நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ பொருந்தா தோ, இன்றைய காலகட்டத்தில் சிறு, குறு தொழில்முனைபவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். ஒன்றா, இரண்டா வரிசையாக, சிறுகுறு தொ ழில் முனைவோரை தொடர்ச்சியாக பிரச்சனைகள் தாக்கிக் கொண்டு இருக்கின்றன. 6 வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிலர் தொழிலை இழந்தனர்; வருமா னத்தை இழந்தனர்; வாழ்க்கை யையே இழந்தனர்.
அறிவித்த சலுகையில் 80 சதவீதம் கிடைக்கவில்லை
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தி 5.5 வருடங்களாகிறது. அதன்பிறகு தொ டர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் நடை பெறக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் மாறுதல்களை அறி வித்துக் கொண்டே இருக்கின்றனர். எத்தனையெத்தனை மாறுதல்கள்; கெடுபிடிகள். ஜிஎஸ்டி செலுத்த காலதாமதம் செய்தால் அதற்கு விதிக்கப்படும் அபராதம் மிக அதிகமாக உள்ளது. ஆனால், அவர்க ளது மென்பொருட்களில் உள்ள குளறுபடிகளையும், அவ்வப்போது செய்யும் குளறுபடியான மாற்றங்க ளையும் குறித்து யாரிடம் முறையிடு வது? தீர்வாணையம் அமைப்பதை கூட போராடி பெற வேண்டி உள்ளது. தமிழ்நாடு அரசின் ஜிஎஸ்டி அலுவ லர்கள் நோட்டீஸ் கொடுப்பதும், அபராதம் விதிப்பதும், திடீர் சோத னைகள் (சர்ப்ரைஸ் விசிட்) என்ற பெயரில் எரிச்சலூட்டுவதும் (Hares sment) மிக அதிகமாக நடக்கிறது. கொரோனா நேரத்தில் முடக்கப்பட்ட தொழில்களை பற்றி பேசினால், பேசிக் கொண்டே இருக்கலாம். அந்த பாதிப்பிலிருந்து மீண்டு சற்று ஆசு வாசப்படுத்தலாம் என்று நினைக்கும் போது, அடுத்த கொரோனா தொற்று வந்துவிட்டது. இந்த 3 வருடங்களில் ஒன்றிய அரசு அறிவித்த சலுகை களில் 80 விழுக்காடு சிறு குறு தொழில்களுக்கு கிடைக்கவில்லை. ஒன்றிய அரசின் சலுகை அறிவிப்பு கள் படாடோபமாக உள்ளது. ஆனால், அதனைப்பெற விதிக்கப் பட்ட நிபந்தனைகள், பலரையும் சலு கைகளை பெற விடாமல் தடுத்து விட்டது.
இருவகை பாதிப்புகள்
சிறு, குறு தொழில் முனை வோரை இரண்டு விஷயங்கள் கடு மையாக பாதித்துக் கொண்டு இருக் கின்றன. ஒன்று, கடன்பெற முடியாத சூழ்நிலை; கடன் தராத சூழ்நிலை. கொரோனா காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் அவசர கடன் உதவித் திட்டத்தை (இசிஎல்ஜிஎஸ் ஸ்கீம்) ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த 3 வருடங்களில் சுமார் 3.50 லட்சம் கோடி மட்டுமே ஒப்புதல் அனுமதித் துள்ளனர். அதிலும் 2.50 லட்சம் கோடியை மட்டுமே விநியோகித்துள் ளனர். தேவை உள்ள யாருக்கும் பயன்படாத வகையில் இந்த திட்டம் உள்ளது. இதுவரை ஒரு கோடி சிறுகுறு தொழில் முனைவோர் பயன டைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், எஞ்சியவர்கள் எங்கே சென்று கடன் பெறுவார்கள்? நலிந்து கொண்டிருக்கும் சிறுகுறு தொழில்களை காப்பாற்ற வழி யின்றி நிற்கிறோம். ஒவ்வொரு செக்டா ரும் கடினமான வழியில் நசுக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக, சுற்று லாத் துறையை எடுத்துக் கொள் வோம். ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் 2 சீசன்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 2 வருடம் இயங்காமல், 3ஆவது வருடம் இயங்கும் போது அதற்கு எரிபொருள் (பணம்) தேவை. இந்த நேரத்தில் கழுத்தை நெரிப்பது போல், இது வரை கட்டாத கடன் தொகைகளை யும் கட்ட வேண்டும் என்று நிர்பந்திப் பது, வராக்கடன் என்ற பட்டியலில் இணைப்பது அல்லது ஏற்கெனவே கொடுத்திருந்த உத்தரவாதத்தை (செக்யூரிட்டியை) விற்று கடனை எடுத்துக் கொள்வது என்று அரக்கத் தனமாக நடந்து கொண்டனர். ஒன்றிய அரசு சார்பில் எந்தவொரு உணர்வுப்பூர்வமான ஆதரவும் சிறுகுறு தொழில்களுக்கு இல்லாத நிலை நிலவுகிறது.
