“எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுகிறவராக இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்பவராக இருந்தாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், குஜராத்தும் சிந்துவும் தொட்டு அசாம் முதலான வடகிழக்குப் பிரதேசங்கள் வரையும் வாழ்கிற கோடிக்கணக்கான மக்கள் சேர்ந்ததே இந்தியா. இந்த மக்களின் சுதந்திர வேட்கையும், தேச ஒற்றுமைத் தாகமுமே இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கியது.
மார்க்சியப் பேராசான் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் 1998 மார்ச் 19 அன்று மறைந்தபோது அனைத்து ஏடுகளும் அஞ்சலியுடன் அவரைப் போற்றிப் புகழ்ந்து எழுதின. அன்று தினமணி நாளேடு அவரைப் போற்றி இவ்வாறு எழுதியது: “அவர் பிறந்தது செல்வச் செழிப்புமிக்க பெருநிலக்கிழார் குடும் பத்தில். ஆனால், இறுதிவரை சாமானியரைப் போலவே வாழ்ந்து வந்தார். இந்த எளிமை இலட்சிய மனத்தின் எதார்த்த நிழல். அவருடைய உருவமே எளிமையானது. பேச்சும் அப்படியே. ஆனால், தோற்றத்துக்கு மாறானது அவருக்கு உள்ளே இருந்த ஞானம். அது அபூர்வமானது – அசாதாரணமானதும்கூட. சாதாரண உருவத்துக்குள் அசாதாரண உள்ளம்! தமது கடைசி நாள்களில் கட்சி ஏற்பாடு செய்த வாடகை வீட்டில் வசித்தார். அரசியலுக்கு வந்த பிறகு ‘தியாகங்கள்’ அதிகரிக்க அதிகரிக்க சொத்துக்கள் குவிந்து கொண்டே போகக்கூடிய இப்போதைய நவீன அரசியல்வாதிகளின் உலகில், எளிய தோழராகவே வாழ்ந்து காட்டினார் நம்பூதிரிபாட்.”
“சமூகச் சமத்துவத்திற்குக் கேரளம் ஒரு முன்மாதிரியாக இருக்கிற தென்றால் ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே இதனைச் சாதித்ததில் நம்பூதிரிபாடின் பங்கு தனித்து நிற்பதாகும். சாதியில் தாழ்ந்தவன் நம்பூதிரிகளின் பார்வையிலேயே படக்கூடாது என்பது போன்ற அரு வருப்பான பழக்கங்கள் சமீப காலங்களில்கூட தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. இத்தகைய சமூகத்தின் முகத்தோற்றத்தையே மாற்றிய முன்னோடிகளில் ஒருவர் நம்பூதிரிபாட்” என்று இ.எம்.எஸ். மறை வின்போது புகழ்ந்துரைத்தது “இந்து” நாளேடு. 1909-ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று ஏலம்குளம் என்ற ஊரில் தந்தை பரமேஸ்வரன் நம்பூதிரிபாட்-தாயார் விஷ்ணுதத்தாவின் மகனாகப் பிறந்தவர் இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாட் திருச்சூர் தூய தாமஸ் கல்லூரியில் பி.ஏ.பட்டப் படிப்பு படிக்கையில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சிவில் சட்டமறுப்புப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கல்லூரி யைவிட்டு வெளியேறினார். இதுதான் தேச சுதந்திரப் போராட்டத்தில் அவரது முதலாவது பங்கேற்பு.
இ.எம்.எஸ்.பத்தாவது வயதிலேயே மலையாளம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் வாசிக்கும் திறனைப் பெற்றார். இளம் வயதி லேயே ஏராளமான நூல்களை வாசித்து முடித்தார். அவர் முதலில் எழுதியது ஒரு சிறுகதை! அது ‘ஸ்வதேசாபிமானி’ என்ற மாத இதழில் வெளிவந்தது. தோழர் பி.கிருஷ்ணபிள்ளை முதலானோருடன் சேர்ந்து 1934-இல் கேரளா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினார். கேர ளத்தில் 1937-இல் உருவான கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது குழுவின் உறுப்பினரானார் 1941 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். 1950-இல் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினரானார். 1953-56 ஆண்டுகளில் செயல் பொதுச் செயலாளரானார். 1962-63இல் அதன் பொதுச்செயலாளரானார். அதற்குப் பிறகு கட்சி பிளவுபட்டு 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோது அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானார். அவர் காலமாகும் வரை அதில் செயல்பட்டார். 1978 முதல் 1991 வரை கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித் தார். 1957,1967, 1970, 1977 ஆகிய ஆண்டுகளில் இ.எம்.எஸ். கேரள சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-59லும், 1967-69லும் கேரள முதலமைச்சராக மகத்தான பொறுப்பு வகித்தார்.
