உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதம்
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது அரசியலமைப்புச் சட்டமீறல் என்றும், காஷ்மீரிகள் விரும்பியதாலேயே அவர்கள் இந்தியர்கள் ஆனார்கள் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் அரசியலமைப்பு பிரிவு- 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 2 முதல் தினமும் (திங்கட்கிழமைகள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து) விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த புதன்கிழமையன்று 9-ஆவது நாளாக மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் தொடர்ந்தன. அப்போது, “அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்ற பார்வை யும் கூற்றும் தவறானது” என்று கூறி மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் தனது வாதத்தைத் துவக்கினார். “இந்தியாவுடன் ஒருங்கிணைந்தது என்பது முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டை, அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடு ஆகிவிடாது. ஆறாவது அட்டவணையில் உள்ள மாநிலங்களை விட, யூனியன் பிரதேசங்களை- தனி அதிகாரம் இல்லாத, ஒன்றிய அரசோடு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் என்று கூறுவது தவறு. நமது ஜனநாயகம் அவ்வாறான ஒன்றல்ல.
காஷ்மீரிகள் விரும்பியதால் இந்தியர்கள் ஆனார்கள்
ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஒப்புக்கொண்டதால்தான் அவர்கள் இந்தியர்கள் ஆனார்கள். சீக்கியப் படைப்பிரிவு ஸ்ரீநகரை அடைவதற்கு முன்பே, ஊடுருவல்கா ரர்களை எதிர்த்துப் போராடியது பள்ளத்தாக்கில் இருந்த காஷ்மீரிகள்தான். அதில் பலர் வீரமரணம் அடைந்தனர். எனவே, பகிரப்பட்ட இறையாண்மைக்கு (ஜம்மு - காஷ்மீர் தனது இறையாண்மையை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது) ஒரு ஜனநாயக வாதம் உள்ளது. உண்மையான அரசியல் இறையாண்மை மக்களிடம் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மக்கள் அரசியல் இறையாண்மையாக இந்திய இறை யாண்மையின் பங்காளர்களாக மாறினர். சட்டப்பிரிவு 370 அங்கீகரிக்கும் விஷயம் என்னவெனில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் பகிர்ந்துகொண்ட அந்த இறையாண்மையை, அவர்களின் ஜனநாயக விருப்பத்தை, இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைப்பதாகும். அந்த வகையிலான ஒரு ஜன நாயக ஒப்பந்தம்தான், ஜம்மு - காஷ்மீருக்கும் ஒன்றிய அரசுக்கும் ஏற்பட்டது. ஒன்றிய அரசுக்கு, மாநிலம் பகிர்ந்துகொண்ட சட்ட இறையாண்மைக்கு, அந்த மக்களின் இறையாண்மையை ஒப்படைப்பதையே சட்டப்பிரிவு 370 பிரதிபலிக்கிறது. 370-ஆவது பிரிவானது, ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பம், இந்திய மக்களின் விருப்பம் - ஜனநாயகம் ஆகியவை ஒன்றிணைந்ததன் வரலாற்று மற்றும் புவிசார் அரசியல் பின்னணியை பிரதிபலிக்கிறது மற்றும் அங்கீகரிக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பம் 370-ஆவது பிரிவின் ஒவ்வொரு பகுதியி லும் ஊடுருவி இருக்கிறது. அவ்வாறிருக்க, ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் வந்தவுடனேயே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 முடிவுக்கு வந்துவிட்டது என்று கூற முடியாது. 370(1) இப்போதும் உயிர்ப்போடு இருக்கிறது.
370 குறிப்பிடும் ஆட்சிமுறைக்கே ஒப்புதல் தரப்பட்டது
ஒரு பொறுப்பான மாநில அரசின் ஒப்புதல் கூட சட்டத்தின் விதிமுறைகளை மாற்றுவதற்கு போதுமானதாக இருக்காது. இது அரசியல் நிர்ணய சபையிலிருந்து நேரடியாக வெளிவர வேண்டும். அரசியல் நிர்ணய சபை என்பது ஜம்மு - காஷ்மீர் பிரதிநிதித்துவத்திற்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட பிரத்தியேக அமைப்பைக் குறிப்பதாகும். எனவே, 370 ரத்துக்கான ஆணையானது, அரசியல் நிர்ணய சபைக்கு இணையான அந்தஸ்து கொண்ட ஒரு அமைப்பிடம் இருந்து வெளிவர வேண்டும். ஆனால், 1957-க்குப் பிறகு, ஜம்மு - காஷ்மீர் அரசியல மைப்புச் சபைக்கு இணையான அமைப்பு எதுவும் இல்லை. நிச்சயமாக அது ஒன்றிய அரசின் எந்த அமைப்பாகவும் இருக்க முடியாது. சட்டப்பிரிவு 370-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்சி முறைக்குத்தான் ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களின் ஒருங்கிணைப்பை அளித்துள்ளனர். அவ்வாறிருக்க, 370 நீக்கம் என்பது, மக்களின் விருப்பத்தை திட்டமிட்ட முறையில் அழிக்கும் ஒரு செயல் முறையாகும். உண்மையில், சட்டப்பிரிவு 370-ஐ ஒருபோதும் தொட முடியாது
30 நிமிடங்களில் சட்டமன்றத்தைக் கலைக்க காரணம் என்ன?
