articles

img

காஷ்மீர் : நேற்று - இன்று - நாளை - சந்திப்பு : களப்பிரன்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் காஷ்மீரின் குல்காம் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான  தோழர் முகமது யூசுஃப் தாரிகாமி அவர்களை ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தீக்கதிர் நாளிதழுக்காக எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணல். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் இன்றைய நிலை குறித்து விரிவாக வந்துள்ள ஒரு தமிழ் இதழுக்கான முதல் நேர்காணல் இது:

கேள்வி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, சட்டப்பிரிவு 370 திருப்பப் பெறப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,  காஷ்மீர் மக்கள் என்ன கருதுகிறார்கள்? 

பதில்: காஷ்மீரின் ஒட்டுமொத்த  மக்களுக் கும் உண்மையில் இது ஒரு பெரிய அதிர்ச்சி தான். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகள் கிட்டத்தட்ட எங்களின் நம்பிக்கையை முற்றிலும் குலைத்துவிட்டது. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமுமே தனித்துவம் வாய்ந்தது. தமிழ் ஒரு பழமை யான வளமான மொழி. அதற்கென்று தனித்த சிந்தனை மரபு, தனித்த வாழ்க்கை முறை உள்ளது. தமிழ்நாட்டிற்கு என்று மொழி, இனம் சார்ந்த ஒரு தனித்துவம் எப்படி இருக்கி றதோ, அதே போல் தான் காஷ்மீரிகள் தங்களுக் கென்று ஒரு தனித்துவம் இருப்பதாக கருது கிறார்கள். இது இந்தியாவில் உள்ள எல்லா மாநி லங்களுக்கும் பொருந்தும். அதனால் தான் மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவை அரசியல் சட்டம் வரையறுக்கிறது. எங்களுக்கு அருகில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் அரசி யல் சட்டப்பிரிவு 371ன் படி இப்போதும் வெளி மாநிலத்தவர் அங்கே நிலம் வாங்கமுடியாது என்கிற சட்டப்பாதுகாப்பு உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்த சட்டப்பாதுகாப்பு தற்போதும் உள்ளது. இப்படியான ஷரத்துக்க ளை இந்திய அரசியல் சட்டத்தில் இணைக்கக் காரணம் அரசியல் நிர்ணய சபையின் ஒவ் வொரு பகுதி மக்களின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணம் தான்.  காஷ்மீர் இவற்றை விட இன்னும் தனித்துவ மானது. 1927ல் காஷ்மீர் தனி சமஸ்தானமாக இருந்த போது, அதுவும் இந்தியா பாகிஸ்தான் என்கிற இருதேச கருத்துருவாக்கம் பிறக்காத சூழலிலேயே காஷ்மீரை ஆண்ட இந்து மன்னர் ஹரி சிங், காஷ்மீரின் தனித்துவத்தை பாது காக்கும் பொருட்டு காஷ்மீருக்கு வெளியே  உள்ளவர்கள் காஷ்மீருக்குள் நிலம் வாங்குவ தற்கான தடைச்சட்டத்தை பிறப்பித்தார். அதோடு காஷ்மீரிகளின் தனித்துவத்தை பாது காக்கும் பொருட்டு காஷ்மீருக்கென்று தனித்துவ மான பல சட்டங்கள் இங்கே இருந்தன. 1947இல் இந்திய ஒன்றியத்தோடு காஷ்மீரை இணைக்கும் போது, காஷ்மீரின் தனித்து வங்கள் பாதுகாக்கப்படும் என்கிற உறுதிமொழி யோடே சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து என்பது சில தனிமனிதர்களின் மூளையில் உதித்த ஒன்று அல்ல. அது முழு அரசியல் நிர்ணய சபை யும் அமர்ந்து விவாதித்து முழுமனதோடு வழங்க ஒப்புக்கொண்ட ஒன்று. இப்போது எல்லோரும் நேருவை இதற்காக குறை கூறுகிறார்கள். சிறப்பு அந்தஸ்து விவாதத்தின் போது நேரு இந்தி யாவிலேயே இல்லை. அவர் வெளிநாட்டில் இருந்தார். உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் அவர்கள் தலைமையிலான இந்திய ஒன்றிய அமைச்சகம் தான் அதை விவாதித்து ஒப்புதல் வழங்கியது. அந்த அமைச்சகத்தில் இந்துத்துவ வாதியான சியாம பிரசாத் முகர்ஜி யும் இருந்தார். அப்போது அவர் அமைச்சரவை யிலிருந்து ராஜினாமா செய்யவில்லை. அதே போல் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை அவர் வரவேற்கவே செய்தார். ஆனால் இன்று 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக பேசினால் தேச விரோதம் என்று சொல்கிறார்கள். ஆனால் 1947ல் இதே சட்டப்பிரிவு தேச ஒற்றுமையின் அடையாளமாக, தேசபக்த செயலாக பார்க்கப்பட்டது. இரு தேசங்க ளின் இணைப்புப் பாலமாக அது கருதப்பட்டது.  இன்று வரலாற்றை திரித்து பொய்யாக பரப்பு கிறார்கள். இந்திய மக்களை குழப்புகிறார்கள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து என்பது, இந்திய அரசியல் நிர்ணய சபை பெற்ற குழந்தை. இந்திய தேசம் பெற்ற குழந்தையின் கழுத்தை 2019ல் இவர்கள் மூர்க்கமாக நெரித்துள் ளார்கள். 

