இனப் பாகுபாட்டை எதிர்த்து தொடர்ந்து போராடிய பிரபல பாடகரும் குடிமை உரிமை ஆர்வலரு மான ஹாரி பெலாஃபாண்டே கடந்த ஏப்.26 அன்று காலமானார். அவருக்கு வயது 96. இதயநோய் பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக, அவரது செய்தித் தொடர்பா ளர் கென் சன்சைன் தெரிவித்தார். ஹாரி பெலாஃபாண்டே 1927 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள ஹர்லேம் என்ற இடத்தில் பிறந்தார். இவரது குடும்பம் கரிபீயனி லிருந்து குடியேறிய ஏழ்மையான குடும்பமாகும். இரண்டாம் உலகப் போரின் போது, உயர் பள்ளிக் கல்வியை இடைநிறுத்தி விட்டு, நியுஜெர்சி கடற்படையில் வெடிமருந்து ஏற்றும் தொழிலாளி யாக பணியாற்றினார்.
உலகப் போருக்குப் பிறகு, தனது நடிப்புக் கனவை நிறைவேற்றுவதற்காக எர்வின் பிஸ்கேடரின் புகழ்பெற்ற நாடகப் பள்ளியில் சேர்ந்து நடிப்புக்கலையை கற்றுக் கொண்டார். நியுயார்க் அரங்குகளில் பாட்டுப் பாடி, அதிலி ருந்து கிடைத்த பணத்தை தனது கல்விக் கட்ட ணத்திற்கு செலுத்தினார். இதன்மூலம் அவருக்கு பதிவு பாடல்களைப் பாடுவதற்கான ஒப்பந்தம் கிடைத்தது. பின்னர், பெலாஃபாண்டே அமெரிக்க நூலகத்திலிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பை தேடி கற்கத் துவங்கினார். இது அவரது அறிவூப்பூர்வ நடவடிக்கையை நிரூபிக்கச் செய்தது. ஜமைக்கா ஃபேர்வெல் அன்ட் டே-ஓ (Jamaica Farewell and Day-O) உள்ளிட்ட பாடல்கள் மூலம் பிரகாசிக்கலானார். இப்பாடல் கப்பல் துறையில் பணியாற்றும் கரிபீயத் தொழிலாளர் களை குறித்ததாகும். 1956 ஆம் ஆண்டு வெளி யான இவரது காலிப்சோ ஆல்பம் மிகவும் பிரபல மடைந்தது. தனியொரு கலைஞனால் படைக்கப் பட்ட இந்த ஆல்பம் விளம்பரங்களில் முதலி டத்தைப் பிடித்து, நாட்டின் பல பகுதிகளிலும் அதிகளவு விற்பனையானது. அமெரிக்கச் சந்தைகளில், பல இடங்களில் தனது திறனை வெளிப்படுத்திய முதல் கருப்பின கலைஞர் ஹாரி பெலாஃபாண்டேதான். இவரது ஜம்ப் இன் தி லைன் - ஷேக் செனோரா (Jump In The Line - Shake Senora) பாடல் 11.5 கோடி முறையை கடந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தனது நடிப்பு பயணத்தை 1953 ஆம் ஆண்டு ஜான் முரே ஆண்டர்சனின் ‘ஆல்மனாக்’ படத்தின் மூலம் தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு, சிறந்த துணை நடிகருக்கான ‘டோனி விருது’ கிடைத்தது.