ஒரு கட்சி விலகியதால், வேறு எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க தயாராக இல்லாததால், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாறாக, பாதுகாப்புப் பிரச்சனை அல்லது ஆபத்து காரணமாக அல்ல. அதுமட்டுமல்ல, நாங்கள் ஆட்சி அமைக்கத் தயார் என்று அரசியல் கட்சிகள் கூறிய 30 நிமிடங்களுக்குள் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான காரணம் என்ன? 87 உறுப்பினர்களில் 56 பேர் உரிமை கோருகின்றனர். ஆனால், ஆளுநர் அங்கு இல்லை. தொலைநகல் செல்லவில்லை. தொலைபேசிக்கும் பதிலளிக்க வில்லை. வாட்ஸ்ஆப் செய்தியை ஒப்புக்கொண்டதாக அவரது செயலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8.16-க்குள் இதுவெல்லாம் முடிந்த நிலையில், 8.57க்குள் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலைப்பதற்கு ஆளுநர் கண்டறிந்த காரணம் என்ன? இவ்வாறு நித்யா ராமகிருஷ்ணன் தனது வாதங்களை வைத்தார்.
ஆளுநருக்கே தெரியாமல் 370 பறிக்கப்பட்டது
மேலும், “ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு, சட்டப்பிரிவு 370(1)-இன் கீழ் மாநில அரசின் அதிகாரம், குடியரசுத் தலை வரால் பறிக்கப்படுகிறது. இந்த இடத்தில், அன்றைய ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ‘தி வயர்’ இணையதள இதழுக்கு வழங்கிய பேட்டியை எடுத்துக் கொள்ளலாம். (அந்தப் பேட்டியை ராமகிருஷ்ணன் வாசித்துக் காட்டினார்) அதில், ‘2019 ஆகஸ்ட் 4 இரவு வரை, என்ன வரப்போகிறது என்று தெரியாது; இந்த (370 ரத்து உள்ளிட்ட) விஷயங்களை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ யாரும் என்னுடன் விவாதிக்கவில்லை’ என சத்யபால் மாலிக் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டி, அந்த “ஆளுநர்தான் சம்மதம் கொடுத்தாரா?” என்றும் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். “சட்டப்பிரிவு 370(2)-இல் அரசியல் நிர்ணய சபை பற்றிய குறிப்பு உள்ளது. இது அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கத்திற்காக ஒரு அரசியல் நிர்ணய சபையை குறிக்கிறது. எனவே பிரிவுகள் (2) மற்றும் (3) இல் அரசியல் நிர்ணய சபைக்கு இடையே அடையாள உறவு உள்ளது. இவை இரண்டும் அரசியல் நிர்மைணய சாச னத்தில் இருக்கும்போது, பிரிவு (3)-இல் இருப்பது ஒரு மாதிரியாகவும், பிரிவு (2)-இல் வேறுவிதமாகவும் மாறும் என்று நீங்கள் (ஒன்றிய அரசு) ஒரு விளக்கத்தை கொண்டு வர முடியாது. இது அபத்தம்” என்றார்.
சிதறிக்கிடந்த இந்திய தேசத்தை அரசியலமைப்பே ஒன்றிணைத்தது
அவரைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி தனது வாதங்க ளைத் தொடங்கினார். நிறுவனர்களின் (நாட்டை கட்டமைத்த தலைவர்கள்) நோக்கத் திற்கு மாறாக அரசியலமைப்பை மாற்ற முடியுமா? என்பது முக்கியமான கேள்வியாகும். இந்த நாடு உருவானபோது, பிரிவினையின் போது, 46 முதல் 49 மணிநேரம் வரை, அரசியல் சாசன விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. இந்தியாவின் முதல் பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையில், ‘இந்த தேசத்தின் நிலம் இரத்தத்தால் சிதறிக் கிடக்கும் தேசம்... அதிலிருந்துதான் நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது’ என்றார். அதன்படி அரசி யலமைப்புகளுக்கு சில ஆரம்ப ஸ்தாபக தருணங்கள் உள்ளன.
