ரசவாதம் சாத்தியமா?
மத்திய காலத்தில் காரீயத்தை தங்கமாக மாற்றும் ரசவாதம் பெரும் ஆர்வமாக இருந்தது. இப் போது ஐரோப்பிய அணுக்கரு ஆய்வுக் கழகம் (European Organization for Nuclear Research- CERN) கிட்டத்தட்ட அதை சாதித்துள்ளது. ஆனால் இந்த சோதனையில் தங்கம் மிகச் சிறிய அளவே - ஒரு கிராமில் ஒரு டிரில்லியன் பங்கு- உண்டாக்கப்பட் டது. மேலும் அது ஒரு வினாடியின் சிறிய பங்கு நேரமே நிலைத்திருந்தது. ஆனால் இதன் முக்கியத்து வம் எதில் இருக்கிறது என்றால் உண்டான தங்கத்தை இயற்பியலாளர்கள் அளவிட்டதுதான். துகள் மோது கருவியில் (Large Hadron Collider) அதிவேகமாக நகரும் காரீய அணுக்கருவிலிருந்து வெளிவரும் புரோட்டான்களை எண்ணுவதன் மூலம் இது செய்யப் பட்டது. பீரியாடிக் அட்டவணையில் தங்கமும் காரீயமும் அருகாமையிலேயே உள்ளன. தங்கத்தில் 79 புரோட் டான்களும் காரீயத்தில் 82 புரோட்டான்களும் உள்ளன. எனவே காரீயத்திலிருந்து சில புரோட்டான் களையும் நியூட்ரான்களையும் வெளியேற்றிவிட்டால் தங்கத்தின் அணு கிடைத்துவிடும். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. அதிக ஆற்றல், அதிக செலவு மற்றும் உயர் சிறப்புக் கருவிகள் தேவைப்படும். தங்கத்தை உற்பத்தி செய்ய இது மிக மிக திறன் குறைந்த வழி யாகும். இந்த சோதனையில் தங்கம் ஒரு உப விளைவே. மேலும் தாலியம் அணுக்கருவும் பாதரச அணுக்கரு வும் உண்டாகலாம். ஆனால் இது வியக்கவைக்கும் அறிவியலாகும். விஞ்ஞானிகள் அணுக்களை அதிக வேகத்தில் ஒன்றோடொன்று மோதவிடுவது மட்டு மல்ல, அந்த மோதலில் உண்டாகும் மாறுதல்களை கணிக்க முடிகிறது. இந்த கண்டுபிடிப்புகள் பிசிக்கல் ரிவியூசி ’Physical Review C’ என்கிற இதழில் வெளி யிடப்பட்டுள்ளது.
கூட்டுப்புழுக்களின் மறைப்பு உத்தி
வண்ணத்துப் பூச்சிகளும் அந்துப் பூச்சிகளும் பெரும்பாலும் தாவர பாகங்களையே உண வாக உட்கொள்கின்றன. அவற்றின் லார்வா பருவ கூட்டுப் புழுக்களும் அதே பழக்கத்தையே கொண் டுள்ளன. இவற்றில் மாமிச உணவுப் பழக்கம் உள் ளவை 0.1 சதவீதமே. கூட்டுப்புழுக்கள் லாகவமானவை அல்ல. எனவே மாமிச உணவுப் பழக்கம் உள்ளவை மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறகுப் பூச்சிகள், குளவி, எறும்புகளின் லார்வா மற்றும் பிற பூச்சி களின் முட்டைகள் போன்ற மெதுவாக செல்லுபவை களையே உணவாக்கிக் கொள்கின்றன. போன் கலக்ட்டர் (bone collector) என்றழைக் கப்படும் அரிதான இந்தவகை கூட்டுப்புழுக்கள் குறித்து ஹவாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூச்சியியலாளர் டேனியல் ருபினாப் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இயற்கைச் சூழலில் இதன் வாழ்வு விசித்திரமானது. உண்ண முடியாத பூச்சிகளை தன்னை சுற்றி ஒரு பட்டையாக்கி கொண்டு சிலந்தி வலையை நாடும். சிலந்தி வலைக்குள் புகுந்த பிறகு அதனுள் சிக்கிய பூச்சிகளையும் சிலந்தி பிற்பாடு பயன்பாட்டிற்காக பொதிந்து வைத்திருக்கும் பூச்சிகளையும் தின்று தீர்த்துவிடுமாம். சோதனைச் சாலையில் கூடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்ட பொருட்களில் அவை மற்ற பூச்சி களின் உடல் பாகங்கள், உதிர்ந்த சிலந்தி தோல் போன்ற வற்றை மட்டுமே எடுத்துக் கொண்டன. குச்சிகள், இலை கள், மரப் பட்டைகள் போன்றவற்றை தவிர்த்து விட்டன. மற்ற பூச்சிகளின் உடல் பாகங்கள் மற்றும் சிலந்தியின் தோல் ஆகியவை அவற்றிற்கு நல்ல மறைப்பு உத்தி யாக உள்ளன. சிலந்திகள் இவற்றை இரையாக உன் பதை பார்க்க முடியவில்லை. சோதனைச் சாலையில் கூட்டுப்புழுக்கள் உயிருள்ள அல்லது செயலிழந்த, மெதுவாக செல்லும் பூச்சிகளை இரையாக உண்டன. ஒன்றாக வைக்கும்போது ஒன்று இன்னொன்றின் கூட்டை பிளந்து தன் இனப் புழுக்களையே இரையாக்கிக் கொண் டன. இது உணவுப் போட்டியை தவிர்க்கிறது. ஒரு சிலந்தி வலையில் ஒரு ஆக்கிரமிப்பாளன் என்ற நிலையை உண்டாக்கினாலும், மொத்த இனமும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் நிலைக்கு இட்டு செல்கிறது. ஹவாய் தீவு உண்டானதற்கு பல மில்லி யன் ஆண்டுகளுக்கு முன்பே இவை தோன்றி யிருப்பதால், ஒரு காலத்தில் பல இடங்களில் பரந்து பட்டு இருந்திருக்க வேண்டும். இன்று 15 ச.கிமீ பரப்பளவிலேயே உள்ளன. முறையான பாதுகாப்பு இல்லாவிட்டால் அரிதான இந்த இனம் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த ஆய்வு ‘சயின்ஸ்’ இதழில் வெளிவந்துள்ளது.