காந்தியிசத்திலிருந்து நேருயிசத்தின் வழி...
அவரைப் பற்றி அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்:
“பத்து வயது சிறுவனாக இருந்தபோதே நான் அரசியலுக்கு ஆகர்ஷிக்கப்பட்டேன். அன்று நான் டாங்கேவையோ, முசாபர் அகமதுவையோ, சிங்காரவேலரையோ பற்றிக் கேள்விப்பட்டதில்லை. கம்யூனிஸம், அல்லது மார்க்சிஸம் என்பதெல்லாம் அன்று எனக்குக் கண்ணில் பட்டதில்லை. ஆனால், மகாத்மா காந்தியையும் அலி சகோதரர்களையும் மற்ற ஒத்துழையாமை இயக்கத் தலைவர்களையும் பற்றி அன்று கிடைத்துக் கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து நான் வாசித்திருக்கிறேன். அந்தத் தலைவர்களிலேயே மிக உயர்ந்த தலைவர் மகாத்மா காந்தியாக இருந்ததால் நான் ஒரு ‘காந்தி பக்தனாக’வே ஆகியிருந்தேன். ஒரு பத்தாண்டுக் காலம் அப்படித் தொடர்ந்தது. ஆனால் அதற்கிடையே நான் நேருவைப் பற்றி அறிய ஆரம்பித்தேன். அவரது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்பொழிவுகளைக் கேட்டதும், அவரைப் பற்றிய சில புத்தகங்களை வாசித்ததும் என்னை ஈர்த்தது. நான் எழுதி வெளியிடப்பட்ட முதலாவது புத்தகம் நேருவின் வாழ்க்கை வரலாறா கும்.” என்று கூறினார். “ரஷ்யாவைப் பற்றியும், அங்குள்ள சோஷலிஸ அமைப்பைப் பற்றியும் நேருவிலிருந்துதான் நான் முதன்முறையாகப் புரிந்துகொண்டேன். இந்த வரலாற்றுச் சூழலில்தான் 1932-இல் நான் சிறைக்குச் சென்றேன். முதலில் ஒரு மாதம் கண்ணூர் சிறையிலும் பிறகு ஒரு வருடம் வேலூர் சிறையிலும். வேலூர் சிறைக்குச் சென்றபோதுதான் பகத்சிங்கின் கூட்டாளியையும், பஞ்சாப்காரராகிய ஒரு சிறைக் கைதியையும்ஞுநான் பார்த்தேன். இந்தியாவின் முதலாவது மத்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருந்த ஒரு தோழரையும்ஞுஞுநான் அங்கு பார்த்தேன். இவையெல்லாம் என்னை காந்தியிஸத்திலிருந்து இடதுசாரி அரசியல்ஞுபுரட்சிக்கு இட்டுச்சென்றன.ஞுஅவ்வாறு ஒரு பக்கம் இடதுசாரிப் புரட்சி அரசியலையும், மறுபக்கம் காந்தியின் அரசியலையும் கற்பதற்கு வேலூர் சிறையில் எனது ஒன்றரை ஆண்டுக் கால வாசம் எனக்கு உதவியது. காந்தியத்திலிருந்து நேருயிசத்தினூடே மார்க்சியத்திற்கான எனது வளர்ச்சி நிகழ்ந்த காலம் அது.”