வேறெந்த மாநிலத்தையும் காஷ்மீரோடு ஒப்பிட முடியாது
இந்திய யூனியனுடன், ஜம்மு - காஷ்மீரை ஒருங்கிணைப்பதற்காக நமது தேசத்தைக் கட்டியெழுப்பிய நிறுவனர்கள் சில வழிவகைகளை வகுத்தனர். அது அரசியலமைப்பு நோக்கத்தின் ஒரு பகுதியான சட்டப்பிரிவு 1 மற்றும் 370 மட்டும் அல்ல. அதை விட அதிகம். ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு விதிகள் - பிரிவு 4 மற்றும் 5 ஆகியவற்றிலும் அவை அடங்கியிருக்கின்றன. இதுபோன்ற பிராந்திய ஒருமைப்பாடு, வேறு எந்த இந்திய மாநிலத்திற்கும் வாக்குறுதியாக அளிக்கப்படவில்லை. இது அனைத்தும் தேசத்தை கட்டமைக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும். இது (ஜம்மு - காஷ்மீர்) அரசியல் நிர்ணய சபையைப் பற்றியது மட்டுமல்ல, அது நமது (இந்திய) அரசியல் நிர்ணய சபையின் வாக்கு றுதிகளையும் உள்ளடக்கியது. ஆனால், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகிய இரண்டா லும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனித்துவமான உள் இறையாண்மை (ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பின் 4 மற்றும் 5 பிரிவுகள்) சீர்குலைக்கப்பட்டு உள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது; அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட மறு சீரமைப்புச் சட்டம் ஆகியவை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தால் பாதுகாக்கப்பட்ட தனித் துவமான சுயாட்சியை (ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பின் பிரிவுகள் 46, 47 மற்றும் 50 ஆகியவற்றை) மீறியுள்ளது.
பிராந்திய அமைப்பு சீர்குலைக்கப்பட்டு உள்ளது
சட்டப் பேரவையை அமைப்பதற்கு பிரிவு 47 மற்றும் 50 அதிகாரம் வழங்கு கிறது. அது பன்முகத்தன்மை கொண்ட ஜம்மு - காஷ்மீரின் தனித்துவமான, பிராந்திய அமைப்பைப் பற்றி பேசுகிறது. அந்த தனித்துவமான பிராந்திய அமைப்பு (இந்திய அரசியலமைப்பின் 171-ஆவது பிரிவு) ஜம்மு - காஷ்மீருக்கு மட்டுமே பரிந்துரைக் கப்பட்டு உள்ளது. இதைச் செய்ய ஒரு காரணம் இருந்தது. அது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை அங்கீகரிப்பது, மாநிலத்திற்குள் பன்முகத்தன்மையைக் கொண்டு வருவது... ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மூன்று பிராந்தியங்களையும் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் ஜம்மு - காஷ்மீருக்கான பிராந்திய பிரதிநிதித்து வத்தை உறுதிப்படுத்துவது என்பன போன்ற புரிதல்கள் இருந்தன. சட்டப்பிரிவு 169 சட்டசபையின் பரிணாம வளர்ச்சிக்கான வழிமுறையை வழங்குகிறது” என்று மேனகா குருசாமி வாதிட்டார்.