உயிரின் ஒளி!
அவர் முகத்தில் ஒளி வீசியது என்று சொல் வோம். உண்மையிலேயே உயிருள்ளவை எல்லாவற்றிலும் ஓர் ஒளி வீசுகிறது என்கிறது ஓர் ஆய்வு. கனடா நாட்டின் தேசிய ஆய்வுக் குழுமமும் கால்கெரி பல்கலைக்கழகமும் இணைந்து எலிகள் மற்றும் இரண்டு வேறுபட்ட தாவர இலைகளிலும் நடத்திய ஆய்வில் ‘உயிரி ஒளி’ (‘biophoton’) எனும் நிகழ்வு நடைபெறுவது அறியப்பட்டுள்ளது. மனிதன் உட்பட எல்லா உயிர் வாழ் இனங்களிலும் இந்த ஒளி மர ணம் வரை வீசலாம் என்று இந்த ஆய்வு சுட்டுகிறது. உயிரியல் இயக்கங்களால் வெளிவரும் ஒளி அலை யானது (கண்ணால் பார்க்கக்கூடிய அலை வரிசை) சுற்றியுள்ள தீவிரமான மின்காந்த அலைகளாலும் நமது உடலின் வளர் சிதை மாற்றங்களால் வெளிப்படும் வெப்பத்தாலும் மறைக்கப்பட்டுவிடும் அளவுக்கு பல வீனமானது என்பதே அறிவியல் கருத்தாக்கமாகும். ஆனால் அப்படிப்பட்ட மிக பலவீனமான போட்டான் எனப்படும் ஒளியை (ultraweak photon emission (UPE))அவதானித்ததாக கால்கெரி பல்கலைக்கழக இயற்பியல் ஆய்வாளர் வாஹித் சலரி குழுவினர் கூறுகிறார்கள். பல்வேறு உயிரியல் இயக்கங்கள் வேதி ஒளிர்வு (chemiluminescence) எனும் வடிவில் பிரகாசமான ஒளிக்கற்றைகளை உண்டாக்குகின்றன என்பது தெளிவு. உயிருடன் இருக்கும் மாட்டு இதய தசையிலிருந்து பேக்டீரியா குழுக்கள் வரை 200 இலிருந்து 1000 நானோ மீட்டர் நீளமுள்ள ஒளி அலைகளை வெளிவிடுவது பல ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒளியின் ஆதாரம் எது என்று தெரியவில்லை. ஒரு வலுவான காரணியாக சொல்லப்படுவது, வெப்பம், நச்சு, கிருமி அல்லது சத்துக் குறைவு போன்ற அழுத்தங்களினால் உயிருள்ள செல்கள் பாதிக்கப்படும்போது அவை உண்டாக்கும் ஆக்சிஜன்கள். இந்த ஆய்வை தனித்த திசுக்களிலிருந்து முழு விலங்கிற்கும் விரிவுபடுத்த இயலுமா என்றறிய இந்த ஆய்வாளர்கள் விசேசமான கருவிகள், புகைப்பட உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு முழு எலியிலிருந்து வெளிவரும் மிக பலவீனமான ஒளி வீச்சை அது உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் ஒப்பிட்டார்கள். எலியின் உடலிலிருந்து வெளிவரும் போட்டான்களின் எண்ணிக்கை அது இறந்த பிறகு கணி சமாக குறைவது காணப்பட்டது. தாவரங்களில் நடத்தப் பட்ட சோதனைகளிலும் இதே முடிவுகள் கிடைத்தன. தாவரங்களில் சிதைவுகளை ஏற்படுத்தியும் வேதிப் பொருட்களைக் கொண்டு அழுத்தங்களைக் கொடுத்த போதும் வெளிப்படும் மென்மையான ஒளிவீச்சுக்கு வினை புரியும் ஆக்சிஜன் இனக் கூறுகளே காரணமாக இருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்தன. மனிதர்கள், விலங்குகள், பயிர்கள் அல்லது பேக்டீரி யாக்கள் ஆகியவற்றின் திசுக்கள் அழுத்தத்திற்கு உள்ளாவதை தொலைவிலிருந்து ரிமோட் முறை யில் கண்காணிப்பதற்கு இதைப் போன்ற ஒரு முறை இருந்தால் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆற்றல் மிகுந்த ஆய்வுக் கருவியாகவும் நோய் கண்டறி யும் கருவியாகவும் இருக்கும். இந்த ஆய்வு தி ஜர்னல் ஆப் பிசிக்கல் கெமிஸ்ட்ரி லெட்டர்ஸ் என்கிற இதழில் வந்துள்ளது.