மத்தளத்துக்கு இருபக்கமும் அடி
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதுபோல, ஒருபுறம் ஒன்றிய அரசின் கெடுபிடிகள், அபராதம் என பாதிப்பு அதிகமாகிறது. மற்றொரு புறம், மாநில அரசின் சொத்துவரி, மின்கட்டண உயர்வு தொழிலை மேலும் நசுக்குகிறது. இதனால் தொழில் செய்ய முடியவில்லை. அரசு மூலப்பொருட்களின் விலையேற்றம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நிற்கிறது. அதாவது, மூலப் பொ ருட்களின் விலை 70-80 விழுக்காடு உயர்ந்து, பின்பு 30 விழுக்காடு குறைந்தது. தற்போது மூலப்பொ ருட்களின் விலை 40 விழுக்காடு உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இதனால் தான் ஜிஎஸ்டி வருவாய் அவர்களுக்கு அதிகம் கிடைக்கிறது. சிறுகுறு தொழில் முனைவோரின் உழைப்பு அனைத்தும், வாங்கிய கடனை அடைப்பதிலும், தொழிலா ளர்களுக்கு ஊதியம் வழங்குவதி லும், வரிகட்டுவதிலும் சென்று கொண்டிருக்கிறது. சிறுகுறு தொழில் முனைவோர் நலிந்து, நசிந்து, தாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இதன் விளைவு என்ன? வேலை யற்ற சூழ்நிலை அல்லது வேலை யில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டு வருகிறது. முறைசாரா தொ ழிலாளர்கள் அதிகம் பணியாற்றும் இடமாக சிறு, குறு தொழில்கள் உள் ளன. சிறு, குறு தொழில்கள் நலிவ டையும்போது, வேலைவாய்ப்பும் நலிவடையும். பணவீக்கம் அதிக ரிக்கும். கடன் வாங்குகிறவர்கள் கடன் வாங்கிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
இத்தகைய சூழலில், வெறும் வாயால் சிறுகுறு தொழில் முனை வோர் நாட்டின் முதுகெலும்பு என சொல்லிக் கொண்டிருப்பதில் பய னில்லை. முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையாக உள்ளது. எனவே, 12 வகையான தொழில் முனைவோரின் பிரச்சனைகளை கேட்டு, தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், என்ன செய்தால் பிழைப் பார்கள் என்பதை அரசுக்கு உணர்த்த இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. ஒரு சிலர் சிறப்பாக தொழில் செய்வ தால், அனைவரும் நன்றாக இருக்கி றார்கள் என்று பொருள் இல்லை. இந்த மாபெரும் கருத்தரங்கு தொழிலை பாதுகாப்பதற்கான சிறப்பான வழி முறைகளை அரசுக்கு எடுத்துரைக் கும் என்று நம்புகிறேன். நன்றாக வாழ, சிறுகுறு தொழில் முனை வோரை பாதுகாப்போம்.
கட்டுரையாளர் : தேசிய தலைவர், இந்திய தொழில் முனைவோர் சங்கம்.