அரசியலமைப்பு உறுதிமொழிகளே எல்லைகளைப் பாதுகாக்கின்றன
அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் மணீஷ் திவாரி தனது வாதங்களைத் துவக்கி னார். அவர் பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு, அரசியல் சட்டச் சுருக்கம் என்ப தோடு, இந்தியாவின் எல்லையை உள்நாட்டில் ஒருங்கிணைக்கும் வகையிலான தேசிய பாதுகாப்பு கருவியாகவும் உள்ளது” என்றார். “ஏனெனில், தேசியப் பாதுகாப்பு என்பது அரசு தனது வலுவான சக்தியைப் பயன்படுத்துவதுதன் மூலம் மட்டும் வந்து விடாது. இதனை உணர்ந்துதான், சுதந்திர இந்தியாவானது, தனது எல்லையை அரசியலமைப்பு உத்தரவாதங்கள் மூலம் நிர்வகிக்க முடிவு செய்தது. மேலும், அப்போது நாம் ஒரு குடியரசை உருவாக்கிக் கொண்டிருந்தோம்” என்பதையும் சுட்டிக்காட்டினார். “அசாம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்குப் பொருந்தக்கூடிய, அரசி யலமைப்பின் ஆறாவது அட்டவணையில் வரும் பிரிவு 371, ஜம்மு - காஷ்மீர் விஷ யத்திலும் பொருந்தக்கூடிய, ஒரு சிறிய அச்சம் கூட இந்தியாவின் சுற்றளவில் கடுமை யான தாக்கங்களை ஏற்படுத்தும். தற்போது மணிப்பூரில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையைத்தான் எதிர்கொண்டுள்ளோம்.” என்றார். அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, “சட்டப்பிரிவு 370 மற்றும் வடகிழக்கு தொடர்பான சிறப்பு ஏற்பாடுகளுக்கு இடையே உள்ள வித்தியா சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வடகிழக்கு மற்றும் பிற பகுதிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்கும் அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் தொடும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை. இந்த விஷயத்தில் அச்சத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூற, “தற்போதைய ஒன்றிய அரசை நான் குறிப்பிடவில்லை. நான் மாநிலத்தின் கொள்கையையே குறிப்பிட்டேன்” என்று மணீஷ் திவாரி விளக்கினார்.
அப்போது, “370-ஆவது விதியை மட்டுமே நாம் விவாதித்துக் கொண்டிருக்கி றோம். எனவே, விவாதத்தின் எல்லையை நாம் விரிவாக்க வேண்டியதில்லை” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேட்டுக் கொண்டார். 371-க்கும், 370-க்குமான வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி எஸ்.கே. கவுல் “371 ஒரு சிறப்பு விதி. 370 என்பது ஒரு தற்காலிக விதி” என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 371 தொடர்பான விஷயங்களில் அரசுக்கு அத்தகைய (வடகிழக்கிற்கான சிறப்பு விதிகளை நீக்கும்) எண்ணம் இல்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்திருக்கும்போது, இதை நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? நாம் அந்த எல்லைக்குள் நுழையவே கூடாது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். நீதிபதி பி.ஆர். கவாய், “மகாராஷ்டிரா மாநிலத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் நாங்கள் இப்போது 370-ஐ மட்டுமே விளக்கு கிறோம்” என்றார். “வழக்கறிஞர் மணீஷ் திவாரி, சட்டப்பிரிவு 370 பற்றி எதுவும் கூறவில்லையே” என்பதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “370 தொடர்பாக இந்த நீதிமன்றம் வழங்கும் விளக்கம், மற்ற விதிகளை (வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விதிகளையும்) பாதிக்கும் என்பதையே மணீஷ் திவாரி கூற விழைகிறார்’ என்று எடுத்துக் கொள்வதாக” தெரிவித்தார். பிற்பகலில், மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதங்களை வைத்தார். அப்போது, “370 ரத்து நமது அரசிய லமைப்பின் மீதான அத்துமீறலாகும். இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்ற கோபால் சங்கர நாராயணன், “காஷ்மீர் ஒரு வழிப்பாதை மட்டுமே” என்றார்.
370 ரத்து அரசியலமைப்பு மீதான அத்துமீறல்
“சட்டப்பிரிவு 370-ஐத் தவிர்க்க, குல்சாரி லால் நந்தா, இடைக்காலப் பிரதமராக இருந்த காலத்தில் முயற்சிகள் நடந்த வரலாறு உள்ளது. இதுகுறித்து நாடாளு மன்றத்தில் விவாதங்கள் நடந்தன. அப்போது உள்துறை அமைச்சராகவும் இருந்த குல்சாரி லால் நந்தா, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியாது என்று கூறினார். தற்போது நமக்கு மத்தியில் சில அரசாங்கம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். செயற்கையாக ஒரு சட்டமன்றத்தை உருவாக்கி அரசியல் நிர்ணய சபையாகக் கருதுவோம். அதன்மூலம் 370(3)-ஐப் பயன்படுத்தி 370-ஐ ரத்து செய்யலாமா? என்று முடிவு எடுக்கலாம்” என்றார். அப்போது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “விதி 370(1) ஏன் சட்டப்பிரிவு 1-க்கு பொருந்தும் குறிப்பிட்ட குறிப்பைக் கொண் டுள்ளது?” என்ற கேள்வியை எழுப்பினார்.