தோழர் இ.எம்.எஸ். மேலும் சுவையான ஒரு சேதி கூறுவதைப் பார்ப்போம்: “ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடைபெறும்போது எனக்கு எட்டு வயது. புரட்சியின் கதைகளை என்னால் கேட்டறிய முடிய வில்லை. நான்கைந்து வருசங்களுக்குப் பிறகுதான் ஒரு தேர்தலின் போது ஓட்டு கேட்பதற்காகச் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களின் பேச்சிலிருந்துதான் ரஷ்யாவைப் பற்றி நான் முதன் முறையாகக் கேள்விப்பட்டேன். மலபார் பிரதேசத்தைச் சேர்ந்த ஜமீன்தார்களின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென்று ஒரு மசோதாவைத் தயாரித்த நபரைத் தோல்வியடையச் செய்து, ஜமீன்தார்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென்று அவர்கள் பேசிக் கொண்டனர். அதற்கிடையேதான் ரஷ்யாவைப் பற்றிய அவர்க ளின் விமர்சனம் இருந்தது. ஜமீன்தார்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டு வருவதன் மூலமும், விவசாயிகளுக்கு அதிகாரமும் உரிமைகளும் வழங்குவது மூலமாகவும் நமது நாட்டை ஒரு ரஷ்யாவாக மாற்ற வேண்டு மென, எதிர்த்துப் போட்டியிடுகிற வேட்பாளர் முயற்சி செய்வதாக அவர்கள் பேசுகிறார்கள் என்பதை அவர்களின் பேச்சிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.”(இ.எம்.எஸ்.எழுதிய ‘சிவப்பு மைதானம்’ என்ற கட்டுரையிலிருந்து)
தேசாபிமானியைத் துவக்க நிதி உதவி
1932-இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இடதுசாரிப் பத்திரிகை யாக ‘ப்ரபாதம்’ (விடியல்) என்ற பத்திரிகை வெளிவந்தது. மிக்க சிரமத்து டன் நடத்தப்பட்ட இந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இ.எம்.எஸ்-ஸும், நிர்வாகியாக தோழர் ஏ.கே.கோபாலனும் இருந்தனர். பத்திரிகை ஆசிரிய ராகப் பொறுப்பேற்ற இ.எம்.எஸ்.-க்கு அப்போது வயது 26. கம்யூ னிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக “தேசாபிமானி”யைத் துவக்கியபோது தமது மூதாதையர் சொத்திலிருந்து தமக்குக் கிடைத்த பங்கிலிருந்து ஒரு பகுதியை விற்று அந்தத் தொகையை தேசாபிமானிக்காக வழங்கினார் இ.எம்.எஸ். 1970-இல் ‘சிந்தா’ வார இதழின் ஆசிரியராகவும், அதற்கு முன்பு ‘நியூ ஏஜ்‘ ஆங்கில இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார்.
நிலச்சீர்திருத்தச் சட்டம்
1956 நவம்பர் 1-இல் கேரள மாநிலம் உருவாகிய அடுத்த ஆண்டு 1957 பிப்ரவரி 28-இல் முதன்முறையாக 126 சட்டமன்றத் தொகுதிக ளுக்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 60 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. (கேரளத்தில் அப்போது மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 126தான்.) கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ஆதரவளித்தனர். இவ்வாறு முதன்முறையாக கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை அதிகாரத்திற்கு வந்தது. தோழர் இ.எம்.எஸ். முதல மைச்சர் ஆனார். இந்தியாவிலேயே முதன்முறையாக நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கச் செய்யும் விதத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவந்தது இ.எம்.எஸ். தலைமையிலான அர சாங்கம்தான். அதற்குப் பிறகு தோழர் ஜோதிபாசுவின் மேற்கு வங்க அரசாங்கம். இ.எம்.எஸ். எழுதிய நூல்கள் ஏராளம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (மூன்று பாகங்கள்), கேரளம் மலையாளிகளின் தாய் பூமி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, தன்வரலாறு, மார்க்சிசம்-லெனினி சம் - ஒரு பாடப் புத்தகம், கம்யூனிஸம் -ஒரு ஆரம்பப் பாடம், கேரளத் தில் கம்யூனிஸ்ட் கட்சி, காந்தியும் காந்தியிசமும், மார்க்சிசமும் மலை யாள இலக்கியமும், ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவுக் குறிப்புகள். முன்னாள் முதலமைச்சரின் நினைவுக் குறிப்புகள். வாசிப்பின் ஆழங்க ளில், மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் ஆய்வுலகம் - ஒரு முகவுரை, இந்திய சுதந்திரமும் அதற்குப் பிறகும், முதலியவை இ.எம்.எஸ்.-ஸின் முக்கிய நூல்களில் சில.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள வார இதழ் “சிந்தா” வில் 1972 அக்டோபர் 6 முதல் “சோத்யோத்தரங்கள்”( கேள்விகளுக்குப் பதில்) என்கிற பகுதியில் பல ஆண்டுகள் வாசகர்களின் கேள்விக ளுக்கு -–ஒரு வாரம்கூட இடையின்றித் தொடர்ந்து தோழர் இ.எம்.எஸ். பதில் எழுதிவந்தார். தேசிய- சர்வதேசிய அரசியல், தத்துவம், கட்சி ஸ்தாபனம், கலை-இலக்கியம், கலாச்சாரம், சமுதாயம் மற்றும் தோழர் சுர்ஜித்தின் தலைப்பாகை, தாடி வரை மிக விரிவான தளங்களில் அந்தக் கேள்வி-பதில் பகுதி இருந்தது. அது தோழர்களுக்குக் கட்சி வகுப்பாக மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இ.எம்.எஸ்.-ஸின் பதில் களை ஆர்வமுடன் வாசித்து சிந்தனைத் தெளிவு பெற்றனர். அவரது கேள்வி-பதில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அன்று தீக்கதிர் இதழில் வெளியிடப்பட்டது.
