அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சிறப்பாக இந்த உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் உழைக் கும் வர்க்கத்திற்கும், இந்திய பெண்களின் முன்னேற் றத்திற்கும் அவர் ஆற்றிய முக்கிய பணிகளை நாம் நினைவு கூர வேண்டி உள்ளது. இந்திய தொழிலாளர்களுக்காகவும், பெண்களுக் காகவும் அம்பேத்கர் இயற்றித் தந்த சட்ட வரைவுகள் இன்று வரை தொழிலாளர்கள் மற்றும் பெண்களின் உரி மைகளை காத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை உருவாக்கி இருக்கின்றன.
தொழிலாளர் நலன்
1943 இல் புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர் அமைப்பு களுக்கான அறைகூவல் ஒன்றை விடுத்தார். தொழிற் சங்கம் அமைப்பது மட்டுமே தொழிலாளர்களின் நோக்கம், லட்சியம் என இருக்கக்கூடாது ஆட்சியைப் பிடிப்பதே தொழிலாளர்கள் லட்சியம் என அறிவிக்க வேண்டும். தொழிலாளர்கள் அரசியல் கட்சியை ஆரம் பிக்க வேண்டும். அக்கட்சி அனைத்து தொழிற்சங்கங்க ளையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஆனால் அக் கட்சிக்கு சுயநலம், பிற்போக்குத்தனம் இருக்கக் கூடாது. காங்கிரஸ், இந்து மகாசபை போன்ற மதவாத, பணக்கார வர்க்க சக்திகள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சம்பளத்துடன் விடுப்பு, கூடுதல் நேர வேலைக்கு தனிச்சம்பளம் ,குறைந்தபட்ச ஊதிய சட்டங்கள், சமூக இன்சூரன்ஸ் திட்டங்கள், சுரங்க தொழிலாளர்கள் நலன் போன்ற சட்டங்களை அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த சட்டத்தில் மிக முக்கிய மானவை தொழிற்சங்கம் அமைப்பதை முதலாளிகள் தடை செய்யக்கூடாது. தொழிற்சங்கம் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், மற்றும் தொழிற்சங்கத்தை அனும திக்காத முதலாளிகளின் மீது நடவடிக்கை எடுப்பது. இன்று தொழிலாளர் நலச் சட்டங்கள் வளைக்கப் பட்டு தொழிலாளர்களின் உரிமையை பறிக்கின்ற ஆட்சியாளர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கின்றார் கள். இன்றும் டாக்டர் அம்பேத்கர் தொழிலாளர்க ளின் உரிமைகளை பாதுகாக்க தேவைப்படுகிறார்.
பெண்ணுரிமை பாதுகாவலர்
டாக்டர் அம்பேத்கர் உழைக்கும் வர்க்கத்திற்கு ஆற்றிய பணிகளைப் போன்றே பெண்களுக்காக ஆற்றிய பணி மிகவும் முக்கியமானதாகும். அம்பேத் கர் இயற்றிய இந்து சட்டத் தொகுப்பு (Hindu Code Bill) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்து சட்டத்தொகுப்பு குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறும் போது இந்திய நாட்டு நாடாளுமன்றம் இதுவரை மேற் கொள்ள பயந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சமூக சீர்திருத்த முயற்சி இது என குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கர், இதற்கு முன் செய்த அல்லது எதிர்காலத்தில் செய்ய இருக்கின்ற எந்த சட்ட சீர் திருத்தமும் இதற்கு இணையாகாது. அவ்வளவு முக்கி யத்துவம் வாய்ந்தது இது என்றார். சாதிக்கொரு சட்டம், குலத்திற்கு ஒரு கோட்பாடு, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற இந்த சமூகத்தில் சமூக சீர்திருத்தம் மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட் டார். அண்ணல் அம்பேத்கர் நேருவின் அமைச்சரவை யில் இருந்தபோது பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு சட்ட வரைவுகளையும், சட்டத் திருத்தங்களையும் கொண்டு வந்தார்.