மக்களே இறையாண்மையாளர்கள்
அதற்கு “1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நாட்டில் நாம் பார்த்த அதிகாரமும், அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதமும்தான் மிகப் பெரிய மோசடி. நமது அரசியலமைப்பில் மக்களே இறையாண்மையாளர்கள். (மாதவராவ் சிந்தியா தீர்ப்பை மேற்கோள் காட்டுகிறார்) அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று கோபால் சங்கர நாராயணன் தெரிவித்தார். “356-இன் கீழ் அவர்கள் (ஒன்றிய அரசு) பிறப்பித்த உத்தரவுகளைப் பாருங்கள். முதலில் மாநில சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்கிறார்கள். இடை நீக்கத்தின் ஒரே பொருள் அது தற்காலிகமானது. ஆனால், இன்று அந்த உத்தரவின் பலன் என்ன? சட்டப்பேரவையே இல்லாமல் போய்விட்டது. 2018-இல் நிகழ்வுகள் (சட்டப்பேரவை கலைப்பு உள்ளிட்டவை) நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, தற்செயலாக, எல்லைக்கு அப்பால் உள்ள நமது நண்பர்கள் அசாதாரணமான ஒன்றைச் செய்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தான் ஆகிய இரண்டு பகுதிகளையும் தனக்கு சொந்தமானது என பாகிஸ்தான் உரிமை கொண்டாடுகிறது. 2018-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அவர்களின் 1974 இடைக்கால அரசிய லமைப்பில் ஒரு திருத்தத்தை நிறைவேற்ற முடிவு செய்கிறார்கள். அதன்படி, அவர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, ‘ஆசாத் காஷ்மீர்’ என்று அழைக்கிறார்கள்.
பாகிஸ்தானைப் பின்பற்றப் போகிறோமா..?
இந்தச் சூழலில், அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட சில வாக்குறு திகளை நாம் கடைப்பிடிக்கப் போகிறோமா, அல்லது பிரதமரை சிறையில் அடைத்த வர்களை (பாகிஸ்தானை) முன்மாதிரியாகப் பின்பற்றப் போகிறோமா? இந்தியா ஜன நாயக நாடு அல்லவா? எனது சமர்ப்பிப்பு என்னவென்றால், 370(3) என்பது அரசியல் நிர்ணய சபையால் மேற்கொள்ளப்படும் ஒரு முறை முடிவெடுக்கும் நடைமுறை யாகும். 370-ஐ ரத்து செய்ய வேண்டும் என்றால், அதை ஒருமுறையே செய்ய முடியும்” என்று கோபால் சங்கர நாராயணன் குறிப்பிட்டார். அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறுக்கிட்டு, “370-வது பிரிவைப் படிக்கும்போது இரண்டு முனையப் புள்ளிகளைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டார். “முதல் முனையப் புள்ளி சட்டப்பிரிவு 370-இன் பிரிவு (2) இல் உள்ளது- அதாவது அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசில் நிர்ணய சபையை உருவாக்குதல். இரண்டாவது முனையம் 370(3)-இல் குறிப்பிடப் பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையை மீண்டும் குறிக்கிறது. ஆனால், சுவாரஸ்யமாக, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு, அது முடிவை எடுத்தவுடன் ‘ஆட்சி எப்படி இருக்க வேண்டும்’ என்பதில் 370 அமைதி யாக உள்ளது. இந்த முழுமையான மவுனம் 370 பிரிவு (1), மற்றும் (2) மற்றும் (3) ஆகிய வற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த வெற்றிடத்தை ஜம்மு - காஷ்மீர் அரசிய லமைப்புச் சட்டம் நிரப்புகிறது என்பதே உங்களின் (வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன்) கூற்றாக உள்ளது. மற்றொரு கருத்து என்னவென்றால், ஒரு கூட்ட மைப்பின் (இந்திய ஒன்றியம்) அரசியலமைப்பு மூலத்தை விட, அந்த கூட்டமைப் பின் பிரிவு (ஜம்மு- காஷ்மீர் அரசியலமைப்பு) எப்போதாவது மேலானதாக இருக்க முடியுமா? என்பதுதான். அதேபோல, பிரிவு 370-இன் முனையப் புள்ளி அரசியல் நிர்ணய சபையின் பணி என்றால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையின் பணியை இந்திய அரசியலமைப்பில் உள்ளடக்கியிருக்க வேண்டி யது அவசியமில்லையா?” என்று கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், “அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு வந்தவுடன் 370 தன்னைத்தானே கட்டுப்படுத்துகிறது என்பதற்கு உள்ளார்ந்த ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்ட தலைமை நீதிபதி, “ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பை ஒரு மிகையான ஆவ ணமாக பார்க்க நமது அரசியலமைப்பு இன்னும் ஆழமாக படிக்கப்பட வேண்டுமா? ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு, இந்திய ஒன்றியம் உடனான அதன் உறவை வரையறுத்து இருந்தாலும், அந்த உறவு இந்திய அரசியலமைப்பில் பொதிந்திருக்கா விட்டால், அது இந்தியா அல்லது நாடாளுமன்றம் மற்றும் ஒன்றிய அரசு நிர்வா கத்தின் ஆதிக்கத்தை எவ்வாறு பிணைக்கும்?” என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேட்டார். அதற்கு, “இந்திய அரசியலமைப்பு, நாட்டில் ஒரு மாநிலத்திற்கான அரசியல் நிர்ணய சபையை குறிப்பாக அங்கீகரித்து, சட்டப்பிரிவை ரத்துசெய்வதா இல்லை யா? என்பதை தீர்மானிக்கும் பணி அந்த (ஜம்மு - காஷ்மீர்) அரசியல் நிர்ணய சபைக்கு உள்ளது என்று கூறும்போது, அதன் ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பணி, (இந்திய) அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றே அர்த்தம்” என்று வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்துமா?
