ஒரு நாவல் சிறப்பாக ஒரு கதையைச் சொன்னால் வியந்து போற்று வது வழக்கம். அதே நாவல் சிறப்பாக ஒரு பகுதியின் வரலாற்றை, அப்பகுதியின் பண்பாட்டு குறியீடுகளை, அப்பகுதியின் அரசியல், பொருளாதாரப் பின்புலங் களை அலசிக் கதையாகச் சொல்லிச் சென்றால் அது மிகவும் சிறந்ததாக வியந்து பாராட்டப்படும். அவ்வகையான ஒரு நாவல் தான் அக்கானி. பாரதி புத்தகாலயத் தால் வெளியிடப்பட்டுள்ள இந்நாவலின் ஆசிரியர் குமரி மாவட்டத்தைப் பூர்வீக மாகக் கொண்ட பள்ளிக்கூட ஆசிரியர் இலா. வின்சென்ட். அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் கருங்கலை அடுத்த பூட்டேற்றி. சேலம் மாவட்டத்தில் பணி யாற்றி வரும் அவர் தனது ஊரான பூட்டேற்றி யின் வரலாற்றை தான் நாவலாகப் படைத்துள்ளார்.
நாவலில் அப்பகுதி மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியலை மிகத் தெளிவாகப் பேசி செல்கிறார். 1956-க்கு பிந்தைய 20 வருடங்கள் அவ்வூரின் முக்கிய நிகழ்வுகளில் ஊடாடிச் செல்கிறது நாவல். அக்காலத்தில் பனைத் தொழி லைச் செய்து வந்த தொழிலாளர்கள் பனை யிலிருந்து விழுந்து இறக்கும் கொடூரம் அடிக்கடி அப்பகுதியில் நடந்து வந்துள்ளது. இந்த நாவலின் முக்கிய கதாபாத்திர மாக வரும் மைக்கேலின் தந்தை பனையி லிருந்து விழுந்து இறந்து போவதில் துவங்குகின்றது நாவல். அதே மைக்கேல் படித்து வங்கி வேலை அமை யக்கூடிய நேரத்தில் அப்பகுதி மக்களின் நலனுக்காக கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து ஒரு கட்சி ஊழியராக மாறும் நிலையில் நாவல் முடிகிறது. மைக்கேலின் முடிவு குறித்து, “ஏழைகள் மீதும், பாட்டாளிகள் மீதும் அன்பும், அக்கறையும் வச்சிருக்கிய ஒருத்தரு…. மார்க்சியத்தையும், லெனினியத்தையும் படிச்சா தீப்பிழம்பாயிருவாரு… அதெக் கூடப் பிறப்புகளின் கரைச்சலோ, காதலி யின் கண்ணீரோ தணிக்க முடியாது… ஒரு புரட்சியில் முங்கி எழும்பினாத் தான் அது தணியும் பாத்துக்கோங்க….” என்ற வரிகள் மார்க்சின் “கொள்கை ஒருவரை கவ்வி பிடிக்கும்போது அது பௌதீக சக்தி யாக” மாறும் என்ற வரிகளைப் பிரதி பலிக்கின்றன.
படிப்பறிவற்ற, பனையேற்றுத் தொழி லாளர்களைக் கொண்ட கிராமமாக இருந்தாலும் தங்களது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தை மிஷனரி களின் செயல்பாடு அக்கிராமத்தில் விதைத் திருந்தது. அதனாலே ஒவ்வொரு குடும்பத்திலும் தொழில் பனையேற்றாக இருந்தாலும் பிள்ளைகள் பள்ளிக் கூடத்திற்கு செல்வது இயல்பான ஒரு விஷயமாக இருந்து வந்துள்ளது. நாவலில் வரும் இன்னொரு முக்கிய மான கதாபாத்திரம் கிளாரா. பள்ளிக் கூடத்திற்குச் சென்று கொண்டிருந்த கிளாரா நோயாளியான தனது தாயாரைக் கவனிக்க வும், வீட்டு வேலைகளைச் செய்யவும் பள்ளிப் படிப்பைக் கைவிடுகிறார். பின்னர் தங்கை அமலாவை படிக்க வைக்க பல்வேறு வகைகளில் குடும்பத்துக்கு உதவுகிறார். எதிர்பாராத ஒரு நிகழ்வில் தாயாகி குழந்தையோடு தனியாக வாழும் சூழலில், தன்னுடைய அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் ஒருவரை திருமணத்தை செய்து கொண்டு சென்று விடுகிறார் தங்கை. இவ்வளவு சிக்கல்களுக்கிடையே, கோயில் நிர்வாகத்தில் பெண்களுக்கு இடம் வேண்டும் எனப் போராடி நிர்வாகக் குழுவில் இடம் பெறுகிறார். தனது ஊரில் உள்ள பனையேற்றுத் தொழிலாளர்களின் கோரிக்கைக்காக குழித்துறை பகுதியில் நடைபெறும் பேரணியில் குழந்தையோடு பங்கேற்று அரசியலில் ஈடுபடுகிறார். பின்னர் அப்பகுதியில் கவுன்சிலராகவும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.
நாவலில் அந்த காலத்தில் குமரி மாவட்டத்தில் இருந்த சாதிய நிலைகளை யும் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டு கிறார். ஆதிக்க சாதியினரின் வீடுகளில் உள்ள கிணறுகளிலிருந்து மற்றவர்கள் தண் ணீர் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. பூட்டேற்றி கிராமத்திலும் கோடை காலங் களில் குளம், குட்டைகள் வறண்டு விட்ட நிலையில் தண்ணீருக்காக மக்கள் ஆதிக்கச் சக்திகளின் கிணறுகளில் மணிக் கணக்காக காத்துக் கிடப்பதும், எப்போதா வது மனமிரங்கி அவர்கள் தண்ணீர் இறைத்து ஊற்றுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இதனைப் போக்க, அப்பகுதியில் தண்ணீர் கிணறு அமைத்த லும் தொடர்ந்து பட்டணம் கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் பெற்று விவ சாயத்தில் ஈடுபட்ட நிகழ்வுப் போக்கு களும் முக்கிய கவனத்தைப்பெறுகின்றன. தொழிலாளி வர்க்கத்தை பிரதி பலிக்கும் ஒரு கட்சியின் அமைப்புகள் சமூகத் தேவைக்கேற்ப எவ்வாறு கட்டப்படு கிறது என்ற புரிதலை ஏற்படுத்தும் இந்த நாவல் அனைவரையும் ஈர்க்கும். விள வங்கோடு வட்டாரத் தமிழ், குமரி மாவட்ட மக்களை, வெகுவாக ஈர்க்கும். இந்த அரிய பணியைச் செய்த நூலாசிரியர் இலா. வின்சென்டுக்கு வாழ்த்துகள்.
நூல் : அக்கானி
ஆசிரியர் : இலா வின்சென்ட்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
தொடர்புக்கு : 044/ 24332924/24332424/24330024
பக்கங்கள் : 329,
விலை : ரூ.340/