக்கு ரூ.3598.52 கோடி நட்டம் ஏற்பட்டதாக சிஏஜி குறிப்பிடுகிறது. இதுபோன்ற பல முறைகேடுகள் நெடுஞ்சாலை திட்டங்களில் ஏற்பட்டதாக ஆணையத்தின் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.  பாரத்மாலா பரியோஜனா என அலங்கார வார்த்தை களை உருவாக்கிவிட்டு அதற்குள் பல ஊழல்களும் முறை கேடுகளும் அரங்கேற்றப்படுகின்றன என்பதை தணிக்கை ஆணையத்தின அறிக்கை அம்பலப்படுத்துகிறது.