கேள்வி: காஷ்மீர் அந்தஸ்து பறிப்பு-  ஒட்டு மொத்த தேசத்தின் பிரச்சனை யாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே!

பதில்:  ஆகஸ்ட் 5, 2019ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நாடாளுமன்றத்தில் சட்டவிரோத மாக ரத்து செய்ததை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் அனைத்து செல்பேசி மற்றும் தொலைபேசி இணைப்புகளையும் முதலில் துண்டித்தார்கள். இணையத்தை முற்றிலும் தடை செய்தார்கள். காஷ்மீரில் உள்ள ஒரு நோயாளி கூட தன் மருத்துவரை தொடர்பு கொள்ள முடியாத சூழலை உருவாக்கினார்கள். மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் யாரும் தன் வீட்டை தொடர்பு கொள்ள இயலாத சூழலை உருவாக்கினார்கள். கிட்டத்தட்ட ஒட்டு மொத்த காஷ்மீரையும் திறந்தவெளி சிறைச் சாலையாக்கினார்கள். எங்கள் எல்லோரையும் இராணுவ முற்றுகையில் வைத்துவிட்டு, எங்க ளின் நலன்கள் குறித்து வெட்கமில்லாமல் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னார்கள். எங்கள் தரப்பு நியாயங்களை சொல்லும் எல்லா வாசல்களையும் மூடிவிட்டிருந்தார்கள். அப்போது சட்டமன்றம் இங்கு முழுவதும் முடக் கப்பட்டிருந்தது. எங்களைப் பற்றி இந்திய நாடா ளுமன்றம் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று கேட்கக்கூட எங்களுக்கு எந்த வாய்ப்பை யும் அவர்கள் வழங்கவில்லை. கிஞ்சித்தும் ஜன நாயக உரிமைகள் ஒன்றைக்கூட எங்களுக்கு வழங்காமல் மறுத்துவிட்டு, உலகின் பெரிய ஜன நாயக நாடு என்று சொல்லிக்கொண்டார்கள். இது காஷ்மீர் மக்களின் உரிமை பறிப்பு என்று நான் கருதவில்லை. இது இந்தியக் குடியரசை அவமதிப்பதாகவே கருதுகிறேன். இந்திய மக்கள் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