இந்துக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை யும், செவிவழிச் செய்திகளையும், புராண இதிகாசங்க ளில் பெண்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழக்கங்களையும், பல்வேறு விதிகளையும் எதிர்த்து பலதரப்பட்ட இந்துத்துவா சக்திகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அச்சட்டத்தை கொண்டு வர முயற்சித்தார். அந்த நாட்களில் இந்துக்களிடையே கடைப்பிடிக்கப் பட்டு வந்த பலதாரமணம், குழந்தை மணம், ஒரே பெண் ணை பல ஆண்கள் திருமணம் செய்வது, இந்துக்களில் சில பிரிவினர் மூத்த பெண்ணை மணந்தால் அவரின் இளைய சகோதரியையும் மணமுடித்து வைப்பது போன்ற பல்வேறு மண முறைகள் இந்துக்கள் மத்தி யில் வழக்கத்தில் இருந்தது. இத்தகைய சனாதன ஒடுக்கு முறையில் இருந்து பெண்களை மீட்பதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வர வகை செய்தார். அனைத்து பெண்களுக்கும் கல்வி யுரிமை, சொத்துரிமை, வாழ்வுரிமை, விதவைகள் மறுமண உரிமை, ஜீவனாம்ச உரிமை, தத்தெடுக்கும் உரிமை, மணவிலக்கு உரிமை போன்ற பல்வேறு உரி மைகளை சட்டம் ஆக்கினார்.
விவாகரத்து உரிமை ஆண்களுக்கு மட்டுமே என்று இருந்த காலத்தில் பெண்களும் தங்களுக்கு பிடிக்காத கணவனிடம் இருந்து தனித்து வாழ விவாகரத்து உரிமை கோர வழி செய்யும் சட்டத்தை அம்பேத்கர் அறி முகப்படுத்தினார். இப்படிப்பட்ட ஒரு சட்டம் அன்றைய தினம் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். இச்சட்டத்திற்கு சனாதனிகளிடமிருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த வரைவை நாடாளுமன்ற ஆய்வுக்காக எடுத்துக் கொள்ள இந்துத்துவா சக்திகள் விடவில்லை. அப்போது இந்துத்துவா சக்திகளின் பிடியில் இருந்த மாதர் அமைப்புகளும் இந்த வரை விற்கு எதிராக குரல் கொடுத்தன. அப்போதைய ஜனாதி பதியான ராஜேந்திர பிரசாத் இதை எதிர்த்து ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டினார்.
அமைச்சர் பதவி விலகல்
இப்படிப்பட்ட சூழலுக்கு இடையே சிறிது காலம் இந்த சட்ட வரைவுகள் கிடப்பில் போடப்பட்டன. அதற் காக அண்ணல் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு செய்து ராஜி னாமா கடிதத்தை பிரதமர் நேருவுக்கு அனுப்பினார். இந்த சட்ட வரைவுகளை ஆதரிப்பதன் மூலம் எங்கே தனது கட்சிக்கு மக்களிடையே ஆதரவில்லாமல் போய்விடுமோ என்று பயந்து அச்சட்டத்தை அவர் நிறைவேற்றவில்லை. அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் பெண்களுக்கான நியாயத்தை உணர்ந்து காங்கிரஸ் கட்சி மொத்தமாக அவற்றை சட்டமாக கொண்டு வரா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை சட்டம் ஆக்கியது. ஒரு நியாயமான கோரிக்கையை சட்டமாக்கு வதில் உள்ள சிரமங்களை இந்து சட்டத்தொகுப்பு எதிர்கொண்டாலும் அண்ணல் அம்பேத்கரின் ராஜினா மாவால்தான் முழுமையும் சட்டமாக்க முடிந்தது.
