articles

தர்மபுரி முத்து இல்லம் : ஜனசக்தி செய்திக்கு மறுப்பு - வெ.மாதன்

தருமபுரி வட்டார வளர்ச்சிக் காலனியில் உள்ள முத்து நினைவு அறக்கட்டளைக்கு சொந்தமான முத்து இல்லம் குறித்து ஜூன் 18- ஜூன் 24, 2023 தேதியிட்ட ஜனசக்தி வார இதழில் வெளியான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந. நஞ்சப்பன் அவர்களின் அறிக்கை,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் எழுதியுள்ள கட்சி கடிதம் குறித்து முத்து நினைவு அறக்கட்டளை தலைவர் வெ.மாதன் வெளியிட்டுள்ள  அறிக்கை:

தருமபுரி நகரத்தில் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சிக்  காலனி கதவு எண் 392 -ல் உள்ள முத்து இல்லம் கட்டடம் முத்து நினைவு அறக் கட்டளைக்குச் சொந்தமானது, அறக்கட்ட ளையின் அனுபவத்தில் இருந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 13 .3 .2023 அன்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ நஞ்சப்பன், நா.பெரியசாமி, டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட சிபிஐ தலைவர்கள் மற்றும் சிலர் உள்ளிட்டோர்  நள்ளிரவில் முத்து அறக்கட்டளை கட்டிடத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்து அறக்கட்டளை பெயர்ப் பலகையைச் சேதப்படுத்தி ஆவணங்களை கைப்பற்றிக் கொண்டனர். இதுகுறித்து நட வடிக்கை எடுக்கக் கோரி அறக்கட்டளை தலைவ ரான நான் தருமபுரி நகரக் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினரும்,  தருமபுரி வட்டாட்சியரும் முத்து அறக்கட்டளை கட்டடத்தில் அத்துமீறி  நுழைந்திருந்த அவர்களை அப்புறப்படுத்தி விட்டு முத்து அறக்கட்டளை நிர்வாகிகளிடம் கட்டடத்தை ஒப்படைப்பதற்கு மாறாக கட்டடத் திற்கு சீல் வைத்துவிட்டனர். இது சட்டவிதி களுக்கு முரணானது, அதிகாரிகள் எந்த அழுத்தத்தின் பேரில் இந்த அவசரகதி நட வடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பது புரியவில்லை.

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகரக் காவல்துறை 145சிஆர்பிசி படி வழக்கு பதிவு  செய்து கோட்டாட்சியர் விசாரணை நடை பெற்றது. விசாரணை என்ற பெயரில் 50 நாட்களுக்கு மேலாக முத்து இல்லம் கட்டடம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அறக் கட்டளை மேற்கொண்டு வந்த பல்வேறு சமூக நலப் பணிகளும் முடக்கப்பட்டன. இந்த இடைப் பட்ட காலத்தில் பல நாட்கள் சிபிஐ மாநில, மாவட்ட தலைவர்கள் இங்கு முகாமிட்டு மாவட்ட அதிகாரிகளை சந்தித்து கட்டடத்தை தங்களி டம் ஒப்படைக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. விசாரணை முடிவில் 6-6-2023 அன்று  மேற்படி முத்து அறக்கட்டளை கட்டடம் பத்தி ரப்பதிவு மற்றும் வருவாய் ஆவணங்கள் அடிப்படையிலும் அனுபவ பாத்தியத்தின் அடிப்படையிலும் முத்து நினைவு அறக் கட்டளைக்குச் சொந்தமானது என்று தருமபுரி வருவாய் கோட்டாட்சியர்  உத்தரவிட்டார். மேற்படி உத்தரவை அமல்படுத்தும் வகையில் காவல்துறை முன்னிலையில் தருமபுரி வட்டாட்சி யர் அலுவலக சீலை அகற்றி,  முத்து அறக் கட்டளை தலைவரான என் (வெ.மாதன்) வசம் முத்து இல்லம் கட்டடத்தை ஒப்படைத்தார். 