2019 செப்டம்பரில் எங்கள் கட்சியின் பொ துச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நீதிமன்றத் தின் மூலம் என்னை சந்தித்து, தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அப்போது நான் சொன்னதைத்தான் இப்போ தும் சொல்கிறேன், இது இந்திய அரசியல் சாச னத்தின் மீதான பெரும் தாக்குதல் திட்டத்திற்கான முதல் அடி, இந்திய ஜனநாயகத்தை, ஜனநாயக அமைப்புகளை தாக்கி அழிப்பதற்கான முதல் புள்ளி என்று சொன்னேன். அது தான் இப்போது நடக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை, நிதிசார்ந்த சுதந்திரத்தை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் தமிழ்நாட்டில் கூட ஆளுநர் ரவியை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை செயல்படவிடாமல் முடக்கப்பார்க்கிறார்கள். இப்படித்தான் எல்லா மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது.  சுதந்திரமான பத்திரிகை துறை இன்று எங்கே இருக்கிறது? சுயமாக இயங்கும் தேர்தல் ஆணையம் இன்று எங்கே இருக்கிறது? இவ்வாறு ஒவ்வொரு அமைப்பாக அவர்கள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இது காஷ்மீர் மக்களின் பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த தேசத்தின் பிரச்சனை. 

கேள்வி: இந்தியாவுடன் காஷ்மீர் இணைப்பு எப்படி நடந்தது?

பதில்: இந்திய சுதந்திரத்தின் போது காஷ்மீர் இந்தியாவோடு இல்லை. அதே போல் பிரிட்டிஷ்  ஆட்சியின் கீழும் இல்லை. அது தனி சமஸ்தா னமாகவே நீண்ட காலம் இருந்தது. இந்திய சுதந்திரத்தின் போது அப்போதைய காஷ்மீர் மன்னர் ஹரிசிங் தனது எல்லைகளாக இருந்த புதிய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளோடும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் அளவிற்கு காஷ்மீர் தனி பகுதியாகவே இருந்தது. அதனால் தான் 1947 அக்டோபர் 26 வரை காஷ்மீர் யாரோடும் இணை யாமல் தனி சமஸ்தானமாகவே இருந்தது. காஷ்மீர் பாகிஸ்தானோடு தன் எல்லைகளை பெரும் அளவில் கொண்டுள்ளது. அதே போல் காஷ்மீர் மக்கள் தொகையில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். ஆகவே காஷ்மீர் தங்களோடு தான் இணைய வேண்டும் என்று பல்வேறு வழிகளில் ஜின்னா கடுமையாக வலியுறுத்தினார். இதன் விளைவாக உருவான நெருக்கடியான சூழலில் காஷ்மீர் மன்னர் இந்தியாவோடு இணைய முடிவெடுத்தார். அவர் தானாக முடிவெடுக்கவில்லை. அதற்கு புற சூழல்கள் பல காரணமாக இருந்தன. அதில் மிக முக்கியக் காரணமாக இருந்தது மக்கள் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஆகும். ஷேக் அப்துல்லா அரசு காஷ்மீரில் உருவாக,  குறிப்பி டத்தக்க அளவில் கம்யூனிஸ்ட்கள் அதற்குள் பங்காற்றினர்.

கேள்வி: காஷ்மீரில் ஜனநாயகம், இந்தியா இணைப்பு, சிறப்பு அந்தஸ்து இவைகளில் கம்யூனிஸ்டுகளின் பங்குகள் என்ன?

பதில்:  காஷ்மீர் சமஸ்தானமாக இருந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி காஷ்மீருக் குள் தனியாக செயல்படவில்லை. அவர்கள் அனைவருமே ஷேக் அப்துல்லாவின் தேசிய  மாநாட்டுக் கட்சியில் இணைந்தே பணியாற்றி னர். அவரின் அமைச்சரவையில் கூட கம்யூ னிஸ்ட் ஆதரவாளர்கள் இருந்து பணியாற்றி னர். 1931ல் ஷேக் அப்துல்லா, மன்னருக்கு எதி ராக மக்கள் உரிமை கோரிய முதல் மாநாட்டை இஸ்லாமியர்களை மட்டுமே கொண்டு நடத்தி னார். காரணம் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்களாகவே இருந்தார்கள். ஷேக் அப்துல்லா இயல்பிலேயே ஒரு முற்போக்குவாதி. ஆகவே அவரோடு கம்யூனிஸ்டுகளும் இணைந்து பணியாற்றத் தொடங்கிய பின்னர்  நடைபெற்ற மாநாடுகள் மதச்சார்பற்ற மாநாடுகளாக பரிணமித்தன. தேசிய மாநாட்டுக் கட்சியும் ஒரு மதச்சார்பற்ற அமைப்பாக உருவானது. பஞ்சாபிலிருந்து தோழர்கள் பாபா பியாரே லால் பேடியும் அவரது இணையர் ஃப்ரிடாவும் ஸ்ரீநகருக்கு நேரில் வந்து பணியாற்றினர். அவர்கள் ஷேக் அப்துல்லாவோடு மிக நெருக்கமாக பணியாற் றத் தொடங்கினர். அவர்களும் அவரது தோழர்க ளும் இணைந்து காஷ்மீர் அரசியல் குறித்த வர லாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை உருவாக்கி னர். “நயா காஷ்மீர்” அதாவது புதிய காஷ்மீர் என்று அந்த ஆவணத்துக்கு பெயர் வைத்தனர்.

