tamilnadu

img

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வெளி மாநில மாணவர்களை நீக்கக்கோரி வழக்கு

மதுரை:
தமிழக  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுப் பட்டியலில் உள்ளவெளிமாநில மாணவர்களை நீக்கி, புதிய கலந்தாய்வுப் பட்டியலை வெளியிடக் கோரியவழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலரிடம்உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா,ஸ்ரீலயா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல்செய்தனர். அதில்,” தமிழகத்தில் 23 அரசுமருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில்85 சதவீதம் இடங்கள் மாநில மாணவர்களுக்கும்,15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுமருத்துவக் கல்லூரிகளில் 2,744 இடங்கள்தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும் 1,800 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன.  இதில் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் 977 இடங்களும்,  562இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரி களின் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6- ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கானதரவரிசைப் பட்டியல் வெளி யிடப்பட்டது. ஜூலை 8- ஆம் தேதி இளங்கலைமருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.ஜூலை 15-ஆம் தேதி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் தனியார் மருத்துவ சுயநிதிக் கல்லூரிகளின் மேனேஜ்மென்ட்  ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.  இதனால் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தவர்கள் அதிகளவில் சேருகின்றனர்.  தமிழகத்தில்  மருத்துவம் படித்துவிட்டு இவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விடுவர்.இதனால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இல்லை. மேலும் இந்தாண்டு 218 வெளி மாநிலமாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.எனவே,  தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்  செயலர்  2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும்.தமிழக இளங்கலை  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வுப் பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கவும்,தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில்  மருத்துவக் கலந்தாய்வுநடத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் இது  குறித்து  தமிழக சுகாதாரத்துறை செயலரிடம் உரிய விளக்கம்பெற்று தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்குஉத்தரவிட்டு வழக்கு விசாரணை யை ஜூலை 22- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

;