உலக அளவில் பல உச்சங்க ளைத் தொட்டுள்ள ஓர் பெரும் கற்கோட்டையாக எல்ஐசி உருப் பெற்றுள்ளது. வணிக முனையில் இந்த கற்களை கால்கடுக்க சேகரித்தவர்கள், சுமந்தவர்கள், அடுக்கியவர்கள், கட்டி எழுப் பியவர்கள் முகவர்கள். பேருந்துகள் செல் லாத சாலைகளில் எல்லாம் எல்.ஐ.சி முகவர்க ளின் பாதங்கள் பட்டன. தகவல் தொடர்பு இல்லாத கிராமங்களுக்கு கூட எல்.ஐ.சி யின் தூதர்களாக முகவர்கள் சென்றார்கள். எட்டாத ஏழை மக்களின் இல்லங்களில் எல் லாம் காப்பீடு பரவல் தொட்டது. இந்திய நாட்டில் ஆயுள் காப்பீடு என்பது வாங்கப்படும் பொரு ளாக இல்லை; விற்கப்படும் பொருளாகவே இருந்தது. இருக்கிறது. ஒருவரை பாலிசி எடுக்க வைப்பது சுலபம் அல்ல, 10 நபர்க ளை ஒரு முகவர் சந்தித்தால் மட்டுமே ஒரு நபரை பாலிசி எடுக்க வைக்க முடியும். இதற் கும் தொடர்ச்சியாக சந்தித்தால் தான் சாத்தி யம் ஆகும். இந்த சூழலில் தான் எல்ஐசி முகவர்க ளுக்கு எந்த ஒரு சமூக பாதுகாப்பும் இல் லாத சூழலிலும் எல்.ஐ.சி கோடானுகோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தது. ஆனால் பல லட்சம் கோடி பெறுமான கோடிகள் புழங்குகிற ஒரு துறையை பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவ னங்கள் விட்டு வைக்குமா? 1983 இல் துவங்கி யது தாக்குதல்கள். எல்.ஐ.சியை ஐந்து கூறு ளாக பிரிக்கிற மசோதா, சூப்பர் 301, மல்கோத் ரா குழு அறிக்கை, தனியார் அனுமதி, அந்நிய முதலீடு உயர்வு, பங்கு விற்பனை என அடுத்த டுத்த அம்புகள் தொடுக்கப்பட்டன. எல்.ஐ.சி யை தாக்குவது எனில், முகவர்கள் மீதும் தாக்குதல் என்று பொருள். முகவர் மீதான தாக்குதல்களும் துவங்கியது.
2009ஆம் ஆண்டு அரசு பென்ஷன் நிதி ஒழுங்கு மேம்பாட்டு ஆணையத்தின் தலை வர் டி.சுவரூப் தலைமையில் கமிட்டி அமைக் கப்பட்டது, முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலேயே கமிஷன் குறைப்பு, ரினிவல் கமிஷன் தேவையில்லாதது என சுவரூப் கமிட்டி பரிந்துரை செய்தது. இத்தகைய சூழலில்தான் புதிய முகவர் அமைப்பான “லிகாய்” (LICAOI) பிறந்தது. முகவர்களை விரிந்த பார்வையுடன் அணி திரட்டியது. சுவரூப் குழு பரிந்துரைகளை எதிர்த்து லிகாய் நடத்திய கடுமையான போராட்டத் தின் எதிரொலியாக அப் பரிந்துரையை அன் றைய ஒன்றிய அரசு கைவிட்டது. நாடாளு மன்றத்தில் லிகாய் அகில இந்திய தலைவராக இருக்கும் தோழர் பாசுதேவ் ஆச்சார்யா அவர்கள் நாடாளுமன்றத்தில் முதன்முத லாக எல்.ஐ.சி முகவர்களுக்காக தனிநபர் மசோதா கொண்டு வந்து பேசினார். அதன் அடிப்படையில் லிகாய் சார்பில் நாடாளு மன்ற நிலைக்குழுவில் முகவர்களின் பிரச்ச னைகளை எடுத்துரைத்ததின் அடிப்படையில் பறிபோகவிருந்த முகவர் உரிமைகள் பாது காக்கப்பட்டது.
எல்.ஐ.சியின் வணிகத்தில் 93 சதவீதம் தனி முகவர்களால் கொண்டு வரப்படுவது என்பதே எல்.ஐ.சி முகவர்களின் தனிச் சிறப்பு. தனியார் எல்.ஐ.சி முகவர்கள் திரட்டுகிற சேமிப்புகள் திட்ட முதலீடுகளாக மாறி பல்லா யிரம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கு கின்றன. இதுவும் எல்.ஐ.சி முகவர்கள் தேசப் பொருளாதாரத்திற்கு ஆற்றும் அரிய பங்களிப்பு. கொரானா காலகட்டத்தில் முகவர்களு க்கு எந்தவித பாதுகாப்பு உபகரணம் கூட வழங்கப்படாத சூழலில் முகவர்கள் தொ டர்ந்து பாலிசி சேவைகளை செய்து புது வணி கமும் செய்தனர். பல்வேறு முகவர்கள் தொற்று பாதிக்கப்பட்டு எந்த ஒரு இழப்பீடு இல்லாமலும் உயிரிழந்தனர் என்பது பெரும் சோகம். எல்.ஐ.சி முகவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூட பீமா சுகம் என்ற செயலியை அறி முகப்படுத்தப்போவதாக இன்சூரன்ஸ் கட்டுப்பாடு வளர்ச்சி ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ) அறிவித்தது. இதை லிகாய் அறிமுக நிலையிலேயே எதிர்க்கும் பொருட்டாக ஹைதராபாத் ஐ.ஆர்.டி.ஏ அலுவலகம் முன்பு வலுவான போராட்டத்தை நடத்தியது.
அதேவேளையில் லிகாய் கோரிக்கைக ளை, முகவர்களின் நலனை பாதுகாக்கும் கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் கள் வாயிலாக தில்லியிலும் எதிரொலிக்க செய்தது. தமிழகத்தில் இருந்து கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கவுதமசிகாமணி ஆகியோர் விரிவாக எடுத்து பேசினர். ஹைதராபாத் போராட்டத்தால் முகவர்களை நோக்கி வரும் அம்பு தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் எல்.ஐ.சி முகவர்களின் உரிமைகளை பாது காக்கவும் எல்.ஐ.சியை அரசு நிறுவனமா கவே தக்க வைக்கிற போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.