இது தேசிய மாநாட்டுக்கட்சியின் கட்சித்திட்டமாக தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணம் தேசிய மாநாட்டுக் கட்சியில் முன்வைக்கப்பட்டு விவா திக்கப்பட்டு நடைமுறைப்படுத்த ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ஆவணம் இன்றும் வர லாற்றுச் சான்றாக உள்ளது. ஸ்ரீநகருக்கு வரு வோர் கண்டிப்பாக ஒரு இடத்தை சுற்றிப்பார்த்தி ருப்பார்கள். அதன் பெயர் “லால் சவுக்”. ‘லால்’ என்றால் சிகப்பு. ‘சவுக்’ என்றால் சதுக்கம். “லால் சவுக்” என்றால் “செஞ்சதுக்கம்” என்று பொருள். ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தை போல காஷ்மீரிலும் ஒரு செஞ்சதுக்கத்தை உருவாக்கி னர். அப்படி அந்த இடத்திற்கு பெயர் வைத்தவர் கள் ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியினர். காரணம் அப்போது அந்தக்கட்சியில் கம்யூனிஸ்டுகளும் சோச லிஸ்டுகளும் இருந்தார்கள். தேசிய மாநாட்டுக் கட்சியே ஒரு மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சியாக இருந்தது. அந்தச் சூழலில் தான் இந்தியாவோடு காஷ்மீர் ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்தத்தின் படியே வெளியுறவு, இராணுவம், தொலைத்தொடர்பு தவிர மற்ற அனைத்துமே காஷ்மீர் தானாக முடிவெடுத்து செயல்படும் உரி மையுடன் கூடிய தனிச்சிறப்பு அந்தஸ்து உருவாக்கப்பட்டது. இவ்வாறு காஷ்மீர் அரசிய லின் தொடக்கம் முதலே கம்யூனிஸ்டுகள் குறிப்பிடத்தக்க பங்கினை செய்துள்ளார்கள். 

கேள்வி:  காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் குறித்து? 

பதில்: 1948லேயே இந்திய மாநிலங்களில் முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் அமல்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை பிரித்துக் கொடுத்த மாநிலம் காஷ்மீர் தான். அப்போது ஷேக் அப்துல்லாவின் அரசியல் ஆலோசகர்களாக இருந்த கம்யூனிஸ்டுக ளுக்கு அதில் முக்கிய பங்கு உண்டு. காஷ்மீரின் புதிய அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தால் தங்கள் நிலங்களை இழந்த பெரும் நிலக்கிழார்கள் தான் இந்துத்துவ சக்திகளுக்கு காஷ்மீர் மண் ணில் துணை போனார்கள். இதன் தொடர்ச்சி யாகத் தான் முதன் முதலில் அங்கு வெறுப்பு அரசியலும் விதைக்கப்பட்டது.

கேள்வி : இந்தியாவில் முதல் நில சீர்திருத்தத்தை செய்த காஷ்மீரின் நிலங்கள் இன்று யார் கைகளில் இருக்கிறது? 