இதையடுத்து, “ஜம்மு - காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையால் கூறப்படும் எதுவும் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் என்று அர்த்தமா?” என்றும், “ஜம்மு - காஷ்மீர் படிப்படியாக பிரதான நீரோட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்ற எண்ணம்தானே (தலைவர்களுக்கு) இருந்தது” என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார். அப்போது, “அதிர்ஷ்டவசமாக உண்மையில் என்ன நடந்தது?” என்ற பதில் கேள்வியை எழுப்பிய வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், “ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்பைக் குறிக்கிறது. இதில் ஒரு பாலம் உள்ளது. கடிதப் பரிமாற்றத்தில் கூட அங்கீகாரம் உள்ளது என்ற சங்கர நாராயணன், “370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான இந்திய நாடாளுமன்றத்தின் முந்தைய முயற்சியைக் குறிப்பிட்டு, குல்சாரிலால் நந்தாவின் வார்த்தைகளை படித்துக் காட்டினார். சட்டப்பிரிவு 370(1)(d)-ஐ மட்டுமே அவர்கள் (ஒன்றிய அரசு) ரத்து செய்திருக்க முடியும். அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சட்டப்பிரிவு 368-இன் கீழ் அவர்கள் விதியை அகற்ற வேண்டும்” என்றார். அப்போது நீதிபதி எஸ்.கே. கவுல் குறுக்கிட்டு, “அவர்கள் செய்தது சரியா இல்லையா? என்பதை மட்டும் நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் தீர்வு கொடுக்க வேண்டியதில்லை” என்றார்.
356 மூலம் அழிவுகரமான ஒன்றைச் செய்ய முடியாது
இதையடுத்து “370 தற்காலிகமானது என்ற விளிம்புநிலைக் குறிப்பிலேயே நாம் அதிக கவனம் செலுத்தக்கூடாது, ஏனென்றால் அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி XXI-க்கு வெளியே பல விதிகள் உள்ளன. அவை தற்காலிக இயல்புடையவை” என்று வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் கூறினார். “பிரிவு 73(2) போன்றவை தற்காலிக விதிகள் அல்ல” என்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் “இவை நாடாளுமன்ற சட்டத்தால் மாறுபடும் வரை தொடரக்கூடிய விதிகளே” என்றார். அதற்கு பதிலளித்த சங்கர நாராயணன், “370-ஐ ரத்து செய்வ தைப் பொறுத்தவரை, 370(3)குறிப்பிடுவதைப் போல, அரசியல் நிர்ணய சபையால் முடிவு எடுக்கப்பட வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்றார். நாடாளு மன்றம் சட்டம் இயற்ற வேண்டும், ஆனால் சட்டம் இயற்றவில்லை” என்றார். அப்போது, “சட்டப்பிரிவு 367 இங்கே எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. 368(2) கூறுவதன் படி, பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், 367க்குள் செய்யலாம்! 356 இன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாற்ற முடியாத மற்றும் அழிவுகரமான ஒன்றைச் செய்ய முடியுமா? இது எவ்வளவு அபத்தமானது” என்று கோபால் சங்கரநாராயணன் தனது வாதங்களை வைத்தார்.
தொகுப்பு: அ.மாரிமுத்து