மார்க்சியம் என்பது இயக்கவியல் பொருள் முதல்வாத சிந்தனை யான பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரம். இயக்கவியல் விதிகளை கொண்டு வரலாற்றைப் பார்க்கச் சொன்னார் மார்க்ஸ் அதுவே வரலாற்று பொருள் முதல்வாதம். மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம். இயற்கை என்பது தாய். உழைப்பு என்பது தந்தை. இதிலிருந்து பிறப்பது பொருட்கள். மார்க்சியத்தின் அடிப்படை கூட்டு உழைப்பு, கூட்டுச் சிந்தனை, சமுதாய உண்மை, சர்வதேசப் பார்வை. மானுட விடுதலைக்கு முந்தி தவம் இருந்து ஏராள மான குருதியைச் சிந்தி எல்லா மனித மனங்களை யும் விடுதலையை நோக்கி திருப்பி விட்ட மாபெரும் சமூக விஞ்ஞானி காரல் மார்க்ஸ். கருத்தால் கரத்தால் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு முதலாளித்துவம் இல்லாத சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்றவர் மார்க்ஸ்.
வர்க்க பேதங்களும் ஏற்றத்தாழ்வுகளும்
உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும்; ஆணுக்கும் பெண்ணுக்கும்; நகரத்திற்கும் கிராமத் திற்கும்; அதிகார வர்க்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து வேறுபாடுகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதை தீர்ப்பதற்கு சிந்தித்து தீர்வு சொன்ன மாபெரும் அறிஞர் காரல் மார்க்ஸ். அதிகார வர்க்கத்தின் ஆரக்கால்களை அசைத்துப் பார்த்ததின் காரணமாக ஜெர்மன், பிரான்ஸ், இங்கி லாந்து என்று நாடு நாடாக விரட்டப்பட்ட போதும் அடிப்படைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளா மல்; சுரண்டிக் கொழுத்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராக, ஆலையில் பிழிந்து மிதித்து துவைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் மீட்பிற்காகவே- சிந்தித்துக் கொண்டு இருந்தார் மார்க்ஸ். 1847 ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு மார்க்ஸ் தயாரித்துக் கொடுத்த அறிக்கை தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை.
லண்டன் மாநகரில் உள்ள புகழ்பெற்ற நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி ஏறக்குறைய 1500 புத்தகங்க ளை படித்தறிந்து 1876 ஆம் ஆண்டு மூலதனம் (கேப்பிட்டல்) முதல் பிரதியை வெளியிட்டார். அதுதான் தொழிலாளர் வர்க்கத்தின் பாட நூல். அடுத்த இரண்டு பாகங்களை எழுதி முடித்தார். வெளியிடுவதற்கு முன் மரணம் முந்திக்கொண்டது. பின்னர் அவரின் தோழர் தத்துவ ஞானி ஏங்கல்ஸ் அதை வெளியிட்டார். உற்பத்தி, போக்குவரத்து, கல்வி, மருத்துவம், வங்கி போன்றவற்றை அரசே நடத்த வேண்டும் என்றார். முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற் கும் மோதல் ஏற்பட்டால் வெற்றி பெறுவது தொழிலாளர் வர்க்கம் தான். காரணம் அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை; அடிமைச் சங்கிலியைத் தவிர. எது கிடைத்தாலும் வெற்றிதான் என்றார்.
1883 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 14ஆம் நாள் உலகப் பேரறிஞன் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். லண்டன் மாநகரில் தேம்ஸ் நதிக்கரையில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை வெறும் எட்டு பேர் தான். ஆனால் இன்று உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அவரின் கொள்கையை பின்பற்றுபவர்கள். அவரின் வர லாற்றை முழுமையாக படித்தறிந்த எமது தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மாநாட்டு மேடைகளில் முழங்கியது மட்டும் அல்ல; லண்டன் சென்று இருந்த போது மாலையில் தன்னு டைய அலுவல் முடிந்த பின்னர் கேளிக்கை களியாட்டம் என்று செல்லாமல் தன்னை ஆட்கொண்ட மேதை காரல் மார்க்சின் குறிப்புகளை கையில் எடுத்துக் கொண்டு அவரது கல்லறைக்குச் சென்று தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்தினார்.