பதில்:  ஒன்றிய அரசு சட்டம் 370ஐ ரத்து செய்த கையோடு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வாக நிலம் சார்ந்த சட்டங்களை காஷ்மீரில் திருத்தியுள்ளது. 370 சட்டம் ரத்து செய்யப் பட்டதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் நிலங்களை தனியாருக்குக் கொடுக்க வகைசெய்யும் இந்தச்  சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஆளுநர் மூலம் அமல் படுத்த துடிக்கிறார்கள். கட்சியின் சட்டப்போ ராட்டம் தொடர்கிறது. அதுமட்டுமல்லாமல் 2020க்குப்பின் காஷ்மீர் மறு சீரமைப்புச் சட்டம், வளர்ச்சித் திட்டங்களுக்கான சட்டம் என்று பல சட்டங்களை ஒன்றிய அரசு காஷ்மீர் மக்களி டம் எந்த விவாதமும் நடத்தாமல் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிரான குரல் காஷ்மீருக்குள் கடுமையாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்களின் முழு அரசு இயந்திரத்தையும் கொண்டு காஷ்மீர் மக்களின் மீது ஒடுக்குதலை செய்துகொண்டே இருக்கிறார் கள். அது தான் பாஜகவின் குணம். அது தான்  ஆர்.எஸ்.எஸ்.சின் குணம். இதற்கு எதிராகத் தான் காஷ்மீர் மக்கள் போராடிக்கொண்டிருக்கி றார்கள். சிபிஎம் அவர்களோடு நிற்கிறது.

கேள்வி: காந்தி பார்வையில் காஷ்மீர், தற்போதைய ஆட்சியாளர்கள் பார் வையில் காஷ்மீர் வேறுபாடுகள் என்ன? 

பதில்:  இந்தியா விடுதலை பெற்ற போது நாட்டின் வடகிழக்கும் வடமேற்கும் பற்றி எரிந்தது. அப்போது அங்கு களத்தில் இருந்த காந்தியடி கள்  இந்தியாவில் தான் விரும்பும் மாநிலமாக சொன்ன மண் காஷ்மீர். காரணம் பெரும்பான் மையான இஸ்லாமியர்கள் மத்தியிலே சிறுபான்மை இந்துக்கள் பாதுகாப்பாக இருந்த மாநிலம் என்பதாலும், தேசப்பிரிவினையின் போது ஒரு கலவரம் கூட நடைபெறாத மண் என்ப தாலும் காஷ்மீரை இந்திய ஒற்றுமையின் அடை யாளமாக காந்தியடிகள் பார்த்தார். ஆனால் இன்றோ ஏழு காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் ஒட்டு மொத்த காஷ்மீரையும் இராணுவ முற்றுகையில் வைப்பதோடு, ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களை யும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் பார்வை யே தற்போதைய ஆட்சியாளர்களிடம் உள்ளது. எங்களின் அடிப்படை உரிமைகள் முழுவதை யும் பறித்துவிட்டு, எங்களை பிரிவினை வாதத் தின் அடையாளமாகவே காட்ட முயற்சிக்கிறது தற்போதைய அரசு.

கேள்வி: இயல்பாகவே காஷ்மீர் அதிக எழுத்தறிவு கொண்ட மாநிலம். தற்போது காஷ்மீரில் கல்விச்சூழல் எப்படி உள்ளது?