பின்னர் ஹாலிவுட்டிலிருந்து அதிக வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. ஐலேண்ட் இன் தி சன் (Island in the Sun) என்ற திரைப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 1957 ஆம் ஆண்டு, பொழுதுபோக்கு வர லாற்றில் தடம்பதித்த முதல் கருப்பின நட்சத்திரம் (Matinee idol - leading man) என பல ஏடுகள் இவரை வர்ணித்தன. திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் கருப்பின நடிகர்கள்-கலைஞர்கள் பலர், கடைநிலை பணியாளராகவோ தொழி லாளியாகவோ காட்சிப்படுத்தப்படும் நிலையில், கதாநாயகனாக நடித்த ஹாரி பெலாஃபாண்டேவின் இத்தகைய செயல்பாடு இச்சகாப்தத்தில் மிகுந்த சாதனைக்குரியது. 1980-களில் திரைப்படங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டார். இந்நிலையில், இறுதியாக பிளாக் கிளான்ஸ்மேன் (BlacKkKlansman) என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரது இசைப் பய ணத்தில், 30-க்கும் மேற்பட்ட ஆல்பம் பாடல்களை இயற்றியுள்ளார். இவருக்கு 3 மனைவிகள், ஆறு குழந்தைகள் மற்றும் எட்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். மார்டின் லூதர் கிங்-கின் நெருங்கிய நண்பரான இவர், பிரிவினை எதிர்ப்பு அமைப்புகளை ஒன்றி ணைத்தார். மேலும், மார்டின் லூதர் கிங்-கையும், மற்ற சமூக ஆர்வலர்களையும் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே எடுத்தார் என்ற தகவலும் உள்ளது. 1963 ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடந்த அணிவகுப்பில் பெலாஃபாண்டேவும் ஒருங்கிணைப் பாளராக இருந்தார். 1965-இல் செல்மா முதல் மாண்ட் கோமெரி வரை நடந்த அணிவகுப்பில் இவர் பங்கேற்றார்.
ஒருமுறை மார்டின் லூதர் கிங் “அவரது உலகளா விய புகழும் அர்ப்பணிப்பும் நமது சுதந்திரத்திற்கான ஒரு முக்கிய மூலப்பொருளாகவும், குடிமை உரி மைகள் இயக்கத்தில் ஒரு சக்திவாய்ந்த தந்திர ஆயுத மாகவும் திகழ்கிறது” என குறிப்பிட்டார். அவரது துணிவு மற்றும் தார்மீக ஒருமைப்பாட்டால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார். பெலாஃபாண்டே வறுமை மற்றும் நிற வெறியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியது மட்டுமின்றி, யுனிசெப் - ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் தூதுவராகவும் திகழ்ந்தார். 1985 ஆம் ஆண்டு வீ ஆர் தி வேர்ல்டு (We Are the World) என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கினார். இதன்மூலம் அனைத்து இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து, எத்தியோப்பியா பஞ்சத்திற்கு நிதி திரட்டினர். இவரது வழியைப் பின்பற்றி, கடந்த சில வாரங் களுக்கு முன்பு, பாப் கெல்டாஃப் மற்றும் மிட்ஜ் இரே ஆகியோர் கலைஞர்களை ஒன்றுதிரட்டி, இங்கி லாந்தில் பேண்ட் எய்டு மூலம் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு தேசிய பொது வானொலி நேர்காணல் நடத்தியது. அப்போது, “ஒரு கலை ஞராக இருக்கும் நீங்கள் எப்போது ஒரு ஆர்வல ராக மாற முடிவு செய்தீர்கள்?” என பலர் என்னிடம் கேட்டிருக்கின்றனர் என்று கூறிய அவர், “நான் அவர்களுக்கு கூறுகிறேன்; ஒரு கலைஞனாக உருவாவதற்கு முன்பே, நான் நீண்ட காலமாக சமூக ஆர்வலராக இருந்தேன்” என பதிலளித்தார். 2013 ஆம் ஆண்டு பெலாஃபாண்டேவுக்கு, சர்வ தேச பொது மன்னிப்புச் சபையின் ‘மனசாட்சியின் தூதுவர் விருது’ வழங்கப்பட்டது. 1980-களுக்குப் பிறகும், இனவெறி எதிர்ப்பு, ஊதிய சமத்துவம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமின்றி, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமாவிடம் ‘ஏழைகளுக்கு அதிக உதவிகளைச் செய்யுமாறு’ கேட்டுக் கொண்டார். மார்டின் லூதர் கிங்-கின் மகள் பெர்னிஸ், அவரது தந்தையின் இறுதி நிகழ்ச்சியில் பெலாஃபாண்டே பங்கேற்ற புகைப்படங்களை பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
- பிபிசி இணையதளத்தில் இருந்து
- தமிழில்: ஆர்.நித்யா