இலக்கிய மதிப்பீட்டாளர்
நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் நாவல்களை வாசித்து அவற்றுக்கு மதிப்புரையாக ‘சின்னப்ப பாரதி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார் “தமிழ்நாட்டின் முற்போக்குக் கலை-இலக்கிய இயக்கத்தின் பிரபல தலைவர்களில் ஒருவர் சின்னப்ப பாரதி. இதுவரை அவர் நான்கு நாவல்கள் எழுதியுள்ளார்.1958-இல் வெளிவந்த நிலவுடைமை எப்போது? 1975-இல் வெளிவந்த தாகம். 1985-இல் வெளிவந்த சங்கம், 1991-இல் வெளிவந்த சர்க்கரை. இவற்றில் தாகம், சர்க்கரை நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்முன் உள்ளன. இவற்றில் முதலாவது நாவலுக்கு நான் முன்னுரை எழுதியி ருக்கிறேன்.” என்று தமது கட்டுரையின் துவக்கத்தில் கூறும் இ.எம்.எஸ். தாகம், சர்க்கரை நாவல்கள் குறித்து பாராட்டுதலுடனான ஆழ்ந்த மதிப்பீடு செய்துள்ளார்: “பாரதியின் (சின்னப்ப பாரதியின்) ‘தாகம்’ என்ற முந்தைய நாவல் தொழில்மயமாகாத கிராமப்புறத்துக் கதையாகும். ஆனாலும் அதி லும்கூட , சொந்தக் கிராமத்தைவிட்டு வெளியில் வாழவேண்டிய நிலை யில் இருந்த ஓர் இளைஞன் சங்கம், போராட்டம் என்னும் செய்தியோடு கதைக் களமாகிய கிராமத்துக்கு வந்து சேர்கிறான். அவனது பணிக ளின் விளைவாக விவசாயிகளிடையே வர்க்க உணர்வும் சங்கமும் உருவாகி வருகிறது. இதன் உயர்ந்த வடிவமாக சர்க்கரை நாவலைச் சித்தரித்துக் காட்டுகிறார் பாரதி. தொழிற்சங்க இயக்கப் பாரம்பரிய முள்ள ஒரு தலைவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றுகிற தொழிலாளர்க ளை மட்டுமல்ல, ஆலையின் சுற்றுப்புறமுள்ள கரும்பு விவசாயிகளையும் வர்க்க உணர்வு கொண்டவர்களாக்கி வர்க்கப் போராட்டங்களுக்குக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் வர்க்க உணர்வும் வர்க்க ஸ்தாபனமும் வளர்ந்து வருவதன் இரண்டு கட்டங்கள்தான் தாகமும், சர்க்கரையும்.”
இலக்கியத்தில் ஐக்கிய முன்னணி
அரசியலில் மட்டுமல்ல இலக்கியத்திலும் ஐக்கிய முன்னணி உரு வாக்க வேண்டியதன் அவசியத்தை இ.எம்.எஸ். ‘முற்போக்கு இலக்கிய மும் கம்யூனிஸ்ட் இலக்கியமும்’ என்ற நூலில் அழகாக விளக்கியிருக்கி றார். “தீவிர அரசியல் பணிகளில் பங்கேற்காதவரும், சமுதாய அமைப்பில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்க வேண்டுமென மனதாலும் கருதாத வரும்கூட முற்போக்கு இலக்கியவாதிகளிடையே அநேகம் பேர் இருப் பார்கள். தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டம் இல்லையெனினும் ஜன நாயக உணர்வு, மனிதநேயம், ஓர் எழில்மயமான சமத்துவ உலகம் பற்றிய கனவு இவையெல்லாம் அவர்களுக்கும் இருக்கும். இத்தகை யோரது இலக்கியப் படைப்புகளில் குறைகளும் பலவீனங்களும் இருந்தபோதிலும் தொழிலாளி வர்க்கத் தலைமையில் உள்ள இயக்கத்திற்கு அவை உதவும். பால்ஸாக்கைப் பற்றி மார்க்சும், டால்ஸ்டாயைப் பற்றி லெனினும் தெரிவித்த மதிப்பீட்டின் உட் கருத்து இதுவேயாகும். அதாவது, தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத் தைப் பெற்றிராதவராகவும், உணர்வுப்பூர்வமானப் புரட்சிகரப் பணி களில் பங்கேற்காதவராகவும் இருந்தபோதிலும், சமுதாய