பதில்:  ஒன்றிய அரசு ஒட்டுமொத்த நாட்டிற் குமான புதிய தேசிய கல்விக் கொள்கையை உரு வாக்கியுள்ளது. அதன் தாக்கம் காஷ்மீரிலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையான பிரச்சனை அது கல்வியை முழுக்க முழுக்க வணிக மயமாக்கவுள்ளது. பெரும் கார்ப்பரேட் தனியார்க ளுக்கு கல்வியை தாரைவார்க்க உள்ளது. சேவை என்பதிலிருந்து கல்வி முழுவதும் வணிகம் என்கிற சூழல் நோக்கி நகர உள்ளது. அதோடு இவர்களின் அரசியல் கோட்பாடுகள் மூலம் கல்வியை காவிமயமாக்கும் போக்கும் தீவிரமாக உள்ளது. அறிவியலுக்கு விரோதமா னவைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடு கிறார்கள். வரலாற்று திரிபுகளை திணிக்க நினைக்கிறார்கள். கல்வி என்பது ஒரு மாண வனை ஒரு அடி முன்னோக்கி சிந்திக்க வைக்க வேண்டும். அது மாணவர்களிடம் கற்பனை வளத்தை உருவாக்கிட வேண்டும். ஆனால் புதிய கல்விக்கொள்கையின் சாரத்தில் இவை களுக்கான இடமே இல்லை. அது அறிவியலிலி ருந்து கல்வியை மதம் சார்ந்த சிந்தனை நோக்கி நகர்த்தி, ஒட்டுமொத்த அறிவுலகத்திலிருந்து நம்மை பின்னுக்கு இழுக்கும் வேலையை செய்ய உள்ளது. கல்விச் சந்தையில் கல்வி காசாக்கப்பட்டு, இந்த நாட்டிற்கோ, அதன் மக்க ளுக்கோ எந்த வகையிலும் உதவாத ஒன்றாக உருவாகிறது. அந்த ஆபத்து காஷ்மீர் பிள்ளைக ளுக்கும் உள்ளது. 

கேள்வி: இந்தியா இந்திமயமாவது குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்:  காஷ்மீரில் மூன்று தனித்தனி பிரதே சங்கள் உள்ளன. காஷ்மீரி, டோக்ரா என்று  வெவ்வேறு மொழிகள் இங்கே பேசப்படுகின் றன. ஒட்டுமொத்த காஷ்மீருக்குமான இணைப்பு மொழியாக எங்களின் அரசு ஆவணங்களில் உருது இருக்கிறது. இவர்கள் இந்தியை உயர்த்திப் பிடிக்க உருது மொழியை தரமிறக்கம் செய்கிறார் கள். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒரு மாநிலம் விரும்பாமல் அங்கே இந்தி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். இந்த நாட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம் என்று பல்வேறு மொழிகள் பேசப்படு கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. மொழி என்பது ஒவ்வொருவ ரின் தொடர்பு சாதனம். ஆகவே ஒவ்வொருவர் மொழியையும் நாம் மதிக்க வேண்டும். நாங்கள் காஷ்மீரி பேசுவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை, நீங்கள் தமிழ் பேசுவதால் எனக்கு என்ன பிரச்சனை. நாம் ஒன்றாக இருக்கிறோமா என்பதே முக்கியம். இந்த நாட்டில் உள்ள ஒரு பகுதி போல் இன்னொரு பகுதி இல்லை. இங்கு உணவு கூட ஒரே மாதிரி இருந்ததில்லை. ஏன் தட்பவெட்ப சூழ்நிலை கூட இங்கு ஒன்றுபோல் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள தட்பவெட்பம் காஷ்மீரிலோ, லடாக்கிலோ இல்லை. அப்படி இருக்கையில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் எப்படி மொழி மட்டும் ஒன்றாக இருக்க முடியும்? பன் மைத்துவம் நமது நாட்டின் வலிமையே தவிர, அது நமது பலவீனம் அல்ல. 

கேள்வி: காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப் படம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:  இந்தப்படம் ஒரு பக்கச்சார்பான திரைப்படம் என்பது என் கருத்து. ஒன்றிய பாஜக அரசின் வெறுப்பு அரசியலின் செயல் திட்டத்தில் இதுவும் ஒன்று அவ்வளவே.

கேள்வி: காஷ்மீரின் தனித்துவமான பண்பாடு என்று எதை சொல்வீர்கள்?

பதில்: காஷ்மீரின் - காஷ்மீரிகளின் - தனித்துவம் என்றால் அது சகிப்புத் தன்மை தான். இது உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இது தான் காஷ்மீர் மக்களின் இயல் பான குணாம்சம். லால்தத், ஷேக் நூர் உல்லாலம் என்கிற இரு வேறு மதங்களின் பிரதிநிதிகள் ஒன்றாக நண்பர்களாக இருந்த மண் இது. இது தான் நீண்ட கால காஷ்மீரின் பாரம்பரியம். மத அடிப்படை வாதிகளை புறக்கணித்து, தங்களுக் குள் ஒன்றாக ஒற்றுமையாக சகிப்புத்தன்மை யோடு வாழும் மக்கள் தான் காஷ்மீரிகள்.