கடந்த காலங்களைப் போல முத்து அறக் கட்டளை கட்டடத்தில் நடைபெற்ற அறக்கட்ட ளைச் செயல்பாடுகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சேவை செயல்பாடுகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அறக்கட்டளை சொத்தான இக்கட்டடத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு  நஞ்சப்பன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் 1993-ல் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இது தீர்ப்பல்ல. வழக்கு கீழமைக் கோர்ட்டில் நிலுவை யில் உள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள 1993-ல்  வழங்கப்பட்டது ­­“தோன்றாத் தரப்பு உத்தரவு” (எக்ஸ் பார்ட்டி டிகிரி) மட்டுமே. உண்மையில் அந்த வழக்கில் பிரதிவாதிகளான தோழர் நஞ்சப்பன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட உத்தரவாகும். வாதத்திற்காக அது தோழர் நஞ்சப்பனுக்கு ஆதரவான தீர்ப்பாக இருக்குமானால் கடந்த 30 ஆண்டுகளாக அந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கோ, அலு வலகத்தை பெறுவதற்கோ சட்டரீதியான எந்த  நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வில்லை என்பதிலிருந்தே 1993ம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியும். சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியில்லாத நிலையில்தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பூட்டியிருந்த கட்டடத்திற்குள் அத்துமீறி நுழையும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  சார்பு நீதிமன்றத்தில் அசல் வழக்கு 205/ 2012 - ஐ  நடத்துமாறு உயர்  நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பதும், தற்போதும் சார்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது என்பதுதான் உண்மை.  2013க்குப்பிறகு முத்து அறக்கட்டளை கட்டடம் குறித்த வழக்கு எதுவும் உயர்நீதி மன்றத்தில் நடைபெறவுமில்லை, நிலுவையி லுமில்லை. மேலும் 24-01-2018,  25-01-2023 ஆகிய தேதிகளில் பிரதிவாதிகளான தங்களுக்கு  ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப் பட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது.  முத்து நினைவு அறக்கட்டளைக்குச் சொந்த மான சொத்து குறித்து ஆவணங்கள் அடிப்படை யிலும்,  சுவாதீன அனுபவ பாத்தியப்படியும் விசாரணை முடிவில்  வழங்கிய தீர்ப்பை ஏற்க  மறுத்து நிர்வாக நீதிபதியும் தருமபுரி வருவாய் கோட்டாட்சியருமான பெண் அதிகாரியை ஜனசக்தி வார இதழில் சிபிஐ மாநில செயலாளர்  இரா.முத்தரசன், வெளியிட்டுள்ள கட்சிக் கடிதத்தில் “அறம் தவறாத மாமங்கை” என குறிப்பிட்டுள்ளது நியாயமா என்பதை அவரது பரிசீலனைக்கே விட்டுவிடுகிறோம்.

வீட்டுக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழ் பண்பாடு. இத்தகைய உயரிய பண்பாட்டைக்  கொச்சைப்படுத்தும் விதத்தில் துரோகப் பட்டம் சுமத்துவது வேதனை அளிக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தலை வர்களை இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகை களில் எழுதுவதை ஏற்க முடியவில்லை. ஆனாலும் மிகுந்த மன வருத்தத்தோடு இத்த கைய சர்ச்சைகளை தொடர்வதற்கு முத்து  அறக்கட்டளை நிர்வாகிகள் யாரும் விரும்ப வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.    கட்சிக்கடிதத்தில் முதுபெரும் தலைவர் முத்துவின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்து, அறக்கட்டளையின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் தோழர் இரா.முத்தரசன் அவர்களோ, அவரது கட்சியினரோ தோழர் முத்து   மறைந்து  கடந்த 15 ஆண்டுகளாகியும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஒரு முறை கூட வராதவர்கள் என்பது அனை வரும் அறிந்தது.  முத்து அறக்கட்டளை தொடர்பான பல விபரங்களை தெரிவிக்க முடியும். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. அவதூறு கிளப்புவதன் மூலம் உண்மைகளை மூடி மறைத்து விட முடியாது.