சென்னை,ஜன.22- கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களிடம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித் துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியா னார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சி களால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனிடையே, இந்தியா வில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்று ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படு கிறது.
இந்த நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் ‘மருத்துவத்தின் எதிர் காலம்’ என்ற தலைப்பில் சென்னையில் பன்னாட்டு மருத்துவக் கருத்தரங்கம் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சர்வதேச நாடு கள், வெளி மாநிலங்களில் இருந்து 11,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துடன், பல்துறை மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை யாற்றினர்.
இந்த நிலை யில் ‘கொரோனா பெருந் தொற்றுக்கு பிறகு – எதை நோக்கி நாம் செல்கிறோம்?’ என்ற தலைப்பில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதா வது: “கொரோனா காலகட்டத் தில் அனைத்து மருத்துவ மனையிலும் கொரோனா மருத்துவமனை களாக மாற்றப்பட்டன. அப்போது பிற நோய்களுக்கான சிகிச்சைகள் தடைபட்டன.
இதில், இணை நோய்களின் தாக்கம் அதிகரித்தது. அதேபோன்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அதிலிருந்து மீண்ட பிறகு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்க ளுக்கு உள்ளாகினர். தற்போது ஜெ.என்.1 போன்ற உருமாற்றமடைந்த கொரோனா வகைகள் பரவி வருகின்றன. மிதமான பாதிப்பை உருவாக்கும் இந்த வகை கொரோனா வீரியமானது இல்லை.
ஒருவேளை, அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீநுண்மிகள் இனி வரும் காலங்களில் பரவினால், அதை தற்போது உள்ள தடுப்பூசிகள் கொண்டு கட்டுப்படுத்த முடியாது. அதற்கென புதிய தடுப்பூசி களை கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.