மாற்றத்திற்கு ஒருகட்டம் வரை உதவும் நூல்களைப் படைத்து வழங்குகிற முற்போக்கு இலக்கியவாதிகளும் உள்ளனர். அவர்களிடம் நட்பு ணர்வோடும் ஒத்துழைப்பு மனோபாவத்தோடும் நடந்துகொள்கிற கடமை நமக்கு உண்டு. அத்துடன், அந்த நண்பர்களின் கண்ணோட்டத்தில் வெளிப்படுகிற குறைகளையும் பலவீனங்களையும் நட்பு ரீதியில் எடுத்துக்காட்டி விமர்சிப்பது நமது கட்டாயக் கடமை. இவை இரண்டும் சேர்ந்ததுதான் இலக்கியத்தில் ஐக்கிய முன்னணி என்பது.” உலகக் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராகிய இ.எம்.எஸ். அவர்க ளின் நூல்கள் மலையாளம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மனி, ஜப்பானீஸ் முதலான மொழிகளிலும் வெளிவந்துள்ளன.
இந்திய தேசத்தின் உள்ளடக்கம்
“எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுகிறவராக இருந்தா லும், நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்பவராக இருந்தாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், குஜராத்தும் சிந்துவும் தொட்டு அசாம் முதலான வடகிழக்குப் பிரதேசங்கள் வரையும் வாழ்கிற கோடிக்க ணக்கான மக்கள் சேர்ந்ததே இந்தியா. இந்த மக்களின் சுதந்திர வேட்கை யும், தேச ஒற்றுமைத் தாகமுமே இந்தியாவை ஒரு தேசமாக உரு வாக்கியது. இந்தக் கண்ணோட்டத்தை முன்வைத்து, இந்திய மக்களின் தேச ஒற்றுமை, சுதந்திரம், இறையாண்மை, மதநல்லிணக்கம், சாதி யற்ற சமத்துவச் சமுதாயம் - இவையெல்லாம் சேர்ந்ததுதான் இந்திய தேசியத்தின் உள்ளடக்கம் என்று சுதந்திரப் போராட்டத்தின் மிக உயர் தலைவர்கள் மக்களுக்குக் கற்பித்தனர்.”-என்றார்
தோழர் இ.எம்.எஸ்., தமது ‘இந்திய தேசியத்தின் ஆன்மா’ என்ற கட்டுரையில். மார்க்ஸ் இறந்தபோது அவரது ஆருயிர்த் தோழர் ஏங்கெல்ஸ் நெஞ்சம் நெகிழச் சொன்னார் “மார்க்ஸ் இப்போது சிந்திப்பதை நிறுத்திவிட்டார்” என்று. அவ்வாறுதான், மார்க்சிய ஞானி இ.எம்.எஸ்.- என்ற மூதறிஞரும் தமது 89-ஆவது வயதிலும் 19.3.1998 அன்று மற்ற பத்திரிகைகளுக்கான இரண்டு கட்டுரைகளை எழுதி முடித்துவிட்டு, தேசாபிமானிக்காக மூன்றாவது கட்டுரைக்கான வாசகங்களைத் தமது உதவியாளர்க்குச் சொல்லிக் கொண்டிருந்தபோதே திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. உடன் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றும் சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறார்! இஎம்எஸ் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்! நிறைவாக, தோழர் இ.எம்.எஸ்.ஸின் மணிவாசகம் இது: “நான் குரு விடமிருந்து உபதேசம் பெறவில்லை. நான் இந்த நாட்டில் நடைபெறுகிற நிகழ்வுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு களத்தில் இறங்கியவன். சிறுவயதிலிருந்தே அரசியல் விஷயங்களைக் கற்கவும், புரிந்து கொள்ளவும் முயன்றேன். அதன் விளைவாகவே நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன். எனது இலட்சியம் எனது வாழ்நாளிலேயே நிறைவேற வேண்டும் என்கிற பிடிவாதம் எதுவும் எனக்கு இல்லை. எனது காலத்திற்குப் பின்னராவது நிறைவேறினால் போதும்...”
தோழர் இ.எம்.எஸ்.நினைவு நாள் மார்ச் 19