மார்க்சை அறியாதது வெட்கக்கேடு!
மார்க்சியத் தத்துவங்கள் இந்தியாவை சிதைத்து விட்டது என்று அவதானிக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். மானுட விடுதலைக்கு முந்தி தவம் இருந்த காரல் மார்க்சை அறியாதவர் எப்படி இந்திய அரசுப் பணியில் இருக்க முடியும்? காரல் மார்க்சை அறியாதவர் கவர்னராக அல்ல, ஏன் மனித னாக கூட வாழத் தகுதியற்றவர். தகுதி இல்லாதவர், ராஜ்பவனில் இருப்பது வெட்கக்கேடு. அவரைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் நடத்தும் போராட்டம் நியாயமானது. இந்தியா வளர்ந்த நாடல்ல; காலனி ஆதிக்க நிலப் பிரபுத்துவ நாடு. பூர்ஷ்வாக்களும் நிலபிரபுக்களும் சனாதன சக்திகளாலும் உழைப்பு திருடர்களாலும் அட்டைப் பூச்சியைப் போன்று தொழிலாளர் வர்க்கத் தின் ரத்தத்தை உறிஞ்சி சுரண்டிக் கொழுத்த போது தொழிலாளர்களை ஒன்று திரட்டி புரட்சி செய்ய வைத்தது மார்க்சிய தத்துவங்களே.
சர்வாதிகாரம் சிதைந்தது
ஆம். மார்க்சியம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவுகளைச் சிதைத்தது. மார்க்சிய தத்துவங்களால் கியூபாவின் விடுதலை கீதத்தை இசைத்தவர் பிடல் காஸ்ட்ரோ. செஞ்சீனத்தில் நிலப்பிரபுத்துவ அடக்குமுறை, ஏகாதிபத்தியத்தை மார்க்சிய தத்துவங்களால் சிதைத்து சீனாவின் துயர் துடைத்தவர் மாவோ. ரஷ்யாவில் ஜார் மன்னனின் சர்வாதிகாரத்தை சிதைத்தது. மாவீரர் லெனின் உள்வாங்கிய மார்க்சிய தத்துவந்தான் விடுதலையைப் பெற்றுத் தந்தது.
அதிகாரம், படைபலம், பொருளாதார ஆதிக்கம், அனைத்திலும் வல்லமை பெற்ற அரை உலகம் எனத் தன்னை காட்டிக் கொள்ளும் அமெரிக்கா 14 ஆண்டுகள் சின்னஞ்சிறிய நாடான வியட்நாம் மீது யுத்தம் நடத்தி தோல்வியைத் தழுவி புறமுதுகிட்டு ஓடியதற்கு முக்கிய காரணம் வியட்நாம் மக்கள் நடத்திய வர்க்கப் புரட்சியே. அமெரிக்காவால் வியட் நாம் மக்களை தொட்டுப் பார்க்க முடியவில்லை. கார ணம், ‘இழப்பதற்கு எதுவுமில்லை அடிமைச் சங்கிலி யைத் தவிர’ எனும் மார்க்சின் முழக்கத்தை உள் வாங்கிய வியட்நாம் மக்கள் அணுகுண்டுகளை சுமந்து செல்லவில்லை; அவர்களே அணுகுண்டு களாக மாறினார்கள். அலறி ஓடியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
பிரித்தானிய பிபிசி தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு கடந்த 2000 ஆண்டுகால வரலாற்று நாயகனாக சமூக விஞ்ஞானி காரல் மார்க்ஸ் என்று அறிவித்தது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்ட ஆயுதம் மார்க்சியம். தேசிய இனங்களை இழிவுபடுத்தும் எந்த அரசும் வென்றதில்லை என்பதை வரலாறு அறியாத ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு போதிப்போம்.
வாழ்க மார்க்ஸ்!
வெல்க தொழிலாளர் வர்க்கம்!
கட்டுரையாளர் : துணை பொதுச் செயலாளர். மறுமலர்ச்சி திமுக.