அன்று அவர் தனது சட்ட அமைச்சர் பதவியை தியாகம் செய்தது தான் பின்னர் பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்தது. முக்கியமாக சம வேலைக்கு சமகூலி /பெண்கள் ஆபத்தான வேலை செய்வதிலிருந்து தடை/ ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு /பெண்களுக்கும் தத்தெடுக்கும் உரிமை /ஆபத்தான சுரங்கத் தொழிலில் பெண்கள் ஈடுபடத் தடை/ பெண்களுக்கான வாரிசுரிமை/ இந்து பாதுகாவலர் சட்டம் /இந்து பராமரிப்புச் சட்டம்/ ஜீவனாம்சச் சட்டம் போன்றவை டாக்டர் அம்பேத்க ரின் முயற்சியால் சட்டமாக்கப்பட்டன இவற்றுள் ஓரிரு சட்டங்கள் அவரது இறப்பிற்கு பின்னரே சட்டம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது . இன்று பெண்கள் பலவிதமான பாதுகாப்புகளை சட்டரீதியாக பெற்று இருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் டாக்டர் அம்பேத்கர். அவர் தனது வாழ்நாளில் ஏறத்தாழ 3 ஆயிரம் பக்கங்களை பெண்கள் உரிமைகள் குறித்து ஆய்வு செய்து எழுதி இருக்கின்றார். அவற்றை பெண்கள் மட்டுமல்ல சமத்துவ சமூகத்தை கனவு காணும் ஒவ்வொருவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
பாலின சமத்துவம்
ஒடுக்குமுறை யாருக்கு எந்த வடிவில் வந்தாலும் அதை அவர் எதிர்த்து போராடினார். தொழிலாளர் நலன், பாலின சமத்துவம், பொருளியல் பாதை இவை அனைத்திலும் இவரது பார்வை நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் மிக முக்கியமானதாகும் . இன்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இச்சட்டங்களுக் கெல்லாம் துவக்கப் புள்ளி வைத்தவர் டாக்டர் அம்பேத் கர் என்பதை மறுக்க முடியாது . இந்திய வரலாற்றில் சனாதனத்திற்கும் சம நீதிக்கும் இடையிலான உக்கிரமான போர் நீண்டது; நெடியது. அதில் சனாதனத்திற்கு எதிராக வாள் சுழற்றி யவர் டாக்டர் அம்பேத்கர். அத்தகைய போர் முனை களில் ஒன்று தான் பாலின சமத்துவத்திற்கான அவரது பங்களிப்பு அவரின் அக்கறை வெறும் அனுதாபத் தால் எழுந்ததாக இல்லை. மாறாக சமூகத்தில் பாதி இல்லாமல் மனித குலம் முழுமை அடையாது என்று உறுதியாக நம்பினார் அவர். வாழ்நாள் முழுவதும் அவரது சிந்தனைகள் பாலின சமத்துவத்தை சுற்றி சுற்றி வந்தன. அவரின் எழுத்துக்களும் உரைகளும் இதற்கு சாட்சி .1928 மும்பை மேலவை உறுப்பினராக இருந்த அம்பேத்கர் பெண்களின் மகப்பேறு ஓய்வுக் காக வாதாடினார். தேசத்தின் நலனுக்காக ஒவ்வொரு தாய்க்கும் மகப்பேறுக்கு முன்னாலும் பின்னாலும் தேவைப்படுகின்ற ஓய்வு கிடைக்க வேண்டும் என அப்போது அவர் வாதாடினார்.
1942 ஜூலை 9 அவர் ஒடுக்கப்பட்ட பெண்களின் மாநாடு ஒன்றை நடத்தினார்.அதில் அவர் ஆண், பெண் சமத்துவம் பற்றி பேசிய கருத்துக்கள் மிக முக்கியமா னது. திருமண பந்தத்திற்குள் செல்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் கேட்டுக்கொள்கிறேன் .உங்கள் கணவ னோடு இணைந்து நில்லுங்கள். உங்கள் கணவரின் நண்பராய் இருங்கள் .ஆனால் சமமாய் உணருங்கள். அடிமையாய் வாழ மறுங்கள் என்றார். சனாதனத்திற்கும், சம நீதிக்குமான போர் இன்னும் முடியவில்லை. மூர்க்கத்தோடு சனாதனம் திரும்பத் திரும்ப தாக்குகின்ற நேரம் இது. மதம் புனிதம் என்ற திரை மறைவிற்குப் பின்னால் பெண்ணுரிமைக்கு எதிரான ஆயுதங்கள் ஏவப்படுகின்றன. பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களின் உரிமை கள் மறுக்கப்படுகின்றன. அவரது நினைவு தனி மனிதரை கொண்டாடுவது அல்ல; அவரின் சிந்த னையை கொண்டாடுவது. அம்பேத்கர் தனி மனித வழிபாட்டிற்கு எதிரானவர். கருத்துக்களின் அடிப்படை யில் களம் காண கற்றுக் கொடுத்தவர். ஒற்றை தேசம், ஒற்றை பண்பாடு என்பதை எதிர்த்தவர். ஆயிரம் ஆயிரம் பூக்களாய் அவரின் சிந்தனைகள் பன்முகத் தலங்களில் நமக்கு காட்சியளிக்கின்றன. கருத்தியல் ரீதியாகவும், களத்திலும் ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது சிந்தனைகள் நம்மை வழி நடத்தட்டும்.
கட்டுரையாளர்: அகில இந்திய செயலாளர், ஜனநாயக மாதர் சங்கம்