tamilnadu

img

வெயிலில் மயங்கி விழுந்து எல்லை பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு

வெயிலில் மயங்கி விழுந்து எல்லை பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு

ஒரத்தநாட்டில் காசிவிஸ்வநாதர் கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர், ஜுன் 9-   தஞ்சாவூர் அருகே, காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின்போது, வெயிலில் மயங்கி விழுந்து எல்லை பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவைச் சேர்ந்த ரமேஷ்(57). இவர் குஜராத் மாநிலத்தில் 84 ஆவது பட்டாலியனில் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ரமேஷ், ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் உள்ள விசாலாட்சியம்மன் சமேத காசி விசுவநாதர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரோட்டத்தை வழிநடத்தினார். அப்போது, தேர் கோமுட்டி தெரு பகுதியில் சென்ற போது, தேருடன் சென்று கொண்டிருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரமேஷை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேஷை பரிசோதனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். மேலும், வெயிலின் தாக்கத்தால் அவரது உடல் பாதிக்கப்பட்டதால் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர் ரமேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரமேஷுக்கு ஜெயமாலா என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர்.

அய்யம் பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையில், மாகாளிபுரத்தில், சாலையையொட்டி உள்ள பயணியர் நிழற்குடை பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் விட்டு, இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. நிழற்குடை அருகில் மட்டுமல்லாமல், அதன் உள்ளேயும் குப்பைகள் கொட்டப்படுகிறது. பழுது பார்க்க முடியாத நிலையில், மக்கள் பயன்படுத்தாத இந்த நிழற்குடையை மாவட்ட நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.