கேள்வி: அன்றைய ஆசிஃபா படு கொலையும் இன்றைய இந்திய சூழலும் - என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:  ஆசிஃபா எனும் 8வயது சிறுமி கோவி லில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட கொடுமையை அன்றைக்கு வெளிக்கொண்டு வந்தோம். மக்கள் முன் குற்றவாளிகளை அம்பலப்படுத்தி னோம். சட்டமன்றத்தில் அவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் பாஜகவினர் அக்குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள். இருக்கிறார்கள். இன்றைக்கு மணிப்பூரிலும் அப்படியான குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களும், மணிப்பூரில் இருக்கும் பெண்க ளும் நம்முடைய சகோதரிகள் தானே. அவ்வா றான கொடுமைகள் நடைபெறுவது இந்த நவீன நூற்றாண்டில் வெட்கக்கேடான ஒன்று. 

கேள்வி : காஷ்மீர் பற்றிய வதந்திக ளைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? 

பதில்:  காஷ்மீர் குறித்து ஊடகங்களும், அரசு இயந்திரங்களும் சொல்வதும் இங்குள்ள நிலமையும் முற்றிலும் வேறுவேறானது. நாங்கள் 1947ல் என்ன மன நிலையில் இருந் தோமோ அப்படித்தான் இப்போதும் இருக்கி றோம். இதைத்தான் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் உங்களுக்கு சொல்லப்படுபவை தவ றான செய்திகளும், தகவல்களும் மட்டுமே. தமிழ்நாட்டு மக்களுக்கும், ஏன் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எங்களை தனிமைப்படு த்திப் பார்க்க வேண்டாம். எங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைத்தான் நாங் கள் கேட்கிறோம். நாங்கள் வேறு ஒன்றும் பெரி தாக கேட்கவில்லை.  வரலாற்றுச் சிறப்பு மிக்க எங்களின் மாநிலம் தற்போது யூனியன் பிரதேச மாக சிறுமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு நடந்தது போல் இந்தியாவில் வேறு ஏதேனும் மாநிலங்கள் சீர் குலைக்கப் பட்டுள்ளனவா? வேறு ஏதாவது ஒரு மாநிலம் அவர்கள் ஒப்புதல் இல்லாமலே பிரிக்கப் பட்டுள்ளதா? குறைந்த பட்ச உரிமை கூட வழங் கப்படாமல், தாங்கள் சொல்வது எதையுமே கேட்காமல், முழு ராணுவ முற்றுகையில் உள்ள மாநிலங்கள் ஏதேனும் இந்நாட்டில் உள்ளதா? ஆர்எஸ்எஸ்- பாஜகவினர் ஒட்டுமொத்த நாட்டை யும் ஒரு கட்சியின் கீழ், ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அவர்கள் தவறு மேல் தவறு செய்கிறார்கள். ஆனால் இந்தியா, இந்திய மக்களுக்கானது. கன்னியா குமரி முதல் காஷ்மீர் வரை மொழி, மதம், இனம், நிறம் என்று வேறுபாடுகள் கடந்து இந்தியராக ஒன்றிணைந்துள்ள இந்தியர்களுக்கானது. ஆகவே நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். காஷ்மீரிகள் பாதிக்கப்படும் போது மற்றவர்கள் குரல்கொடுக்கவில்லை என்றால், நாளை வேறு ஒரு மாநிலம் பாதிக் கப்படும் போது மற்ற மாநிலங்கள் குரல் கொடுக் காமல் அமைதி காப்பார்கள். இதை காஷ்மீரிக ளின் இழப்பாக நாங்கள் பார்க்கவில்லை. இந்திய ஜனநாயகத்தின் இழப்பாக பார்க்கி றோம். நாம் இந்தப்போரில் வெற்றி பெற வேண்டும். நாம் வாழ வேண்டும். இந்திய அரசி யல் சட்டம் வாழ வேண்டும். இந்திய ஜனநாயகம் வாழ வேண்டும்.